WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, September 5, 2010

நோர்வேயில் புகழ்பரப்பு! பலகாலம் பல்லாண்டு இசைபாடு! தமிழர்புகழ் பரப்பு!

கர்நாடக சங்கீத அரங்கேற்றம்- -நோர்வே

நல்வாழ்த்து! 


சண்ட்விகா கலாசார இல்லம் -2010 ஆவணி - 28


எங்கள் ஈழமண்ணின் ஏற்றமிகு செந்தமிழ் செல்வி : நகோமி தயாளன் 
பொங்கும் தமிழிசையால் எங்களை மகிழ்விக்க ஏற்றமுடன் வந்திங்கு
தங்கு தடையின்றி  தன் தமிழுணர்வால் தரணியிலே நல்இசைபரப்ப
சங்கத்தமிழால்  வாழ்த்துகின்றேன்! உன்னைப் போற்றுகின்றேன்!வாழி!!

 
சின்னஞ்சிறுவயதில் உனைக் கண்ணும்கருத்துமாய் போற்றிவளர்த்தார்!
என்னென்ன கற்பனைகள்!என்னென்ன எண்ணங்கள்!உன்பெற்றோர்தன் 
சிந்தனையில்! அதற்காக உழைத்திட்டார்!இன்று அதன் பலன் பெற்றார்!
உன்சிந்தனை,உழைப்பில் நீ இன்று கனி பெற்றாய்!இசைமேதை ஆகிவிடு!!

 
சிறுவயதில்உனக்கு தமிழ்பாடம்கற்பித்த ஆசிரியன் எனும்வகையில்
யானும் பேருவகை கொண்டேன்!பெருமிதம் அடைந்தேன்!
உன்உயர்வில் மனமகிழ்ந்தேன்!
நறுமணம்வீசும் சிறுமலராய்  உதித்தநீ இன்று,
பெருவாசம்தரும் இசைமலரானாய்!
பேறுபெற்றார் உன்பெற்றோர்! பெருமகிழ்வுற்றார்!ஈன்றபொழுதில் பெரிதுவந்தார்!!

 
ஈழமணி திருநாட்டில் வடபுலத்து இணுவைமண் 
உன் தாயின்மண்!ஏழாலை தந்தைமண்! 
வளமான இரு ஊரும் செந்தமிழும்,மேன்மைகொள் சைவமும் 
இயல்,இசை,நாடகம்,கல்வி,பலதுறையில் புகழ்பெற்று பிரபலமே!
அவ்வகையில் நீ புகுந்த 
நோர்வேயில் புகழ்பரப்பு!
பலகாலம் பல்லாண்டு இசைபாடு! தமிழர்புகழ்பரப்பு!
கல்வி,தொழில்,குடும்பம் என நீடுவாழி!


 
என்றும் பல்லாண்டு,பல்லாண்டு வாழ
அன்புடனும்,பண்புடனும் வாழ்த்தும் ஆசிரியன்: 


நல்லையா சண்முகப்பிரபு,

shanmugappirabunalliah@gmail com  http://sarvadesatamilercenter.blogspot.com
Tel 91784271, LYNGV 3B 3041 DRAMMEN,NORWAY  

No comments: