WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Wednesday, January 11, 2012

கண்ணீர் அஞ்சலி:செல்வி: துர்க்கா சரவணபவன், 25.10.95-06.01.2012 Horten,Norway

கண்ணீர் அஞ்சலி:



செல்வி: துர்க்கா சரவணபவன்



25.10.95-06.01.2012 Horten,Norway


அன்னை மடியினில், அரவணைப்பினில் ஆறுதல் பெற்றவளே!
அத்தையர்,மாமன்மார் முத்தத்தில் திளைத்து மகிழ்ந்தவளே!
உன் மச்சினர்,மச்சினியர் கூடவே ஆடி பாடி மகிழ்ந்தவளே!
உலகம் இவரென உள்ளம் மகிழ்ந்திட துள்ளிக் குதித்தவளே!



அம்மம்மாபோற்றிட,உற்றவர்கூடிட,குழந்தையாய்குதூகலித்தாய்!
அனைவர்வாழ்த்திட அன்புகுழந்தையாய் வளர்ந்துபெரிசானாய்!
உம்மிடம் எல்லோரும் உள்ளம்மகிழ்ந்திட பேசிமகிழ்ந்திட்டார்!
எம்மைவிட்டு நீர் அவ்வுலகேகிட எப்படி மனம் துணிந்தீர்!



என்றும்உன்னவர் உந்தன்நினைவினில் வாடித்துவண்டிடுவர்!
உந்தன்அன்னைக்கோ உன்நினைவே மூச்சினிலே இருக்கும்!
கந்தன்அருளினால் உன்சீவாத்மா,பரமாத்மா சேர்ந்திடுமோ!
வந்துஉலகினில் ஈரெட்டுஆண்டுகள் மகிழ்வாகவாழ்ந்தவளே!



மீண்டும் உலகில் பிறந்துவாழ்வின் சுவையைஅறிந்திடுவாய்!
மேன்மையுடன் கல்விகற்று பெரும்புகழும் பெற்றிடுவாய்!
ஆண்டாண்டுதோறும் உன்நினைவே தாய்மனதில் இருக்கும்!
மாண்டார்பிறப்பதும்!உறவுகளைநாடலும் இறைவன்செயலே!

-ஆக்கம்: ந.சண்முகப்பிரபு

கண்ணீர் அஞ்சலி :

திறம்மன் தமிழர் நட்புறவுக்கழகம்

திறம்மன் இந்து கலாசார மன்றம்

திறம்மன் தமிழர் விளையாட்டு கழகம்

No comments: