Tuesday, October 28, 2014
பெருங்கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் புகழ் பல்லாண்டு வாழி!
பெருங்கவிஞர் ச.வே.பஞ்சாட்சரம் புகழ் பல்லாண்டு வாழி!
சங்கத்தமிழை நம் இளந்தலைமுறைக்கு நன்கு சுவை ஊட்டி
அங்கம் சிலிர்க்க எம்அருந்தமிழை ரசித்து சுவைக்கவைத்தீர்!
பங்கம் தமிழ், தமிழர்க்கு,தமிழ் மண்ணுக்கு வந்ததெனதுடித்து
மங்காத் தமிழ்கவிதை நீர் உரைத்ததனால் வீறு கொண்டார்!
சிங்கம் போல்! செந்தமிழின் உயிர் காக்க! பல இளங்கவிஞர்!
எங்கும் தமிழுணர்வு!சைவம் பக்திமயம்!மனிதநேயம்!காதல்!
சங்காய் முழங்கிட்டீர்!தனித்துவமாய் ஜொலித்திட்டீர்!நீடு வாழி!
எங்கள் கவிஞர்!எமக்காய் உழைத்திட்டீர்!உலகம் போற்ற நீடு வாழி!
நல்லையா சண்முகப்பிரபு-நோர்வே 0047-91784271
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment