கண்ணீர் அஞ்சலிக்கவிதை:
அமரர்: பொன்னையா துரைரத்தினம்,
உணாவில்-சாவகச்சேரி, நீர்வேலி,ரூவான்வேல-இலங்கை;
பொஸ்டன்- அமெரிக்கா 02-11 -1921 - -- 06 - 08 -2010
------------------------------------------------------------
செந்தமிழும் சிவநெறியும் நன்குஓங்கி உயர்ந்திட்ட
நந்தமிழர் சிவபூமி நம் நல்லதொரு யாழ்ப்பாணம்!
எந்தவழிஎன்றாலும் நல்வழியே நம்வழி!நற்றுணை!
பைந்தமிழே நம் உயர்மொழி! என்றஉணர்வே துணை!
என்றே வாழ்ந்து சிறப்புற்ற மாமனிதர் துரைரத்தினம்!
சென்றார் சிவஉலகம்!வானவர் பூமழை பொழிந்தார்!
உணாவிலில் பிறந்தார்!சாவகச்சேரியில் படித்தார்!
உழைப்பை மலையகபொருளாதாரத்துக்கு நல்கினார்!
உண்மைத்தமிழராய் மலையகமக்களுக்கு உதவினார்!
தொன்மைத்தமிழர்க்கு ஈழத்தில் துன்பம் வந்ததால்!
நாடுவிட்டு நாடுவந்தார்!அமெரிக்ககுடியரசு வரவேற்றது!
ஈடுபாடாய்அங்கும்உழைத்தார்!அனைவர் மனமும் கவர்ந்தார்!
ஏட்டுப்படிப்புடன் உலகைப்படித்தார்!உறவுகட்கு உதவினார்!
உயர்கல்வியில் ஐம்புதல்வரும்!நற்குண நாற்புதல்வியரும்!
பெயர்பெற்று வாழ்கின்றார்!பேரப்பிள்ளைகளும் சிறப்புற்றார்!
மனைவி,உற்றார்,உறவுகள்,நண்பர் போற்றுகின்றார்!புகழ்வாழி
நல்லையா சண்முகப்பிரபு,
Lyngv 3b , 3041 Drammen , நோர்வே
shanmugappirabunalliah@ gmail.com mobile:91784271
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment