Thursday, September 24, 2015
சங்கீத அரங்கேற்றம்: செல்வி யகதுக்சா ஜெயகுமாரன்
மனமுவந்த இனிய வாழ்த்துமடல்!
---------------------------------------------------
சங்கீத அரங்கேற்றம்:
-------------------------------
செல்வி யகதுக்சா ஜெயகுமாரன் (சங்கீத கலாஜோதி/வித்யாபூஷன்)
(இசைக்கலைமணி:சிவமலர் மனோகரனின் மாணவி )
26.09.2015 மாலை 5மணி,ULLENSAKER KULTURHUS-JESSHEIM - நோர்வே
இயல்,இசை,நாடகம்,சைவம் தளைத்தோங்கும் ஈழத்துஇணுவிலினிலே!
இன்பத் தமிழ்மொழிபேசி! இனியகலை போற்றி சங்கீதம் பாடிடுவர்!
மயில்கூவும் மாந்தோப்பில் கந்தனருளும்,குயில் கூவும் கூடலிலே
மயிலோன்அண்ணன் பிள்ளையாரும் என்றும்வழிகாட்ட வாழ்ந்திடுவர்!
கயல்விழியார் சிவகாமிஅம்மனும்,காரைசிவன்அருளும்வேண்டிநிற்பர்!
கருமைநிறவைரவரும் காப்பாற்ற வரம்வேண்டி! பக்தியுடன்வழிபடுவர்!
பயில்வித்த நடனவித்தகராம் ஏரம்பு சுப்பையா வழிவந்த பூட்டி இவர்!
பார்போற்றும் லண்டன் நடனமேதை:சாந்தினி சிவநேசன் பேத்தி இவர்!
அக்கினிகுழுவில்பாடி"சுந்தராம்பாள்"பட்டம்பெற்று!அதிசயிக்கசெய்தார்!
அனைவரையும் வியக்கசெய்தார்! நல்லஅற்புதகுரலில் அசத்திவிட்டார்!
எக்கணமும்இசைகுயில்,வானம்பாடியாய் தமிழ்முரசம்வானொலியில்
என்றும் பாடிமகிழ்ந்தார்!மகிழ்வித்தார்!எல்லோர் பாராட்டும் பெற்றார்!
மக்கள்அனைவரையும் மகுடியின்பாம்பாக இசைமயக்கி மகிழ்வித்தார்!
மக்களின் அன்பையும்,பெற்றோரின் மகிழ்வையும் பெற்றுமகிழ்ந்தாரே!
இக்கணம்முதலே உலகெலாம்பறந்து இசைகுயிலாய் புகழ்பெறுவாயே!
எக்கணமும் ஜெகமெலாம் சென்று யகதுக்சா பெரும் புகழ் பெறுவாயே!
புலம்பெயர்வாழ்விலும் முன்னோர்தந்த கலைசெல்வம் போற்றிவாழும்
குமரன்இணை நந்தினியும்,பிள்ளைகளும் நீடுவாழ வாழ்த்துகிறோம்!
பலம்மிக்கதமிழர்ஒரேசமூகமாகபல்லாண்டுவாழிஎன வாழ்த்துகிறோம்!
பன்மொழிபுலமைபெற்று பல்கலைகள்கற்று இளையோர் நீடுநீடுவாழி!
கலையறிவு,கல்வியறிவு,கேள்விஞானம்பெற்றுலகில்முதலிடம்பெறுக!
கண்டதுகற்றுபண்டிதனாகிடுக!உலகெலாம்உணர்ந்து,எம்வழிபேணிடுக!
மலையெனதுன்பம்வரினும் துணிவால்தாங்கிடுக!துணிந்து சென்றிடுக!
மக்கள்மனதைவென்றிடுக!மாற்றார்உலகை மதிப்பால்இனிவென்றிடுக!
என்றும் பதினாறு செல்வமும் பெற்று வாழ வாழ்த்தும்,
நல்லையா சண்முகப்பிரபு- நோர்வே கைபேசி:0047-91784271
shanmugappirabunalliah@gmail.com
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment