Wednesday, March 11, 2015
GREETINGS POEM:MIRUTANGA ARANGETRAM: KIRISAN MANIVANNAN(NORWAY), 03-07-2015 INUVIL,SRILANKA
வாழ்த்துக்கவிதை:
----------------
மிருதங்க அரங்கேற்றம்-செல்வன் கிரீசன் மணிவண்ணன்-நோர்வே
03-07-2015 இணுவில்,பரராச சேகர பிள்ளையார் அரங்கம் - இலங்கை.
------------------------------------------
சீர் பெருகும் யாழ்ப்பாணம், இணுவில் ஊரின்
சிறப்புமிகு பிள்ளையார், சிவகாமி,கந்தனுடன்
பார்போற்றும் தமிழர் இனம் சிவபக்தியுடன்
பண்பாடும்,.நல்ல கல்வி,கலை,சைவம் போற்றி
வேர் ஊன்றும் வாழையடிவாழையாக பரந்துஓடி
வெற்றிக்கொடி தனை நாட்டி இவ்வுலகமெலாம்
பேர்பெற்று வாழுகின்றார்!உலகை வென்றார்!
பெற்றவர்கள் மனம்குளிர்ந்தார்!பெரியோர்கள் வாழ்த்திநின்றார்!
மணிவண்ணன்-சர்மிளாவும் பெற்றசெல்வங்கள்
மூத்தோன் கிரீசன்,முத்துக்கள் தர்சிகா,சப்தனா!
கணீரென மிருதங்கம்! இசையிலும் வல்லவனாம்!
கண்ணீர் வரசெய்யும் "மருதமலை மாமணியே"
தணியாத தாகமும் தப்லாவின் வேகமும்!அருமை!
தமிழன் புகழ் ஓங்கும்!தரணியே வியக்குமன்றோ!
பணியாதவீரம்! கலைஞானதீரம்! பரவட்டும் தமிழன்புகழ்!
பல்வகை திறமை!கல்வியில் புலமை!புலம்பெயர்ஆளுமை!
உலகெலாம் வியக்கவும்! நம்மவர் புகழவும்! தமிழ்,தமிழர் பழங்குடி!
உன்னதமான மூத்தகுடி! 70000ஆண்டுபாரம்பரியம்! பிபிசி ஆய்வன்றோ !
கலகலப்பாய் உலகெலாம்முன்பே பரந்தகுடி!நம்தன்மானம் காத்தகுடி!
கல்வியில் முதன்மையாய்,பழங்கலைகள்,பண்பாடு,மொழி காத்து!
உலகெலாம் கோவில்,கோபுரங்கள்!தமிழ்கல்வி,கலைக்கூடங்கள்கட்டி
உளமாய்காத்து சைவத்தின்காவலராய்,உலகுக்கே தமிழர் வழிகாட்டி!
புலம்பெயர்தமிழர் உயர்வுற்றார்!ஈழத்தமிழர் வாழ்வுக்கும் வழிகேட்டார்!
புதிய தலைமுறை வாழ்க! வளர்க!வெற்றிக்கொடிகள் நாட்டிடுக!எழுக!
நல்லையா சண்முகப்பிரபு- நோர்வே
shanmugappirabunalliah@gmail.com mobil : 0047-91784271 Shan.Nalliah (fb )
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment