Tuesday, October 7, 2014
TRIBUTE TO MRS.GNANESWARY KULENDRAN (1942 INUVIL,JAFFNA - 2014 HELSINKI ,FINLAND)
கண்ணீர் அஞ்சலி:
திருமதி: ஞானேஸ்வரி குலேந்திரன்
பிறப்பு: 20-02-1942 இணுவில்,யாழ்ப்பாணம்
மறைவு : 04-10-2014 கெல்சிங்கி,பின்லாந்து
------------------------------------------------------------------------------------------
ஈழமண்ணின் வடநிலத்தின் இணுவையூரில்
இனிய பரராசசேகர பிள்ளையார் பாதம்வேண்டி
நாளும்கோளும் நன்குபோற்றி கல்விபோற்றி
நல்லறிவு,நற்பண்பு,நல்லொழுக்கம் பேணி
காளையரும் கன்னியரும் கலைகள் போற்ற
கற்பவைகள் எல்லாம் கற்று கவிதை பாடி
நாளை வரும் பொன் நன்னாளை காத்திருந்து
நம்மவரை வரவேற்று இன்சொல்,விருந்து ஓம்பி
தாள் பணிந்து பெரியோரின் சொல்,ஆசி கேட்டு
தர்மம் போற்றி வாழ்ந்தவரே அன்னை ஞானேஸ்வரி!
குலேந்திரன் கரம்பற்றி குடும்பவாழ்வில் ஒளியேற்றி
குடி உயர கொடி உயர கௌரியுடன்,பாலேந்திரனும்
பலர் போற்ற கனடா,பின்லாந்தில் சிறப்பாக வாழ்கையிலே
பார்த்திருந்த மகிழ்ச்சியிலே இறைவனடி சேர்ந்தீரோ!
குலம் வாழ,இனம் வாழ உம் கடமை ஆற்றிட்டீர்!
குன்றில்இட்ட விளக்காய் அனைவர்க்கும் ஒளிதந்தீர்!
பலம் தமிழர் வாழ்வினிலே தாயன்பு முதலன்றோ!
பழம்தமிழர் வாழ்வுதந்த பண்பதுவே எம்சொத்து!
நலம் வேண்டி நீர் செய்த நல்லபணிகளெல்லாம்
உலகுக்கு உரமூட்டும்!நம்மவர்க்கு வழிகாட்டும்!
கெல்சிங்கி தமிழ்ச்சங்கம்-பின்லாந்து
---------------------------------------------------------
ஆக்கம்: நல்லையா சண்முகப்பிரபு-நோர்வே 0047-91784271
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment