நல்வாழ்த்துக்கவிதை
பரதநாட்டிய அரங்கேற்றம்
ஒஸ்லோ-நோர்வே 2010 புரட்டாதி
செல்வி:சகானா கிருபாமூர்த்தி
செல்வி:சாரங்கா கிருபாமூர்த்தி
செந்தமிழும்,சைவமும் சேர்ந்து புகழ்பரப்ப,
நம்கலைகள் செழிப்பாய் ஓங்கிவளர்ந்திட,
வந்தாரை வாழவைத்து,வருவிருந்தோம்பி,
இனியசொல் பேசி! இன்புற்று மகிழ்ந்து!
தந்தை,தாய்பேணி வாழ்ந்ததும் நம்நாடே!
மழலைகள்போற்றி, மகிழ்ந்ததும்நம்நாடே!
சொந்தம்வளர்த்துதும் நம்நாடே!சோர்வு தவிர்த்து
துன்பம் விலக்கி உயர்ந்ததும் எம்நாடே!
இயல்,இசை,நாடகம்,நாட்டியம் நன்குபேணி!
இன்னிசை,சங்கீதம்,தவில், நாதசுரத்தில் மயங்கி!
கயல்விழியர் கண்களினால் கவி எழுதும் நாடு!
கொவ்வை புன்சிரிப்பால் எமைமதிமயக்கும் நாடு!
அயலவர்கள்,உறவுகளின் அன்புமொழிபேசி!
அறிவுள்ளோர்,சித்தர்களின் அருளுரைகள்கேட்டு!
பயமின்றி,பாடுபட்டு!பண்புடனே கல்வி,தொழில்,
கலைவளமும்,வளர்த்ததெங்கள் யாழ்ப்பாணம்!
மயில்ஆடும்வேளை மனமுருக இணுவில் கந்தனருள்
கண்டு,பரராசசேகரபிள்ளையார் அடிபணிந்து!
பயிலும்சிறாரும்,பக்தியுடன் பெற்றோரும் பாடிமகிழ்ந்திடுவர்!
கூடி குலாவி மகிழ்ந்திடுவர்!மிகஇன்பமடைந்திடுவர்!
துயில்மறந்து,துன்பம்மறந்து,துதிபாடி இறைவனருள் வேண்டி!
இயற்கை வென்று வாழ்ந்தவரே எம்மக்கள்!
வெயில்மழையோ, துயில்விழிப்போ!கலைவளர்த்தார் நம்மவர்கள்!
நோர்வே நாட்டினிலும் அனைவரிலும் சிறப்புற்றார்!
சகானா!சாரங்கா! எம்மிருமுத்துக்கள்!நல்வைரங்கள்!
இன்றோ பட்டைதீட்டியவைரங்கள்! பரதம்தந்த முத்துக்கள்!
மகாகலையாம் சங்கீதத்தில் புடம்போட்ட தங்கங்கள்!
பெற்றோரை மதிப்பதிலும்,நேசிப்பதிலும் வைடூரியங்கள்!
சகாக்கள்,குருவையும்,உறவுகள்,நட்புகள்,ஆசிரியர்களை
நேசிப்பதில்,மதிப்பதில் வல்லவர்கள்!பல்லாண்டு வாழ்க!வாழ்க!
பாகாய்உருகி,அன்புகாட்டி!அக்கறையாய் கல்வி,கலைகள்,பண்பு,
கற்கவைத்த பெற்றோர் சிகரங்கள்:கிருபா-சோதி வாழ்க!வாழ்கவே!
UNCLE: NALLIAH SHANMUGAPPIRABU, B.Sc., DIP.JOUR.(LONDON), PPU(HiBU)
LYNGV.3B,3041 DRAMMEN, NORWAY...TEL.0047-91784271
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment