Tuesday, September 20, 2016
MEMORIAL POEM TO OUR COLLEGUE& FRIEND: K.G.MAHATHEVA / EELANADU EDITOR, JAFFNA,SRILANKA
ஈழநாடு:அமரர் :கே.ஜி.மகாதேவா அவர்கட்கு
நோர்வேயிலிருந்து கண்ணீர் அஞ்சலி!
-------------------------------------------
அன்புமிக்கவர் மகான் ! என்றும் தமது பண்பு காத்தவர்!
அருமையாக எமக்கு பத்திரிகை பாடம் நன்கு கற்றுத்தந்தவர்!
வன்சொல்லே அவர் நாவில் வந்ததுமில்லை! இன்சொல்லால்
வாஞ்சையுடன் மனசை வெல்லுவார்! என்றும் உண்மை பேசுவார்!
தன்னலம் எதுவும் அற்று தன்பணியை செய்பவர்!தரணி வென்றவர்!
தமிழர் வாழ்வு உயரவென்று கடமை புரிந்தவர்! புகழ் நீடு வாழ்கவே!
மென்மையான மனசும், நல்ல எண்ணம்,பேச்சு,செயலும் கொண்டவர்!
மெதுவாக சிந்தித்து தன்பணியை மிகவும் சிறப்பாக முடிப்பவர்!
இன்சொல்லால் தமிழர்அன்பை என்றும்வென்று வாழ்ந்தவர்!புகழ்வாழி!
இனியஉள்ளம் என்றுமுறங்காது! எம்மனதில் என்றும்நிலைத்திருக்கும்!
எண்ணற்ற சாதனைகள் எழுத்துலகில் "ஈழநாடு மகான்" போல் யாருளர்!
என்றும் அவர் நினைவும் எம் மனதில் கற்சிலையாய் பதிந்திருக்கும்!
துன்பத்தில் துடிதுடிக்கும் குடும்பத்தின் பிரிவுத்துயர் எண்ணற்றது!
துயரினிலே நாங்களுமே பங்குகொண்டு அவர்புகழ் போற்றுகிறோம்!
என்றும் அருமை நண்பர் பிரிவில் வாடும் தோழன்,
இணுவை.நல்லையா சண்முகப்பிரபு- ட்ரம்மன்,நோர்வே 0047-91784271
http://sarvadesatamilercenter.blogspot.no shanmugappirabunalliah@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment