WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, January 26, 2011

யாழ்ப்பாணம், இணுவில் தெற்கு - அமரர் சாரதா தம்பிராஜா அவர்கட்கு! நோர்வே மருமகன் கண்ணீர்அஞ்சலி...!!!

யாழ்ப்பாணம், இணுவில் தெற்கு - அமரர் சாரதா தம்பிராஜா அவர்கட்கு!
நோர்வே மருமகன் கண்ணீர் அஞ்சலி! 2011 தை
-----------------------------------------------
சாரதா மாமி என்றும் எங்கள் மனதில் வாழ்பவர்! அன்பில் நிறைந்தவர்!
பாரதப் பண்பாட்டில் செந்தமிழ் சைவ ஈழத்து மரபுகளில் வாழ்ந்தவர்!
யாரவர் எனினும் அன்புடன் மதித்து விருந்தோம்பிய உயர்பண்பினர்!
பாரெலாம் போற்றும் பண்புடைதமிழர் போற்றிடும் மாது எங்கள் மாமி!

மாமியின் சமையல் தந்திடும் புதுமை! மூக்கினுள் வாசனை!நாக்கினில் நீரும்!
மாமாவில் மதிப்பும்! எல்லோரிலும் அன்பும்!இனிய சொற்களும்!மாமிசொத்து!
யாவர் மனத்திலும் மாமிக்கு தனியிடம்! எவரையும் புண்படுத்தா இயல்பினர்!
யாமிருக்க பயமேன்! என்றேஅனைவர்க்கும் ஆறுதல்,புத்தி கூறுபவர் மாமியே!

கோவில்,குளம் எல்லாம் சென்றுவருகையில் மாமியின் ஆளுமை தனிபண்பு!
பாவையர்க்கு மாமிதான் தலைவி! எல்லோர்க்கும் தாய்போல் விளங்குவார்!
யாவற்றிலும் மாமியின் சொல்லுக்கு ஒரு மதிப்புண்டு!யாவரும் மதிக்கும் தாய்!
சகோதர,சகோதரியர்க்கும் வழிகாட்டி!மற்றவர்க்கு அறிவூட்டி! படிக்காத மேதை!

நல்லையா சண்முகப்பிரபு-நோர்வே
0047 -91784271 shanmugappirabunalliah@gmail.com

No comments: