திருமண வாழ்த்துக்கவிதை!
WEDDING GREETING POEM !
அனுஜா மனோகரன் - ஜேம்ஸ் தூனே
ANUJA MANOHARAN - JAMES TOONE
லண்டன்..................LONDON 29 -05 -20
அன்பே சிவம் என்பர் நம் தமிழர் !
அறிவே சக்தி என்பர் மேற்கினர்!
பண்பே சிவம் என்பர் கிழக்கினர்!
ஆற்றலே சக்தி என்பர் மேற்கினர்!
கண்போல்குடும்பம் காப்பவரிவர்!
கருத்துசுதந்திரம் வென்றவர் இவர்!
போதும்என நிறைவுகாப்பவர் இவர்!
புதுமை காணதுடிப்பவர் இவர்!
பார்வியக்கும் பைந்தமிழர் வாழுகின்ற நாடு!
நம் ஈழமணித் திருநாடு!
கார்காலம்,கோடை எல்லாம் பசுமைவிளைநாடு!
யாழ்ப்பாணம் என்பது நம்ம ஊரு!
சோர்விலாதமிழர் விவசாயம்செய்துவாழும்
இணுவில் என்பதே நம்ஊரு!
மார்பில்ஏந்தி மழலைபோற்றும் மக்கள் வாழும்நாடு!
உயிரைபேணும்நாடு!
முகத்தில்சிரிப்பு!நாக்கில்இன்சொல்!
மனதில்தூய்மை!செயலில்முழுமை!
அகத்தின்அழகு முகத்தில்தெரியும்!
முகத்தின்சிரிப்பே ஆத்மாவின்செழிப்பு!
செகத்தில்நல்வாழ்வுவாழ,ஈராயிரம்ஆண்டுகால
திருக்குறள் உங்கட்கு வழிகாட்டும்!
அகரமான கொள்கை:யாதும்ஊரே!யாவரும்கேளிர்!
தீதும்நன்றும் பிறர்தரவாரா!என்பதறிவீர்!
தவமணி-மனோகரன் பெற்ற தவப்புதல்வி
அனுஜாவின் மணாளனாம் ஜேம்சும்!
தவமாகபுதுவாழ்வைஎண்ணி!குதூகலமாய்
குழந்தை,குட்டிபெற்று!கூடிகுலவிடுக!
பவம்எங்கும் உலவிடுக!பார் போற்ற நடந்திடுக!
பக்குவமாய் உறவுகளை போற்றிடுக!
சிவம்பேணிநடந்திடுக!சிந்தனையைவளர்த்திடுக!
சீர்பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ்ந்திடுக!
NALLIAH SHANMUGAPPIRABU,B.SC.,DIP.JOUR(LONDON )
DRAMMEN , NORWAY TEL . 0047 -91784271
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment