WE SHOULD MARCH TOWARDS TAMIL UNITY & PROGRESS BASED ON GANDHIYAM ...!!!

WE ALL SHD WORK HARD TOWARDS HUMAN RIGHTS, FREEDOM, EQUALITY,SAFETY,PEACE,UNITY & JUSTICE!

Saturday, January 31, 2009

FINAL CALL FROM LTTE TO JOIN LAST BATTLE!!!BUT ALL WANT PEACEFUL SOLUTION!!!




போராடினால் வாழ்வு இல்லையேல் அனைவருக்கும் வரும் சாவு.
30/01/2009

--------------------------------------------------------------------------------

விடுதலைப்போரின் இன்றைய களயதார்த்தத்தை நாம் ஒவ்வொருவரும் விளங்கிக் கொண்டிருக்கின்றோமா என்றால் இல்லை என்றுதான் கூற வேண்டும். அற்புதங்கள் நடக்குமென்றோ, பெரிய மாற்றம் வரப்போகுது என்றோ கற்பனையில் மூழ்கியிருந்தால் அல்லது அவ்வாறான வறட்டு நம்பிக்கையில் திளைத்திருந்தால் எல்லோருக்கும் சாவுதான் வரும். அதுவும் வெகுவிரைவில்.

இயக்கம் போராடட்டும், வீரச்சாவடையட்டும், விழும்புண் அடையட்டும் நாம் பாதுகாப்பாக எவ்வளவு இடமென்றாலும் ஒடி ஒடி ஒளிந்து வாழலாம் என்ற சுயநலநினைப்பே இன்றைய சூழ்நிலைக்கு காரணம். ஓவ்வொருவரும் தான் தான் தப்பலாம் என்று நினைத்தபடியால்தான் 60 இலட்சம் யூதர்கள் செத்து மடிந்தார்கள். தனக்கு பிரச்சனையில்லை மற்றவர்களுக்குத்தான் பிரச்சனை என்று நம்பி ஒவ்வொருவரும் ஒடி ஒளிந்தமையாலேயே 9 இலட்சம் டுட்சிகள் ருவாண்டாவில் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்த நினைப்பு வன்னியில் இருக்கும்வரைக்கும் தமிழர்கள் கொன்றழிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பார்கள். இதனை யாராலும் தடுத்து நிறுத்தமுடியாது.

உலகம் தட்டிக் கேட்கும், போரை நிறுத்தும், உதவிகள் செய்யும் என்று தயவுசெய்து யாரும் நம்பிவிடாதீர்கள். இதுவரையில் உலகில் நடந்த அனைத்து இனப்படுகொலைகளுக்கும் உலகம் மௌனசாட்சியாகவே இருந்திருக்கின்றது. வன்னியிலுள்ள நான்கரை இலட்சம் மக்களும் சிங்களபௌத்த பேரினவாத அரசால் படுகொலை செய்யப்பட்ட பின்னரே சர்வதேச சமூகம் மூக்கைச்சீறியபடி வரும். விசாரணைக் கமிசனை வைத்து பிணக்கணக்கெடுப்பு நடத்தும்.

எல்லாம் முடிந்த பின்பு வந்து என்ன பயன்? தமிழகத்தில் 7 கோடித்தமிழர்களும் எல்லாப்போராட்டங்களும் செய்து பார்த்தார்கள். தீர்மானங்கள் நிறைவேற்றுவதிலிருந்து பட்டினிப்போராட்டம் வரை அனைவற்றையும் உணர்வோடு செய்தார்கள். இந்திய மத்திய அரசு கணக்கெடுத்ததா தமிழகத்தை? இல்லை! ஏனென்றால் இந்த யுத்தத்தை சிறிலங்காவுடன் சேர்ந்து நடத்துவதே இந்தியாதான் என்ற கசப்பான உண்மையை எல்லோரும் காலதாமதமாகவே விளங்கிக் கொண்டார்கள்.

ஓவ்வொரு தமிழனும் இதனை புரிந்து கொள்ள வேண்டும். புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் அனைத்து நாடுகளிலும் எல்லாவிதமான போராட்டங்களும் செய்து பார்த்துவிட்டார்கள். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் அவர்கள் இன்னமும் சோராமால் கடும்பனிக்குள்ளும், குளிருக்குள்ளும் சகலவிதமான போராட்டங்களையும் சளைக்கமால் செய்து வருகின்றார்கள். ஜேர்மனி மட்டும் அனுதாபம் காட்டியது. வேறு ஒருவரும் கண்திறந்து பார்க்கின்றார்கள் இல்லை. சமாதான அனுசரணையாக இருந்த நோர்வேயும், இணைத்தலைமை நாடுகளும் மௌனமாக இருந்து இந்த இனப்படுகொலையை ஆதரிக்கின்றன. ஜப்பான் சிறிலங்காவிற்கு போதுமான பொருளாதார உதவிகளை செய்து அதனை தாங்கிப்பிடித்து வருகின்றது. இது தான் இன்றைய உலகநிலை.

காசாவில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு போரைத் தொடுத்த போது உலகமே அணி திரண்டு கண்டித்தது. ஜ.நா.சபை எத்தனையோ தடவைகள் அவசரமாக கூடியது. தீர்மானங்கள் நிறைவேற்றியது. பான்கீமூன் மத்தியகிழக்கிற்கு பறந்து திரிந்தார். நவநீதம்பிள்ளை கண்டன அறிக்கைகளை கடுமையாக வெளியிட்டார். ஏனெனில் பலம் மிகுந்த அரபுநாடுகளை பகைக்கமுடியாது. இறுதியில் யுத்தம் நின்றது.காசாவுக்கு ஒரு நீதி வன்னிக்கு ஒரு நீதி என்றாயிற்று. ஜ.நா சபையும் மனிதஉரிமைகள் ஆணையகமும், இணைத்தலைமை நாடுகளும் வன்னியில் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட பின்னர் பிணக்கணக்கெடுப்பு நடத்தி அனுதாபம் தெரிவிக்க காத்திருக்கின்றார்கள். ஏனெனில் தமிழனிடம் பலம் இல்லை. போராடி வலிமையாக இருந்தால் வருவார்கள். இல்லாவிட்டால் சாவுக்கணக்கெடுப்புக்கு மட்டும் வருவார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் அடிக்கடி சொல்வது போல "வலியவன் வாழ்வான்" என்பது தான் உலக நீதி.

நாம் ஒவ்வொருவரும் தேட்டங்களைத் தேடி, குடும்பத்தை வளர்த்து எதிர்கால கற்பனைகளில் மூழ்கி சுயநலச்சிந்தனையுடனே இன்னும் செயற்பாடுகின்றோம். சிறிலங்காவின் ஆக்கிரமிப்பு போர் எமது வாசல்தேடி வந்த போதும் தப்பலாம் என்ற சுயநலத்துடன் நாம் ஒடி ஒடி ஒளிந்து கொண்டிருக்கின்றோம். இயக்கம் போராடும் என்ற மனப்பாங்குடன் நாம் பதுங்கிக் கொள்கின்றோம். போராடாமால் சுயநலத்துடன் இருப்பதற்கு ஆயிரம் காரணங்களைத் தேடி கண்டுபிடிக்கின்றோம். ஆனால் போராடாவிட்டால் வீடு தேடி வரும் சாவை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது என்பதுதான் யதார்த்தம்.

இன்று இந்தக்கணமே போராடவலுவுள்ள அனைவரும் போராட்டத்தில் இணையாவிட்டால் வன்னிமக்களை எந்தக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது. அன்பானவர்களே இந்தக்கட்டுரையை வாசித்துவிட்டு இடிந்துபோய் இருக்காதீர்கள். அற்புதம் உங்களிடம் தான் இருக்கின்றது. பெரிய மாற்றத்தை உங்களால் மட்டும் மட்டும் செய்யமுடியும். தமிழனின் வெற்றியும், தோல்வியும் வாழ்வும் சாவும் உங்களிடம் மட்டுமே இருக்கின்றது. இறுதி வெற்றியைத் தீர்மானிக்கப்போவது சர்வதேச சமுகமோ, இந்தியாவோ, மகிந்த இராஜபக்சவோ அல்ல. வன்னி மக்கள் மட்டும்தான். நீங்கள் மட்டும்தான் தீர்மானிக்கலாம்.

கிட்லரின் ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து சோவியத்யூனியனில் வலுவுள்ள அனைவரும் போர்க்களம் சென்றார்கள். கிராமங்களிலும், நகரங்களிலும் வயதானவர்கள், ஏலாதவர்கள் மட்டுமே இருந்தார்கள். போராடப்பயந்த கோழைகளை சமுகத்திலிருந்து ஒதுக்கி வைத்து தண்டனைக் கைதிகளாக முன்னரங்கிற்கு அனுப்பினார்கள். ஏனைய ஜரோப்பிய நாடுகளிலும் இதே நிலைதான். ஆக்கிரமிப்பு போரை எதிர்த்து வலுவுள்ள அனைவரும் போராடினார்கள். இறுதியில் வெற்றியடைந்தார்கள். இன்று சுதந்திரத்தை சுவாசிக்கின்றார்கள். நிம்மதியான செல்வச் செழிப்பான வாழ்வை வாழ்கின்றார்கள். அவர்கள் போராடி பெற்ற வாழ்வில் வாழ நாம் இங்கிருந்து போராடமால் போக நினைப்பதுதான் எமது தவறு. போராடினால் அதே சுதந்திரமான நிம்மதியான வாழ்வை நாம் இங்கேயே அமைக்க முடியும்.

4ம் கட்ட ஈழப்போரில் சிங்களப்படைகள் என்றுமில்லதவாறு இழப்புக்களை சந்திந்திருக்கின்றன. அப்படைகளில் 15000 மேல் கொல்லப்பட்டும், 25000 மேல் காயமடைந்துமுள்ளனர். வெற்றியை நோக்கி போறதாக நினைத்து சிங்களப்படை இவ்வளவு இழப்புக்களையும் பல்லைக்கடித்துக் கொண்டு தாங்கிக் கொண்டிருக்கின்றது. போரின் சுமையால் சிறிலங்காவின் பொருளாதரம் திடீரெனக் கவிழும் நிலை. இராஜபக்ச சகோதரர்களின் சர்வாதிகாரமும் ஆதிகார ஆணவமும் உலகநாடுகளிடமும் தென்னிலங்கையிலும் அதிருப்தியடைந்த நிலை. யுத்தவெற்றி ஒன்றுதான் சிறிலங்காவை இவ்வளவு நெருக்கடிகளுக்குள்ளும் தாங்கி வைத்திருக்கின்றது. சிங்களப்படைக்கு மரண அடி கொடுத்தால் எல்லாம் தலைகீழாக போய்விடும். ஆனால் யார் அந்த மரண அடி கொடுப்பது?மன்னாரில் தொடங்கி முல்லைத்தீவுவரை ஒவ்வொரு கிராமமும், நகரமும் போராளிகள் பற்றக்குறையால் விடுபட்டதே தவிர எதிரி அடித்துப்பிடிக்கவில்லை.

ஓவ்வொருமுறையும் ஆட்பற்றாக்குறை என்று வரும் போதும் நாம் சட்டைசெய்யவில்லை. விருப்பமில்லமாலே வீட்டுக்கு ஒருவரை அனுப்பிவிட்டு ஏனையோர் சுயநலத்துடன் இருந்தோம். இப்போது ஒரு குறுகிய நிலப்பரப்பிற்குள் நெரியுண்டு போக இடம் இல்லாமல் இருந்த போதும் போராட சிந்திக்கவில்லை. இதுதான் நாம் இதுவரை விட்ட தவறு. வரலாறு இறுதியாக எமக்கொரு சந்தர்ப்பம் தந்துள்ளது.

இதுவே இறுதிச் சந்தர்ப்பம். வன்னியிலுள்ள போராட வலுவுள்ள அனைவரும் போராளிகளாக திரண்டெழுந்தால் அற்புதம் நடக்கும். எரிமலை வெடிக்கும். இன்றுள்ள நிலைமை தலைகீழாக மாறும். இன்று உடனடியாக 1000 பேர் போராளியாகினால் இன்றுள்ள எல்லையைத் தாண்டி சிங்களப்படை ஒரடி முன்வைக்க ஏலாது. 3000 பேர் உடனடியாக சேர்ந்தால் கிளிநொச்சி மீட்கப்படும். 5000 பேர் சேர்ந்தால் வன்னிமுழுக்க மீட்கப்படும். 15000 பேர் சேர்ந்தால் தமிழீழம் சுதந்திரமடையும். இதுதான் யதார்த்தம். இதுதான் வரலாறு எமக்கு தரும் கடைசி சந்தர்ப்பம். மற்றவர்கள் போராட்டும் என்று நீங்கள் நினைத்தால் விரைவில் சாவு தேடி வந்து சந்திக்கும். நீங்களே போராளியாகினால் வாழ்வு தேடிவரும்.

விடுதலைகிட்டும். இவ்வளவு காலமும் தோளில் சுமந்த துன்பச்சுமை நீங்கும். ஓவ்வொரு தமிழனும் தத்தம் கிராமங்களில், நகரங்களில், தமது வீடுகளில் நிம்மதியான, சுதந்திரமாக வாழலாம். தமிழீழ தேசம் மலரும். இது உறுதி.

வீமன்

www.tamilkathir.com

© 2008 காப்புரிமை தமிழ்க்கதிர்

Wednesday, January 28, 2009

SHOCKING NEWS: MASSGRAVES IN VAVUNIYA,POLANARUVA,A'PURA!!UN SHD INQUIRE!!!

நன்றி:http://www.puthinam.com

மீண்டும் "செம்மணி" புதைகுழிகள்?: வெளியேறிய 100-க்கும் அதிகமான இளைஞர்கள்-
பெண்களை கொன்று புதைத்தது சிறிலங்கா!


* [புதன்கிழமை, 28 சனவரி 2009, 06:06 மு.ப ஈழம்] [வவுனியா நிருபர்]


சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான எறிகணை மற்றும் வான் தாக்குதல் காரணமாக
வன்னிப்பெரு நிலப்பரப்பில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியாவுக்கு சென்று மகிந்த
அரசாங்கம் அமைத்த நலன்புரி நிலையங்களில் அடைக்கலம் புகுந்த பொதுமக்களில்
இளைஞர்களும் பெண்களும் சிறிலங்கா புலனாய்வுத்துறையினரால் கடத்தப்பட்டு கொலை
செய்யப்பட்ட பின்னர் பற்றைக்காடுகளிலும் மயானங்களிலும் புதைக்கப்படுவதாக
கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.


பெண்கள் பலர் விசாரணைக்காக இரகசிய முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்றும் அவ்வாறு பாலியல்
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பெண்கள் பலர் கொலை செய்யப்பட்டு
எரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


அனுராதபுரம், பொலநறுவையில் உள்ள மயானங்கள், காட்டுப் பிரதேசங்கள் மற்றும்
வவுனியாவில் உள்ள மக்கள் நடமாட்டமற்ற பற்றை பகுதிகள் போன்ற இடங்களிலேயே
கொல்லப்படும் இளைஞர்களின் உடலங்கள் புதைக்கப்பட்டுவதாகவும் பெண்களின் உடலங்கள்
எரிக்கப்படுகின்றது என்றும் நேரில் கண்ட சிங்கள தொழிலாளர்கள் அனுராதபுரத்தில்
உள்ள பிரதேச ஊடகவியலாளர்கள் சிலரிடம் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.


கடந்த சில வாரங்களில் மட்டும் 25 இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும்


27 பெண்கள் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர் என்றும் அனுராதபுரம்
பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.


காணாமல் போன அல்லது விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமது உறவுகள் குறித்து
வவுனியா மனித உரிமை ஆணைக்குழு அலுவலகத்தில் கூட முறையிட முடியாது உள்ளதாக
பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கூறுகின்றனர்.


அப்படி இருந்தும் சில முறைப்பாடுகள் வவுனியா மனித உரிமை ஆணைக்குழுவில்
பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


ஆனால் ஆணைக்குழு அதிகாரிகளுடன் ஊடகவியலாளர்கள் சிலர் தொடர்பு கொண்டு கேட்டபோது
அவர்கள் கருத்துக்கூற மறுப்பு தெரிவித்துள்ளனர்.


வவுனியாவில் நலன்புரி நிலையங்களில் உள்ள மக்கள் வவுனியா நகருக்கு வெளியே செல்ல
முடியாதவாறு படையினர் தடை விதித்துள்ளதாக வவுனியா தகவல்கள் கூறுகின்றன.


வவுனியாவில் உள்ள உறவினர்கள், நண்பர்கள் நலன்புரி நிலையங்களுக்கு சென்று
அவர்களை பார்வையிட முடியாது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.


1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் கைப்பற்றப்பட்ட பின்னர் 600-க்கும் அதிகமான
இளைஞர்கள், பெண்கள் சிறிலங்கா படையினரால் கொல்லப்பட்டு செம்மணியில்
புதைக்கப்பட்டனர்.


இது தொடர்பான வழக்கு ஒன்று சிறிலங்காவின் உயர் நீதிமன்றத்தில்
பதியப்பட்டுள்ளது. தற்போது அந்த வழக்கு விசாரணை கிடப்பில் போடப்பட்டுள்ளது.


தற்போதைய சிறிலங்கா படைத் தளபதி சரத் பொன்சேகா அப்போது யாழ். மாட்ட கட்டளை
அதிகாரியாக கடமையாற்றி இருந்தார் என்பதே அதற்கு காரணமாகும்.


யாழ். சுண்டிக்குழி மகளிர் கல்லூரி மாணவி கிருசாந்தி குமராசாமி அரியாலை
சந்தியில் உள்ள படையினரின் சோதனைச் சாவடியில் கைதாகி பாலியல் வல்லுறவுக்கு
உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போதே செம்மணி புதைகுழி
விவகாரம் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.


--
சாவு நெருங்கி வரும் போதும் -
தமிழ் மானம் காத்திரடி பாப்பா!!


http://groups.google.com/group/Piravakam
http://santhappiravagam.blogspot.com/
http://jokes4smile.blogspot.com/
http://puthiyakalithokai.blogspot.com/

VOICE OF TAMILNAADU: OUR DUTY TO SAVE INNOCENT TAMILS IN SRILANKA!!!

இலங்கைத் தமிழைர்களைக் காப்பது நம் கடமை

இன்னுமா வேண்டுகோள்கள் ?
இன்னுமா தீர்மானங்கள்?
இன்னுமா பொறுமைப் பேச்சு?
இன்னுமா உறங்கும் கோலம்?

சிங்கள ராணுவத்தின்
தினவெடுத் தாடும் போக்கில்
என்னருந் தமிழர் கூட்டம்
இன்னலில் கருகு கின்றார்!

தன்னுயிர் உடமை காக்க
தமிழரோ ஓடுகின்றார்!
சிங்கள ராணுவத்தார்
சீறியே கொல்லுகின்றார்!

வீடினை இழந்து விட்டு
வீதியில் வாழும் கோலம் !
காட்சியைப் பார்க்கும் போது
கண்களில் ரத்த வெள்ளம்!

அரசியல் வேறு பாட்டை
அனைவரும் ஒதுக்கி வைத்தால்
அழிந்திடும் தமிழினத்தை
அனைவரும் காக்கக் கூடும்!

மதுரை பாபாராஜ்

Friday, January 23, 2009

SINHALA ATTACK ON TAMIL CIVILIANS!!!


VANNI SINHALA ATTACK ON TAMIL CIVILIANS!!! 66 DEATHS+200 INJURED IN 3 DAYS!!

POPULAR TAMIL WRITER OF TAMILNAADU: JEYAMOHAN WROTE....!!!

Dear Mr.Jeyamohan,

I am really happy to read your friendly letter. You are an integral part of the 80 million strong friendly World Tamils. I saw an old Kerala film on TV and surprised to understand that it looked like "Grammatic Old Tamil" Another surprise was Jaffna has very many similarities with Kerala. Food and some other cultural IDs.(ex.In Jaffna ,no uncles marry their nieces/It is non-existance! same as Kerala) Many young Tamil writers shd learn from you how to write articles and stories! We need Malayalis like you and MGR to show solidarity and friendship in our struggle to freedom,equality,humanrights,safety and justice!

Yours lifetime/soul friend,

Shan Nalliah/Norway
.......................................................................
2009/1/22 jeyamohan_ B

அன்புள்ள ஷண்முகப்பிரபு அவர்களுக்கு

நலம்தானே?

நானும் நலமே

பயணத்தில் இருந்தமையால் கடிதம் எழுத தாமதம். மன்னிக்கவும். உங்கள் இணையதளத்தைப் போய் பார்த்தேன். தமிழர் வாழ்க்கையைப்பற்றிய ஓர் ஒட்டுமொத்தக் கண்ணோடத்தொடு இருக்கிறீர்கள். இது மிக மகிழ்ச்சியை அளித்தது, பெரும்பாலான இணைய தளங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைச் சார்ந்தவையாகவே இருக்கின்றன. புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பத்துவருடங்களுக்கு முன்னர் தமிழ்ப்பண்பாட்டு அடையாளங்களைப்பற்றியும் தமிழ்பற்றியும் இருந்த ஊக்கமும் கவனமும் இப்போது இல்லை. அன்று வந்துகோன்டிருந்த புலம்பெயர்ந்த இதழ்கலில் சிலவே இப்போதும் வெளிவருகின்றன. ஊக்கத்துடன் முன்னெடுக்காவிட்டால் பண்பாஅட்டு அடையாளங்கள் மறைந்துவிடும். ஆப்ரிக்காவிலும் பிஜியிலும் உள்ள தமிழர்கள் அப்படி பண்பாட்டை தொலைத்துவிட்டு திரைபப்டங்கள் வழியாக ஏக்கத்தைத் தீர்த்துக்கொள்கிறார்கள். உங்களைப்போன்றவர்களின் முயற்சிகளுக்கு சமகாலத்தில் உரிய இடம் கிடைக்காமல் போகலாம். ஆனால் அவை வரலாற்றில் பங்களிப்பை ஆற்றுபவை என்றே சொல்ல விரும்புகிரேன்

உங்கள் நூலை நான் வாசித்துப்பார்ப்பேன்.நண்பர் ஒருவரிடம் சொல்லியிருக்கிரேன்.

அடுத்த வருடம், 2010 ல் ஐரோப்பாவுக்கு ஒரு பயணம்செய்ய எண்ணம் இருக்கிறது. அப்போது கண்டிப்பாக தங்கள் உதவியை நாடுவேன்.

தொடர்பில் இருப்போம் என நம்புகிரேன்
ஜெ

Thursday, January 22, 2009

அங்கும்..... இங்கும்........!!! ஆசியாவும்....... ஐரோப்பாவும் !!!

அங்கும்.............. இங்கும் .........!!! ஆசியாவும்........... ஐரோப்பாவும்...... !!!

அங்கு கதிரவன் ஒளியில் களித்திருந்தோமே! காலை புலர்வில் மகிழ்ந்திருந்தோமே!
அன்னை உணவில் மகிழ்ந்திருந்தோமே!அரிய தமிழால் உவகை கொண்டோமே!
அன்பும்அறிவும் பண்பும்பயனும் பாட்டும்பணிவும் பற்பலகதைகளும் கேட்டுச்சிரித்து
நண்பர்பலருடன் நன்றாய்சுற்றி நகைச்சுவைபேசி நக்கல்அடித்து நாளும்கொறித்து
என்றும்பாடம் கவனமாய்படித்து எதிலும்போட்டி எதிலும்வெற்றி என்றேஎண்ணி
ஏட்டிக்குபோட்டி பாட்டுக்குபாட்டு சாட்டுக்குசாட்டு அழுதுசிரித்தும் கோபம்கொண்டும்
பள்ளிப்படிப்பும் துள்ளியஓட்டமும் எள்ளிநகையாடி பகிடியும்விட்டுபழகியநாட்களும்
மறக்க முடியுமா? அந்தமண்ணில் அன்றையபொழுதில் என்ன அற்புதம்! ஆகா !!!

இங்கு பனிமலையில் பயந்திருந்தோமே! நன்கு பனிமழையில் குளித்திருந்தோமே!
இறுக்கமாய் தலை, கை,காது, கால் உடலெல்லாம் இழுத்து மூடி வழுக்கினோமே!
காரில்ஏறி கவனமாய்ஓட்டியும் பனியில்வழுக்கி எதிரேதிரும்பி ஏறிநின்றோமே!
நேரம்இன்றி,காலம்இன்றி,பேசிமகிழவாய்ப்பும்இன்றி,என்னவாழ்க்கை என்னஊரு!?
எல்லாம்உண்டு!ஆனால்எதுவும்இல்லை!கல்வி உண்டு!ஆனால் கருணைதேவை!
முதியோர் எல்லாம் முதிய இல்லம்! புதியோர் எல்லாம் அகதி இல்லம்!!
தமிழர்வாழ்வுமோசமில்லை!குடும்பஅமைதிபேணுகிறார்!கல்விஉயர்வுகாக்கிறார்!
வர்த்தகமும்,கலை,கலாசாரம்,சமயமும்,பேணிவாழ்கின்றார் சிறப்புடனே!

Shan Nalliah

ஈழத்தமிழன் நிலை !!!???

ஈழத்தமிழன் நிலை !!!???

அம்மா எங்கே போனார் ?
அப்பா என்ன ஆனார்?
தங்கை என்னவானாள்?
தம்பிக்கு என்னவாச்சு ?
அண்ணன் எப்ப வருவார் ?
அப்பு என்னவானார் ?
ஆச்சி எங்கே போனார்?
ஈழத்தமிழன் குமுறல் !!!

வீடு எங்கே போச்சு ?
வியாபாரம் என்னவாச்சு?
வைத்யசாலை உடைஞ்சு போச்சு?
வாகனங்கள் எரிஞ்சு போச்சு?
வழியெல்லாம் சோதனை ஏனோ?
கால்நடை காணாமல் போச்சு!!!
அறுவடை எங்கே போச்சு ?
ஆரும் கேட்காமல் ஏன் போச்சு !!??...........Shan Nalliah

SEE HOW TAMIL REFUGEES WERE HARASSED BY SINHALA ARMY!!!

Monday, January 19, 2009

PROVERBS/A WISE SAYING IN TAMIL CULTURE!!!

பழமொழிகள்‏
நுண்மையும் சுருக்கமும் ஒளியுடைமையும்> என்மையும் என்றிவை விளங்கத் தோன்றின்> குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்> ஏது நுதலிய முதுமொழி என்ப..''>> நுட்பம்,சுருக்கம்,விளக்கம், எளிமை என்னும் நான்கினை இலக்கணமாகக்> கொண்டது. பழமொழிக்கு தொல்காப்பியர் வகுத்த இலக்கணம்.> ஏட்டு இலக்கியத்தை விட வாய்மொழி இலக்கியம் பழையானது, நாடோடி> இலக்கியத்தின் ஒரு பகுதியாக பழமொழி பேசப்படுகிறது.இவைகள் மனித> குலத்தின் பல்வேறு சமூக பரிணாம வளர்ச்சியாகவும். கால எல்லை தாண்டி> எல்லா காலத்திற்கும் பொருத்தமாக அமைகிறது பழமொழிகள்,>> அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.> 1. அசைந்து தின்றது மாடு. அசையாமல் தின்கிறது வீடு.> 2. அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.> 3. அக்கினி குண்டத்தில் நெய் வார்த்தது மாதிரி> 4. அதிர்ஷ்டம் உள்ளவன் அலை கடலிலும் அமிழான்> 5. அகல இருந்தால் பகையும் உறவாகும் உண்மை! உண்மை!! உண்மை!!!

சவாலே சமாளி: வலிமை அறி

சவாலே சமாளி: வலிமை அறி

மடத்துவாசல் பிள்ளையாரடி: ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக

மடத்துவாசல் பிள்ளையாரடி: ஈழத்துக் கலைஞர் டொக்டர் இந்திரகுமார் நினைவாக

Sunday, January 11, 2009

PETITION TO OBAMA AND HILLARY BY "TAMILS FOR OBAMA"

Dear Mr. President and Madam Secretary,


The people who signed this formal request are humbly asking you to take action to end the war in Sri Lanka.

The reasons you should take action are the following:

1. The war that has been initiated by Sri Lanka on the Tamils in its territory is a genocidal war. Its purpose is to uproot all the Tamils from the northeast of Sri Lanka. It has provoked a mass exodus and dispersal of Tamils from the island, analogous to the Roman dispersal of Jews from Palestine in the first century or any other ethnic cleansing meant to remove an entire population.

2. The war began almost the day Ceylon gained independence from Britain in 1948. It has involved grabbing lands from Tamils and resettling these lands with Singhalese convicts and/or Sri Lankan armed forces; discriminating against Tamils in employment and education; renaming Tamil areas with Singhalese names; and (for the last 25 years) bombing, shelling, and disappearing Tamil civilians.

3. The government made Buddhism the state religion and has bombed Hindu and Christian places of worship, frequently replacing them with Buddhist temples.

4. All efforts at mediation, negotiation, compromise, or peaceful resolution have failed due to stubbornness and insincerity by the Singhalese-dominated government.

5. All international efforts at bringing peace and humanitarian assistance have ended with refusal of the Sri Lankan government to cooperate and the expulsion (and sometimes killing) of international observers and helpers.

We hope that the new Obama administration will act promptly and forcefully to end this ongoing genocidal war.

Thank you for your attention to this matter.

The following signatures were collected by Tamils for Obama.

Further information about the ongoing genocide and its history is available at:

http://www.tamilsforobama.com/Slow_Genocide.html

Saturday, January 10, 2009

A POPULAR TAMIL POET: PAA VIJAY!!!

AN OPEN LETTER FROM A VANNI-TAMIL-IDP TO CM/ TAMILNAADU!!!

பேரன்பும் பெருமதிப்புக்குமுரிய கலைஞர் கருணாநிதிக்கு,

பாழடைந்துபோன எங்களுர் மாரியம்மனுக்கு ஒருவேளை கூழ் ஊற்றக்கூட வழியில்லாத துர்பாக்கியர்களாய் சோதனை சுமந்து கொண்டிருக்கிறோம்। ஏதோ உயிர்வாழ்கிறோம் என்பதைத் தவிர குறிப்பிட்டுச்சொல்லும்படியாக எதுவுமில்லை। உலகத்தமிழரின் தலைவர் என்று புகழப்படும் நீங்கள் நலமாயிருந்தால் தான் எம்மைப்போன்ற தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதால் உங்கள் நலத்துக்கு ஏக இறைவனை பிரார்த்திக்கிறேன்।

நிற்க:
பட்ட கஷ்டமெல்லாம் சற்றும் விலகாமல் ஒட்டியுறைந்து தினமும் மனதை தைத்துக்கொண்டிருக்கின்றன। தாகம்தீர்க்க மழையில்லை। இரத்தம் குடிக்க குண்டு மட்டும் பொழிகிறது। எல்லாரும் ஏமாற்றுகிறார்கள்। ஏன் நீங்கள் கூடத்தான்। எம்மைப்பற்றி ஆக்ரோஷமாக பேசும்போதெல்லாம் எல்லாவற்றையும் மறந்து மனம்நிறைந்து களிக்கிறேன்। காலம் தள்ளிப்போகும்போது உங்கள் வார்த்தைகளும் புளித்துப்போகின்றன। ஆயிரம் நுண் ஈட்டிகள் சேர்ந்து ஆழ்கலங்களை துளையிட்டு நகரும் ஒவ்வொரு நிமிடங்களிலும் மரண வேதனை தருவதுபோன்ற உணர்வுகள்... அதைத் தாங்க முடியாமல்...

உங்களுக்குத் தெரியாது ஐயா। அனுபவித்தால் தான் தெரியும்।
கண்ணீர் வடித்து வடித்து ஒருவேளை தண்ணீருக்கே தாய் தவித்திருக்க வற்றிப்போன அவள் மார்முலையை ஏக்கத்துடன் பார்க்கும் பிஞ்சுக்கு காலம் சொல்லப்போகும் பதில்தான் என்ன?
நாம் யாருக்கு என்ன கொடுமை செய்தோம்? யார்நிலத்தை நாம் பறித்தோம்?யார் உரிமைக்கு இடம்கொடுக்க மறுத்தோம்? சோதனை மாறிமாறி வரும் என்பார்கள்। வருவதெல்லாம் இங்கு சோதனையாகத்தான் இருக்கிறது।

போகட்டும்।
இலங்கை அரசாங்கத்துக்கு நீங்கள் இருவார காலக்கெடு கொடுத்தீர்கள்। அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தமிழ் அமைச்சர்கள் பதவிவிலகுவார்கள் என்றும் அறிவித்தீர்கள்। ஏன் இப்போது மெளனம் காக்கிறீர்கள்?
இந்தியப் பிரதமரை சந்தித்தீர்கள்। தீர்வு கிடைக்கும் என நம்பிக்கை கூறினீர்கள்। ஏன் இப்போது பதில்கேட்க மறுக்கிறீர்கள்?
போராட்டத்துக்கு அழைத்தீர்கள்। சங்கிலியாய் இணைந்த எம்சொந்தங்களைக் கண்டு அகமகிழ்ந்து ஆனந்தமடைந்தோம்। ஏன் இடைநிறுத்தினீர்கள்?
எமது பிரச்சினை பற்றி நீங்கள் ஆற்றிய உரையை நெய்வேலி, அருப்புக்கோட்டை, பாலையப்பட்டி, மேட்டுப்பாளையம், விருதுநகர், சாத்தூர், சிவகாசி, இராசபாளையம், திருவில்லிப்புத்தூர் என எல்லா ஊர்களிலும் பிரசாரம் செய்து அந்த உரையை போட்டுக்காட்டினீர்கள்। என்ன பயனாயிற்று?
எமது நாட்டின் தமிழ் அமைச்சர்கள் மீது எனக்கு துளியளவும் நம்பிக்கையும் இல்லை। அதனால் தான் உரிமையோடு உங்களிடம் கேட்கிறேன்।
நான் மட்டுமல்ல। இங்கு இலட்சக்கணக்கானோர் உங்களின் மறுமொழிக்காகவும் அடுத்த அடிக்காகவும் காத்திருக்கிறோம்।
காடு எம்மை அடைகாத்துக்கொண்டிருக்கிறது। அந்தகாடு அழியும் நிலை என்று வருகிறதோ அன்று இடுகாட்டில்தான் நாம் தூங்கிக்கொண்டிருப்போம்। அப்போது எமக்காக ஒரு கவிதை எழுதி தப்பித்துவிடாதீர்கள்।
எம்மை ஏமாற்றத்துணிந்து எதிர்பார்ப்புகளை ஏமாற்றங்களாக்கிய ஒவ்வொருவருக்கும் இறந்தபின்னும் எம் ஆன்மா சாபமிடும்। இது நிச்சயமான உண்மை।
கலைஞரே,
நீங்கள் தூங்கிக்கொண்டிருப்பதாக பலர் சொல்லிக்கொள்கிறார்கள்। எமது ஓலக்குரல் உங்களுக்கு தாலாட்டாய் கேட்கும் என நான் நினைக்கவில்லை। எம்மைக் காப்பாற்ற முடியாவிட்டால் சொல்லிவிடுங்கள்। கறைபடிந்த எமது வாழ்க்கைப் பயணத்தை அந்தக் கறையைக்கொண்டே புள்ளிவைத்து முடித்துவிடுகிறோம்। கோரத்தின் கைகளில் சிக்குண்டு அகோரமாய் கொடுமைப்படுத்தப்படுவதை விட மரணம் எவ்வளவோ சுகமானது।

இந்தக் கடிதத்தை நீங்கள் வாசிக்கும்போது நான் உயிரோடு இல்லாமலிருக்கலாம்। ஆனாலும் உயிருள்ள இந்த வரிகள் உங்கள் பதிலுக்காக காத்திருக்கும்।

அன்பான நன்றிகள் எங்கள் மண் சார்பிலும் மக்கள் சார்பிலும் உங்களுக்கு!
எங்களுர் மாரியம்மன் உங்களுக்கு என்றும் துணைநிற்கட்டும்।

இப்படிக்கு,
ஓர் ஈழத்தமிழன்

http://puthiyamalayagam.blogspot.com/2009/01/
Courtesy:
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை http://periyaryouth.blogspot.com
http://makizhnan.wordpress.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com

A GREAT PEOPLE'S LEADER: T.MAHESWARAN,M.P./ UNP/ COLOMBO!!!

Wednesday, January 7, 2009

USEFUL TAMIL WEB ADDRESSES!

tamil enaya mugavari‏
Fra: Kavingar Eraeravi (eraeravi@gmail.com)
Sendt: 7. januar 2009 15:54:12

Til: editor@londonputhinam.co.uk; editor@tamilpages.org; euroasianinfo@gmail.com; editor@erimalai.info; editor@thinnai.com; shanmugappirabunalliah@hotmail.com; nandavanam04@rediffmail.com; sivayogam1050398@yahoo.co.uk; ponbala9294@yahoo.com; v.packiyanathan@web.de; kalaivilakku@hotmail.de; thambibuva@googlemail.com; itsampanthan@hotmail.com; tamilmtv@gmx.net; raja.thaalamfm@gmail.com; chelliahradha@yahoo.co.in; suloforu@yahoo.co.in; pvignesh555@yahoo.com; paavijay@yahoo.com; manjula@yahoo.co.in; nirmalamohan05@yahoo.co.in; humour_sambandan@yahoo.co.in; humourkingilasai@yahoo.com; eramathi@rediff.com; thiruvalluar@yahoo.co.in; eelamurazu@gmail.com; neraimathi@rocketmail.com; spbabaraj@gmail.com; kulendiren@hotmail.com; pon@stofanet.dk; eraeravi@gmail.com

payanulla enaya mugavari thagaval era.eravi,editor www.kavimalar.com 1. தினமணி www.dinamani.com2. தினகரன் www.dinakaran.com3. தினதந்தி www.dailythanthi.com4. குமுதம் www.kumudam.com5. தட்சு தமிழ் http://thatstamil.oneindia.in/6. மாலைமலர் www.maalaimalar.com7. தினமலர் www.dinamalar.com8. பதிவு.காம் www.pathivu.com9. தமிழ் சினிமா.காம் www.tamilcinema.com10. தமிழ் ஈ11. ஆனந்தவிகடன் www.vikatan.com12. நிதர்சனம் www.nitharsanam.com13. வீரகேசரி ஆன்லைன் www.virakesari.lk14. யாழ்இணையம் www.yarl.com15. அறுசுவை www.arusuvai.com16. வெப்உலகம் www.webulagam.com17. பி.பி.சி தமிழ் www.bbc.co.uk/tamil18. சிபிதமிழ் www.tamil.sify.com19. மாலைச்சுடர் www.maalaisudar.com20. உதயன் தமிழ்நாளிதழ் www.uthayan.com21. தமிழன் எக்சுபிரசு www.tamilanexpress.com22. தமிழ்.நெட் www.tamil.net23. தமிழ்க்கூடல் www.koodal.com24. தமிழ்பிலிம் மியூசிக் www.tfmpage.com25. சினிமா எக்ச்பிரசு(ஒருங்குகுறி) www.cinemaexpress.com26. தேனி.இலங்கை www.thenee.com27. தினபூமி www.thinaboomi.com28. தமிழ்மணம் www.thamizmanam.com29. தமிழ் பிலிம் கிளப் www.thamilfilmclub.com30. விக்கிபீடியா (மேலே உள்ளவை அலெக்சா பட்டியல்) www.wikipedia.org31. புதினம் www.puthinam.com32. பதிவுகள் www.pathivukal.com33. சங்கதி www.sankathi.com34. அதிர்வு www.athirvu.com35. சுடரொளி www.sudaroli.com36. யாழ் இணையம் www.yarl.com37. தமிழ்ஆர் www.tamilr.com38. சுவிசு முரசம் www.swissmurasam.com39. மட்டுஈழநாதம் www.battieezanatham.com40. ஈழநாதம் www.eelanatham.com41. தினக்குரல் www.thinakural.com42. ஒரு பேப்பர் www.orupaper.com43. பரபரப்பு www.paraparapu.com44. முழக்கம் www.muzhakkam.com45. கனடாமுரசு www.canadamurasu.com46. சுதந்திரன் www.suthanthiran.com47. ஈழமுரசு www.eelamurasu.com48. தமிழ்முரசு49. விடுதலை www.viduthalai.com50. தமிழ்நாதம்51. லங்காசிறீ www.lankasri.com52. தமிழர்தகவல் மையம் www.maalaisudar.com53. சுரதா www.suratha.com54. தமிழ்நியூசு டி.கே www.tamilnews.dk55. சற்றுமுன் www.sarumun.com56. கல்கி www.kalkiweekly.com57. வணக்கம் மலேசியா www.vanakkammalaysia.com58. அலைகள் www.alaikal.com59. தென்செய்தி www.thenseide.com60. நோர்வே தமிழ் www.norwaytamil.com61. ஈழதமிழ் www.eelatamil.com62. நெருடல் www.nerudal.com63. தமிழ்விண் www.tamilwin.net64. விருபா www.viruba.com65. அறுசுவை www.arusuvai.com66. சோதிடபூமி www.jothidaboomi.com67. மதுரைத்திட்டம் www.projectmadurai.com68. குவியம் www.kuviyam.com69. நாதம் www.natham.com70. தமிழோவியம் www.tamiloviam.com71. காலச்சுவடு www.kalachuvadu.com72. உயிர்மை73. அப்பால் தமிழ் www.appal-tamil.com74. வார்ப்பு(கவிதை இதழ்) www.vaarppu.com75. நெய்தல் www.neithal.com76. கவிமலர் www.kavimalar.com77. இளமை78. தமிழமுதம்79. நிலாச்சாரல் www.nilacharal.com80. தமிழம் www.thamizham.net81. எழில் நிலா www.ezhilnila.com82. வானவில் www.vaanavil.com83. தமிழ்த்திணை(ஆய்வுஇதழ்) www.tamilthinai.com84. தோழி.காம்85. திசைகள்86. அம்பலம் www.ambalam.com87. ஆறாம்திணை www.araamthinai.com88. மரத்தடி www.maraththadi.com89. தமிழ் எழுதி www.http://tamileditor.org90. தமிழ்முரசு(சிங்கப்பூர்-ஒருங்குகுறி) www.tamilmurasu.asia1..com.sg91. அமுதசுரபி92. கலைமகள்93. முரசொலி www.murasoli.in94. கீற்று www.keetru.com95. தமிழகம்.காம் www.thamizhagam.com96. மஞ்சரி97. ஈழவிசன்98. தமிழ் ஆசுதிரேலியா www.tamilaustralian.com99. எரிமலை www.erimalai.com100. இன்தாம் intamm101. வரலாறு www.varalaaru.com102. மொழி www.mozhi.net103. செம்பருத்தி www.semparuthi.org104. தமிழமுதம் www.tamilamutham.com105. தாயகப்பறவைகள் www.thayakaparavaikal.com106. தமிழ் இணையப்பல்கலைக்கழகம் www.tamilvu.org107. சூரியன் www.sooriyan.com108. திண்ணை www.thinnai.com109. புதுச்சேரி.காம் www.pudhucherry.com110. நக்கீரன் www.nakkheeran.com111. தி.க.பெரியார் www.periyar.com112. தமிழ் அரங்கம் www.tamilcircle.com113. தமிழ்வாணன் www.tamilvanan.com114. திராவிடர் www.dravidar.org115. உண்மை www.unmaionline.com116. புதுவிசை www.puthuvisai.com117. முத்தமிழ்மன்றம் www.muthamilmantram.com118. தமிழகம்.நெட் www.thamizhagam.net119.மங்கையர்மலர் www.mangayarmalarmonthly.com120. கல்கி www.kakionline.com121. கீற்று வழங்கும் இணைப்புகள்(www.keetru.com)கவிதாசரன்கருஞ்சட்டைத் தமிழர்புதிய காற்றுஅணிஅணங்குகுதிரைவீரன்பயணம்விழிப்புணர்வுதீம்தரிகிடகதைசொல்லிபுதுவிசைகூட்டாஞ்சோறுஅநிச்சபுதுஎழுத்துஉங்கள் நூலகம்புதியதென்றல்வடக்குவாசல்புன்னகைஉன்னதம்புரட்சி பெரியார்முழக்கம்தலித்முரசு122. கணித்தமிழ் www.kanithamizh.com123. முத்தமிழ்ச்சங்கம் www.muthamilsangam.co.nz124. கருத்து www.karuthu.com125. சித்தர்கோட்டை www.chittarkottai.com126. பொய்கை www.poikai.com127. கௌமாரம் www.kaumaram.com128. தமிழோவியம் www.tamiloviam.com129. தமிழ்வலை www.http://kanaga-sritharan.tripot.com.com130. மலேசியநண்பன்131. கணையாழி132. கணியத்தமிழ் www.kaniyatamil.com133. தமிழ்முதுசொம் www.tamilheritage.org134. தென்றல் www.tamilonline.com/thendral135. பதியம் www.pathiyam.com136. தமிழ்வெப்துணிமா www.tamil.webdunia.com137. ஊடறு www.oodaru.com138. முத்துக்கமலம் http://www.muthukamalam.com139. வரலாறு www.varalaru.com140. தென்னிந்திய ச.வ.ஆ.நிறுவனம் www.sishri.org

Sunday, January 4, 2009

SRILANKAN PROFESSOR: K.KAILASAPATHY....!!!

இலங்கைப் பேராசிரியர் முனைவர் க.கைலாசபதி அவர்கள்‏
Fra: Kavingar Eraeravi (eraeravi@gmail.com)
Sendt: 4. januar 2009 07:48:25
Til: Shan Nalliah (shanmugappirabunalliah@hotmail.com)

From: மு இளங்கோவன் Date: 2009/1/4

இலங்கைப் பேராசிரியர் முனைவர் க.கைலாசபதி அவர்கள்To: மின்தமிழ் இலங்கை என்றதும் தமிழ் இலக்கிய உலகம் இரண்டு பேராசிரியர்களை இணைத்துநினைவு கூர்வது உண்டு.முதலாமவர் க.கைலாசபதி.மற்றவர் பேராசிரியர்கா.சிவத்தம்பி அவர்கள். சைவ சமய அடியவர்களிடம் அடங்கியிருந்த தமிழ்இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்து ஒரு புதுப்பாதையைத் தமிழுக்குவகுத்தவர் க.கைலாசபதி ஆவார்.இவர்தம் நூல்கள் தமிழகத்திற்கு அறிமுகமானதும்தமிழ் ஆய்வாளர்கள் இவரின் ஆய்வினை உற்று நோக்கத் தொடங்கினர்.இவர் பார்த்தபார்வையில் இலக்கியங்களைப் பார்க்கத் தொடங்கினர் என்றால் பொருத்தமாகஇருக்கும். இவர் தமிழகத்திற்கு வந்து அறிமுகம் ஆவதற்கு முன்பே இவரின் ஆய்வுத்தாக்கத்துக்கு ஆளான அறிஞர்கள் அதிகம்.சங்க இலக்கியங்கள் யாவும் வாய்மொழிஇலக்கியங்கள் எனவும்,சங்க இலக்கியங்கள் வீரநிலைக்காலம் சார்ந்தது எனவும்இவர் கண்டுகாட்டிய ஆய்வு உண்மைகள் தமிழ் அறிஞர்களைச் சிந்திக்க வைத்தது.மேல்நாட்டினருக்குச் சங்க இலக்கியங்களை உரிய வகையில் அறிமுகம்செய்துவைத்தவர் இவர் எனில் சாலப் பொருத்தமாக அமையும்.இலக்கியத் துறையில்ஈடுபட்டு,இதழியல் துறையில் பணிபுரிந்து, கல்வி உலகில் பேசப்படும் அறிஞரானஇவர்தம் தமிழ் வாழ்வை இங்கு எண்ணிப்பார்ப்போம். இலங்கையின் தமிழ் அடையாளமாகக் கருதப்படும் கைலாசபதி அவர்களின் தந்தையார்இளையதம்பி கனகசபாபதி அவர்கள் மலேசியாவில் அலுவலராகப் பணிபுரிந்தவர்.எனவேக.கைலாசபதி அவர்கள் மலேசியாவில் கோலாலம்பூரில் 05.04.1933 இல்பிறந்தவர்.இவரின் அன்னையார் பெயர் தில்லைநாயகி நாகமுத்துஆகும்.கைலாசபதிக்குத் தொடக்க கல்வி கோலாலம்பூரில் அமைந்தது.பதின்மூன்றுஅகவை வரை மலேசியாவில் இருந்தார்.இரண்டாம் உலகப்போர் நடைபெற்றகாலகட்டத்தில்(1946-47) இலங்கை வந்தார். கைலாசபதி அவர்கள் உயர்தரக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியிலும்,கொழும்பு இராயல் கல்லூரியிலும் தொடர்ந்தார்.பின்னர்இலங்கைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை(ஆனர்சு) படிப்பில் சேர்ந்துசிறப்பிடம் பெற்றுத் தேர்ந்தார்(1957).இவ்வகுப்பில் தமிழும் மேலைத் தேயவரலாறும் என்பதைப் பாடமாக எடுத்துப் படித்தார்.இப்படிப்பு இவருக்குமேற்குலக அறிமுகத்திற்கும் வரலாற்றுப் பார்வைக்கும் வழிவகுத்தது.இவர்தம்ஆசிரியர் பெருமக்களுள் கணபதிபிள்ளை,வித்தியானந்தன் இருவரும்குறிப்பிடத்தக்கவர்கள். பல்கைலக்கழகக் கல்வி கற்ற பிறகு இலங்கையின் புகழ்பெற்ற ஏடான தினகரனில்உதவி ஆசிரியராக1959 முதல் 1961 வரை பணியாற்றினார். பின்னர் இலங்கைப்பல்கலைக்கழகத்தில் துணை விரிவுரையாளராகப் பணியில் இணைந்தார்(1961-62).1963-1966 ஆம் ஆண்டில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பர்மிங்காம்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வில் இணைந்தார்.1964 இல் சூடான்நாட்டில் வாழ்ந்த சர்வமங்களம் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்.1964-66ஆம் ஆண்டுகளில் சர்வமங்களம் அவர்கள் தம் கணவருடன் பர்மிங்காம்படிப்புக்கு உதவியாக அங்கு இருந்தார்.க.கைலாசபதி அவர்களின் ஆய்வுப்பணி1966 ஆகத்து மாதம் நிறைவுற்ற உடன் இலங்கைப் பல்கலைக்கழகப் பணியில்மீண்டும் இணைந்தார். பேராசிரியர் க.கைலாசபதி அவர்கள் இங்கிலாந்திலுள்ள பர்மிங்காம்பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்களின்மேற்பார்வையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.தமிழில்வீரநிலைப்பாடல்கள்(Tamil Heroic Poetry) என்னும் தலைப்பில் ஆய்வுசெய்தவர்.இவருக்குக் கிடைத்த நெறியாளர் உலக அளவில் அறிவாற்றலால்மதிக்கப்படுபவர். இவர் தம் நெறிப்படுத்தலில் உருவான ஆய்வேடுக.கைலாசபதிக்கு முனைவர் பட்டம்பெற்றுத் தந்ததுடன் மேல்நாட்டாருக்குத்தமிழிலக்கியச் சிறப்பை உணர்த்தியது எனலாம்.அதன் பிறகே மேல்நாட்டார் தமிழ்இலக்கிய ஆய்வுகளில் அதிக கவனம் செலுத்தியுள்ளதைஅறியமுடிகிறது. ஆய்வுக்காலத்தில் பேராசிரியர் சார்ச் தாம்சன் மணிக்கணக்கில்கிரேக்க,தமிழ் நாகரிகம் பற்றி ஆர்வத்துடன் உரையாடுவது உண்டு.சார்ச்தாம்சன் அவர்களின் மனைவி காத்லின் அவர்களும் அவர்களின் மகளார் லிசு,மெக்(இவரும் முனைவர் பட்ட ஆய்வு செய்தவர்) ஆகியவர்களும் குடும்ப நண்பர்களாகப்பழகியதைச் சர்வமங்களம் கைலாசபதி அவர்கள் குறிப்பிடுவார். பேராசிரியர் கைலாசபதியின் ஆசிரியர் சார்ச்சு தாம்சன் அவர்கள் மிகச்சிறந்தமார்க்சிய சிந்தனையாளர்.செஞ்சீனத்துத் தந்தை மாவோ அவர்களின் கருத்துகளில்ஈடுபாடு கொண்டவர்.மார்க்சிய,இலெனிய அறிஞர்களுடன் இணைந்து சீன ஆய்வுக்குழுஅமைத்து, சித்தாந்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்.அவரிடம் பயின்றதால்க.கைலாசபதி அவர்கள் இக்கொள்கைத் தாக்கங்களைப் பெற்றார் என இராம.சுந்தரம்தம் நூலில் குறிப்பிட்டுள்ளார். அந்நாளில் இலங்கை முழுவதும் இருந்த அரச கல்வி நிறுவனங்கள் யாவும்இலங்கைப் பல்கைலக்கழகம் என்ற ஒரே பெயரில் அழைக்கப்பெற்றது.பல பகுதிகளில்இருந்த கல்வி நிறுவனங்கள் அப் பல்கலைக்கழகத்தின் சார்பு வளாகங்களாகக்கருதப்பட்டன.தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் தேவைஎன்ற நிலை எழுந்தபொழுது திருகோணமலையில் பல்கலைக்கழகம் தொடங்கவும்யாழ்ப்பாணத்தில் தொடங்கவும் என இரு கருத்துகள் அரசியல்வாணரிடையேஅந்நாளில் இருந்தது. திருகோணமலையில் தொடங்கப் படாமல் யாழ்ப்பாணத்தில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகமும் தொடக்கத்தில் இலங்கைப் பல்கலைக்கழகம் என்றும் அது யாழ்ப்பாணவளாகம் என்றும் பெயர் பெற்றிருந்தது.1974 இல் யாழ்ப்பாண வளாகத்தில்தலைவராக இருந்த கைலாசபதி அவர்கள் அதன் துணைவேந்தராக 1974 முதல் 1977 வரைபணிபுரிந்துள்ளார். இப்பதவிக்கு அவர் ஆசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும்விண்ணப்பித்திருந்தார். பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்கள் மூத்தபேராசிரியர் என்ற அடிப்படையில் அவர்க்கு முதலில் துணைவேந்தர் பணிகிடைக்காமல் அவரைவிட இளையவரான கைலாசபதிக்குக் கிடைத்ததில் கருத்துவேறுபாடுகள் இன்றுவரை இலங்கையில் உண்டு.ஆயினும் அறிவிலும் ஆற்றலிலும்சிறந்து விளங்கிய க.கைலாசபதி அப்பதவிக்குத் தகுதியானவர் என அறிஞருலகம்குறிப்பிடுவது உண்டு.பின்னாளில் பேராசிரியர் சு.வித்தியானந்தன் அவர்களும்யாழ்ப்பாணப் பல்கல்லகழகத்தின் துணைவேந்தராக விளங்கினார் என்பதுகுறிப்பிடத்தகுந்த செய்தியாகும். தென் அமெரிக்கா,ஆத்திரேலியா தவிர்ந்த உலகின் அனைத்து நாடுகளுக்கும்சென்றுவந்த பெருமைக்கு உரியவர்.1958 இல் இதழாளராக ஐரோப்பிய நாடுகளுக்குச்சென்று வந்தவர்.அப்பயண அனுபவத்தை நான்கு நாடுகளில் நாற்பத்தி நான்குநாட்கள் என்னும் நூலாக எழுதியவர்.இவர்தம் நூல்கள்,பணிகள்,வாழ்வியல்முழுமைப்படுத்தி வெளிவருவது காலத்தின் தேவையாகும். 1950 இல் கல்கத்தாவில் நடந்த இந்திய எழுத்தாளர்கள் மாநாட்டில்கலந்துகொள்ள முதன்முதல் இந்தியா வந்தவர். அதன் பிறகு பலமுறை இந்தியாவந்துள்ளார்.செனைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பொற்கோ அவர்கள்பேராசிரியராகப் பணிபுரிந்த காலத்தில் கைலாசபதி அவர்கள் தமிழ்த்துறையில்தமிழாய்வுகள் என்னும் பொருளில் ஆற்றிய உரை அனைவராலும்விரும்பப்பட்டது.க.கைலாசபதியின் நீண்ட நாள் நண்பர்களாகத் தமிழகத்தில்விளங்குபவர்கள் சிதம்பர ரகுநாதன்.குலோத்துங்கன்(வா.செ.கு),கு.அழகிரிசாமி,செயகாந்தன். இலங்கையில் பணியாற்றியதுடன் அமையாமல் அமெரிக்காவில் உள்ள கார்னல்பல்கலைக் கழகத்தில்(1977), வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தபெருமைக்கு உரியவர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைத்துறைத்தலைவராகவும்(1978-82) பணிபுரிந்து அறிவார்ந்த மாணவர்களைஉருவாக்கியவர்.இவர் மாணவர்களுள் மௌனகுரு,சித்திரலேகா,அம்மன்கிளிமுருகதாசு,மனோன்மணி சண்முகதாசு,நுஃமான் உள்ளிட்டவர்கள்குறிப்பிடத்தக்கவர்கள். பல்கலைக்கழகப் பணிபுரிந்ததுடன் இலங்கை அரசின் கல்வி சார்ந்தகுழுக்களிலும் இடம் பெற்றுத் திறம்படப்பணிபுரிந்துள்ளார்.யுனெசுகோவிற்கான தேசிய ஆணைக்குழுவிலும்(1970),இலங்கைப் பாடநூல் ஆலோசனைக் குழுவிலும் இலங்கை வானொலித் தமிழ்நிகழ்ச்சி ஆய்வுக்குழுக்களிலும் பணிபுரிந்தவர்.இலங்கைப்பல்கலைக்கழகத்தின் நாட்டியக்குழு, இலக்கியக்குழு ஆகியவற்றின் தலைவராகவும்பணியாற்றியவர்.பேராசிரியர் கணபதிப்பிள்ளை தயாரித்த நாடகங்களிலும்கைலாசபதி நடித்துள்ளார்.தமிழகப் பல்கலைக்கழகங்கள் அனுப்பும் முனைவர் பட்டஆய்வேடுகளை மதிப்பிடும் பணியிலும் ஈடுபாட்டுடன் உழைத்தவர். க.கைலாசபதி அவர்களுக்குத் தொடக்கத்தில் திராவிட இயக்கம் பற்றிய சரியானபுரிதல் இல்லை.காலப்போக்கில் இவ்வியக்கத்தின் பணிகளை உணர்ந்து தம்கருத்துகளைச் செம்மைப் படுத்திக்கொண்டார். க.கைலாசபதி அவர்கள் இலக்கியத்துறையின் அனைத்துப் பாடுபொருளைப் பற்றியும்ஆய்வு செய்துள்ளார்.இவருக்கு இலக்கியம்,கர்நாடக இசை,பரதநாட்டியம்,நாடகத்துறைகளில் மிகுந்த ஈடுபாடு உண்டு.தமிழகத்தில் மார்கழிமாதங்களில் நடைபெறும் இசைவிழாக்களுக்கு இவர் வந்து கண்டுகளிப்பதுஉண்டு.பழைய திரைப்படப் பாடல்களை விரும்பிக் கேட்பவர். தியாகராசபாகவதர்.சுப்புலட்சுமி,சிதம்பரம் செயராமன்,பி.யு.கிட்டப்பா,சீவானந்தம்பாடல்களை நாடாப் பதிவுக்கருவியில் விரும்பிக் கேட்பது உண்டு. இலங்கையில் வெளிவந்த தினகரனில் பணிபுரிந்த கைலாசபதி அவர்கள் ஜனமகன்,உதயன், அம்பலத்தான்,அம்பலத்தாடி,அபேதன் உள்ளிட்ட புனைபெயர்களிலும்எழுதியுள்ளார். பல சிற்றிதழ்கள் இலங்கையில் வெளிவர உதவியுள்ளார்.பல்வேறுஇதழ்களில் வாய்ப்பு கிடைத்த பொழுதெல்லாம் கட்டுரை எழுதியவர்.எனவேஇவருக்கு எனத் தனித்த நடை உண்டு. இதழ்களில் எழுதி நல்ல பயிற்சிபெற்றிருந்ததால் தொடர்ந்து எழுத்துத்துறையில் ஈடுபட முடிந்தது. அரசியல் இயக்கங்களில் ஈடுபாடு உடையவராக விளங்கினார்.இந்துக்கல்லூரிமாணவராக இருந்த காலத்திலேயே இவர் மார்க்சிய இலெனினிய கொள்கைகளில் ஈடுபாடுகொண்டு விளங்கினார்.சீன அரசின் அழைப்பில் இவர் தம் மனைவி சர்வமங்களம்குழந்தைகள் சுமங்களா,பவித்ரா ஆகியோருடன் 1979 இல் சீனா சென்றுவந்தார்.தம்சீனப் பயணப் பட்டறிவுகளைத் தம் மனைவியுடன் இணைந்து எழுதிய "மக்கள் சீனம் -காட்சியும் கருத்தும்" என்ற நூல்வழி வெளிப்படுத்தியுள்ளார். இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் அமைக்கப்பட்டபொழுது அதன்வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தார்.பல தரமான படைப்புகள் இச்சங்கத்தின்வழியாக வெளிவந்தன.தமிழ் இலக்கிய ஆய்வுகளிலும் சமூக ஆய்வுகளிலும் தம்மைஇணைத்துக்கொண்டு பணிபுரிந்த க.கைலாசபதி அவர்கள் இரத்தப் புற்றுநோய்ஏற்பட்டு தம் 49 ஆம் அகவையில் 06.12.1982 இல் இயற்கை எய்தினார்.சற்றொப்பமுப்பதாண்டுக் காலம் தமிழ் இலக்கிய உலகில் ஈடுபட்டிருந்த க.கைலாசபதிஅவர்கள் தரமான ஆய்வுகள் வெளிவரவும்,முற்போக்கு எண்ணம் கொண்டவர்கள்ஆய்வுத்துறையில் மதிக்கப்படவும் காரணகர்த்தாவாக விளங்கியுள்ளார். இன்னும்பல ஆண்டுகள் உயிர் வாழ்ந்திருந்தால் தமிழ் ஆய்வுலகத்திற்குப் பல அரியஆய்வு உண்மைகள் கிடைத்திருக்கும். Tamil Heroic Poetry நூலும், பண்டைதமிழர் வாழ்வும் வழிபாடும்,அடியும்முடியும்,தமிழ் நாவல் இலக்கியம், ஒப்பியல் இலக்கியம் உள்ளிட்ட நூல்களும்க.கைலாசபதியின் பெருமையை என்றும் பேசிக்கொண்டிருக்கும். பேராசிரியர் க.கைலாசபதி அவர்களின் நூல்கள் 01,பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்,196602.தமிழ் நாவல் இலக்கியம்,196803.Tamil Heroic Poetry,Oxford,196804.ஒப்பியல் இலக்கியம்,196905.அடியும் முடியும்,197006.ஈழத்துத் தற்காலத் தமிழ்நூற்காட்சி(கமாலுதினுடன்)197107.இலக்கியமும் திறனாய்வும்,197608.கவிதை நயம்(இ.முருகையனுடன்),197609.சமூகவியலும் இலக்கியமும்,197910.மக்கள் சீனம்-காட்சியும் கருத்தும்(சர்வமங்களத்துடன் இணைந்து),197911.The Tamil Purist Movement - A Re-Evalution,Social Scientist,Vol:7:10,Trivandrum12.நவீன இலக்கியத்தின் அடிப்படைகள்,198013.திறனாய்வுப் பிரச்சினைகள்,198014.பாரதி நூல்களும் பாடபேத ஆராய்ச்சியும்,1980(இ.ப)15.இலக்கியச் சிந்தனைகள்,198316.பாரதி ஆய்வுகள்,198417.The Relation of Tamil and Western Literatures18.ஈழத்து இலக்கிய முன்னோடிகள்,198619.On Art and Literature,198620.இரு மகாகவிகள்,1987(ஆ.ப)21.On Bharathi,198722.சர்வதேச அரசியல் நிகழ்வுகள்(1979-1982)23.Tamil (mimeo)(co-author A,Shanmugadas) நனி நன்றி : தமிழ் ஓசை (களஞ்சியம்)நாளேடு,அயலகத் தமிழறிஞர்கள் தொடர் 15, 04.01.2009முனைவர் பொற்கோமுனைவர் இராம.சுந்தரம்,"கலாநிதி கைலாசபதி",சாகித்திய அகாதெமி வெளியீடுமுனைவர் நா.கணேசன்(அமெரிக்கா)திரு.அ.முத்துலிங்கம்திருநிறை சர்வமங்களம் கைலாசபதிதிரு.கணேசலிங்கம்,சென்னை படத்துடன் காண வருக! http://muelangovan.blogspot.com/2009/01/05

Thursday, January 1, 2009

BLACK FLAG TO INDIAN PM ON JAN.2009 IN TAMILNAADU!!!

ஜன.8 இல் பிரதமருக்கு கருப்புக்கொடி!
பெரியார் திராவிடர் கழகம் அறிவிப்பு

ஜன. 8 ஆம் தேதி சென்னை வரும் இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருப்புக்கொடி காட்டுவது என பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து கோவையில் பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

ஈழத் தமிழர்கள் மீதான இனப் படுகொலையை நிறுத்தக் கோரி தமிழகம் ஒருமித்த கண்டனக் குரலை எழுப்பி வருகிறது. தமிழக முதல்வர் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் மத்திய அரசு உடனே போரை நிறுத்த இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியது.

இவ்வளவுக்கும் பிறகு சென்னையில் கொட்டும் மழையில் லட்சக்கணக்கான தமிழர்கள் அணிவகுத்து சிங்கள ராணு வத்தின் இனப்படுகொலைக்கு எதிராக தங்களது எதிர்ப்பை உண்மையாக வெளிப் படுத்தினர். பிறகு தமிழக நாடாளுமன்ற குழு - பிரதமரை சந்தித்து வற்புறுத்தியது.

இறுதியாக முதலமைச்சர் கலைஞர் தலைமையில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் டெல்லியில் பிரதமரை சந்தித்து வலியுறுத்திய பிறகும் இலங்கை அரசு போரை நிறுத்தவில்லை. தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்வதையும் தடுக்கவில்லை.

ஒட்டு மொத்த தமிழர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, பிரதமர் எந்த இணக்கமான முடிவும் எடுக்காமல், தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பிரதமர் தமிழகம் வருவது - தமிழக மக்களைஅவமதிக்கும் செயலே ஆகும்.

எனவே 8.1.2009 அன்று சென்னை வரும் பிரதமருக்கு, தமிழர்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திட, கருப்புக்கொடி காட்டு வது என பெரியார் திராவிடர் கழகம் முடிவெடுத்துள்ளது.
இவ்வாறு பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பெருமை சேர்க்கிறார், சிற்பி. ராசன்


2008 ஆம் ஆண்டுக்கான தலை சிறந்த 10 மனிதர் களில் பெரியார் திராவிடர் கழகத் தைச் சார்ந்த தோழர் சிற்பி. இரா சன் அவர்களை 'ஆனந்தவிகடன்' குழு தேர்வு செய் துள்ளது. கழகத் துக்கு பெருமை சேர்க்கும் சமூகப் புரட்சியை - அமைதியாக செய்து முடித்துள்ள தோழர் சிற்பி. இராசன் பற்றி 'ஆனந்த விகடன்' வெளியிட்ட செய்தியை பூரிப்புடன் வெளியிடுகிறோம்.

ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து, சாமி களையே செதுக்கிச்செய்யும் சிற்பிகளை உரு வாக்கியவர் ராஜன். இவரும் சிஷ்யர்களும் செய்து அனுப்பிய சிலைகள் இன்று உலகம் எங்கும் பல கோயில்களில் அருள்பாலிக்கின்றன. இதுதான் மௌனப் புரட்சி. பெரியாரின் கருத்துக்களைப் படித்து வெடித்த வயதில்,தாகமும் கோபமுமாகச் சிற்பக் கலை பயின்றார். உலகம் அறிந்த சிற்பியாக உருவான பிறகு எடுத்தார் அடுத்த ஆயுதத்தை. 'கோயில் பிரவேசம், கர்ப்பக்கிரகத் தரிசனம் எல்லாம் இன்னும் மறுக்கப்படும் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் கைகள் செய்யும் சிலைகளே கோயி லுக்குப் போக வேண்டும்' என முடிவெடுத்தார். சுவாமிமலை அருகே உள்ள திம்மக்குடியில் ஆர்வம் உள்ள தலித் இளைஞர்களுக்குத் தங்க இடம், பயிற்சிகள் அத்தனையும் இலவசமாகத் தந்து, ராஜன் நடத்துகிற சிற்ப மையம், புரட்சியின் இன்னொரு களம். தனது உளியால் சமூகத்தைச் செதுக்கி வரும் ராஜன், கலைப் போராளி!

- நன்றி 'ஆனந்த விகடன்' 31.12.08


போராட்டங்களின் ஆண்டாகியது 2008


போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், கைதுகள் என்று களப்பணிகளில் பம்பரமாகச் சுழன்ற பெரியார் திராவிடர் கழகம் மீண்டும் தன்னை செயல்படும் இயக்க மாக தமிழ்நாட்டுக்கு வெளிப்படுத்திய ஆண்டு 2008.
தமிழகத்தில் தொடர்ந்து மத மோதல்களை உருவாக்கும் வன்முறைகளை நடத்திய பாரதிய ஜனதா தனது மாநில செயற்குழுவை சேலத்தில், அதன் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூட்டியபோது, செயற்குழு நடக்கும் பகுதியிலேயே எதிர்ப்புப் போராட்டம் நடத்திய கழகம் ஈழத் தமிழருக்கு எதிராக அதிகார ஆணவத் திமிர் காட்டிய தமிழக காங்கிர° தலைமையகத்துக்கு அருகேயும் தமிழின உணர்வை போராட்டங்களாக வெளிப்படுத்தியது.

தமிழகத்தில் பயிற்சிக்கு வந்த சிங்கள ராணுவத்தை ஓட வைத்ததும், தீண்டாமை திமிர் பேசிய ஆதிக்க சாதியினரைப் பணிய வைத்ததும், கடந்த ஆண்டு கழகம் நடத்திய போராட்டங்கள்தான், அறிக்கை விளம்பரங் களில் தன்னை மூழ்கடித்துக் கொள்ளாமல், ஆக்கபூர்வ கள பணிகளில் அர்ப்பணித்துக் கொண்டுள்ள பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் கடந்த ஆண்டு தொய் வின்றி தொண்டாற்றிய செயல்பாடுகளை இத் தொகுப்பு பட்டியலிடுகிறது.

பெரியாரின் எழுத்து பேச்சுகளைத் தொகுக்கும் மகத்தான கழகப் பணியை முடக்கிய திராவிடர் கழகத் தலைமை நீதிமன்றத்துக்கு ஓடிய வரலாற்றுத் துரோகம் நிகழ்ந்ததும், அதை கழகம் எதிர் கொண்டதும் இதே ஆண்டுதான்.

தமிழக காங்கிரசாரை மகிழ்விக்க அப்பட்டமான பொய் வழக்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இயக்குனர் சீமான், மணியரசனை கைது செய்து, பல வாரங்களாக சிறையிலடைத்து வைத்துள்ளது கலைஞர் ஆட்சி.
பிரச்சாரம், போராட்டம், களப்பணி என கடந்த ஆண்டு கழகம் கடந்து வந்த பாதையில் பதித்த சில முக்கிய சுவடுகளின் தொகுப்பு:

ஜனவரி

7 ஈரோடு மாவட்டம் நம்பியூரிலுள்ள திருமண மண்டபத்தை அருந்ததியர் சமூகத்தினருக்கு வாடகைக்குவிட மறுத்த தீண்டாமைக்கு எதிராக கழகம் களமிறங்கி, சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி, கோபியில் மாபெரும் ஆர்ப்பாட் டத்தை நடத்தியது. போராட்டம் வெற்றி பெற்றது. ஆதிக்கசாதியினர் இறங்கி வந்து மறுக்கப்பட்ட அதே அருந்ததி தோழருக்கு மண்டபத்தை வாடகைக்கு வழங்க முன் வந்தனர். தீண்டாமைத் தடை தகர்ந்தது.

14 சென்னை வந்த குஜராத், பா.ஜ.க. முதல்வர் மதவெறியர் மோடிக்கு எதிராக கழகம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

பிப்ரவரி

3 இலங்கை இராணுவத்துக்கு இந்தியா ராணுவ உதவி செய்யக்கூடாது என்று ஜனவரி மாதத்திலிருந்து தமிழகம் முழுதும் பொது மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தி - அந்த கையெழுத்துகளை டெல்லியில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனியிடம் நேரில் அளித்ததோடு, டெல்லி நாடாளுமன்றத்தின் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தையும் கழகம் நடத்தியது. 10 லட்சம் கையெழுத்துடன் 400 கழகத் தோழர்கள், தோழியர்கள் பிப்.3 ஆம் தேதி டெல்லி புறப்பட்டு, பிப். 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தி, 7 ஆம் தேதி பாதுகாப்பு அமைச்சரை நேரில் சந்தித்து வற்புறுத்தினர். இந்தியா இலங்கை இராணு வத்துக்கு ஆயுதம் வழங்கும் துரோகத்தை முதன்முதலாக மக்கள் மன்றத்திற்கு இதன் வழியாக கழகம் அம்பலப்படுத்தியது.
தேசிய ஜிம்னா°டிக் போட்டியில் பங்கேற்று கேரளா சென்ற தமிழக அணியை அவமதித்தது மலையாள அணி. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பிப். 3 ஆம் தேதி பொள்ளாச்சியில் கராத்தே போட்டிக்கு வந்த மலையாள
அணிக்கு கழக சார்பில் கண்டனமும், ஆர்ப்பாட்டமும் நடத்தப் பட்டது.

4 கோபியில் சுற்றுச் சூழலைக் கெடுக்கும் 'வர்ணா பட்டுநூல்' தொழிற்சாலைக்கு எதிராக கோபியில் கழகம் ஆர்ப்பாட்டம்.

18 உடுமலை அருகே உள்ள சாளரப்பட்டி கிராமத் தில் அருந்ததியினர் மீது ஆதிக்கசாதியினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து உடுமலையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கழகம் பங்கேற்றது. இதே பிரச்சினைக்காக மதுரையில் பிப்.23 இல் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

தேனியில் ஒரு துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துப் பெண்ணை, தேனி காவல் நிலையத்தில் காவல் துறையினர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கிய குற்றத்தில் வழக்குப் பதிவு செய்யாத தேனி காவல்துறையைக் கண்டித்து, போராட்டம் நடத்தச் சென்ற கழகத் தலைவர், தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மார்ச்

3 சிங்கள புத்த பிக்குகள் மரம் நடு விழா என்ற பெயரில் தமிழகத்தில் ஊடுருவ முயல்வதற்கு திருச்சியில் கழகம் எதிர்ப்பு தெரிவித்தது.

4 தில்லை சிற்றம்பல மேடையில் நீதிமன்ற அனுமதி யோடு தேவாரம் பாடச் சென்ற 80 வயது முதியவர் ஓதுவார் ஆறுமுகசாமியைத் தாக்கிய தில்லை தீட்சதப் பார்ப்பனர்களைக் கண்டித்து தில்லை நடராசர் கோயிலை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வலியுறுத்தி, சென்னை யில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. மதுரையில் கழகம் மார்ச். 8 இல் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

11 இலங்கை ராணுவத் தளபதிகள் குன்னூர் அருகே பயிற்சிக்காக இந்திய ராணுவப் பள்ளிக்கு வரும் செய்தி அறிந்து, உடன் கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிங்கள ராணுவத்தினர் பயிற்சி பெறாமல் ஆந்திராவுக்கு ஓடினர்.

15-16 சீர்காழி ஒன்றிய கழக சார்பில் கிராமங்களில் பிரச்சாரப் பயணம் நடந்தது.

18 இந்திய அரசுக்கு சொந்தமான அச்ச கத்தில் மலையாளிகள் ஆதிக்கம், தமிழர்களுக்கு எதிரான பாகுபாடு
களைக் கண்டித்து, கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம், போராட்டம் வெற்றி பெற்றது. அச்சகப் பணியாளர் தேர்வு நிறுத்தப்பட்டது.

28 தமிழக மேற்கு மாவட்டங்களில் தீண்டாமைக்கு எதிராக அருந்ததி யினர் எழுச்சிப் பெற்றுள்ளதற்கு பெரியார் திராவிடர் கழகம் முக்கிய பங்காற்றியுள்ளதாக 'பிரன்ட் லைன்' (மார்ச் 28) பத்திரிகை எழுதியது.

ஏப்ரல்

7 ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்துக்காக கன்னட வெறியர்களைக் கண்டித்து பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப் பாட்டம்.

10 ஒகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்த கன்னடர்கள், பெங்களூரில் தமிழ்ச் சங்கத்தின் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, சென்னையில் கன்னட நிறுவனங்கள் தாக்கப் பட்டன. தாக்குதலையொட்டி சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரு வாரம் கழித்து பிணையில் விடுதலை யானார்கள். ஆனை மலையிலும், ப.குமார பாளையத்திலும் கழகம் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியது.

இந்திய அரசுக்காக தகவல் சேகரிக்க, மாநில உரிமைகளுக்கு எதிராக, ஈரோடு மாவட்டத்தில் மத்திய அரசின் இருப்புக் காவல்படை (சி.ஆர்.பி.எஃப்) குவிக்கப்பட்டதை எதிர்த்து கழகம் முற்றுகைப் போராட்டம்.

14 கா.சு.புதூர் கிராமத்தில் சுகாதார பாதுகாப்பு கோரி பொள்ளாச்சியில் கழகம் ஆர்ப்பாட்டம். தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூர் வரை தூத்துக்குடி மாவட்டக் கழகம் சாதி ஒழிப்புப் பிரச்சாரப் பயணத்தை நடத்தியது.

மே

3 மத்திய அரசின் சுங்கம் மற்றும் கலால் வணிக துறையில் மலையாளிகள் ஆதிக்கத்தை எதிர்த்து கோவையில் கழகம் ஆர்ப்பாட்டம்.

6 பாதிக்கப்பட்ட சாளரப்பட்டி அருந்ததி மக்களுக்கு உடன் நிவாரணம் வழங்கக் கோரி, உடுமலையில் கழகம் ஆர்ப்பாட்டம்

17 கோவையில் நடிகவேள் எம்.ஆர்.ராதா நூற்றாண்டு விழா மாநாடு போல் நடந்தது.

20 மேட்டூரில் மாபெரும் நாத்திகர் விழா மூட நம்பிக்கை ஒழிப்பு பேரணி எழுச்சியுடன் நடந் தது. கழகத்துக்கு 50000 நன்கொடை வழங்கியது.

30 குடந்தையில் நடிகவேள் நூற்றாண்டு விழாவை கழகம் எடுத்தது. கழகத்துக்கு ஒரு லட்சம் நன்கொடை வழங்கியது.

31 பயிற்சி முகாம்களை நடத்தும் திட்டத்தின் கீழ் இரண்டு நாள் பயிற்சி முகாம் புதுவையில் தொடங்கியது.
ஜுன்

7, 8 மேட்டூரில் சேலம் மாவட்டக் கழக சார்பில் இரு நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது.
சின்ன சேலம் கள்ளக் குறிச்சி ரயில் பாதையை மேலும் சுற்றுப் பகுதிகளுக்கு நீட்டிக்கக் கோரி சங்கராபுரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்.

12 சென்னை சேத்துப்பட்டில் சட்டவிரோத கோயிலை எதிர்த்து கழகம் தொடர்ந்த வழக்கில் கோவிலை இடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.

14 கழக மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழாவையும், நாத்திகர் விழாவையும் சென்னை மாவட்டக் கழகம் நடத்தியது.

15 சென்னையில் கழகத்தின் செயற்குழு கூடியது. 'குடிஅரசு' தொகுப்புகளை வெளியிடும் திட்டங்களை உருவாக்கியது.

21, 22 கோபியில் ஈரோடு மாவட்டக் கழக சார்பில் 2 நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது.
காரத் தொழுவில் கழகம் மூட நம்பிக்கை ஊர்வலம்.

30 சாதி மறுப்பு திருமணத் தம்பதிகளை எதிர்த்த சாதிவெறியர்களுக்கு துணை போன ஈரோடு மாவட்டக் காவல் துறையைக் கண்டித்து கழகம் ஆர்ப்பாட்டம்
ஜூலை

4 நிர்வாண சாமியார்கள் ஊர்வலத்தை எதிர்த்து சென்னை மாவட்டக் கழகம் போராட்டம்; சாமியார்கள் ஊர்வலம் ரத்தானது.

5-6 பூம்புகாரில் நாகை மாவட்டக் கழகத்தின் 2 நாள் பயிற்சி முகாம் சிறப்புடன் நடந்தது.
கேரளாவுக்கு மணல் கடத்துவதை எதிர்த்து ஆனைமலையில் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அடுத்த இரு நாட்களிலேயே கேரளாவுக்கு மணல் கொண்டு போக அரசு தடை விதித்தது; போராட்டம் வெற்றி.

8 ரோகினி மில்° முன்பு கழக அமைப்பான பஞ்சாலை தொழி லாளர் சங்கம் நிர்வாகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்.

12 மீனவர் படுகொலையைக் கண்டித்து பாதுகாப்பு அமைச்சர் அந்தோணி உருவ பொம்மை பொள்ளாச்சியில் கழக சார்பில் எரிப்பு.

17 விழுப்புரத்தில் நடிகவேள் நூற்றாண்டு விழா

22 ஜூலை 2 முதல் 27 வரை கழக முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகம், தமிழகத்தில் பல்வேறு
ஊர்களில் பயணம் செய்து மாணவர்களை சந்தித்தது.

25 பெரியார் நூல்களை நாட்டுடை மையாக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. சென்னை, சேலம், நெமிலி, திருப்பூர், தர்மபுரி, கோவை, ஈரோடு, திண்டுக்கல், உடுமலை, மயிலாடுதுறை, பொள்ளாச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல ஊர் களில் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.

30 சென்னையில் கழக சார்பில் கலைவாணர் நூற்றாண்டு விழா.

ஆக°டு

26 மேட்டூரில் 'குடிஅரசு' 27 தொகுதி களை கழகம் வெளியிட்டது.

செப்

15 அண்ணா நூற்றாண்டையொட்டி கோவையில் 100 பேர் அண்ணா போல் வேடமணிந்து கழக சார்பில் ஊர்வலமாக வந்தனர்.

27 தொடர்ந்து மதக் கலவரங்களை உருவாக்கி வரும் பா.ஜ.க. மாநில பொதுக்குழு சேலத்தில், பா.ஜ.க. தேசியத் தலைவர் ராஜ்நாத்சிங் தலைமையில் கூடியபோது பல்வேறு மனித உரிமை அமைப்பு களை ஒன்று திரட்டி செயற்குழு கூட்டம் நடக்கும் மண்டபம் அருகே கழகம் போராட்டம் நடத்தியது. 250 தோழர்கள் கைது செய்யப்பட்ட னர். கழகத் தோழர்கள் மோட்டார் வாகனங் களை பா.ஜ.க. வினர் எரிக்க நிலைமை பதட்ட மானது.

அக்டோபர்

5 திருப்பூரில் பெரியார் அண்ணா சிலைகளை அகற்றக் கோரிய இந்து மதவெறி சக்திகளுக்கு எதிராக திருப்பூர் கழகத் தோழர்கள் பெரியார் கைத்தடி ஊர்வலம் நடத்தி கைதானார்கள்.

13 சிங்கள ராணுவத்துக்கு இந்தியா வழங்கிய படைக் கருவிகளை திரும்பப் பெற வற்புறுத்தி, சென்னை, சேலம், கோவை, தூத்துக்குடி, கள்ளக்குறிச்சி போன்ற ஊர்களில் கழகம் ஆர்ப்பாட்டங்களை காயக் கட்டுகளுடன் நடத்தியது.

14 ஈழத்தில் சிங்கள ராணுவம் போரை நிறுத்தக் கூடாது என்று பார்ப்பனத் திமிரு டன் கட்டுரை வெளியிட்ட 'இந்து' நாளேட்டின் அலுவலகம் முன்பு கோவையில் கழகத்தினர் 'இந்து' ஏட்டைக் கொளுத்தி கைதானார் கள்.

24 சென்னையில் மனித சங்கிலியில் கழகம் பங்கேற்பு

27 தீபாவளி நாளன்று காலை 7 மணியி லிருந்து 11 மணி வரை சென்னையில் 'ஈழத்தில் ரத்தத்தில் வெடி குண்டு; தமிழகத்தில் சத்தத்தில் பட்டாசா' என்ற முழக்கத் தோடு, பெரியார் திராவி டர் கழகம் தோழமை அமைப்புகளோடு இணைந்து வீதி வீதியாக ஊர்வலமாக சென்று மக்களிடம் தீபாவளியை புறக்கணிக்க வேண்டு கோள் விடுத்தது.

30 ஈழத் தமிழர் அவலங் களை விளக்கிடும் 500 குறுந்தகடுகளை உடு மலை கழகத் தோழர்கள் இலவசமாக மக்களுக்கு வழங்கினர்.

31 ஈழத் தமிழர்களுக்காக புதுவையில் அமைதியாக உண்ணாவிரதம் இருந்தவர்களை மிரட்டி, வன் முறையில் இறங்கிய காங்கிர சாரை தட்டிக் கேட்ட புதுவை கழகத்தினரை காவல்துறை கைது செய்து சிறையிலடைத்து வழக்கு தொடர்ந்தது.

நவம்பர்

11 மயிலாடுதுறையில் கழகத் தோழர் கள், ராஜபக்சே உருவ பொம்மை களை எரித்து கைதானார்கள். சீர்காழியில் கிராமம் கிராமமாக வீடியோ காட்சிகளை கழகம் ஒளிபரப்பியது.
கோபியில் ராஜபக்சேயை பாடை யில் ஏற்றி ஊர்வலம் நடத்தி, உருவ பொம்மைக்கு தீயிட்ட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர்.

18 நவம்பர் 18 முதல் டிசம்பர் முதல் தேதி வரை 15 நாட்கள் தமிழக மாணவர் கூட்டமைப்பு நடத்திய ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பரப்புரைப் பயணத்தில் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். தமிழகம் முழுதும் பயணக் குழுவினரை வரவேற்று கூட்டங்களை ஏற்பாடு செய்யும் கடமைகளை கழகத்தினரே ஏற்றனர்.

17 வி.பி.சிங்கை இழிவுபடுத்தி எழுதிய 'இந்தியா டுடே' பத்திரிகைக்கு செருப்படி தரும் போராட்டத்தை கோவையில் கழகம் நடத்தியது.

19 ஈரோட்டில் நடந்த ஈழத் தமிழர் படுகொலை கண்டன கூட்டத்தில் உரையாற்றியதற்காக காங்கிரசாரின் மிரட்டலுக்கு பணிந்து கலைஞர் ஆட்சி கழகத் தலைவர் கொளத்தூர் மணி த.தே.பொ.க. பொதுச்செய லாளர் மணியரசன், இயக்குநர் சீமான் ஆகியோரை 19 ஆம் தேதி கைது செய்து கோவை சிறையில் அடைத்தது.

டிசம்பர்

20 கைதைக் கண்டித்து தமிழ்நாடு காங்கிர° கட்சி அலுவலகமான சத்திய மூர்த்தி பவன் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற 62 கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். அனை வரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டு 22 ஆம் தேதி இரவு நிபந்தனை பிணை யில் விடுதலை செய்யப்பட்டனர்.

தடைகள் - கெடுபிடிகளுக்கு இடையே நிகழ்ந்த பரப்புரைகள்


பிப்ரவரி தொடங்கி, மே மாதம் வரை வாரத்துக்கு இரண்டு பிரச்சாரக் கூட்டங்கள் என்று திட்டம் வகுத்து பெரியார் சிந்தனைகளை மக்களிடம் இடைவிடாது பரப்புவதில் முனைப்போடு செயல்பட்டது திருப்பூர் பெரியார் திராவிடர் கழகம்.

சிற்பி ராசன் - மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சிகளை தோழர்கள் அழைத்த ஊர்களுக்கெல்லாம் சென்று நடத்தினார். சென்னையில் 11 நாட்கள் தொடர்ந்து அவரது நிகழ்ச்சிகள் நடந்தன.
திருப்பூர், கோவை, மயிலாடுதுறை, சீர்காழி, மேட்டூர், சேலம் நகரங்களில் 4 நாள், 5 நாள் தொடர்ந்து சிற்பி ராசன் நிகழ்ச்சிகளை கழகத்தினர் நடத்தினர். குழந்தைகள் - சிறுவர்களுக்கான பயிற்சி முகாமை, சென்னை மாவட்டக் கழகம் நடத்தியது.

சமர்பா குழுவினரின் எழுச்சி இசை நிகழ்ச்சிகள், மேட்டூர் 'டி.கே.ஆர்.' குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், காவை. இளவரசன் தூத்துக்குடி பால். அறிவழகன், மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகள் பல்வேறு ஊர்களில் நடத்தப்பட்டன. 'குடிஅரசு' தொகுப்புக்கு முன்பதிவுத் திட்டத்தின் கீழ் உறுப்பினர்களை இணைக்கும் பணியில் கழகத் தோழர்கள் கடும் உழைப்பை வழங்கினர். 'ஒப்பந்தங்களை சீர்குலைத்தது - யார்' நூலின் இரண்டாம் பதிப்பை கழகம் வெளிக் கொண்டு வந்து, மக்களிடம் பரப்பியது. மேட்டூரில் வெளியிடப்பட்ட 'குடிஅரசு' தொகுப்புப் பணியில் கழகத் தோழர்களின் உழைப்பு மதிப்பிட முடியாதது.

ஜனவரி 5 ஆம் தேதி சென்னையில் கழகம் ஏற்பாடு செய்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணிக்கு இந்து முன்னணி இராம.கோபாலனின் மிரட்டலுக்கு பணிந்து கலைஞர் அரசு தடை விதித்தது. ஈழத் தமிழர் ஆதரவு பொதுக் கூட்டங்களுக்கும் கலைஞர் ஆட்சி தடை விதித்தது. புதுவையில் கழகக் கூட்டத்துக்கு அம்மாநில அரசு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கழகம் வழக்கு தொடர்ந்தது. தடையை நீக்கி உத்தரவிட்டது உயர்நீதிமன்றம்.

தடை நீங்கியதால் தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியோடு கழகம் மூத்த தலைவர் திருவாரூர் தங்கராசுக்கு பாராட்டு விழாவையும் சென்னையில் நடத்தியது.

திருச்சி விமான நிலையத்தில் கொழும்பிலிருந்து வந்த விமானம் தரை இறங்க விடாமல் தடுக்கும் போராட்டத்தை திருச்சி மாவட்டக் கழகத் தலைவர் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தடைகளை எதிர்கொண்டு கழகம் பிரச்சாரங்களை கடந்த ஆண்டு நடத்தியது.

புதுவை கழகத்தின் சீரிய பணிகள்


டெல்லியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்ற புதுவை கழகத் தோழர்கள் புதுவையில் பயிற்சி முகாம்கள் கலைவாணர் நூற்றாண்டு விழா, ஈழத் தமிழர்ஆதரவுக் கூட்டங்களை நடத்திய தோடு, புதுவை அடித்தள மக்களைப் பாதிக்கக் கூடிய தேங்காய்த் திட்டு துறைமுகத் திட்டத்தை எதிர்த்து, பல்வேறு அமைப்புகளை ஒன்று திரட்டி, தொடர்ந்து போராட்டங்களை முன் னெடுத்து திட்டம் வரவிடாமல் தடுப்பதில் வெற்றி பெற்றனர். அதன் காரணமாகவே அவ்வப்போது காவல்துறையின் பழிவாங் கலுக்கு உள்ளாக்கப்பட்டாலும் புதுவைக் கழகம், நெஞ்சுரத்துடன் அவற்றை சந்தித்து உறுதியாக செயல்பட்டு வருகிறது.


தலையங்கம் - சரியான தீர்ப்பு!


பார்ப்பனப் பண்ணையமாய் திகழும் அய்.அய்.டி. நிறுவனத்துக்கு எதிராக முதன்முதலாக ஒரு சமூகநீதி தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இந்தியாவின் அனைத்து அதிகாரங்களையும் தங்களது பூணூலுக்குள் சுருட்டி வைத்திருப்பவர்கள் அய்.அய்.டி. நிர்வாகப் பார்ப்பனர்கள் என்பதை இந்தத் தீர்ப்பு வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறது. அய்.அய்.டி.யின் இயக்குனராக உள்ள எம்.எ°.அனந்த் எனும் அய்யங்கார் பார்ப்பனர் நியமன முறையே சட்ட விரோதமானது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு, முனைவர் ஈ.முரளிதரன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளதோடு வழக்குச் செலவுக் காக இயக்குனர் எம்.எ°. அனந்த் ரூ.5000-த்தை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

1961 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான சட்டத்தின் கீழ் இந்திய தொழில் நுட்ப நிறுவனங்கள் (அய்.அய்.டி.கள்) செயல்படுகின்றன. இந்த சட்டத்தின் 17(1)வது விதியின்படி இயக்குனர் தேர்வு நடைபெற வேண்டும். இதன்படி இயக்குனர் தேர்வு செய்யப்படவிருப்பதை அரசிதழில் (கெசட்) வெளியிட வேண்டும். பிறகு குடியரசுத் தலைவர் முன் அனுமதி பெற்று (அவர்தான் அய்.அய்.டி.யின் தலைவர்) குழு ஒன்றை நியமிக்க வேண்டும். அக்குழுவில் தொடர்புடைய துறையின் அமைச்சர், தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைவர், முன்னாள் இயக்குனர், பல்கலைக்கழக மான்யக் குழு தலைவர், விஞ்ஞானம் மற்றும் தொழில் ஆய்வு நிறுவனத்தின் மேலாளர் மற்றும் இயக்குநர், பெங்களூர் விஞ்ஞான கழகத்தின் தலைவர், மற்றும் முன்னாள் இயக்குநர், மத்திய அரசு நியமிக்கும்
3 பிரதிநிதிகள், மூன்று நாடாளுமன்ற உறுப் பினர்கள், தொழிற் கல்வி தொடர்புடைய மத்திய அரசு அதிகாரி ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற வேண்டும். இயக்குனராகும் தகுதியுடையோர் பட்டியலை குழு தயாரித்து, குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற பிறகு அறிவிக்க வேண்டும் என்பதுதான் சட்டம். இவ்வளவு கடுமையான தேர்வுமுறைகளை புறக்கணித்து சட்டத்தை மதிக்காமல், மனித வளத்துறை அமைச்சகத்தைச் சார்ந்த ஒரு சிறு செல்வாக்குள்ள குழுவே இயக்குனரை தேர்வு செய்துள்ளது. குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட தகவலில் குழு அமைக்கப்படாததும் சுட்டிக்காட்டப் படவில்லை. பார்ப்பனப் பண்ணையம் கேட் பாரில்லை என்பதுபோல் தொடர்ந்து நாட்டின் உயர்கல்வி நிறுவனத்தின் இயக்குனர்கள் நியமனம் நடந்து வந்துள்ளது.

பதவி தனக்குத்தான் கிடைக்கும் என்பதை உறுதியாக தெரிந்த எம்.எ°.அனந்த் தேர்வு செய்யப்படுவதற்கு முன்பே நியமனத்துக்கான பத்திரங்களை வாங்கி வைத்துள்ளது நீதிமன்றத்தில் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு மோசமாக முறைகேடுகள் நடந்த நிலையிலும்கூட ஏதோ சில நிர்வாக நடைமுறைகளால் பதவி நியமனம் ரத்தாகிவிட்டதுபோல் பார்ப்பன ஏடுகள் எழுதி வருகின்றன. "இந்த இயக்குனர் மீண்டும் இப்பதவியை ஆக்கிரமிக்கும் நோக்கத்தோடு சூடாகவே காலியான இடத்தை அனந்த் வைத்துக் கொண்டிருந்தார்" என்று நீதிபதி சந்துரு தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டியுள்ளார். இந்தத் தீர்ப்பு இந்தியாவில் தற்போது இயக்குநர்களாக உள்ள அனைவருக்குமே பொருந்தக் கூடியதாகும். காரணம் அனைத்து இயக்குனர்களுமே கொல்லைப்புற வழியாகவே நுழைந்துள்ளனர். இது நாட்டின் மிகப் பெரிய மோசடியாகும்.
57 வயதுக்குட்பட்டவராகவே புதிய இயக்குநர் இருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் மீறப்பட்டு 62 வயதுள்ள அனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே சட்டவிரோதமாக பதவி பெற்றவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, இவர்கள் காலத்தில் நடந்த பேராசிரியர்கள் நியமனங்களை யும் ரத்து செய்ய வேண்டும். வெகு மக்களுக்கு நம்பிக்கை தரக்கூடிய தீர்ப்பை வழங்கிய நீதிபதியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. இந்தத் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது. உறுதியோடு போராடிய முனைவர் முரளிதரன் அவர்களை பாராட்டுகிறோம்.


கொள்கையற்ற கட்டுப்பாட்டை சாடுகிறார் பெரியார்


2002 ஆம் ஆண்டு 'விடுதலை' ஞாயிறு மலரில் வாசகர் ஒருவர் கி.வீரமணியிடம் ஒரு கேள்வி கேட்டார். தோழர் என்று அழைப்பது பற்றிய கேள்வி இது. அந்தக் கேள்வியும், கி.வீரமணி தந்த பதிலும் இது தான்.
கேள்வி : கம்யூனி°ட் கட்சிகளில் தோழர் சங்கரய்யா என அழைக்கும் நிலை உள்ளது. அதுபோல நமது கழகத்திலும் நடைமுறைப்படுத்தப்படுமா?

வீரமணி பதில் : அவரவர்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. பிறரைப் பார்த்து காப்பியடிப்பது நமது வேலை அல்ல.

- இப்படி ஒரு பதிலை ஒரு பெரியாரியல்வாதி கூறுவது பெரியாரியலுக்கு எதிரானதேயாகும்.
1932 ஆம் ஆண்டிலேயே 'தோழர்' என்றே அழைக்க வேண்டும் என 'குடிஅரசு' பத்திரிகையில் கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டவர் பெரியார். அந்த அறிக்கை இதுதான்.

"இயக்கத் தோழர்களும், இயக்க அபிமானத் தோழர்களும் இனி ஒருவருக்கொருவர் அழைத்துக் கொள்வதிலும், பெயருக்கு முன்னால், பின்னால் மரியாதை வார்த்தை சேர்ப்பது என்பதிலும் ஒரே மாதிரியாக, "தோழர்" என்கிற பதத்தையே உபயோகிக்க வேண்டும் என்றும், மகா-ள-ஸ்ரீ, திருவாளர், திரு, தலைவர், பெரியார், திருமதி, நீஜத் என்பது போன்ற வார்த்தைகளை சேர்த்துப் பேசவோ, எழுதவோ கூடாது என்றும் வணக்கமாய் வேண்டிக் கொள்கிறேன். 'குடிஅரசி'லும் அடுத்த வாரம் முதல் அந்தப்படியே செய்ய வேண்டும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்".

- ஈ.வெ.ரா. (குடிஅரசு 13.11.1932)

- இப்படி தோழர் என்றே அழையுங்கள் என்று பெரியார் கூறியதை, இளம் தலைமுறையினரிடம் மறைப்பது பெரியாரியல் புரட்டு அல்லவா?


1932 இல் பெரியார் வலியுறுத்திய ஒரு கருத்து, ஏதோ கழகத்துக்கு தொடர்பே இல்லாதது போல் அது பிறருக்குரியது என்றும், அதை காப்பியடிக்க வேண்டாம் என்றும், அப்படி காப்பியடிப்பது நமது வேலை அல்ல என்றும் எழுதுவதற்குப் பெயர் என்ன?

இப்படி கேள்வி கேட்ட இளைஞர்கள் எல்லாம் 'குடிஅரசை' பார்க்கவா போகிறார்கள் என்ற நம்பிக்கை தானே? அப்படி இளைஞர்கள் பார்த்துவிடக் கூடாது என்பதால்தான் காலவரிசைப்படி முழுமையான பெரியார் தொகுப்பு வெளியிடுவதை, இவர்கள் தடுத்திட துடிக்கிறார்கள் என்பதும் இப்போது புரிகிறதா?
இப்படி பெரியாரியலுக்கு எதிராக வீரமணி எதை வேண்டுமானாலும் கூறினாலும் அதை கேள்விக்கு உட்படுத்தும் நிலையே அந்த அமைப்பில் இல்லை.

திராவிடர் கழகத்தில் வீரமணி - கொள்கைகளுக்கு எதிராக செயல்படுவதைத் தட்டிக் கேட்டால், உடனே துரோகிகள் என்ற முத்திரையைக் குத்திவிடுவது அவரது வழக்கம். பார்ப்பன ஜெயலலிதாவை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிப்பதை 1996 இல் திராவிடர் கழகத்துக்குள் இருந்த இளைஞர்கள் கேள்விக்கு உட்படுத்திய போது வழக்கம்போல 'துரோகிகள்' பட்டத்தையே கி.வீரமணி சூட்டினார். ஒரு இயக்கம் கொள்கையை விட்டே விலகிப் போகும்போது, கட்டுப்பாடு பேசுவதில் என்ன அர்த்தமிருக்க முடியும் என்ற கேள்வியைத்தான் அன்று இளைஞர்கள் முன் வைத்தார்கள். கொள்கையா, கட்டுப்பாடா என்ற கேள்வி எழும்போது, கட்டுப்பாடு என்பதைவிட கொள்கைதான் முன்னுரிமை பெற வேண்டும் என்பதே சரியான பெரியாரியல் பார்வை.
பெரியார் காங்கிரசில் இணைந்து அதன் கொள்கைகளை நம்பி கடுமையாக உழைத்த தலைவர். கதர் மூட்டையைத் தெருதெருவாக சுமந்து விற்றார். நீதிமன்ற புறக்கணிப்புக்காக தனக்கு வரவேண்டிய பல ஆயிரம் ரூபாய்க்கான பத்திரங்களையும் உதறித் தள்ளினார். அதே பெரியார் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை காங்கிர° ஏற்க மறுத்தபோது காங்கிரசு மாநாட்டிலே 'கலக'க் குரலை உயர்த்தினார். கி.வீரமணி வாதப்படி பார்த்தால் பெரியார் கூட காங்கிர° வலியுறுத்திய ஒற்றுமையை கட்டுப்பாட்டை மீறியவர்தான். அதற்காக பெரியாருக்கு துரோகி பட்டம் தந்துவிட முடியுமா? அது பெரியாரியல் அணுகுமுறையா என்று கேட்கிறோம். திராவிடர் கழகத்தில் வீரமணியால் வெளி யேற்றப்பட்டவர்கள் துரோகிகள் பட்டம் தரப்பட்டவர்கள்கூட வீரமணி அணுகுமுறையை கேள்வி கேட்டவர்களாகவே இருப்பார்களேதவிர, பெரியார் கொள்கைக்கு எதிராக செயல்பட்டவர்களாக இருப்பதில்லை. பெரியார் கொள்கைக்கு எதிராக செயல்பட்டுக் கொண்டே கூட வீரமணி கூடாரத்தில் இருக்கலாம். ஒரு தடையும் இருக்காது. வீரமணி புகழ் பாடினால் யாரும் ஆதிக்கசாதி உணர்வாளராக இருக்கலாம். தலித் வெறுப்புள்ளவராக இருக்கலாம். அவையெல்லாம் பிரச்சினை அல்ல. ஈரோட்டில் தீண்டாமை ஒடுக்கு முறைகளுக்கு எதிராக சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தை உருவாக்கி போராடியவர் தோழர் இரத்தினசாமி. அவர் திராவிடர் கழகத்தின் மாவட்ட செயலாளர். இப்போது திராவிடர் கழகத் தலைமை அவரை கட்சியை விட்டு நீக்கிவிட்டது. காரணம் - அந்த சாதி ஒழிப்பு கூட்டியக்கத்தில் பெரியார் திராவிடர் கழகமும் இடம் பெற்றுள்ளது என்பதால் தான், தமிழ்நாட்டில் இன்னும் தீண்டாமை பல்வேறு வடிவங்களில் தலைவிரித்தாடி வருகிறது. தலித் மக்களை அனுமதிக்காத கோயில்கள், கோயில் நுழைவுப் போராட்டங்களும்,இரட்டை தம்ளர் உள்ள தேனீர் கடைகளை எதிர்க்கும் போராட்டங்களும் நடந்து வருகின்றன.

வீரமணியோ, அவரது 'விடுதலை'யோ இவைகளை எதிர்ப்பதிலோ, போராடுவதிலோ முனைப்புக் காட்டுவது இல்லை. அந்தக் கழகத்துக்குள்ளே ஓரளவு கொள்கை உணர்வோடு செயல்படும் இரத்தினசாமி களும் வெளியேற்றப்படுகிறார்கள். கேட்டால் 'கட்டுப்பாடு', 'ஒற்றுமை குலைவு' என்ற 'தாரக மந்திரத்தை' வீசி விடுவார்கள்.

கொள்கையற்ற ஒற்றுமை கட்டுப்பாடு பற்றி பெரியார் என்ன கூறினார்? இதோ அவரது கருத்து:
"ஒற்றுமையை உச்தேசித்து, கொள்கைகளை விட்டுக் கொடுத்தன் பலன்தான், மகாத்மா முக்காடிட்டு சங்கராச்சாரி போல் மூலையில் உட்கார நேர்ந்ததும் அவரது நடவடிக்கைகள் இப்போது ஒரு மடாதிபதி சம்பிரதாயம் போல் ஆனதும் மடங்களில் பலர் ஆஷாடபூதித்தனம் செய்து பெருமை அடைவது போல் காந்தி மடத்திலும் பல சா°திரிகள் போய் அமர்ந்து முக°துதி செய்து பெருமை பெற்று வாழ்வதுமான காரியங்கள் நடந்தது. காந்தி கொள்கைக்கு இருந்த மதிப்புகள் அடியோடு போய் காந்தி மடம் ஏற்பட்டதற்குக் காரணமே கொள்கையை விட்டுக் கொடுத்து ஒற்றுமையை நாடிய பைத்தியக்காரத்தனம்தான். மகான்களின் செயலில் பைத்தியக்காரத்தனமும் ஒன்றாதலால் மகாத்மா காந்திக்கு அது தகும். ஒரு சமயம் அதை மாற்றிக் கொள்ள அவருக்கு நம்பிக்கைப் பிறந்தாலும் பிறக்கும். நமக்கு அது தகாது. நமக்கு அந்த நம்பிக்கை இல்லை. கொள்கையை விட்டு இராஜியான ஒரு °தாபன மும் ஒரு மனிதனும் ஒரு நாடும் உருப்படியாகாது என்பது என் புத்திக்கு எட்டிய உறுதியான முடிவு."

பெரியார் - 'குடிஅரசு' 12.6.1927


- பெரியார் இவ்வளவு தெளிவாகக் கூறிய கருத்துகள் வீரமணியால், இளைய சமுதாயத்திடம் விளக்கப்படுவது இல்லை. காரணம், இந்தக் கருத்துகள் நூலாக அச்சேற்றப்படாததுதான். இதுவே - இவர்கள் பெரியாரியலைப் புரட்டுவதற்கும் திருப்புவதற்கும் வாய்ப்பாகி விடுகிறது.

கொள்கையற்ற ஒற்றுமை, கட்டுப்பாடு பற்றி பெரியார் கூறும் இந்தக் கருத்துக்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்?

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)


இயக்குநர் சீமான் வாகனம் எரிக்கப்பட்டதை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் - கைது
சென்னை வளசரவாக்கம் இயக்கு நர் சீமான் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரை நள்ளிரவில் காங்கிர° காரர்கள் எரித்துள்ளனர். செய்தி அறிந்ததும் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு 19.12.2008 வெள்ளிக் கிழமை காலை 11 மணியளவில் கழகப் பொதுச்செயலாளர் கு. இராமகிருட் டிணன் தலைமையில் சீமான் காரை எரித்தவர்களை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத் தில் செயற்குழு உறுப்பினர் வெ. ஆறுச் சாமி, மாநகர செயலாளர் வே.கோபால், மாநகர அமைப்பாளர் இ.மு.சாஜித், அலுவலகப் பொறுப்பாளர் சா.கதிர வன், பகுதி கழக தோழர்கள் அ.வகாப், செந்தில், காட்டூர் கார்த்தி, தமிழரசன், குமணன், ப. கண்ணன், வழக்கறிஞர்கள் பாலசந்தர், பார்த்தசாரதி, சூலூர் ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் சகா. மணிகண்டன், பாலமுரளி, சிலம் பரசன் மற்றும் தமிழ் தேச பொது வுடைமை கட்சி கோவை பொறுப் பாளர்கள் தமிழரசன், சங்கர் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து அனைவரையும் கைது செய்து பாப்பநாயக்கன் பாளை யத்திலுள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டு இரவு 7 மணிக்கு விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னையில்

20.12.08 அன்று சென்னையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர்கள்
கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், எ. கேசவன், இரா. உமாபதி, பா. இராசன், ஆ. தமிழ்ச் செல்வன், சி.அருள்தாசு, நா. தினகரன், ந. அய்யனார், சொ. அன்பு, ரியா° பாசா, கோ. சீனு, ப. மனோகரன், சைதை இராசு, கலங்கரை ஓவி, நா. தஞ்சை தமிழன், பாவலர் கீர்த்தி, கி. முருகன், இளைய சிம்மன், வெங்டேசன் (ம.க.இ.க.), எம். கார்த்திக், பாண்டியன் (தமிழ் உரிமை மீட்பு இயக்கம்), கோ. தமிழரசு, சு. ஆனந்த், சு. பிரகாசு, ச. சரவணன், கு. சரவணன், ந. சுதாகர், ந. சுபாசு, எல். ரகுநாத், ம. கணேசன், பா. விஜி, இராவணன், சுகுமார், பொற் செல்வன், அருள், இராஜி, எ°. ராஜா, எ°. நாகராஜ், கன்னியப்பன், எம். கார்த் திக், எம். எட்டப்பன், வ. ரவிக்குமார், மு. சக்திவேல், கோதண்டன், வெங்கடேசு, நந்தா, வி.தீபக், மு. கண்ணதாசன், தமிழ்ச் செல்வன், ஜெயக்குமார், அப்பு, வி.ஜெய ராம், செயவேல், சுப்ரமணி, சுப்பு, பால சிங்கம், சக்திவேல், மனோஜ்குமார், மு. பைரவன், பி. சுரேஷ், கார்த்திக். இவர்கள் அனைவரும் டிசம்பர் 31 ஆம் தேதி வரை ஒவ்வொரு நாள் மாலையிலும் அண்ணா சாலை காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்பது நீதிமன்ற நிபந்தனை.

தூத்துக்குடியில்

ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக பேசியதற்காக பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி மற்றும் திரைப்பட இயக்குநர் சீமான் ஆகியோர் கைது செய்யப் பட்டதைக் கண்டித்து தூத்துக்குடி 1 ஆம் நுழைவாயில் காந்தி சிலை முன்பாக 19.12.2008 மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு பெரியார் திராவிடர் கழக தூத்துக்குடி மாநகர தலைவர் கோ. அ.குமார் தலைமை யேற்றார். ஆதித் தமிழர் பேரவை இரா.வே.மனோகர் ஆர்ப்பாட்டத் தினை தொடங்கி வைத்து தனது கண்டனத்தினை பதிவு செய்தார். தொடர்ந்து பெரியார் தி.க.வின் தூத்துக் குடி மாவட்ட தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார்.

அவரைத் தொடர்ந்து புரட்சிகர இளைஞர் முன்னணி இரா.தமிழரசன், தலித்திய சமூக நீதி உரிமை பேரவை தவராசு பாண்டியன், மக்கள் குடி யுரிமை ஜனநாயகம் செ. பிரபாகர், மனித உரிமைப் பாதுகாப்பு மய்யம் வழக்கறிஞர் சுப.இராமச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர் தூத்துக்குடி பால். பிரபாகரன், காங்கிரசு கட்சியின் போலி தேசப் பற்றினையும் தமிழின விரோதப் போக்கையும், ஈழத் தமிழருக்கு இழைக்கும் துரோகத்தையும் விளக்கிப் பேசினார்.

நிறைவுரையாக மக்கள் உரிமைக் குழு வழக்கறிஞர் அதிசயக்குமார் காங் கிர° கட்சி மற்றும் தமிழ்நாடு அரசு ஆகியோரைக் கண்டித்து வழக்கறிஞர் களாகிய எங்களுக்கே கருத்து சொல்ல உரிமை உண்டா என்று கேள்வி எழுப்பி தனது கண்டன உரையினை சிறப்பாக பதிவு செய்தார். இறுதியாக கழக மா நகர துணைத் தலைவர் சா.த.பிரபாகரன் நன்றி கூறினார்.

பாண்டு வாத்தியத்துடன் சிறை ஏகினர்


டிசம்பர் 19 ஆம் தேதி கழகத் தலைவர் கொளத்தூர் மணி, த.தே.பொ.க. பொதுச் செயலாளர் பெ. மணியரசன், இயக்குனர் சீமான் ஆகியோர் கோவை சிறைக்கு காவல்துறை அழைத்து வந்தபோது ஒரே உணர்ச்சி வெள்ளம். பொதுச் செயலாளர் கு. இராமகிருட் டிணன், திரைப்பட இயக்குனர் மணிவண்ணன் மற்றும் கோவை தோழர்கள் ஏராள மாகத் திரண்டிருந்தனர். திருப் பூர், பொள்ளாச்சி, பல்லடம் தோழர்களும் ஏராளமாக திரண்டு வந்திருந்தனர். பாண்டு இசை முழங்க மூவரும் சிறைக் குள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நாள் - டிசம்பர் 19.

தொடர்ந்து இருவாரமாக சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.