Sunday, October 19, 2014
கண்ணீர் அஞ்சலி: கனகரத்தினம் சந்திரசேகரி (1926-2014) (கல்வியங்காடு-இணுவில்-லண்டன்)
கண்ணீர் அஞ்சலி:
கனகரத்தினம் சந்திரசேகரி (1926-2014)
(கல்வியங்காடு-இணுவில்-லண்டன்)
முருகன் அடி நினைந்து முக்கண்ணன் தாள் பணிந்து!
அரியதொரு மகனாக அவலயத்தில் வந்துதித்தீர்!
பெருந்துணையாய் ஆசிரியை பராசக்தி நற்கரம்பிடித்து
பேரறிவாம் முருகதாஸ் எனும் பெரும்புதல்வன் பெற்றிட்டீர்!
காரிருளில் ஒளிபோல கந்தன் அருள் வழிகாட்ட
பாரினிலே கல்வி கற்று பலர் போற்ற வாழ்ந்திட்டீர்!
தேரினிலே ஆடிவரும் பெருவிநாயகரும் வழிகாட்ட
தென்றலென வாழ்வும் மகிழ்வுறவே வாழ்ந்திட்டீர்!
தந்தைதாய் புகழ்போற்றி மனைவி,மகன்,உற்றார் வாழ்வுயர
தளராது உழைத்திட்டீர்! அரச பணி நன்கு ஆற்றிட்டீர்!
எம்தமிழும் சைவம் போற்றி மருமக்கள்,பேரன்,பேத்தியார்
எல்லோரும் மனம் குளிர வாழ்ந்திட்டீர்! போற்றிட்டீர்!
பிறந்த ஊர்! புகுந்த ஊர்! பெருமை பேசி நகைச்சுவையாய்
மறந்திடாது உற்றார்உறவுகளை முகம்மலர விருந்தோம்பி
இறந்தாலும் புகழ் தொடர இனிய நினைவுகளாய் உங்கள்
இன்சொற்கள் நினைவு வரும்! என்றென்றும் புகழ்பாடும்!
நல்லையா சண்முகப்பிரபு--நோர்வே 13-10-2014
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment