WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, March 3, 2009

உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை!

தமிழ் பிரவாகம்
உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை

தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
என சொல்லலாம்.
நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
மாதிரி அப்படியொரு டிசைன்.


நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து
வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்.
இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு
செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும்
வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக
இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.


உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து
வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன
முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை
கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும்
நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி,
பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.


முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த
சாலை.
உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற
பாகங்களுக்கு
கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக
வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை
நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத
முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான
முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான்
நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர
துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம்
சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள்
வளர்ந்தால் என்ன ஆகும்..?
காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல்
தேய்க்க வேண்டியிருக்கும்.
உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல்
வைத்திருக்கும் கருணை.


சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க
மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும்.
அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை


பயணபாதை விவரம்.
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.


யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள்
என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை
ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.


இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும்
சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள்
சொல்லின.
முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த
ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து
நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.


எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் ...

----------------------------------------
> தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> என சொல்லலாம்.
> நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> மாதிரி அப்படியொரு டிசைன்.

> நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
> செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
> ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து
> வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்.
> இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு
> செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும்
> வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக
> இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.


> உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து
> வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன
> முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை
> கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும்
> நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி,
> பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.


> முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
> உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
> கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த
> சாலை.
> உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற
> பாகங்களுக்கு
> கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக
> வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை
> நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத
> முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான
> முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான்
> நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர
> துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம்
> சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள்
> வளர்ந்தால் என்ன ஆகும்..?
> காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல்
> தேய்க்க வேண்டியிருக்கும்.
> உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல்
> வைத்திருக்கும் கருணை.


> சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க
> மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
> காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும்.
> அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை


> பயணபாதை விவரம்.
> 1.சகஸ்ராரம்
> 2.ஆக்ஞா
> 3.விசுக்தி
> 4.அனாகதம்
> 5.மணிபூரகம்
> 6.சுவாதிஷ்டானம்
> 7.மூலாதாரம்.


> யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள்
> என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை
> ஆதாரமாகக்கொண்டு
-----------------------------------------------------
உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை
பாராட்டுதலுக்கு நன்றி. இன்னும் பல கட்டுரைகள் மலரும்-
பிரவாகம் குழுமத்தில் ஏறக்குறைய 4000 சொச்சம் பதிவுகளை இட்டிருக்கும் ஒரு
தமிழ் ஏந்தல் - என் படைப்புக்கும் சான்று பகர்ந்திருப்பது இனி வரும் என்
எழுத்துக்களுக்கான உரம்.
நன்றி.
வெங்கட்.தாயுமானவன்.
------------------------------------------------
> சமீபகாலமாக உங்களின் பதிவுகளை படித்துவருகிறேன்.
> இந்தக் குழுமத்தில் உங்களின் பதிவுகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. மிக்க
> மகிழ்ச்சி! உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை என்ற இந்தப் பதிவில் உடலின் அமைப்பை
> இந்தக் கோணத்தில் பார்ப்பதும் படிப்பதும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது.
> நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

> வாழ்த்துகள்!


> அன்புடன்
> சுவாதி,
--------------------------------
> > தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> > சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> > போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> > என சொல்லலாம்.
> > நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> > பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> > மாதிரி அப்படியொரு டிசைன்.


> > நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> > இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
> > செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
> > ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து
> > வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்.
> > இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு
> > செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும்
> > வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக
> > இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.


> > உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து
> > வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன
> > முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை
> > கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும்
> > நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி,
> > பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.


> > முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
> > உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
> > கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த
> > சாலை.
> > உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற
> > பாகங்களுக்கு
> > கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக
> > வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை
> > நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத
> > முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான
> > முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான்
> > நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர
> > துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம்
> > சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள்
> > வளர்ந்தால் என்ன ஆகும்..?
> > காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல்
> > தேய்க்க வேண்டியிருக்கும்.
> > உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல்
> > வைத்திருக்கும் கருணை.


> > சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> > ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> > உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க
> > மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> > பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
> > காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை
-----------------------------------------------------------
அருமையான கட்டுரை தாயுனாவன் ஐயா.. தொடருங்கள்... படிக்க
காத்திருக்கிறோம்.


> தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> என சொல்லலாம்.
> நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> மாதிரி அப்படியொரு டிசைன்.

> நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> இருக்கிறது.



எப்படி ? எங்கிருந்து வருகிறது ? யார் ? ஏன் அனுப்புறாங்க ?


> சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி.



மனமா ? மூளையை தானே சொல்றீங்க ?

>மனம் இயங்க
> மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
> காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும்.
> அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை

> எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும்
> இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும்.
> மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த
> மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இன்றைய கட்டுரையின் தேவை
> நிறைவேறிவிடும்.


> 1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.
> 2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி
> சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.
> 3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.
> 4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது
> "அனாகதத்திற்கான அணீ.
> 5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும்
> "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.
> 6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான
> அணி.
> 7.முலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.


> மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த
> புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன்
> முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?



ஏன் தங்கத்தை பூட்ட வேண்டும்? வெள்ளியோ, வெண்கலமோ பூட்டலாமே ?

ஆண்களுக்கு இது போல நகைகள் இல்லையே ஏன் ?
இதெல்லாம் ஆண்களுக்கு தேவையில்லையா?
-----------------------------------------------
> அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?
> யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களை த்ருகிறார்கள். ஆனால் பரிட்ச்சார்த்தமாக
> எனக்கு தோன்றுவதை பகிர்கிறேன் (எதனோடும் முரண்படாமல்)
> சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.
> ஆக்ஞா -நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்
> விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய்
> வெளிப்படுத்தும் மையம்.
> அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு
> உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.
> மணிபூரகம்-வெளி உலகி பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய
> ஏற்பு மையம்.
> சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும்
> மையம்
> மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம்
> பெறும் மையம்.


> இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான்
> உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி
> பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்


> இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்-
> "நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல"
> "என்னால விழுங்க முடியல..""(i can't gulf it) ,"என்னால ஏத்துக்க முடியல"
> "என்னால செரிக்க முடியல"


> நான் நானா இல்லன்னா -பைத்தியம்
> நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்
> விழுங்க முடியலன்னா- வாந்தி.
> ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.
-----------------------------------------------
இன்னும் நிறைய கேளுங்க காமேஷ் - கோபிக்கவெல்லாம் மாட்டேன்.தங்களின்
விவரம் கண்டேன் "இல்லாத கடவுளே காப்பாற்று"-என்று சொல்லி இருக்கிறீர்கள்.
நான் கடவுளின் இருப்பு இல்லாமை பற்றி உங்கள் அளவுக்குகூட
யோசிப்பவனில்லை.கடவுளின் பெயரால் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு ஞாயம்
தேடிக்கொண்டிருக்கிறேன் அவ்வளவே.

புனலிலும், அனலிலும், காற்றிலும்,குப்பையிலும் எடுக்கப்படும் மின்னாற்றல்
செம்பு கம்பி வழியாய் நம் வீட்டுக்குள் வந்து ஒளியையும் ஒலியைம் தருவதை
ஏற்கிறோம். ஆனால் நம் உயிர்காந்த ஆற்றல் வானிலிருந்து வருவதை சந்தேகக்
கண்கொண்டு பார்க்கிறோம். தவறில்லை. அதே சமயத்தில் இது விவாதம் செய்து
அதன் பின்னால் ஏற்கும் விஷயமல்ல. உணர்தலுக்குரிய விஷயம்.


கருந்துளையிலிருந்து பெருவெடிப்புக்கு பிறகான விளைவே இவ்வுலகின் தோற்றம்
எனக்கொண்டால்- வெடித்தது ஏதோ ஒரு நாளில் ஒடுங்கவும் செய்யும். இதை
செய்வது யாரோ அல்லது எதுவோ
அவரே அல்லது அதுவேதான் நமக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறது.
தாமரையை மலரச்செய்கிற சூரியனும், அல்லியை மலர செய்கிற சந்திரனும்
இல்லாமல் போனால் அந்த மலர்களை இன்குபேட்டரில் வைத்தெல்லாம் மலரசெய்ய
முடியாது. அப்படியே செய்தாலும் ஒரு பூவை மலரவைக்க செய்ய வேண்டிய செலவு
அதிகமாய் இருக்கும்.
தாகூரின் வார்த்தைகளில்..


உன்னால் பூவுக்கு
வாசத்தையோ
மணத்தையோ
அதில் தேனையோ
மகரந்தத்தையோ
மென்மையையோ
ஒருகாலும் உருவாக்க முடியாது.
அதை செய்துகொண்டிருப்பவன்
மிக எளிமையாக செய்துகொண்டிருக்கிறான்.- என்பார்.


தாகூர் எந்த கடவுள் உருவத்தையும் நமக்கு முன் நிறுத்தவில்லை.


இது ஏன் நடக்கிறது என்பதைதான் எல்லோரும்
யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்..நான் உட்பட- நீங்களும் யோசியுங்கள்.
உலக உருவாக்கத்திற்கு காரணம் எதுவோ அதுவேதான் இதற்கும் காரணமாக இருக்க
முடியும்.நாம் கூட்டாக சேர்ந்தால்தான் விடை காணமுடியும் அல்லது
முயற்சியாவது செய்யமுடியும்.


இனி அடுத்த கேள்வி..
மூளை என்பது மனதின் ஊடகம் - மனம் தான் செயல்பட மூளையை
பயன்படுத்திக்கொள்கிறது.


தங்கத்தில் பூட்டியது ஒரு உயர்வு நவிற்சிக்காக- எதை வேண்டுமானாலும்
பூட்டலாம். நம் இந்திய சிந்தனை கூறுகளில் மனதையே ஒரு பெண்ணாக பார்க்கும்
பாவனை இருக்கிறது. ஒருவேளை அதனால் இருக்கலாம்.


ஆண்களும் இதே மையங்களில் திருநீற்றை அணியும் வழக்கம் இன்னும் இருகிறது.
வயது முதிர்ந்தவர்களை பாருங்கள். அவர்கள் எங்கெல்லாம் திருநீரு
அணிகிறார்களென்று.


பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் தோப்புகரணம் போடுவதை பார்த்திருப்பீர்கள்.
நம் பள்ளிகளில் அதை தண்டணையாக்கிவிட்டார்கள்.


தலையில் வல பக்கம் இடபக்கம் குட்டிக்கொண்டு - பிறகு வலக்கையை இடதிற்கும்,
இடக்கையை வலதிற்கும் பெருக்கல் குறிபோல் மாற்றி குட்டிக்கொண்டு
தன்பின்னரே குனிந்து தோப்புக்கரணம் போடுவார்கள்.
நாம் சொன்ன நெடுஞ்சாலையில் trafficjam ஏற்படாதிருக்கவே அங்கு கைகளால்
குட்டி அதிர்வை ஏற்படுத்தி சுணக்கத்தை நீக்கும் பயிற்சி அது.


இந்த பதிலும் நீங்கள் திருப்தி அடைவதற்காக அல்ல - சொல்ல விட்டுப்போன
செய்திகளை சொல்லமுடிந்ததில் எனக்கே திருப்தி.
-------------------------------------------
> அருமையான கட்டுரை தாயுனாவன் ஐயா.. தொடருங்கள்... படிக்க
> காத்திருக்கிறோம்.

> நடுவில கேள்விகள் கேட்டா கோவிச்சிக்க மாட்டீங்களே ?
----------------------------------------------------------
> > தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> > சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> > போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> > என சொல்லலாம்.
> > நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> > பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> > மாதிரி அப்படியொரு டிசைன்.


> > நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> > இருக்கிறது.


> எப்படி ? எங்கிருந்து வருகிறது ? யார் ? ஏன் அனுப்புறாங்க ?


> > சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> > ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> > உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி.


> மனமா ? மூளையை தானே சொல்றீங்க ?


> >மனம் இயங்க
> > மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> > பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும்
..........................................
கடவுள் என்ற இருப்பை மனிதன் தனக்கு இடர் வரும் நேரங்களில் மட்டும் தான்
தேடுகிறான். தன் கஷ்டம் அல்லது துயரின் செறிவிற்க்கேற்ப இயலாமை என்ற புள்ளியில்
கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும் தனக்கு உதவ வேண்டும் என்ற ஆவலுக்கு
உந்தப்படுகிறான் அல்லது கடவுளே இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுகிறான்.
இரு நிலைகளிலும் அவனுடைய மனதின் பேதலிப்பு தான் கடவுள் பற்றிய முடிவாகிறது.
மற்றப்படி மனிதனுக்கு கடவுள் என்ற விதயம் தேவையற்றது என்பது சரியான கருத்து
என்று சொல்லலாமா???


அமெரிக்காவில் நிகழ்ந்த என்னுடைய அப்பாவின் மரணம் அறியப்படாமல் , அவர் இன்னமும்
கோமாவில் தான் இருக்கிறார் என்ற நினைவில் அப்பாவைக் காப்பாற்றும்படி வேண்டி
இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் ஏறி பிராத்தித்த எனக்கு...அப்பாவின் பூத உடலை
பார்த்த பின் இந்த நிமிடம் வரை வந்த எந்த கஷ்டத்திலும் கடவுள் என்பது இல்லை
..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது நான்
கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க தோசத்தில்
கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும் வாயில்
வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை..


ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.


அன்புடன்
சுவாதி.
-----------------------------------------

> இன்னும் நிறைய கேளுங்க காமேஷ் - கோபிக்கவெல்லாம் மாட்டேன்.தங்களின்
> விவரம் கண்டேன் "இல்லாத கடவுளே காப்பாற்று"-என்று சொல்லி இருக்கிறீர்கள்.
> நான் கடவுளின் இருப்பு இல்லாமை பற்றி உங்கள் அளவுக்குகூட
> யோசிப்பவனில்லை.கடவுளின் பெயரால் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு ஞாயம்
> தேடிக்கொண்டிருக்கிறேன் அவ்வளவே.

> புனலிலும், அனலிலும், காற்றிலும்,குப்பையிலும் எடுக்கப்படும் மின்னாற்றல்
> செம்பு கம்பி வழியாய் நம் வீட்டுக்குள் வந்து ஒளியையும் ஒலியைம் தருவதை
> ஏற்கிறோம். ஆனால் நம் உயிர்காந்த ஆற்றல் வானிலிருந்து வருவதை சந்தேகக்
> கண்கொண்டு பார்க்கிறோம். தவறில்லை. அதே சமயத்தில் இது விவாதம் செய்து
> அதன் பின்னால் ஏற்கும் விஷயமல்ல. உணர்தலுக்குரிய விஷயம்.


> கருந்துளையிலிருந்து பெருவெடிப்புக்கு பிறகான விளைவே இவ்வுலகின் தோற்றம்
> எனக்கொண்டால்- வெடித்தது ஏதோ ஒரு நாளில் ஒடுங்கவும் செய்யும். இதை
> செய்வது யாரோ அல்லது எதுவோ
> அவரே அல்லது அதுவேதான் நமக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறது.
> தாமரையை மலரச்செய்கிற சூரியனும், அல்லியை மலர செய்கிற சந்திரனும்
> இல்லாமல் போனால் அந்த மலர்களை இன்குபேட்டரில் வைத்தெல்லாம் மலரசெய்ய
> முடியாது. அப்படியே செய்தாலும் ஒரு பூவை மலரவைக்க செய்ய வேண்டிய செலவு
> அதிகமாய் இருக்கும்.
> தாகூரின் வார்த்தைகளில்..


> உன்னால் பூவுக்கு
> வாசத்தையோ
> மணத்தையோ
> அதில் தேனையோ
> மகரந்தத்தையோ
> மென்மையையோ
> ஒருகாலும் உருவாக்க முடியாது.
> அதை செய்துகொண்டிருப்பவன்
> மிக எளிமையாக செய்துகொண்டிருக்கிறான்.- என்பார்.


> தாகூர் எந்த கடவுள் உருவத்தையும் நமக்கு முன் நிறுத்தவில்லை.


> இது ஏன் நடக்கிறது என்பதைதான் எல்லோரும்
> யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்..நான் உட்பட- நீங்களும் யோசியுங்கள்.
> உலக உருவாக்கத்திற்கு காரணம் எதுவோ அதுவேதான் இதற்கும் காரணமாக இருக்க
> முடியும்.நாம் கூட்டாக சேர்ந்தால்தான் விடை காணமுடியும் அல்லது
> முயற்சியாவது செய்யமுடியும்.


> இனி அடுத்த கேள்வி..
> மூளை என்பது மனதின் ஊடகம் - மனம் தான் செயல்பட மூளையை
> பயன்படுத்திக்கொள்கிறது.


> தங்கத்தில் பூட்டியது ஒரு உயர்வு நவிற்சிக்காக- எதை வேண்டுமானாலும்
> பூட்டலாம். நம் இந்திய சிந்தனை கூறுகளில் மனதையே ஒரு பெண்ணாக பார்க்கும்
> பாவனை இருக்கிறது. ஒருவேளை அதனால் இருக்கலாம்.


> ஆண்களும் இதே மையங்களில் திருநீற்றை அணியும் வழக்கம் இன்னும் இருகிறது.
> வயது முதிர்ந்தவர்களை பாருங்கள். அவர்கள் எங்கெல்லாம் திருநீரு
> அணிகிறார்களென்று.


> பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் தோப்புகரணம் போடுவதை பார்த்திருப்பீர்கள்.
> நம் பள்ளிகளில் அதை தண்டணையாக்கிவிட்டார்கள்.


> தலையில் வல பக்கம் இடபக்கம் குட்டிக்கொண்டு - பிறகு வலக்கையை இடதிற்கும்,
> இடக்கையை வலதிற்கும் பெருக்கல் குறிபோல் மாற்றி குட்டிக்கொண்டு
> தன்பின்னரே குனிந்து தோப்புக்கரணம் போடுவார்கள்.
> நாம் சொன்ன நெடுஞ்சாலையில் trafficjam ஏற்படாதிருக்கவே அங்கு கைகளால்
> குட்டி அதிர்வை ஏற்படுத்தி சுணக்கத்தை நீக்கும் பயிற்சி அது.

--------------------------------------------------
//நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
இருக்கிறது//


//அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது//


அன்புத் தாயுமானவன்,


எனக்கும் சில கேள்விகள்.
ஒவ்வொருவருக்கும் ஆற்றல் கிடைக்கும் அளவு வேறுபடுமா?


1. இது எண்ணங்களோடு தொடர்பு உடையதா?
2. நம்க்கு வேண்டுமளவுக்கு பெற முடியுமா?
3. அதிகம் பெற்றால் தீமையா?
4. நியூட்டனின் மூன்றாம் விதி உடன்படுமா?
5. இந்த ஆற்றலின் திறனை நமக்குள் அதிகப்படுத்த முடியுமா?


அற்புதமான பதிவு.
அதிசயமாய் எனக்கும் கேள்வி கேட்க நேரம்..


நன்றி.


--
தமிழ் வாலிபன்
ஒன்று விழ ஒன்பதாய் எழும். வாழும் உலகெங்கும். வீழாது தமிழ்.
பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.
"தமிழரிடம் தமிழில் பேசுவோம்" தாய்க்குச் செய்யாததைத்
தமிழுக்குச் செய்வோம்.. http://groups.google.com/group/Piravakam
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
-----------------------------------------
உலகியல் ரீதியில் எல்லோரும் ஏற்கும் ஒரு கருத்தை நிறுவ சாத்தியமே இல்லை.
காரணம் நாம் வாழும் வாழ்கை என்பது சார்பியலை சார்ந்தது என்ற உண்மையை
நம்மில் பெரும்பாலோர் மறந்துவிட்டோம். அமெரிக்காவில் நீங்கள் இந்த மடலை
அடித்தபோது அங்கு சூரியன் இருந்திருக்ககூடும். அதே நேரம் இங்கு
காலனேரத்தின் நிலை வேறு.

ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை மாற்றிபோட்டாலே பொருள்
மட்டுமல்ல..யாவுமே மாறிபோகும். உதாரணத்திற்கு- what is the time..? என்ற
கேள்விக்கும் what the time is..? என்ற கேள்விக்கும் உள்ள முரணை
பார்த்தால் விளங்கும்.


கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் சர்ர்பு நிலையாகும்.
நம்பாமல்போனதற்கு நீங்கள் 100 காரணம் சொன்னால். நம்புவதற்கு ஒருவர் 1000
காரணங்களை சொல்லக்கூடும்.


இறையை -உருவமாக, கொள்கையாக பாராமல், ஒரு தன்மையாகவும்,இயற்கை
ஒழுக்கமாகவும் பார்க்க புரிந்துகொண்டால்
பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். துன்பம் நேரும்போது
காப்பாற்றவேண்டிய பொறுப்பெல்லாம் கடவுள் தன்மைக்கு கிடையாது.


ஒரு குண்டூசி தேவை என்றால் வானத்தை பார்த்து கர்த்தரிடமோ, ஈசனிடமோ,
அல்லாவிடமோ "குண்டூசியை தாருங்கள் என கேட்பதில் " ஞாயமே இல்லை. உருவான
காலத்திலிருந்து நிலத்தடியில் தங்கிய இரும்புதாது பற்றிய அறிவு நம்மிடம்
உண்டு. பிரித்தெடுத்து உருக்கி, ஊச்சியை உருவாக்கிக்கொள்ளவேண்டியதுதான்.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்- இயற்கை ஒழுக்கம் நமக்கு அறிவை மட்டும்தான்
தரும். அதைவைத்து நாம் பெறநினைப்பதை அடைந்துகொள்ள வேண்டியதுதான்.நம்
நாட்டில் இரும்பு தாது தீர்ந்துபோனால் அயல்னாட்டிலிருந்து தருவிக்க
வேண்டியதுதான். அங்கும் தீர்ந்துவிட்டதா..இரும்புக்கான மாற்றுபொருளை
யோசிக்க வேண்டியதுதான். மாற்றுப்பொருளும் உருவாக்க முடியவில்லையா..?இந்த
உலக இயக்கம் நின்றுவிடாது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. பிள்ளையார்
சிலை பால் குடித்ததென்று , அந்த சிலையை உடைத்த ஒரு தீவிரவாதிதான் இன்று
இப்படி எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கு ஆன்மீகம் என்பது பாட்டு பாடுதல்
மத சின்னங்களை அணிதல், என்ற விதிக்கப்பட்ட கட்டுக்குள் நின்று போனது
பரிதாபம்.


நேற்று உங்களின் profile பார்த்தேன். புற்றுநோய் உள்ளவர்க்கு உதவுதலை
நோக்க்மாக சொல்லி இருந்தீர்கள். உங்களால் உதவி பெற்ற ஒருவர், பூரண குணம்
பெற்று "நீங்கள்தான் என் கடவுள் "என்று சொன்னால் என்ன செய்வீர்கள்..?
என்ன சொல்வீர்கள்..?
நாம் இப்படித்தான் பழக்கப்பட்டுவிட்டோம். செய்தால் சாமி உண்டு- செய்யலையா
சாமி இல்ல - இரண்டு கருத்தியலுமே தவறு.


அப்புறம் ஏதோ ஒரு பக்கத்தை புரட்டிக்கொண்டு வந்தபோது -உங்கள் வார்த்தை
ஒன்று கண்ணில் பட்டது- "நாம் பதியனிட்ட ரோஜா..நம் கண் முன்னாலேயே மலருதலை
பார்த்தல்..அதை ரசித்தல் "என ஒரு அழகியலோடு சொல்லப்பட்ட அதை உள்ளே சென்று
படிக்ககூட தோணவில்லை.நாம் பார்க்க அந்த செடி எத்தனை மலர்களை மலர்த்தி
மகிழ்ச்சிப்படுத்துகூடும்..? சீசன் மாறினால் மலர்தல் நின்றுவிடாதா..?
இதுதான் இயற்கையின் ஒழுக்கம். இங்கொரு பூ மலர்வதை
நிறுத்தினால்தான்,வேறொரு இடத்தில் வேறொரு பூவை மலர்த்த முடியும்.


இந்தியாவில் வெயில்- US ல் நிலா. USல் வெயில் இந்தியாவில் நிலா


வகுப்புக்கு வந்த வாத்தியார் கேட்டார்.."டேய் பசங்களா..பூமி நம்ம சூரியனை
எப்படிடா..சுத்துது..?" பையன் ஒருத்தன் சொன்னான் , "ஒழுங்கற்ற பாதையில்
சுத்தி வருது சார்.." அப்படின்னு.
"வெரி குட். ஒக்காருடா" அப்படின்னாரு வாத்தியார்.
நம்ம பள்ளிகூட பாடதிட்டம் இதைத்தான் சொல்லுது. பையன் இதை எழுதினா
மதிப்பெண் நிச்சயம் உண்டு. ஆனால் உண்மை என்ன தெரியுமா..? "பூமி சூரியனை
ஒழுங்கற்ற பாதையில்..ஒழுங்காக சுற்றி வருகிறது.." ஆம் சுத்தி வர்றதென்னவோ
ஒழுங்கில்லா பாதைதான்..,ஆனா சுத்துகிற முறையில் ஒழுக்கம் இருக்கு.
அதனாலதான் உலக இயக்கம் நடந்துகிட்டு இருக்கு.


ஒழுங்குமுறைகளை ஞாயப்படுத்தி நம்மை அத்துமீற பணிக்கும் வாழ்வியல்
சூழலில், அதை மீறாமல் , ஒழுங்கற்ற உலகத்தில் நாம் ஒழுங்காய் வாழ கடவுள்
கொள்கையோ, இயற்கைனிலை ஒழுக்கமோ ஏதோ ஒரு பெயரில் நமக்கு ஒன்று
தேவைப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்.


"நன்றாங்கால் நல்லவா காண்பவர்
அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி.
நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..?
அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம்
எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக
தேட்டங்கள்தான். .
---------------------------------------------

> "நன்றாங்கால் நல்லவா காண்பவர்
> அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி.
> நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..?
> அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம்
> எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக
> தேட்டங்கள்தான். .<<<<



த.வா உங்கள் கேள்வியால்,,,தாயுமானவர் ஐயாவிடம் இருந்து அரும்பெரும்
பொக்கிஷங்கள் நமக்கு கிடைக்கப்பெற்றன.

உண்மைதான் ஐயா,,


கேட்டதும் 'தா" என்று சாமியைக்கூட 'வியாபாரி" ஆக்கிவிட்டோம்..


என்றென்றும் நட்புடன்,
விஜியின்சுதன்
--------------------------------------------------
> ..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது
> நான் கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க
> தோசத்தில் கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும்
> வாயில் வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப்
> பார்ப்பதில்லை..


> ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.



மிக உண்மை... எனக்கும் அப்படியே... உருகி உருகி கடவுளை நம்பியவள் சில
காரணங்களினால் கொஞ்சம் விலக ஆரம்பித்தேன்...

ஆனாலும், நம் குழந்தைகளிடம் கடவுள் பயம், பக்தி சொல்லிதானே வளர்க்க
வேண்டியுள்ளது... அந்த துணை எப்போதுமே தேவையாயுள்ளது...


தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================
-------------------------------------------
> கடவுள் என்ற இருப்பை மனிதன் தனக்கு இடர் வரும் நேரங்களில் மட்டும் தான்
> தேடுகிறான். தன் கஷ்டம் அல்லது துயரின் செறிவிற்க்கேற்ப இயலாமை என்ற புள்ளியில்
> கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும் தனக்கு உதவ வேண்டும் என்ற ஆவலுக்கு
> உந்தப்படுகிறான் அல்லது கடவுளே இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுகிறான்.
> இரு நிலைகளிலும் அவனுடைய மனதின் பேதலிப்பு தான் கடவுள் பற்றிய முடிவாகிறது.
> மற்றப்படி மனிதனுக்கு கடவுள் என்ற விதயம் தேவையற்றது என்பது சரியான கருத்து
> என்று சொல்லலாமா???

> அமெரிக்காவில் நிகழ்ந்த என்னுடைய அப்பாவின் மரணம் அறியப்படாமல் , அவர் இன்னமும்
> கோமாவில் தான் இருக்கிறார் என்ற நினைவில் அப்பாவைக் காப்பாற்றும்படி வேண்டி
> இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் ஏறி பிராத்தித்த எனக்கு...அப்பாவின் பூத உடலை
> பார்த்த பின் இந்த நிமிடம் வரை வந்த எந்த கஷ்டத்திலும் கடவுள் என்பது இல்லை
> ..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது நான்
> கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க தோசத்தில்
> கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும் வாயில்
> வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை..


> ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.


> அன்புடன்
> சுவாதி.

------------------------------------------------

சுவாதியக்கா,

கடவுள் நம்பிக்கையில்லாமைக்கு உங்கள் காரணம் சரியில்லை என்றே
நினைக்கிறேன். எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவங்க தானே..
நான் உன்னை வேண்டினேன் நீ என்னை ஏமாத்திட்டாய்னு சொல்றா மாதிரி இருக்கு.
அது அறியாமை.


மறுபடியும் கடவுள் நம்பிக்கைக்கு போங்க..
பல வழிகளில் உங்களுக்கு உதவி புரியும்...
கடவுள் நம்பிக்கை உங்க மனசுக்கு ஒரு அமைதியை கொடுக்கும்...
இந்த அமைதி ஆரோக்கியத்தை கொடுக்கும்...
ஆரோக்கியமாக இருந்தால் குளிர்காலத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனையும்
வராது.


அட்லீஸ்ட் தப்பு செய்தால் கடவுள் கண்ணை குத்துவார்னாவது பசங்களுக்கு ஒரு
பயத்தை ஏற்படுத்துங்கள்...பிற்காலத்தில் அவங்க சிந்தித்து அதெல்லாம்
சும்மானு
தெரிந்துகொள்ளும் வரை அவர்களை நற்வழி படுத்தலாம்.
---------------------------------------------------------
ஆற்றல் கிடைக்கும் அளவில் எந்த வேறுபாடும் கிடையாது. எல்லோருக்கும் ஒரே
மாதிரியான அள்வில்தான் வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்துவதிலதான்
கோளாறு.இயற்கை நமக்கு தந்திருக்கும் நதிகள் அதிகம். அதை பராமரித்து
பகிர்ந்துகொள்வதில்தான் பிரச்சினை அல்லவா..?
இன்னொருவகையில் சொல்வதானால்-அன்றாடம் நாம் பயன்படுத்தும்
மின்சாதன்ப்பொருட்கள் வடிவத்திலும்,தன்மையிலும்,செயல்பாட்டிலும் வேறு
வேறானவை.(சுழலும் மின்விசிறி,கொதிக்கும் heater, குளிரும் a/c )ஆனால்
குளிர்வதற்கானாலும் சரி. கொதிப்பதற்கானாலும் சரி.நாம் உள்ளீடாக தரும்
பொருள் ஒன்றேதான். மின்சாரம். அளவும் ஓரே அளவுதான்.(230 வோல்ட்ஸ்). மின்
சலவைபெட்டியோ. தொலைகாட்சி பெட்டியோ அதற்கு தேவையான மின்சாரத்தை
எடுத்துக்கொள்ளுமாறு டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல் நாம் என்ன
டிசைன் என தீர்மானிக்காதவரை ஆற்றலின் அளவு பற்றி யோசிக்கமுடியாது.

திடமாய் இருக்கும் ஒரு வசதியான வீட்டு பையனால்-ஒரு சைக்கிளைக்கூட தள்ள
முடியாது.ஆனால்..பிளாட்பாரத்தில் வசிக்கும் ஒரு கூலிக்கார சிறுவன்
அனாயசமாய் ஒரு அரிசி மூட்டையை தூக்கிவிடுவதை பார்க்கிறோம். இந்த ஆற்றல்
வளர்ச்சி புறம் சார்ந்தது.புற ஆற்றலை தேவைகள் வளர்க்கவோ,குறைக்கவோ
செய்யும். ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பது அக ஆற்றல் பற்றி.


மனதுக்கும் மூச்சுக்கும் தொடர்பு
இருக்கிறது.கோபம்,tension,விரக்தி,ஏமாற்றம்,பதற்றம்..போன்ற சமயங்களில்
சுவாசத்தின் வேகமும்,இதய துடிப்பும் அதிகரிப்பதை கண்டிருக்கிறோம்
அல்லவா..?அதே ஒரு பெருமூச்சு விடும் சமயத்தில் கிடைக்கும் relax ஐயும்
நினைத்து பாருங்கள்.


மூச்சை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நம் அக ஆற்றலை வளர்த்துக்கொள்ளமுடியும்.
அதற்கான பயிற்சிமுறைகளான யோகா,தியானம், ஆகியவற்றை மதங்களோடும்,கடவுளோடும்
தொடர்பு படுத்தியதே அதன் மீதான நம்பிக்கை இன்மைக்கான காரணம் ஒரு சாதாரண
செடி தனக்கு தேவையான் உணவை தானே தயாரித்துக்கொள்கிறது. எங்கே வைத்தாலும்
சூரியனை நோக்கி செல்லும் தேவையும்,புரிதலும் அவைக்கு உண்டு. இதுதான்
ஒவ்வொரு உயிர் குழுமத்திற்கும் இயற்கை செய்து வைத்திருக்கும் network
system.
வண்ணத்துபூச்சி கோடி ரூபாய் தந்தாலும் மலம் உண்ணாது. பன்றிக்கு 100 கோடி
ருபாய் தந்தாலும் தேன் பருகாது. இது அவற்றின் network. இவ்வளவு ஏன் 1000
ரூ.கொடுத்து ஒரு செல்போன் வாங்கி, 100 ரூக்கு கிடைக்கும் ஒரு சாதாரண சிம்
கார்ட் நம்மை ஒரு network உடன் இணைக்கும்போது..காந்த மயமான மனிதனுக்கு
இயற்கை வழங்கியிருக்கும் network பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள். மற்ற
உயிரினம் போல நமக்கு network வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை.நாம்
நம்மை tune செய்ய..செய்ய..நம் ஆற்றலின் அலைநீளம் அதிகரித்துக்கொண்டே
போகும் என்பதில் ஐயமே வேண்டாம் எல்லொரையும் போன்றவர்தான் ப்ரூஸ்லீ, ஆனால்
அவருடைய கைகள் மட்டும் எப்படி ஓரெ அடியில் கல்லையும், மரத்தையும்
பிளந்தன..? காரணம் பயிற்சி. அவரைப்போல பயிற்சி செய்த எல்லோருமே இன்று
கல்லை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நீங்களும் பயிற்சி செய்தால் உடைக்க
முடியும்.பயிற்சி செய்தால் யாராக இருந்தாலும் ஆற்றல் வரும்..சந்தேகமே
வேண்டாம்.


அடுத்து -ஆற்றலை அதிகமாக்கிகொள்வது தீமையா ..?
அது உங்கள் ஆற்றலை எந்த நோக்கத்திற்காக செலவு செய்யப்போகிறீர்கள் என்பதை
பொறுத்து இருக்கிறது. ஓடுகளத்தில் 120 மைல் வேகத்தில் காரை செலுத்தினால்
வெற்றி. பொது சாலையில் ஓட்டினால் தண்டனை. இது நிஜம்தானே..?.


நியூட்டனின் விதி நிச்சயமாய் பொருந்தும். பெரிய உதாரணமெல்லாம் தேவை
இல்லை. கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொள்ளும் நம்
சாமிகளை உற்று பாருங்கள். அந்த 48 நாட்களுக்கு அனுஷ்டிக்கும் விரதமென்ன,
கோபவார்த்தைகள் கிடையாது, மது,மாமிசம்,மாது கிடையாது. வயது வித்தியாசம்
பாராமல் அனைவரையும் தெய்வாம்சமாய் பாவைத்து காலில் விழும் தன்மை என்ன,,,?
48 நாட்களுக்கு பிறகு இந்த உணர்வுகள் என்னாகிறது.
மாலயை கழற்றியதும்- பட்டை லவங்க மசாலா- டாஸ்மாக்..இதுதானே. நினைத்தால்
அந்த தவ தன்மையை ஆயுளுக்கும் தொடர முடியாதா..? முடியும்..?மனம் தேவை
இல்லை என நினைக்கிறது. அதனால் தலை உச்சியில் கவனமாய்
உட்கார்ந்துகொண்டு..விழிப்பய் இருந்த் மனம்.., தன் நிலையில் இருந்து
இறங்கிவிடுகிறது.


"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.."என பாடுவதற்கும், "நிலாகாயுது
நேரம் நல்ல நேரம்.."என பாடுவதற்கும் ஆற்றல் நிலையில் வித்தியாசம்
இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறதா..?


நிச்சயமாக நம் ஆற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முடியும் தவா.நம் ...


கடவுள் என்னும் சொல்லே


மனிதருக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சொல்


கடவுளை நம்பினால் நாம் காப்பாற்றப்படுவோம்
கடவுளை நம்பாதவர்கள் கைவிடப்படுவார்கள் எப்படி என்று பார்ப்போமா


முதலில் கடவுள் என்னும் சொல்லின் பொருளை சரியாக புறிந்து கொள்ளவேண்டும்


கடவுள் என்பது கற்சிலையோ, விக்ரகமோ, அல்லது புறத்தோற்றங்களோ அல்ல
அது ஒரு உள் உணர்வு


காற்றை உணருதல் போல, வெப்பத்தை உணருதல் போல, குளிர்ச்சியை உணருதல் போல்,
கடவுளை உணரமுடியாது
ஏனென்றால் அதற்கு உருவம் கிடையாது


நாமாக வேண்டிக் கொள்கிறோம்
நடக்கவிலையென்றால் நாமாக திட்டுகிறோம்


ஆனால் கடவுள் என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ அந்தக் கடவுளிடம் எந்த ஒரு
சலனமும் இல்லை


நாமளிக்கும் பொருட்களினாலோ, நாம் செலுத்தும் அன்பினாலோ, அல்லது நாம்
வெறுப்பதாலோ,எந்தவித சலனமும் ஏற்படாது கடவுளிடம்


ஆகவே நாம் உண்டு என்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
நாம்தான் கடவுள்


கடவுள் நம்பிக்கை இல்லாதவன் துன்பம் வரும்போது யாருமே இல்லை என்று சோர்ந்து
போய் தவறான முடிவைத் தேடுகிறான்


கடவுள் நம்பிக்கை இருப்பவன் துன்பம் வரும் வேளையில் கடவுள் நம்பிக்கை
இருப்பதால் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பி சற்றே நிதானப்பட்டு யோசித்து
நல்ல முடிவெடுக்கிறான்


ஆனால் தவறான முடிவெடுப்பதும் நாம், நல்ல முடிவெடுப்பதும் நாம்


ஆனால் பழி கடவுள் மேல்
போடுகிறோம்


கடவுள் இருக்கிறாரா இல்லையா என்னும் வாதமே தேவையில்லை


நாம் இருக்கிறோம் நம்முள் அவன் இருக்கிறான்


நாம் கடமை ஆற்றுவோம், காலம் பதில் சொல்லும்


அன்புடன்
தமிழ்த்தேனீ
----------------------------------------------------
>> > > "நன்றாங்கால் நல்லவா காண்பவர்
>> > > அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி.
>> > > நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..?
>> > > அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம்
>> > > எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக
>> > > தேட்டங்கள்தான். .<<<<


>> > த.வா உங்கள் கேள்வியால்,,,தாயுமானவர் ஐயாவிடம் இருந்து அரும்பெரும்
>> > பொக்கிஷங்கள் நமக்கு கிடைக்கப்பெற்றன.

No comments: