WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Thursday, January 22, 2009

அங்கும்..... இங்கும்........!!! ஆசியாவும்....... ஐரோப்பாவும் !!!

அங்கும்.............. இங்கும் .........!!! ஆசியாவும்........... ஐரோப்பாவும்...... !!!

அங்கு கதிரவன் ஒளியில் களித்திருந்தோமே! காலை புலர்வில் மகிழ்ந்திருந்தோமே!
அன்னை உணவில் மகிழ்ந்திருந்தோமே!அரிய தமிழால் உவகை கொண்டோமே!
அன்பும்அறிவும் பண்பும்பயனும் பாட்டும்பணிவும் பற்பலகதைகளும் கேட்டுச்சிரித்து
நண்பர்பலருடன் நன்றாய்சுற்றி நகைச்சுவைபேசி நக்கல்அடித்து நாளும்கொறித்து
என்றும்பாடம் கவனமாய்படித்து எதிலும்போட்டி எதிலும்வெற்றி என்றேஎண்ணி
ஏட்டிக்குபோட்டி பாட்டுக்குபாட்டு சாட்டுக்குசாட்டு அழுதுசிரித்தும் கோபம்கொண்டும்
பள்ளிப்படிப்பும் துள்ளியஓட்டமும் எள்ளிநகையாடி பகிடியும்விட்டுபழகியநாட்களும்
மறக்க முடியுமா? அந்தமண்ணில் அன்றையபொழுதில் என்ன அற்புதம்! ஆகா !!!

இங்கு பனிமலையில் பயந்திருந்தோமே! நன்கு பனிமழையில் குளித்திருந்தோமே!
இறுக்கமாய் தலை, கை,காது, கால் உடலெல்லாம் இழுத்து மூடி வழுக்கினோமே!
காரில்ஏறி கவனமாய்ஓட்டியும் பனியில்வழுக்கி எதிரேதிரும்பி ஏறிநின்றோமே!
நேரம்இன்றி,காலம்இன்றி,பேசிமகிழவாய்ப்பும்இன்றி,என்னவாழ்க்கை என்னஊரு!?
எல்லாம்உண்டு!ஆனால்எதுவும்இல்லை!கல்வி உண்டு!ஆனால் கருணைதேவை!
முதியோர் எல்லாம் முதிய இல்லம்! புதியோர் எல்லாம் அகதி இல்லம்!!
தமிழர்வாழ்வுமோசமில்லை!குடும்பஅமைதிபேணுகிறார்!கல்விஉயர்வுகாக்கிறார்!
வர்த்தகமும்,கலை,கலாசாரம்,சமயமும்,பேணிவாழ்கின்றார் சிறப்புடனே!

Shan Nalliah

No comments: