Friday, July 10, 2015
TRIBUTE POEM FOR GREAT SERVICE: S.P.NADARAJAH ESQ,ANNA COFFE INDUSTRY,INUVIL
கண்ணீர் அஞ்சலி:
மாண்புமிகு பொன்னையா நடராஜா (1937-2015)
அதிபர்-அண்ணா தொழிலகம் ,இணுவில்
-----------------------------------
இணையிலா இணுவிலுக்கு மகுடம் தந்தவர்!
பெரும் மாண்பு தந்தவர்!
துணையற்ற ஊரவர்க்கு தொழிலும் தந்தவர்!
புன்முறுவல் தந்தவர்!
அணைபோல அனைவரையும் அணைத்துசென்றவர்!
அன்பு தந்தவர்!
கணை போல தமிழர்களின் உணர்வு காத்தவர்!
அகிம்சை வழிநின்றவர்!
துணையாகி சிறுவயதில் குடும்பம் காத்தவர்!
துன்பம் பல கடந்தவர்!
இணையற்றஇறைபக்தி தானும்கொண்டவர்!
தமிழ் பற்றும்கொண்டவர்!
அணையாதஊர்ப்பற்று,தேசப்பற்றுடன்
பொறுமை,கோபம் மிக காத்தவர்!
இணையில்லா உங்கள்புகழ் என்றும்வாழுமே!
எங்கள்மனதில் வாழுமே!
அன்புமிகுபெற்றோர்க்கும் பாசமிகு உடன்பிறப்புகட்கும் கடமைபுரிந்தீர்!
நண்பர்,ஊரவர்க்கு புன்சிரிப்பு,இன்சொல்லுடன்,உதவியும் செய்தீர்!
அன்பிலார்க்கு இவ்வுலகம்இல்லை எனநிரூபித்தீர்!
அன்பே சிவம் ஆனீர்!
என்றும் புன்முறுவலுடன் ஓயாது ஓடி ஓடி கடமை
செய்து மகிழ்ந்திட்டீர்!
அன்றும்என்றும் ஒருங்கே சகலரையும்மதித்திட்டீர்!
உள்ளம் வென்றீர்!
பண்புடனே உழைப்பாளிகளை நடத்திட்டீர்!
பலர் வாழ்வுயர வழிதந்தீர்!
கண்ணியம்,கடமை,கட்டுப்பாடு வழிகாட்டி
அண்ணாவை போற்றிட்டீர்!
எண்ணம்உயர்வு,சொல்உயர்வு,செயல்உயர்வுற்ற
உம்புகழ் நீடு வாழி!
நல்லையா சண்முகப்பிரபு, நோர்வே
shanmugappirabunalliah@gmail.com 0047-91784271
----------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment