WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Sunday, January 11, 2015

TRIBUTE TO MARIMUTHTHU SOMASUNDARAM RAGAVAN,SENIOR ENGINEER/GE,OSLO 16.11.1946- 05.01.2015

கண்ணீர் அஞ்சலி: அமரர்: மாரிமுத்து சோமசுந்தரம் ராகவன் ,சிரேஷ்ட பொறியியலாளர் . (வறுத்தலைவிளான்/ தெல்லிப்பளை,இலங்கை + ஒஸ்லோ ,நோர்வே) பிறப்பு: 16-11-1946................................மறைவு 05-01-2015 ------------------ ஓ! ராகவன்! ஓ ராகவன்!எங்கு சென்றீர்! எங்கு சென்றீர்! ஏன் சடுதியிலே எமைப்பிரிந்திட்டீர்! அவ்வுலகம் சென்றீரோ! இறைவன் அடி சேர்ந்தீரோ! உற்றத்தார் உறவினர்கள் நண்பர்கள் எல்லாம்! மனம் துடி துடிக்க சென்றீரோ! மாறாஅன்புடனே எல்லோர் மனம்கலங்கிஅழுதிடவே! எங்குசென்றீர்!எங்கு சென்றீர்! எங்கள் மனம் கலங்கியதே! பேரும்புகழுடனே,பெற்றமகள் ஆரபியும்,மகன் அர்ஜுனும் பேரன் அரோனுடன்மருமகள் துஸ்யந்தியும், மனையாள் சற்குணமும் மாய்ந்து அழுதிடவே மண்ணுலக இன்பம் போதுமென சிவனுலகம் சென்றீரோ! இறைவன் அடி சேர்ந்தீரோ! -------------------------------------------------- சைவம் தமிழ் போற்றும் ஈழவளத்திருநாட்டின் தெல்லிப்பளை ஊரினிலே தென்றலெனவந்தவனே! நகைச்சுவையில் வல்லவனே!நட்பினிலே திளைத்தவனே! நல்லவர்கள் புடைசூழ நோர்வே நன்னிலத்தில் வாழ்ந்தவனே! தெள்ளுதமிழில் மெல்லிசை தினம் தினம் பாடி மகிழ்ந்தவனே! அல்லாவை நாம் தொழுதால் பாட்டினிலே மகிழ்வுற்றாய்! எல்லா மதத்தையும் நீ போற்றியே மதித்திட்டாய்! எல்லா மொழியினரும் உன்னை உயர்வாய் மதித்திட்டார்! நல்ல இன்சொற்களினால் நண்பர்கள் பலர் பெற்றாய்! நானிலத்தில் உன் வாழ்வு தமிழனுக்கே பெருமையன்றோ! ------------------------------------------------ பன்னாட்டு நிறுவனத்தில் பேர்பெற்ற பொறியியலாளனாய் பைந்தமிழன் புகழ்பரப்பி எம் கொடியை உயர வைத்தாய்! எந்நாடு சென்றாலும் எம்தமிழன் திறமைக்கு சான்றானாய்! எத்தனைநாட்டில் செயல்திட்டம் நிறைவேற்றி பெருமையுற்றாய்! என்பயணஅனுபவங்கள் கேட்டுமகிழ்வுற்று பாராட்ட இன்புற்றேன்! எம்நாட்டுமக்கள் துன்பத்தில்பங்கெடுத்து துயர்நீக்க வழிகேட்டாய்! தன்னினம்மறந்து எதிரிகளின் கூட்டானோர் வழிகண்டு துயருற்றாய்! தமிழினத்தின் ஒற்றுமை முன்னேற்றம் பற்றி நன்கு விவாதித்தாய்! உன்குடும்பம்காத்து,பிறர்நலமும்பேணி உலக தமிழர் நலம் வேண்டி உலகம் உயர பல்துறையில் விவாதிப்பாய்! உன் புகழ் நீடு வாழி! --------------------------------------------------------- நல்லையா சண்முகப்பிரபு...12.01.2015 ஒஸ்லோ,நோர்வே

No comments: