Saturday, July 20, 2013
கண்ணீர் அஞ்சலி:
அமரர் செல்லத்துரை கண்மணிஅம்மா!
பிறப்பு :06-05-1940இணுவில்-தாவடி
மறைவு:15-07-2013 பிரான்ஸ்
-------------------------
இணுவில் தந்த செல்வம்! இன்முகம் காட்டி இனியசொல் பேசி வாழ்ந்து,
பணிவு,பண்பு,பாசம்!கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு!இறைபக்தி பேணி,
தணியாத பாசம்,பற்றும்! உறவுகளை பேணும் தன்மையும் உன்னதமாகி
அணிகலனாய் பொறுமை,பொறுத்தல்,மறத்தல்,மன்னித்தல் தமிழ் பண்பாய்
அணிகலனை விட அன்பே பெரிதென வாழ்ந்தீர்!அனைவர் உள்ளம் வென்றீர்!
இணுவில் தந்த விருந்தோம்பல்! திருக்குறள் தந்த இன்சொல்,இன்முகமும்!
அணியாய் வர அனைவர் மதிப்பும் பெற்றீரே! மீண்டும் எப்போ காண்போமோ!
தணியாதும்புகழ் எம்மவரில்! தாயே என்றும் எம்மனதில் இருப்பீர்!நீர் வாழி!
பிள்ளைகள்,பேரர்,பேர்த்தியரும்.செல்லப் பேரனும் புடைசூழ சிறப்பாக வாழ்ந்தீர்!
உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென உமைப்போற்றிய உற்றார் துடிக்கின்றார்!
வெள்ளை மனம் படைத்த தாயே! அவ்வுலகு நீ ஏக, இங்கு நாம் துன்புற்றோம் தாயே!
பிள்ளைகள்,உற்றார்,உறவுகள் உன் உழைப்பை,தியாகத்தை மதிக்கின்றார் புகழ்வாழி!
உள்ளத்தை வென்றாய்! எங்கள் மனதில் நிறைந்தாய்!என்றும் உன்நாமம் வாழும்அம்மா !
கள்ளமிலா வெள்ளைமனம்! கருத்தாய் உறவுகள்மதித்திடவே!காலம்போற்றவாழ்ந்தீரே!
கண்மணிஅம்மா புகழ்வாழி! காலம்போற்றவாழியவே! கண்ணீர்அஞ்சலி காணிக்கை!!
எண்ணம்எல்லாம் நிறைந்தவரே! எங்கள்மனதில் நிற்பவரே! உம்மைஎன்றும் மறவோமே!
நல்லையா சண்முகப் பிரபு , திறம்மன் ,நோர்வே ..0047-91784271
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment