WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, September 20, 2016

MEMORIAL POEM TO OUR FRIEND & POPULAR SINGER: INUVIL/JAFFNA: SELVADURAI AINGARAN,CHICAGO,USA!

அருமை நண்பன்/ பிரபல பாடகன்: இணுவை.செல்வத்துரை ஐங்கரன்,(சிகாகோ,அமெரிக்கா) அவர்கட்கு எம் கண்ணீர் அஞ்சலி! -------------------------------------------------------- இணுவில் மண்ணில் இன்புற வாழ்ந்து உயர்கல்வி பெறவே ஏற்றமிகு அமெரிக்கா சென்று நீ சோதரர்கள் வழிசேர்ந்தாய்! கணீரென்றகுரலால் பாட்டிசைமன்னனாய் புகழ்பல பெற்றாய்! கற்பனாசுரமும், இசைவழிஞானமும் உலகையே மயக்கிநின்றாய்! மணியான பாடல்கள் , துணையாக அரும்பாடகியர் கூடவே பாடிட! மெய் மறந்து கேட்டதே ரசிகர் கூட்டம்!உலகெலாம் கேட்டதே அடடா! துணிவாக நீ பாட!அதற்கேற்ப துணைபாட!இசைக்கருவிகள் முழங்கிட! துள்ளிடுவர் ரசிகர் துன்பமெல்லாம் ஓடிடவே!அடடா என்ன இனிமை! பணிவாக எல்லோரையும் மதிப்பாக,அன்பாக நன்கு போற்றிநின்றாய்! பண்பாக பெற்றோர்,சகோதர,சகோதரியர்,குடும்பம் காத்து நின்றாய்! மணிக்குரலில் எம்மையெல்லாம் மனம்மகிழ வைத்தவன் நீடு வாழி! மூவுலகும் உன்புகழ்,இசையால் உயர்வுறும்! உன் புகழ் என்றும் வாழ்க! இனித்துன்பத்தில் துடிதுடிக்கும் குடும்பத்தின் பிரிவுத்துயர் மாளாதது! உமதுயரினில் நாங்களும் பங்குகொண்டு உன்புகழ் போற்றுகிறோம்! இணுவிலின் புகழும் உன்னால் உயர்ந்தது! இசையுலகமும் மகிழ்ந்தது! என்றுமீண்டும் காண்போம்உனையே! உன்புகழும் இசையால் வாழுமே! என்றும் அருமைநண்பன் பிரிவில்வாடும் தோழன், இணுவை.நல்லையா சண்முகப்பிரபு- ட்ரம்மன்,நோர்வே 0047-91784271 http://sarvadesatamilercenter.blogspot.no shanmugappirabunalliah@gmail.com

No comments: