WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Tuesday, March 17, 2009

சிதம்பரத்துக்கு பத்து கேள்விகள்!!!

சிதம்பரத்துக்கு பத்து கேள்விகள்


1. மொதக் கேள்வி, வளசரவாக்கத்திலருந்து எங்க கேப்புடன்னு விஜியகாந்து..அவரு கேள்வி என்னான்னா...."எலங்கை பிரச்சினைல இந்தியா ஓரளவு தான் தலையிட முடியும்னு ஒங்க சேக்காளி கலிஞ்சரு சொல்றாரு...பிராணனை வாங்குற மொகர்ஜி சொல்றாரு...அப்பிடின்னா...ஒங்க தலீவரு ராசீவ் காந்தி எப்பிடி ஒப்பந்தம் போட்டாரு??"



2. ரெண்டாவது கேள்வி, பாதி வளசரவாக்கம் விஜிய காந்து மீதி நானு ..."புலிங்க ஆயுதத்தை கீழ போட்டா எலங்கை அரசு பேசும்னு நீங்க சொல்றீங்க...அப்ப...தமிழ் பெண்களை கற்பழிக்கிறது, ஆஸ்பத்திரியில ஷெல்லடிக்கிறது, செத்த ஒரு பொண்ணோட பாடியை கற்பழிக்கிறது....இந்த மாதிரி நடக்கிற இந்த போரை நடத்துறது இந்தியா தானா??"



3. மூணாவது கேள்வி, தட்ஸ் தமிழ்ல யாரோ ஒருத்தர் கேட்டுருந்தது..."இலங்கை பிரச்சினை அறுவது வருஷமா நடக்குதுன்னு சொல்றீங்க...அதே சமயம் பிரபாகரனால தான் பிரச்சினைன்னு சொல்றீங்க...பிரபாகரனுக்கு வயசே அறுவது இருக்காது...கணக்கு ஒதைக்குதே அப்பச்சி...ஒரு வேளை, பொறக்குறதுக்கு முன்னாடியே காந்தி குடும்பத்து வாரிசு தான் தலீவருன்னு என்ன எளவு கமிட்டி அது...ஆங்..காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டி தீர்மானிக்கிற மாதிரி, பொறக்குறதுக்கு முன்னாடியே அவரு புலியா பொறந்துட்டாரோ??"

4. நாலாவது கேள்வி, புலிக ஆயுதத்த கீழ போடணும்...அப்படின்னா தான் சிறீலங்கா பேசும்னு சொல்லியிருக்கிய...என்ன எளவு இது...ஏம்ல, ஒருத்தன் ஒரு பொம்பிளைய கெடுத்துக்கிட்டு இருக்கும் போது, அந்த பொம்பிள சத்தம் போடாம சும்மா இருந்தா அவனும் சும்மா இருப்பான்ன்னு சொல்ற மாதிரு இருக்கேவே?



5. அஞ்சாவது கேள்வி..அமிர்த லிங்கம் எங்கன்னு கேக்குறீயளே....அவரைக் கொன்னது யாரு?? அப்பிடியே அமைதி முறையில போராடுறேன்னு உண்ணாவிரதம் இருந்தானே திலீபன் அவன் எங்கவே? அரசியல் வழியில போராடுன தந்தை செல்வா எங்கவே??



6. ஆறாவது கேள்வி...ஒடன்பாடு போட்டோம் ஒடன்பாடு போட்டோம்னு கூப்பாடு போடுறிய...பன்னிக்குட்டி பெரிசானா தண்ணியடிக்காமயே ஆடுமாம்கிற மாதிரி, நீரே உண்மைய ஒளறி கொட்டிருக்கீரு....ராசீவ் காந்தி ஒடன்பாடு போட்டாரு...உம்ம தான்...ஆனா யாரு கூட போட்டாரு....ஜெயவர்தனே கூட...ஜெயவர்தனேவுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை...ஆனா, உடன்பாடு போட்றது ஜெயவர்தனேவும், ராசீவ் காந்தியும்...என்னவே ரொம்ப மொக்கையா இல்ல??



7.ஏழாவது... பிரபாகரனின் சம்மதத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம்னு சொல்லியிருக்கீரு...அதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி தான் அரை மனதுன்னு சொல்லியிருக்கீரு...சம்மதிக்காட்டி ஒழிச்சிருவோம்னு இந்தியா சொன்னது உண்மையா?



8. எட்டாவது...இந்திய அமைதிப்படை வீரர்கள் பலர் மரணமடைந்தனர்னு சொல்றீங்க...தமிழர்களை கற்பழித்தப் படைன்னு அதை வரவேற்கக் கூட கலைஞர் போகலை...அப்ப அது அமைதிப்படையா, இல்லை அதிரடி கற்பழிப்புப் படையா?? கொன்னுட்டாங்கன்னு சொல்றீங்க...ரொம்ப வருத்தமான விஷயம் தான்...அதுனாலும் சண்டைல நடந்தது...ஆனா, அங்க நடந்த கற்பழிப்புக்கு நீங்களோ இந்திய ஜனாதிபதியோ, மண் மோகன் சிங்கோ(எழுத்துப் பிழை அல்ல), இந்தியாவோட சூப்பர் பெரதமர் அன்னை சோனியாவோ மன்னிப்பு கேப்பீங்களா??



9. ஒம்போது...பிரபாகரன் சர்வாதிகாரின்னு சொல்றீங்க...இருக்கட்டும்...ஆனா, இப்ப நடக்கிற பிரச்சினை பிரபாகரன்னு ஒரு தனி மனிதனை பாதிக்கலையே...அகதிகள் இருக்கிற ஆஸ்பத்திரில ஷெல்லடிச்சானுங்கன்னு செஞ்சிலுவை சங்கமே சொல்லுது...அங்க இருந்தது பிரபாகரனா?? இதெல்லாம் உங்க காதில விழுதா இல்லா செவிடாயிட்டீங்களா??



10. பத்து...இன்னொரு நாட்டோட உள்நாட்டு விவகாரத்துல தலையிட முடியாதுன்னு உங்க கூட்டாளிங்கல்லாம் அறிக்கை விடுறாங்க...அப்படின்னா, ஹிட்லர் யூதர்களை படுகொலை செஞ்சது கூட உள்நாட்டு விவகாரம்னு சொல்வீங்களா?? சொன்னாலும் சொல்லுவீரு அப்பச்சி...நீரு தான் உள்நாட்டு மந்திரியாச்சே!

நன்றி:
http://muranthodai.blogspot.com/2009/02/blog-post_21.html

--
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை

http://periyaryouth.blogspot.com
http://makizhnan.wordpress.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com
http://vizhithezhuiyakkam.blogspot.com

No comments: