WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, February 17, 2013

அஞ்சலிகவிதை: கந்தையா தம்பிராசா (பொன்னுத்துரை மாமா ) இணுவில் தெற்கு,சுன்னாகம் ( யாழ்ப்பாணம் )

அஞ்சலிகவிதை: கந்தையா தம்பிராசா (பொன்னுத்துரை மாமா ) இணுவில் தெற்கு,சுன்னாகம் ( யாழ்ப்பாணம் ) ---------------------------------------------------------------------------- பொன் மாமா என்றும் கடவுள் பக்தி கொண்டவர்! எம்மில் கண்டிப்பும் காட்டுவார்! தன்பிள்ளை போலே எம்மீது அக்கறை காட்டினார்!தயவான நல்ல தாய்மாமனவர்! என்வாழ்வில் மாமாவின்ஆளுமை முத்திரைபதித்தது!சுறுசுறுப்பு ,உழைப்பு,கவனம்! தன்னம்பிக்கை,அக்கறை,கடவுள் பக்தி,முயற்சி,வர்த்தகம்எல்லாம் மாமாவின்சிறப்பு! மாமாவின் கடை அனுபவம் வாழ்வுக்கும் வழிகாட்டி! எறும்புபோல் உழைக்கசொல்வார்! சாமநடைநடந்து செல்லசன்னதிசென்று முருகனை வணங்கியஅனுபவம் ஆகா அற்புதம்! மாமா,மாமியுடன் கீரிமலை,மட்டுவில்,நயினாதீவு,வல்லிபுரம்,மருதடி,நல்லூர்கோவில்கள் மாமாவின் அன்புப்பேச்சுக்கும் ,அக்கறையான அதட்டலுக்கும் அடங்காதார் யாருமில்லை! மாமியின் அறுசுவையுணவு,மாமாவின் நகைச்சுவைபேச்சு!சிறுவயதில் காதில் முறுக்கும் மாமியின் ஆறுதலும்! எமக்காக வாதாடும் மாமியின் ஆதரவும் எப்படி மறப்போம்!நீடு வாழி! சாமிநினைவாய் மாமா,மாமி புனிதயாத்திரை பாரதம்,ஈழம்,அம்மம்மா கூட அற்புதபயணம்! பூமிவந்து புன்னகையுடன் முத்திரைபதித்தீர்!மாமா,மாமி என்றும்நினைப்போம்!நீடுவாழி! அன்புடன் மருமகன் , நல்லையா சண்முகப்பிரபு,நோர்வே http://sarvadesatamilercenter.blogspot.com

No comments: