Sunday, May 10, 2015
இனிய அம்மா தினம்:திருமதி நல்லையா புவனேஸ்வரி இணுவில்,யாழ்ப்பாணம் 1930-1967
இனிய அம்மா தினம்:
திருமதி நல்லையா புவனேஸ்வரி
இணுவில்,யாழ்ப்பாணம் 1929-1967
மறு பிறவியிலும் நான் உந்தன்
மகனாகவே பிறக்க வேண்டுமம்மா!
மக்கள்ஐவருமே கூடிஅமர்ந்திருக்க
சுவையாய் கதைகள் பலகூறி
சிறுவயதில் உன்குழைசாதம் ஊட்டும்
பரிவும்,சுவையும்,வாசமும்!
சிந்தனையை விட்டு விலக மறுக்குதம்மா!
இன்றும் உன் பேரன்பும் !
மறுபிறவியிலும் நாவில்,மூக்கில்
உன் சுவை,மணம் வேண்டுமம்மா!
மயிலேறும் முருகன்,ஆனைமுகன்,
சிவன், கிருஷ்ணன் பாட்டெல்லாம்
சிறுவயதில் நாம் கேட்டாலும்
மீண்டும் மீண்டும் கேட்க துடிக்குதம்மா!
மனம்இனிக்க மீண்டும்காதில் உன்குரல்
தேனாய்விழவேண்டும் அம்மா!
நல்லையா சண்முகப் பிரபு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment