Monday, March 30, 2009
என்னால இவ்வளவும் வரியும் கட்ட ஏலாது. நான் சாகலாமா ????? !!!!!!!

From: Gopi krishna Kanagalingam
Date: Sat, 28 Mar 2009 16:01:31 +0600
Local: Sat, Mar 28 2009 12:01 pm
Subject: மஹிந்த சிந்தனை வரித் திட்டம் 2010
மஹிந்த சிந்தனை...
வரி விதிக்கும் திட்டம் 2010.
நாட்டின் பொருளாதாரம் நடுவீதிக்கு வந்து விட்டதால் அடுத்த வருடத்திற்கான
வரிவிதிப்புத் திட்டங்கள்.
ஒருவர் வரி விசாரணை செய்யப்படுகிறார்.
விசாரிப்பவர் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதியின் சிரேஷ்ர ஆலோசகருமான
திரு.பஷில் ராஜபக்ஷ.
(இவர் ஜனாதிபதியின்ர சகோதரர் எண்டு நான் சொல்லேல... சத்தியமா சொல்லேல...)
1) கேள்வி : என்ன செய்யிறாய்?
பதில் : வியாபாரம்.
வரி : வியாபார வரி கட்டு.
2) கேள்வி : என்ன வியாபாரம் செய்யிறாய்?
பதில் : சாமான் விற்கிறது.
வரி : விற்பனை வரி கட்டு.
3) கேள்வி : எங்கயிருந்து வியாபாரச் சாமான்கள வாங்கிறாய்?
பதில் : வெளிநாட்டிலயிருந்து.
வரி : பொது விற்பனை வரி, சுங்க வரி மற்றும் 'ஒக்ரோய் கட்டு. (Octroi)
4) கேள்வி : சாமான்கள விற்று என்ன கிடைக்குது உனக்கு?
பதில் : இலாபம்.
வரி : வருமான வரி கட்டு.
5) கேள்வி : இலாபத்த என்ன செய்யிறாய்?
பதில் : பங்குதாரருக்கு பிரிச்சு குடுக்கிறனான்
வரி : பங்கு வரி கட்டு.
6) கேள்வி : பொருட்களை எங்க உற்பத்தி செய்யிறாய்?
பதில் : தொழிற்சாலயில.
வரி : உள்நாட்டு உற்பத்தி வரி கட்டு.
7)கேள்வி : உனக்கு அலுவலகம், பண்டக சாலை, தொழிற்சாலை சொந்தமா இருக்கா?
பதில் : ஓம்.
வரி : மாநகர சபைக்கு வரி கட்டு. தீயணைப்பு வரி கட்டு.
8) கேள்வி : உனக்கு கீழ ஊழியர்கள் வேல செய்யிறாங்களா?
பதில் : ஓம்.
வரி : ஊழியர் சேவை வரி கட்டு.
9) கேள்வி : மில்லியன் கணக்கில வியாபாரம் செய்யிறியா?
பதில் : ஓம்.
வரி : பணப் புரழ்வு வரி கட்டு.
10)கேள்வி : வங்கியில இருந்து 1 இலட்சத்துக்கு மேல பணம் எடுப்பியா?
பதில் : ஓம்.
வரி : பண கையாளல் வரி கட்டு.
11)கேள்வி : ஊழியருக்கான சாப்பாட்ட எங்க வாங்கிறனீ?
பதில் : உணவு விடுதியில.
வரி : உணவு மற்றும் களியாட்ட வரி கட்டு.
12)கேள்வி : வியாபார விடயமாக வெளிநாட்டுக்குப் போறனியா?
பதில் : ஓம்.
வரி : வெளிநாடடு வியாபார வரி கட்டு.
13)கேள்வி : அரசாங்க சேவைகள பயன்படுத்திறியா?
பதில் : ஓம்.
வரி : சேவை வரி கட்டு.
14)கேள்வி : வியாபாரம் செய்ய முதல் எங்கயிருந்து கிடச்சது?
பதில் : பிறந்த நாள் பரிசா கிடச்சது.
வரி : நன்கொடை வரி கட்டு.
15)கேள்வி : ஏதாவது சொத்து இருக்குதா?
பதில் : ஓம்.
வரி : சொத்து வரி கட்டு.
16)கேள்வி : வியாபார உளைச்சல குறைக்க என்ன செய்யிறனீ?
பதில் : படம் பாக்க போவன்.
வரி : களியாட்ட வரி கட்டு.
17)கேள்வி : வீடு ஏதும் வாங்கினியா?
பதில் : ஓம்.
வரி : அஞ்சல் வரி, பதிவு வரி கட்டு.
18)கேள்வி : எப்பிடி பயணம் செய்யிறனீ?
பதில் : பேருந்து,
வரி : கூடுதல் கட்டணம் செலுத்து.
19)கேள்வி : பிள்ளைகள் படிக்கிறாங்களா?
பதில் : ஓம்.
வரி : கல்வி வரி, மேலதிக கல்வி வரி, உயர் கல்வி வரி கட்டு.
20)கேள்வி : முந்தி வரி ஏதும் கட்ட பிந்தினதா?
பதில் : ஓம்.
வரி : தண்டப்பணம் கட்டு, வட்டி கட்டு.
22)கேள்வி : ஏதும் கேக்க விரும்பிறியா???
பதில் : ஓம். என்னால இவ்வளவும் வரியும் கட்ட ஏலாது. நான் சாகலாமா?
வரி : பொறு. அண்ணாட்ட கேட்டு சொல்றன். அண்ணாக்கு ஈமச்சடங்கு வரி பற்றி
ஒரு எண்ணம் இருக்கு.
--
K.Gopi krishna.
----
http://tamilgopi.blogspot.com
Sunday, March 29, 2009
Friday, March 27, 2009
இவனெல்லாம் ...........!!!
என் முனியம்மா..
---------------------
பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.
காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.
ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.
எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.
இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலைகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.
முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பாத்தா
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..
முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.
புதியமாதவி,
மும்பை
நன்றி : நா. கணேசன்.
---------------------
பாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.
காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.
ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.
எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.
இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலைகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.
முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பாத்தா
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..
முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.
புதியமாதவி,
மும்பை
நன்றி : நா. கணேசன்.
Wednesday, March 25, 2009
முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி!!!
முன்னாள் போராளி சாத்திரியுடன் ஒரு பேட்டி
விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம்.
பணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இப்போதும் இருக்கிறீர்களா? இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளீர்களா?
நான் புலிகள் இயக்கத்தில் இப்பொழுது உறுப்பினராக இல்லை. ஆனால் ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்தும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தபடிதான் இருக்கின்றேன்.
போராளி இயக்கத்தில் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்ன? இயக்கத்தில் இருந்தபோது எம்மாதிரியான பங்களிப்பை செய்தீர்கள்?
போராட்ட இயக்கத்தில் நான் இணைந்ததற்கு காரணம் 83 ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான். எல்லோரையும் போலவே எந்தக்கவலைகளுமற்ற ஒரு பள்ளிமாணவனாக திரிந்தகாலம். இலங்கை அரசியல் பற்றியோ போராட்டம்பற்றியோ எவ்வித அக்கறைகளும் இல்லாமல், படிப்பு, விளையாட்டு, களவாய் படம்பார்த்தலென்று திரிந்த கனாக்காலங்கள் அவை. அப்படித்திரிந்த 83ம் ஆண்டு யூலைமாதம் 24ந்திகதி பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தபொழுது வாகனத்தில் வந்த இலங்கை இராணுவதினர் எங்கள் பாடசாலை வாசலில் இறங்கி கண்மூடித்தனமாய் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றார்கள். அதில் எனது பாடசாலை மாணவர்கள் மூவரும் நான்கு பொதுமக்களும் இறந்து போனார்கள்.இறந்துபோன மாணவர்களில் என்னுடைய வகுப்புத்தோழனும் ஒருவன். அதுதான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மாணவனை கொல்லுமளவிற்கு அவன் செய்த குற்றமென்ன? அவனது எதிர்காலத்தை எப்படியெல்லாமோ கனவு கண்ட அவனது தாய் தந்தையர்கள் செய்த குற்றமென்ன? அதில் இறந்து போன மற்றைய பொதுமகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இப்படி பல கேள்விகள். அதனைத்தொடர்ந்து யூலை 25-26ந்திகதிகளில் நடந்தேறிய தமிழினப்படுகொலையும் அனைத்து உடைமைகளையிழந்து யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய சம்பவங்களும் காரணமாய் அமைந்துவிட்டது. பின்னர் இயக்கத்தில் இணைந்த பின்பு அதன் உறுப்பினர்கள் என்னென்ன பங்களிப்பினை செய்வார்களோ அத்தனையையும் செய்தேன்.
விடுதலைப் புலிகளின் வரலாறை சுருக்கமாக இங்கு கூற முடியுமா?
விடுதலைப்புலிகளின் வரலாற்றினை ஒரு கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிலில் சுருக்கமாக கூறிவிடமுடியாது. ஆயுதவிடுதலைப்போரின் ஆரம்பம் பற்றி அதனுடன் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலானவர்களின் உதவியுடன் ஒரு புத்தகத்தை எழுதும் பணியில் இருக்கிறேன். ஆனால் இயந்திர வாழ்வாகி விட்ட புலம்பெயர் சூழலில் வேறு பல பணிகளையும் செய்துகொண்டு புத்கத்தினையும் எழுதி முடிப்பது சிரமமாகவே உள்ளது. முடிந்தளவு விரைவில் அதனை எழுதி முடிப்பேன் அதில் ஈழப்போராட்ட வரலாறு விரிவாக இருக்குமென நினைக்கிறேன்.
விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?
விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள். இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.
சர்வதேசத்தில் இழந்த ஆதரவை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பு சிறிது ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?
சர்வதேசத்திடம் இலங்கையரசுஆதரவை இழந்து வருகிறதென்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். மற்றபடி சர்வதேசத்தின் ஆதரவு என்பதே அவர்களது பொழுளாதார நலன்களின் அடிப்டையில்தான் என்பது சாதாரண பொதுமகனிற்கும் தெரிந்த விடயம். மனிதவுரிமை என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். தமிழர்தரப்பி்ல் சர்வதேசத்திற்கு பெரியளவில் பொருளாதார நலன்கள் எதுவும் கிடையாது. எனவே சர்வதேசத்திடம் ஜயோ என அலறுவதைவிட தமிழன் தன்னுடைய பலத்தினை நிருபித்தால்தான் சர்வதேசத்தின் ஆதரவு எமது பக்கம் திரும்பும் என்பது என்னுடைய கருத்தாகும்.
அடேல் - ஹிலாரி சந்திப்பு உண்மையா? அதுபற்றி தகவல்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?
அடேல்-ஹிலாரி சந்தித்தது உண்மையல்ல என்று புலிகள் அமைப்பே தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத் தமிழரின் தற்போதைய ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியான திசையில் போகிறதா? அல்லது சரியான தலைமை இன்றி தத்தளிக்கிறதா?
தமிழகம் தற்போது மட்டுமல்ல ஈழத்தமிழர்களிற்காக எப்பொழுதுமே ஆதரவாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் சில அரசியல் தலைவர்களினது சர்வாதிகாரப்போக்குகளினாலும், சுயநலஅரசியல் விளையாட்டுக்களினாலும், அதற்கு துணைபோன அதிகாரிகளினாலும், அவை இருட்டடிப்பு செய்யப்பட்டும், அடக்கியும் வைக்கப்பட்டிருந்ததுதான் உண்மை. நீறு பூத்த நெருப்பாயிருந்த அந்த ஆதரவு மீண்டும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ளது.ஆனாலும் அதிலும் அரசியல்வாதிகளே குளிர்காயத்தொடங்கியுள்ளனர். ஈழத்திலும் 70களில் இதேபோன்ற நிலைமைதான் இருந்தது. ஆனால் ஈழத்து இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாமல் சரியானதொரு சுயநலமில்லாத விலைபோகாத ஒரு தலைமையை தெரிவு செய்து அதன்கீழ் அணிதிரண்டனர். அது போல தமிழகமும் சரியானதொரு தலைமையை அடையாளம் கண்டு அணிதிரளவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இத்தனை எழுச்சிகளும் குடும்ப அரசியல் நடத்துபவர்களினதும் தமிழனையும் தமிழையும் மிதிப்பவர்களினதும் வாக்கு வங்கியை நிரப்பி விட்டு தமிழனின் உணர்வுகள் அனைத்துமே வீணாகி மரத்துப்போகும் நிலைதான் வரும்.
தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்
ஊறிய குட்டைகள்தான் வேறு வேறே தவிர எல்லாமே மட்டைகள்தான்.
சகோதர படுகொலைகள் என்று ஒருசாரர் கூவிக்கொண்டிருக்கிறார்களே அப்படி என்னதான் புலிகள் செய்தார்கள்? அவர்களின் நியாயம் என்ன?
எடுத்ததற்கெல்லாம் மகாபாரதப்போரையும் கீதையையும் உதாரணத்திற்கு இழுத்துவைத்து கதைகதையாய் சொல்லி சிலாகிப்பவர்களிற்கு புலிகளின் யுத்தம் மட்டும் தர்மயுத்தமாய் தெரியாமல் சகோதரப்படுகொலையாய் தெரிகின்றது.சகோதரர்களிற்குள் பகையை வளர்ந்து மோதவிட்டதே இந்திய ஆட்சியாளர்களும்.உளவுத்துறையும்தானென்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள். தமிழரின் போராட்டம் சிதைந்து போகாமல் தடுப்பதற்காக மற்றைய இயக்கங்களை தடை செய்வதைத் தவிர வேறு வழி புலிகளிற்கு இருந்திருக்கவில்லை.
(சகோதர படுகொலைகள் பற்றி சாத்திரி எழுதிய பதிவு.)
ராஜீவ் கொலையை புலிகள் ஏன் வெளிப்படையாக மறுக்கவில்லை?
ராஜீவ் கொலையில் அவிழக்கப்படாத பல மர்மமுடிச்சுக்கள் ஏராளம் உள்ளது. அவைகள் அவிழ்க்கப்படுவதை இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகளும் அதிகாரிகளுமே விரும்பமாட்டார்கள். அதனால்தான் புலிகளின் அழித்துவிடுவதன் மூலம் அத்தனை ஆயிரம் கேள்விகளிற்கும் ஒரே வரியில் பதிலை சொல்ல முனைகிறார்கள்.
ஈழத்தமிழர்கள் அனைவருமே புலிகளை ஆதரிக்கிறார்களா?
உண்மையான மானமுள்ள தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிக்கின்றார்கள் அது ஈழம். இந்தியா .என்றில்லை உலகம் முழுவதுமே ஆதரிக்கின்றார்கள்.
தனிஈழம் தவிர்த்த ஏதேனும் ஒன்று தமிழர் விடுதலையை தரக்கூடுமா? சமாதான பேச்சு வார்த்தை சரியான திசையில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் புலிகள் ஏற்றுக்கொண்டது தனிஈழம் தவிர்த்த ஏதோ ஒன்று தானே?
தமிழனிற்காக சிங்களம் ஒரு மயிரையேனும் தரத்தயாராய் இல்லையென்பதே உண்மை. எனவே தனித்தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. ஆனால் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் தரப்பில் புற சுய நிர்ணய உரிமை (சமஸ்டி) அதாவது சமஸ்டி அரசாங்கம் அமைந்தபின்னர் ஒரு வாக்கெடுப்பில் தமிழர்தரப்பின் 90 வீதமான வாக்குகள் விழுந்தால் தனியாகப்பிரிந்து போகும் உரிமையுடனான தீர்வையே கேட்டனர். ஆனாலும் எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், புலிகள் பேச்சு வார்த்தையை விரும்புவதில்லை சண்டையையே விரும்புகின்றனர் என்கிற சிறீலங்காவின் பரப்புரையை புலிகள் சர்வதேச சமூகத்தின் முன்னால் தகர்த்திருந்தாலும். சண்டையை மட்டுமே விரும்புகின்ற சிறீலங்காவை இந்தியா தாங்கிப்பிடித்துள்ளது மட்டுமல்ல அதுவே சர்வதேசத்தின் வாயையும் அடைத்துள்ளது.
தனிஈழம் தவிர்த்த ஒரு தீர்வு, இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்.
1905 ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு காலத்தில் இருந்தே தமிழன் ஒவ்வொருவடிவங்களிலும் ஒவ்வொரு சட்டங்களிற்கமையவும் தனக்குரிய உரிமைகளை வன்முறையற்ற அனைத்து வடிவங்களிலும் கேட்டு கேட்டு களைத்து போனது மட்டுமல்ல எமது அத்தனை போராட்டங்களையும் ஆட்சியாளர்கள் வன்முறையை மட்டுமே கொண்டு அடக்கியதால்தான் தமிழனும் தானும் இனி எதிரியின் ஆயுதத்தையே பயன்படுத்தலாமென நினைத்து தனித்தமிழீழத்தில் மட்டுமே தமிழனால் சுதந்திரமாக வாழமுடியும் என்று முடிவெடுத்தும் வன்முறையை 70களில் கைகளில் எடுத்தான். இன்று தமிழகத்து நிலைமைகளும் ஈழத்தின் 70களின் காலத்தைத்தான் நினைவு படுத்துகின்றது
முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!
முஸ்லீம்களை புலிகள் அரவணைக்கவில்லையென்று ஒரேவரியில் மறுத்துவிட முடியாது.ஏனெனில் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழின அழிப்பினை தாராளமாகவே மேற்கொண்டனர்.ஜிகாத் அமைப்பினரால் பல கிராமங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். வந்தாறு மூலை படுகொலைகள். கிழக்குப்பல் கலைக்களகப்படுகொலைகள். கொக்கட்டிச்சோலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரம் யாழ்குடாவிலும் இலங்கையரசுடன் சேர்ந்து முஸ்லீம்களின் ஜிகாத் அமைப்பு புலிகள் மீதான தாக்குதலை நடாத்துவதற்கு பலசதித் திடட்டங்களைத்தீட்டியது அதில் பல முஸ்லீம்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.அனாலும் அவர்களது பள்ளிவாசல் உலாமாக்களின் தலையீட்டினால் இனியொருதடைவை இப்படியான செயல்களில் ஈடுபடவேண்டாமென அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டுவினால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரம் தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் பொதுஎதிரி சிங்களப்பேரினவாதம். அது முஸ்லீம்களை தமிழர்களுடன் மோதவிட்டு வேடிக்ககை பார்க்கின்றது.எனவே அதற்கு பலியாக வேண்டாமென தொடர்ச்சியாக பலபொதுக்கூட்டங்கள் வைத்தும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் புலிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தனர். ஆனாலும் அவர்கள் தொர்ந்தும் இலங்கை இராணுவத்துடன் தொடர்ந்தும் சேர்ந்து இயங்கியது மட்டு மல்ல புலிகளை தாக்குவதற்காக கொண்டுவந்த ஆயுதங்களும் பிடிபட்ட நிலையில் தான் புலிகளின் நிருவாகப் பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அவர்களின் செய்கைகளினால் ஆத்திரமடைந்திருந்த தமிழ்மக்களிற்கும் மேதல் ஏற்பட்டு முஸ்லீம்களிற்கு பாதகமானதாகவே முடிந்திருக்கும். அடுத்ததாய் தமிழரை சிங்களவர்கள் வெறுப்பதற்கு காரணம் சிறீலங்கா அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு சிங்களத் தலைவரும் தாங்கள் சுலபமாய் ஆட்சியைப் பிடிப்பதற்கு சிங்கள மக்களின் பொருளாதாரம் பற்றியோ நாட்டை வளம் படுத்துவது பற்றியோ பேசியதில்லை. இனவாதத்தினையே பேசி சுலபமாய் ஆட்சியை பிடித்துவந்துள்ளதே வரலாறாகும். அவர்கள் பேசிய இனவாதம் இன்று ஒவ்வொரு சிங்களவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விட்டது. இன்று தங்களிற்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தமிழனிற்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைக்கின்ற நிலைமைக்கு சிங்கள மக்ளை ஆட்சியாளர்கள் கொண்டுவந்து விட்டனர். ஆனால் அதன் மோசமான விழைவுகளை ஆட்சியளர்களை விட சாதாரண சிங்கள மக்களே அனுபவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.
தாழ்த்தப் பட்டவர்களின் நிலைமை தமிழகத்தை விட ஈழத்தில் மோசம் என்பது உண்மையா?
80களிற்கு முன்னர் இரட்டை குவளை முறை. கோயில்களின் உள்ளே அனுமதி மறுப்பு, பொது இடங்களில் அவமதிப்பு என்று தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மேசமானதாகவே இருந்ததை மறுக்கமுடியாது.புலிகள் ஆயுதப்போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்தினார்களோ அதேபோல சாதிய விடயங்களையும் இரும்புக்கரம் கொண்டே அடக்கினார்கள். அவர்களது நிருவாகம் நடந்த பகுதிகளில் சாதியம் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட்டிருந்ததுஎன்பது உண்மை. ஏனெனில் அவர்கள் நிருவாகம் நடாத்திய காலங்களில் ஒரு சாதிய சண்டையுமே நடைபெறவில்லையென்பதும் சாதியின் பெயரால் எவரும் ஒதக்கப்படவில்லையென்பதுமே அதற்கு உதாரணமாகும்.
மக்கள் இல்லாத பகுதிகளை கைவிட்டு மக்களடர்ந்த பகுதியில் புலிகள் போரிடவேண்டிய நிலைமை / காரணம் என்ன?
அதாவது மக்களை புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதானே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் அல்லது காணொளிகளில், படங்களில் மக்களுடன் சேர்த்து புலிகளும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லாம். அதுமட்டுமல்ல யுத்த களத்தில் நிற்கும் செஞ்சிலுவை சங்கமே அப்படியானதொரு செய்தியையோ ஆதாரங்களையோ வெளியிடவில்லை. இவை தமிழர்கள் மீதான கொலையை இலங்கையரசு நியாயப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரமேதான்.
வலைவுலகம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருக்கும் ஈழ ஆதரவு போதுமானதாக உள்ளதா? தமிழகத்தில் இன்னும் ஈழ விழிப்புணர்வு அற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!
தமிழகத்தினை பொறுத்தவரை வலையுலகத்தில் அக்கறையாக ஈழம்பற்றி அறிந்துகொள்பவர்கள் எத்தனைவீதம் எனத்தெரியாது. ஆனால் அச்சு ஊடகம் என்று பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் பிடியிலேயே உள்ளது. தமிழனை தமிழில் சிந்திக்கவிடக்கூடாதென்பதே அவர்களது முதல் நோக்கம்.இல்லா விட்டால் தமிழன் தமிழில் வழிபாடு செய்வதற்கும். தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் கல்வி கற்பதற்காகவும் போராடவேண்டிய நிலை வந்திருக்குமா? இந்த உலகத்தில் எந்த ஒரு சுதந்திர நாட்டிலாவது ஒரு இனம் தன்னுடைய மொழியில் வழிபாடு செய்யவும் தன்னுடைய மொழியில் கல்வி கற்கவும் பேராட்டம் நடாத்தியிருக்கின்றதா? இப்படி தமிழ் நாட்டிலேயே தமிழன் தான் என்ன நிலையில் இருக்கிறானென்று தெரியாத நிலையில். தமிழ்நாட்டு தமிழனிடம் ஈழத்தமிழனின் போராட்டத்தைப்பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றாயென்று கேட்க முடியுமா?
நீங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.
நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அந்த துரோகப் பக்கங்கள் அவர்களது பெயர்களையும் பதிவுசெய்துகொண்டு போய் நாளைய எமது சந்ததிகளின் கைகளில் படிக்கக் கொடுக்கும்.
உங்கள் முழுப்பெயர், சொந்த ஊர், வாழிடம், குடும்பம் மற்றும் முக்கிய பணி கூறுங்கள்.
நான் சாத்திரி என்கிற புனைபெயரில் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் எழுதிவந்தாலும் சொந்தப் பெயர் சிறி ஈழத்தில் மானிப்பாய்க் கிராமத்தை சேர்ந்தவன். தற்சமயம் பிரான்சில் வசித்து வருகிறேன்.
நன்றி!...
http://mohankandasami.blogspot.com/2009/03/blog-post.html
"நகர்ந்து கொண்டிருப்பதே...... நதி!
இயங்கிக் கொண்டிருப்பவனே..... இளைஞன்!"
www.beyouths.co.cc
e m@il: beyouths@yahoo.com
இமெயில் குழுவில் இணைய...
உங்கள் அன்புக்கு நன்றி!
Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
விடுதலை புலிகள் இயக்கத்தில் பங்காற்றிய அனுபவம் உள்ள பதிவர் திரு. சாத்திரி அவர்களுடன் ஒரு பேட்டி காண வேண்டும் என்று நெடுநாளைய ஆவல் எனக்கு இருந்தது. தமிழ் சசியின் பேட்டியுடன் ஒரு போராளியின் பேட்டியையும் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். போராட்ட கால அனுபவங்களை விசாரித்து விரிவாக பேசியிருக்க முடியும். ஒரு தீர்வை நோக்கி ஈழச்சிக்கல் நகர வேண்டிய சூழலில் விடுதலைப் புலிகள் மற்றும் ஈழம் தொடர்பாக அறிந்திருக்க வேண்டியவற்றை கேள்விகளாக கேட்டு பதில் பெறுவதே தற்போதைக்குத் தகும். அரசியல் தீர்வை அடைந்த பிறகு மீண்டும் ஒருமுறை போராளிகளை சந்தித்து வீர காவியங்களை சிலாகிப்போம்.
பணிகளுக்கு மத்தியில் எனது வலைப்பூவிற்காக அவர் நேர்முகம் தர ஒப்புக்கொண்டமைக்கும், நேரம் ஒதுக்கியமைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இப்போதும் இருக்கிறீர்களா? இயக்கத்துடன் நேரடித் தொடர்பில் உள்ளீர்களா?
நான் புலிகள் இயக்கத்தில் இப்பொழுது உறுப்பினராக இல்லை. ஆனால் ஈழத்தமிழரின் நியாயமான போராட்டத்திற்கு தொடர்ந்தும் என்னாலான அனைத்து உதவிகளையும் செய்தபடிதான் இருக்கின்றேன்.
போராளி இயக்கத்தில் நீங்கள் இணைந்ததன் பின்னணி என்ன? இயக்கத்தில் இருந்தபோது எம்மாதிரியான பங்களிப்பை செய்தீர்கள்?
போராட்ட இயக்கத்தில் நான் இணைந்ததற்கு காரணம் 83 ம் ஆண்டில் நடந்த ஒரு சம்பவம்தான். எல்லோரையும் போலவே எந்தக்கவலைகளுமற்ற ஒரு பள்ளிமாணவனாக திரிந்தகாலம். இலங்கை அரசியல் பற்றியோ போராட்டம்பற்றியோ எவ்வித அக்கறைகளும் இல்லாமல், படிப்பு, விளையாட்டு, களவாய் படம்பார்த்தலென்று திரிந்த கனாக்காலங்கள் அவை. அப்படித்திரிந்த 83ம் ஆண்டு யூலைமாதம் 24ந்திகதி பாடசாலைக்கு போய்க்கொண்டிருந்தபொழுது வாகனத்தில் வந்த இலங்கை இராணுவதினர் எங்கள் பாடசாலை வாசலில் இறங்கி கண்மூடித்தனமாய் துப்பாக்கியால் சுட்டு விட்டு சென்றார்கள். அதில் எனது பாடசாலை மாணவர்கள் மூவரும் நான்கு பொதுமக்களும் இறந்து போனார்கள்.இறந்துபோன மாணவர்களில் என்னுடைய வகுப்புத்தோழனும் ஒருவன். அதுதான் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அந்த மாணவனை கொல்லுமளவிற்கு அவன் செய்த குற்றமென்ன? அவனது எதிர்காலத்தை எப்படியெல்லாமோ கனவு கண்ட அவனது தாய் தந்தையர்கள் செய்த குற்றமென்ன? அதில் இறந்து போன மற்றைய பொதுமகள் ஏன் கொல்லப்பட்டார்கள்? இப்படி பல கேள்விகள். அதனைத்தொடர்ந்து யூலை 25-26ந்திகதிகளில் நடந்தேறிய தமிழினப்படுகொலையும் அனைத்து உடைமைகளையிழந்து யாழ் குடாநாட்டில் வந்திறங்கிய சம்பவங்களும் காரணமாய் அமைந்துவிட்டது. பின்னர் இயக்கத்தில் இணைந்த பின்பு அதன் உறுப்பினர்கள் என்னென்ன பங்களிப்பினை செய்வார்களோ அத்தனையையும் செய்தேன்.
விடுதலைப் புலிகளின் வரலாறை சுருக்கமாக இங்கு கூற முடியுமா?
விடுதலைப்புலிகளின் வரலாற்றினை ஒரு கேள்வி பதில் பகுதியில் ஒரு பதிலில் சுருக்கமாக கூறிவிடமுடியாது. ஆயுதவிடுதலைப்போரின் ஆரம்பம் பற்றி அதனுடன் சம்பந்தப் பட்டவர்கள் பெரும்பாலானவர்களின் உதவியுடன் ஒரு புத்தகத்தை எழுதும் பணியில் இருக்கிறேன். ஆனால் இயந்திர வாழ்வாகி விட்ட புலம்பெயர் சூழலில் வேறு பல பணிகளையும் செய்துகொண்டு புத்கத்தினையும் எழுதி முடிப்பது சிரமமாகவே உள்ளது. முடிந்தளவு விரைவில் அதனை எழுதி முடிப்பேன் அதில் ஈழப்போராட்ட வரலாறு விரிவாக இருக்குமென நினைக்கிறேன்.
விடுதலைப் புலிகளின் இன்றைய உண்மையான பலம் என்ன? அவர்கள் இப்போது பின் வாங்குவது உண்மையா?
விடுதலைப்பலிகளின் இன்றை பலம் மட்டுமல்ல ஆரம்பகாலத்திலிருந்தே அவர்களது பலம் வெளியில் எவரிற்குமே தெரியாது. அதுதான் அவர்களது பலம். காரணம் அவர்களிடம் ஆட்பலம் ஆயுத பலத்தைவிட ஆன்மபலமே பல சமர்களின் திருப்பு முனையாக அமைந்தது.எனவே ஆன்மபலத்தை அளவிடமுடியாது. அடுத்தது புலிகளின் பின்வாங்கல்கள் இதுதான் முதற் தடைவையல்ல. இதற்கு முன்னரும் பலதடைவைகள் பல இராணுவ அதிகாரிகளும். அரசியல் வாதிகளும் இதுதான் புலிகளின் கடைசிக்காலம் என்று அடித்துச்சொன்னபொழுதெல்லாம். அதிசயிக்கத்தக்க விதத்தில் பாய்ந்திருக்கிறார்கள். இது நானொன்றும் புழுகவில்லை. புலிகளின் உண்மையான வரலாறு.
சர்வதேசத்தில் இழந்த ஆதரவை மீண்டும் பெறக் கூடிய வாய்ப்பு சிறிது ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. உங்கள் கருத்து என்ன?
சர்வதேசத்திடம் இலங்கையரசுஆதரவை இழந்து வருகிறதென்று சொன்னால் அது பொருத்தமாக இருக்கும். மற்றபடி சர்வதேசத்தின் ஆதரவு என்பதே அவர்களது பொழுளாதார நலன்களின் அடிப்டையில்தான் என்பது சாதாரண பொதுமகனிற்கும் தெரிந்த விடயம். மனிதவுரிமை என்பதெல்லாம் அடுத்தபட்சம்தான். தமிழர்தரப்பி்ல் சர்வதேசத்திற்கு பெரியளவில் பொருளாதார நலன்கள் எதுவும் கிடையாது. எனவே சர்வதேசத்திடம் ஜயோ என அலறுவதைவிட தமிழன் தன்னுடைய பலத்தினை நிருபித்தால்தான் சர்வதேசத்தின் ஆதரவு எமது பக்கம் திரும்பும் என்பது என்னுடைய கருத்தாகும்.
அடேல் - ஹிலாரி சந்திப்பு உண்மையா? அதுபற்றி தகவல்கள் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?
அடேல்-ஹிலாரி சந்தித்தது உண்மையல்ல என்று புலிகள் அமைப்பே தெரிவித்தள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத் தமிழரின் தற்போதைய ஆதரவு பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அது சரியான திசையில் போகிறதா? அல்லது சரியான தலைமை இன்றி தத்தளிக்கிறதா?
தமிழகம் தற்போது மட்டுமல்ல ஈழத்தமிழர்களிற்காக எப்பொழுதுமே ஆதரவாகத்தான் இருந்து வந்திருக்கின்றது. ஆனால் சில அரசியல் தலைவர்களினது சர்வாதிகாரப்போக்குகளினாலும், சுயநலஅரசியல் விளையாட்டுக்களினாலும், அதற்கு துணைபோன அதிகாரிகளினாலும், அவை இருட்டடிப்பு செய்யப்பட்டும், அடக்கியும் வைக்கப்பட்டிருந்ததுதான் உண்மை. நீறு பூத்த நெருப்பாயிருந்த அந்த ஆதரவு மீண்டும் கொழுந்துவிட்டெரியத் தொடங்கியுள்ளது.ஆனாலும் அதிலும் அரசியல்வாதிகளே குளிர்காயத்தொடங்கியுள்ளனர். ஈழத்திலும் 70களில் இதேபோன்ற நிலைமைதான் இருந்தது. ஆனால் ஈழத்து இளைஞர்கள் அரசியல் வாதிகளின் பின்னால் செல்லாமல் சரியானதொரு சுயநலமில்லாத விலைபோகாத ஒரு தலைமையை தெரிவு செய்து அதன்கீழ் அணிதிரண்டனர். அது போல தமிழகமும் சரியானதொரு தலைமையை அடையாளம் கண்டு அணிதிரளவேண்டும். இல்லாவிடில் தமிழகத்தின் இத்தனை எழுச்சிகளும் குடும்ப அரசியல் நடத்துபவர்களினதும் தமிழனையும் தமிழையும் மிதிப்பவர்களினதும் வாக்கு வங்கியை நிரப்பி விட்டு தமிழனின் உணர்வுகள் அனைத்துமே வீணாகி மரத்துப்போகும் நிலைதான் வரும்.
தமிழக அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் பற்றி உங்கள் கருத்தை கூறுங்கள்
ஊறிய குட்டைகள்தான் வேறு வேறே தவிர எல்லாமே மட்டைகள்தான்.
சகோதர படுகொலைகள் என்று ஒருசாரர் கூவிக்கொண்டிருக்கிறார்களே அப்படி என்னதான் புலிகள் செய்தார்கள்? அவர்களின் நியாயம் என்ன?
எடுத்ததற்கெல்லாம் மகாபாரதப்போரையும் கீதையையும் உதாரணத்திற்கு இழுத்துவைத்து கதைகதையாய் சொல்லி சிலாகிப்பவர்களிற்கு புலிகளின் யுத்தம் மட்டும் தர்மயுத்தமாய் தெரியாமல் சகோதரப்படுகொலையாய் தெரிகின்றது.சகோதரர்களிற்குள் பகையை வளர்ந்து மோதவிட்டதே இந்திய ஆட்சியாளர்களும்.உளவுத்துறையும்தானென்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள். தமிழரின் போராட்டம் சிதைந்து போகாமல் தடுப்பதற்காக மற்றைய இயக்கங்களை தடை செய்வதைத் தவிர வேறு வழி புலிகளிற்கு இருந்திருக்கவில்லை.
(சகோதர படுகொலைகள் பற்றி சாத்திரி எழுதிய பதிவு.)
ராஜீவ் கொலையை புலிகள் ஏன் வெளிப்படையாக மறுக்கவில்லை?
ராஜீவ் கொலையில் அவிழக்கப்படாத பல மர்மமுடிச்சுக்கள் ஏராளம் உள்ளது. அவைகள் அவிழ்க்கப்படுவதை இந்தியாவில் உள்ள அரசியல் வாதிகளும் அதிகாரிகளுமே விரும்பமாட்டார்கள். அதனால்தான் புலிகளின் அழித்துவிடுவதன் மூலம் அத்தனை ஆயிரம் கேள்விகளிற்கும் ஒரே வரியில் பதிலை சொல்ல முனைகிறார்கள்.
ஈழத்தமிழர்கள் அனைவருமே புலிகளை ஆதரிக்கிறார்களா?
உண்மையான மானமுள்ள தமிழர் அனைவருமே புலிகளை ஆதரிக்கின்றார்கள் அது ஈழம். இந்தியா .என்றில்லை உலகம் முழுவதுமே ஆதரிக்கின்றார்கள்.
தனிஈழம் தவிர்த்த ஏதேனும் ஒன்று தமிழர் விடுதலையை தரக்கூடுமா? சமாதான பேச்சு வார்த்தை சரியான திசையில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் புலிகள் ஏற்றுக்கொண்டது தனிஈழம் தவிர்த்த ஏதோ ஒன்று தானே?
தமிழனிற்காக சிங்களம் ஒரு மயிரையேனும் தரத்தயாராய் இல்லையென்பதே உண்மை. எனவே தனித்தமிழீழம் ஒன்றுதான் தீர்வு. ஆனால் சமாதானப்பேச்சு வார்த்தை காலத்தில் புலிகள் தரப்பில் புற சுய நிர்ணய உரிமை (சமஸ்டி) அதாவது சமஸ்டி அரசாங்கம் அமைந்தபின்னர் ஒரு வாக்கெடுப்பில் தமிழர்தரப்பின் 90 வீதமான வாக்குகள் விழுந்தால் தனியாகப்பிரிந்து போகும் உரிமையுடனான தீர்வையே கேட்டனர். ஆனாலும் எதுவும் கிடைக்காது என்று தெரிந்திருந்தாலும், புலிகள் பேச்சு வார்த்தையை விரும்புவதில்லை சண்டையையே விரும்புகின்றனர் என்கிற சிறீலங்காவின் பரப்புரையை புலிகள் சர்வதேச சமூகத்தின் முன்னால் தகர்த்திருந்தாலும். சண்டையை மட்டுமே விரும்புகின்ற சிறீலங்காவை இந்தியா தாங்கிப்பிடித்துள்ளது மட்டுமல்ல அதுவே சர்வதேசத்தின் வாயையும் அடைத்துள்ளது.
தனிஈழம் தவிர்த்த ஒரு தீர்வு, இந்திய கூட்டமைப்பில் தமிழர் நிலை போன்ற ஒரு மிக பலவீனமான ஏற்பாடு தான் என்பதை எவ்வாறு விளக்குவீர்கள்.
1905 ம் ஆண்டில் இங்கிலாந்து அரசு காலத்தில் இருந்தே தமிழன் ஒவ்வொருவடிவங்களிலும் ஒவ்வொரு சட்டங்களிற்கமையவும் தனக்குரிய உரிமைகளை வன்முறையற்ற அனைத்து வடிவங்களிலும் கேட்டு கேட்டு களைத்து போனது மட்டுமல்ல எமது அத்தனை போராட்டங்களையும் ஆட்சியாளர்கள் வன்முறையை மட்டுமே கொண்டு அடக்கியதால்தான் தமிழனும் தானும் இனி எதிரியின் ஆயுதத்தையே பயன்படுத்தலாமென நினைத்து தனித்தமிழீழத்தில் மட்டுமே தமிழனால் சுதந்திரமாக வாழமுடியும் என்று முடிவெடுத்தும் வன்முறையை 70களில் கைகளில் எடுத்தான். இன்று தமிழகத்து நிலைமைகளும் ஈழத்தின் 70களின் காலத்தைத்தான் நினைவு படுத்துகின்றது
முஸ்லீம்களை அரவணைத்து செல்லாத புலிகள்; தமிழரை வெறுக்கும் சிங்களவர். -ஒப்பிடுங்கள்!
முஸ்லீம்களை புலிகள் அரவணைக்கவில்லையென்று ஒரேவரியில் மறுத்துவிட முடியாது.ஏனெனில் முஸ்லீம்கள் கிழக்கு மாகாணத்தில் இலங்கை இராணுவத்துடன் இணைந்து தமிழின அழிப்பினை தாராளமாகவே மேற்கொண்டனர்.ஜிகாத் அமைப்பினரால் பல கிராமங்களில் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டனர். வந்தாறு மூலை படுகொலைகள். கிழக்குப்பல் கலைக்களகப்படுகொலைகள். கொக்கட்டிச்சோலை என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அதே நேரம் யாழ்குடாவிலும் இலங்கையரசுடன் சேர்ந்து முஸ்லீம்களின் ஜிகாத் அமைப்பு புலிகள் மீதான தாக்குதலை நடாத்துவதற்கு பலசதித் திடட்டங்களைத்தீட்டியது அதில் பல முஸ்லீம்கள் புலிகளால் கைது செய்யப்பட்டனர்.அனாலும் அவர்களது பள்ளிவாசல் உலாமாக்களின் தலையீட்டினால் இனியொருதடைவை இப்படியான செயல்களில் ஈடுபடவேண்டாமென அன்றைய யாழ் மாவட்ட தளபதி கிட்டுவினால் எச்சரித்து விடுதலை செய்யப்பட்டனர். அதே நேரம் தமிழர்களிற்கும் முஸ்லீம்களிற்கும் பொதுஎதிரி சிங்களப்பேரினவாதம். அது முஸ்லீம்களை தமிழர்களுடன் மோதவிட்டு வேடிக்ககை பார்க்கின்றது.எனவே அதற்கு பலியாக வேண்டாமென தொடர்ச்சியாக பலபொதுக்கூட்டங்கள் வைத்தும் துண்டுப்பிரசுரங்கள் மூலமும் புலிகள் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்தனர். ஆனாலும் அவர்கள் தொர்ந்தும் இலங்கை இராணுவத்துடன் தொடர்ந்தும் சேர்ந்து இயங்கியது மட்டு மல்ல புலிகளை தாக்குவதற்காக கொண்டுவந்த ஆயுதங்களும் பிடிபட்ட நிலையில் தான் புலிகளின் நிருவாகப் பகுதிகளிலிருந்து முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டனர். அப்படி முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டிருக்காவிட்டால் அவர்களின் செய்கைகளினால் ஆத்திரமடைந்திருந்த தமிழ்மக்களிற்கும் மேதல் ஏற்பட்டு முஸ்லீம்களிற்கு பாதகமானதாகவே முடிந்திருக்கும். அடுத்ததாய் தமிழரை சிங்களவர்கள் வெறுப்பதற்கு காரணம் சிறீலங்கா அரசியல் வரலாற்றில் ஒவ்வொரு சிங்களத் தலைவரும் தாங்கள் சுலபமாய் ஆட்சியைப் பிடிப்பதற்கு சிங்கள மக்களின் பொருளாதாரம் பற்றியோ நாட்டை வளம் படுத்துவது பற்றியோ பேசியதில்லை. இனவாதத்தினையே பேசி சுலபமாய் ஆட்சியை பிடித்துவந்துள்ளதே வரலாறாகும். அவர்கள் பேசிய இனவாதம் இன்று ஒவ்வொரு சிங்களவர் மனதிலும் ஆழமாய் பதிந்து விட்டது. இன்று தங்களிற்கு இரண்டு கண்ணும் போனாலும் பரவாயில்லை தமிழனிற்கு ஒரு கண்ணாவது போகவேண்டும் என்று நினைக்கின்ற நிலைமைக்கு சிங்கள மக்ளை ஆட்சியாளர்கள் கொண்டுவந்து விட்டனர். ஆனால் அதன் மோசமான விழைவுகளை ஆட்சியளர்களை விட சாதாரண சிங்கள மக்களே அனுபவிக்கின்றனர்.ஆனால் அவர்கள் அதனை புரிந்து கொள்வார்கள் என்கிற நம்பிக்கை எனக்கில்லை.
தாழ்த்தப் பட்டவர்களின் நிலைமை தமிழகத்தை விட ஈழத்தில் மோசம் என்பது உண்மையா?
80களிற்கு முன்னர் இரட்டை குவளை முறை. கோயில்களின் உள்ளே அனுமதி மறுப்பு, பொது இடங்களில் அவமதிப்பு என்று தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மேசமானதாகவே இருந்ததை மறுக்கமுடியாது.புலிகள் ஆயுதப்போராட்டத்தை எப்படி தீவிரப்படுத்தினார்களோ அதேபோல சாதிய விடயங்களையும் இரும்புக்கரம் கொண்டே அடக்கினார்கள். அவர்களது நிருவாகம் நடந்த பகுதிகளில் சாதியம் முற்று முழுதாகவே ஒழிக்கப்பட்டிருந்ததுஎன்பது உண்மை. ஏனெனில் அவர்கள் நிருவாகம் நடாத்திய காலங்களில் ஒரு சாதிய சண்டையுமே நடைபெறவில்லையென்பதும் சாதியின் பெயரால் எவரும் ஒதக்கப்படவில்லையென்பதுமே அதற்கு உதாரணமாகும்.
மக்கள் இல்லாத பகுதிகளை கைவிட்டு மக்களடர்ந்த பகுதியில் புலிகள் போரிடவேண்டிய நிலைமை / காரணம் என்ன?
அதாவது மக்களை புலிகள் கேடயமாகப் பயன்படுத்துகிறார்களா என்பதுதானே உங்கள் கேள்வி. இதுவரை காலமும் நடந்த யுத்தத்தில் மக்கள் கொல்லப்பட்டதாக வெளிவந்த செய்திகளில் அல்லது காணொளிகளில், படங்களில் மக்களுடன் சேர்த்து புலிகளும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏதாவது இருந்தால் உங்கள் கேள்விக்கு பதில் சொல்லாம். அதுமட்டுமல்ல யுத்த களத்தில் நிற்கும் செஞ்சிலுவை சங்கமே அப்படியானதொரு செய்தியையோ ஆதாரங்களையோ வெளியிடவில்லை. இவை தமிழர்கள் மீதான கொலையை இலங்கையரசு நியாயப்படுத்துவதற்கான ஒரு பிரச்சாரமேதான்.
வலைவுலகம் மற்றும் குறைந்த எண்ணிக்கையிலான அச்சு ஊடகங்கள் போன்றவற்றில் இருக்கும் ஈழ ஆதரவு போதுமானதாக உள்ளதா? தமிழகத்தில் இன்னும் ஈழ விழிப்புணர்வு அற்றவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்!
தமிழகத்தினை பொறுத்தவரை வலையுலகத்தில் அக்கறையாக ஈழம்பற்றி அறிந்துகொள்பவர்கள் எத்தனைவீதம் எனத்தெரியாது. ஆனால் அச்சு ஊடகம் என்று பார்த்தால் அது ஒரு குறிப்பிட்ட ஒரு பிரிவினரின் பிடியிலேயே உள்ளது. தமிழனை தமிழில் சிந்திக்கவிடக்கூடாதென்பதே அவர்களது முதல் நோக்கம்.இல்லா விட்டால் தமிழன் தமிழில் வழிபாடு செய்வதற்கும். தமிழ்நாட்டில் தமிழன் தமிழில் கல்வி கற்பதற்காகவும் போராடவேண்டிய நிலை வந்திருக்குமா? இந்த உலகத்தில் எந்த ஒரு சுதந்திர நாட்டிலாவது ஒரு இனம் தன்னுடைய மொழியில் வழிபாடு செய்யவும் தன்னுடைய மொழியில் கல்வி கற்கவும் பேராட்டம் நடாத்தியிருக்கின்றதா? இப்படி தமிழ் நாட்டிலேயே தமிழன் தான் என்ன நிலையில் இருக்கிறானென்று தெரியாத நிலையில். தமிழ்நாட்டு தமிழனிடம் ஈழத்தமிழனின் போராட்டத்தைப்பற்றி என்ன அறிந்து வைத்திருக்கின்றாயென்று கேட்க முடியுமா?
நீங்கள் வாழும் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு எத்தகையது? புலம் பெயர் தமிழர்களையும் அவர்களின் பங்களிப்பையும் குறிப்பிடுங்கள்.
நான் வாழும் பிரான்ஸ் நாட்டில் வாழும் தமிழர்களிடம் ஈழ ஆதரவு எவ்வளவு தூரம் உள்ளதென்று நான் சொல்லத்தேவையில்லை இங்கு நடக்கும் ஈழத்திற்கு ஆதரவான போராட்டங்கள் பற்றிய செய்திகளே போதும். அவர்கள் தங்கள் உறவுகளின் துயர் துடைக்கவும் போராத்தினை தொடர்ந்து நடாத்தவும் அனைத்து உதவிகளையும் வழங்கிக் கொண்டுதானிருக்கின்றார்கள். ஆனால் எதிரிக்கு விலைபோய் தமிழினத்திற்கு எதிராக செயற்படும் ஒருசிலரும் இருக்கத்தான் செய்கின்றனர். வரலாறு என்பது உண்மையான வீரத்தை மட்டுமல்ல கோழைத்தனமான துரோகங்களையும் பதிவு செய்துகொண்டுதானே போய்க்கொண்டிருக்கின்றது.அந்த துரோகப் பக்கங்கள் அவர்களது பெயர்களையும் பதிவுசெய்துகொண்டு போய் நாளைய எமது சந்ததிகளின் கைகளில் படிக்கக் கொடுக்கும்.
உங்கள் முழுப்பெயர், சொந்த ஊர், வாழிடம், குடும்பம் மற்றும் முக்கிய பணி கூறுங்கள்.
நான் சாத்திரி என்கிற புனைபெயரில் பத்திரிகைகள் மற்றும் இணையத்தளங்களில் எழுதிவந்தாலும் சொந்தப் பெயர் சிறி ஈழத்தில் மானிப்பாய்க் கிராமத்தை சேர்ந்தவன். தற்சமயம் பிரான்சில் வசித்து வருகிறேன்.
நன்றி!...
http://mohankandasami.blogspot.com/2009/03/blog-post.html
"நகர்ந்து கொண்டிருப்பதே...... நதி!
இயங்கிக் கொண்டிருப்பவனே..... இளைஞன்!"
www.beyouths.co.cc
e m@il: beyouths@yahoo.com
இமெயில் குழுவில் இணைய...
உங்கள் அன்புக்கு நன்றி!
Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
ஊடகங்கள் அணிய வேண்டிய கண்ணாடிகள்!!!
22. mars 2009 18:22:39
Til: beyouths groups (beyouths@yahoogroups.com); agathee2007@gmail.com; thamizhoviya (oviyathamizh@gmail.com)
ஊடகங்கள் அணிய வேண்டிய கண்ணாடிகள்
(சென்னை பல்கலைக்கழகம் - மக்கள் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறை 16-3-2009 அன்று நடத்திய மா. சிங்காரவேலர் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவுக் கருத்தரங்கில் தமிழக ஊடகங்கள் மார்க்சியப் பார்வை என்ற தலைப்பில் சு.பொ. அகத்தியலிங்கம் ஆற்றிய உரை)
கருத்தரங்கின் தலைவர் அவர்களே! மேடையிலே வீற்றிருக்கும் மேனாள் துணைவேந்தர் ஜெகதீசன் அவர்களே! புலவர் ப.வீரமணி அவர்களே! ஊடகத்துறை பேராசிரியர்களே! மாணவ கண்மணிகளே! அனைவருக்கும் வணக்கம்.
தலைமையேற்று உரையாற்றிய துறைத்தலைவர் கோ.ரவீந்திரன் அவர்கள் வடசென்னையை பற்றிக் குறிப்பிட்டார். பிஅண்ட்சி மில் பற்றி குறிப்பிட்டார். வடசென்னை பின் தங்கியிருப்பது பற்றி குறிப்பிட்டார். ஊடக மாணவர்கள் வடசென்னையை பயில வேண்டும் என்றார். இது என்னுள் நச்சென பதிந்துவிட்டது அதையொட்டி சில கேள்விகளோடு என் உரையைத் துவங்க விழைகிறேன்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் பணியாற்றிய பி அன்ட் சி மில் மூடிக்கிடக்கிறது. அதைப்பார்க்கிற போதெல்லாம் பத்தாயிரம் தொழிலாளர் வாழ்வை புதைத்த சமாதியாகவே எனக்கும் தோன்றுகிறது. அதுபோல் மெட்டல் பாக்ஸ், டன்லப், ஸ்டான்டர்ட் மோட்டார் (இத்தொழிற்சாலை வடசென்னை அல்ல எனினும் ) உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் ஒரு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். மக்கள் துணி கட்டுவதை நிறுத்தி விட்டார்களா? பின் ஏன் பி அன்ட் சி மில் மூடப்பட்டது. மக்கள் டப்பாக்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்களா? பின் ஏன் மெட்டல் பாக்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டது. டயர்கள், கார்களின் தேவை முடிந்து விட்டதா? பின் ஏன் டன்லப்பும், ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனமும் மூடப்பட்டது?
இந்த முதலாளிகள் திவாலாகி விட்டார்களா? இல்லை வேறு தொழிலில் கொழுக்கிறார்கள். ஆனால் அதில் பணியாற்றிய தொழிலாளிகள் சட்டப்படி பெற வேண்டியதைப் கூட பெறமுடியால் தெருவில்நிற்கிறார்கள். இது குறித்து எந்த ஊடகம் கவலைப்பட்டது? எதை எதையே புலனாய்வு செய்யும் புலிகள் உழைப்பாளிகள் வாழ்வு எப்படி சூறையாடப்பட்டது என்று எப்போதாவது புலனாய்வு செய்தார்களா?
அந்த முதலாளிகள் தரும் விளம்பரத்தில் பிழைக்கும் ஏடுகள்! ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார, சமூக பண்பாட்டு விழைவுகளை ஆய்வு செய்யுமா? புலனாய்வு செய்யுமா? செய்யாது? ஏன் பல்கலைக் கழகங்கள் கூட இது குறித்து ஆய்வு நடத்த மாணவர்களை நெறிப்படுத்த தயார் இல்லையே?
இந்த கேள்விகளின் கனத்தோடு நான் உரைக்குச் செல்கிறேன்.
தேநீர் கடைகளில்
ஊடகங்கள் இல்லாத உலகை இன்றைக்கு கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. நவீன வாழ்வில் ஊடகங்கள் இரண்டறக் கலந்து விட்டன என்பது மிகையல்ல. உண்மை.
தினத்தந்தியோ தினகரனோ அல்லது வேறு ஏதேனும் ஒரு செய்திப் பத்திரிகையோ இல்லாத ஒரு முடிதிருத்தும் நிலையத்தையோ தேநீர் கடையையோ தமிழ்நாட்டில் நீங்கள் காட்ட இயலுமா? தினந்தந்தி பற்றி எத்தகைய கருத்து இருப்பினும் அது தனி. ஆனால் சாதாரண மக்களுக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிய பெருமை தினந்தந்தியையே சாரும்.
மக்களின் எழுத்தறிவு வளர்ச்சியோடு பத்திரிகையின் விற்பனை பெருகுவதும்; நாள்தோறும் பல்வேறு ஊடகங்கள் பல்கிப் பெருகுவதும் நாமறியாததல்ல. இவ்வளவுக்குப் பிறகும் 1000 பேருக்கு 70 பேர் தான் செய்திப்பத்திரிகைகள் படிப்பவர்கள் என்பதும், இதிலும் பெண்கள் விழுக்காடு மிகப்பரிதாபகரமானது என்பதும் வருத்தமான தகவல்தான். எனினும் சரிபாதி வாசகர்கள் கிராமப்புற மக்கள் என்கிற செய்தி சற்றே ஆறுதலானது.
இன்று ஊடகங்கள் என்பது வெறுமே தின, வார, மாத, பருவ ஏடுகளோடு அடங்கி விடுவதல்ல. தொலைக்காட்சியும் கைபேசியும் வந்தபின்னர் உலகம் ரொம்பவே மாறிப்போய்விட்டது.
வெகுஜன ஊடகங்களின் பிறப்பு
வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் மன்னராட்சி காலத்தில் அவர்களின் தேவைக்கு ஏற்ப “கீழ்படிதலும் விசுவாசமும் உள்ள குடிமக்களை” உருவாக்க “நீதிநெறி போதனைகள்” தாம் முன் நின்றன; அதற்கும் மேல் ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வப்போது முரசறைந்து மக்களுக்கு சேதி சொல்லுதலே ஊடகமாக இருந்தது. எப்போதும் ஆளும் வர்க்கச் சிந்தனையை சமூகத்தின் பொது புத்தியாக்கிடவே பிரச்சார உத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கேற்பவே ஊடகங்கள் வடிவம் பெற்றன.
மக்களாட்சியின் தோற்றத்தோடுதான் இன்றைய வெகுஜன ஊடகங்களும் பிறந்தன. “ஊடகம் வெகுஜன ஊடகமாக மாறியதன் வரலாறு முதலாளித்துவம், ஜனநாயகம், அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குடன் பின்னிப் பிணைந்ததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலப்பிரபுத்துவத்திற்கும் மன்னராட்சிக்கும் எதிராக வெடித்த புரட்சிக் கனவிலிருந்துதான் முதலாளித்துவம் உயிர்த்தெழுந்தது. அதற்குமுன் அரசுவைகளிலும், மந்திராலோசனைக் கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை இல்லை என்ற ஆளும் வர்க்க அகங்காரம் நொறுங்கிய நேரம் அது. ஆளுபவர்கள் மக்களை அணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தை மக்களே உருவாக்கி விட்டிருந்தபடியால் அவர்களைச் சென்றடைய ஊடகம் தேவைப்பட்டது. இந்தத் தேவையை அறிவியல் வளர்ச்சி பூர்த்தி செய்தது” என்கிறார் ஆர். விஜய் சங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்.7)
பலரிடமிருந்து பலருக்கு...
அச்சு ஊடகம் என்ற கட்டத்தை தாண்டி டிஜிட்டல் உலகில் வேகமாக பயணிக்கிறோம். இணையதளமும், கைபேசிகளும், நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் கருவிகளும் தொலைக்காட்சியும் இதர மின்னணு ஊடகங்களும் விதைத்துள்ள பெரிய வாய்ப்பும் வலிமையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதுமட்டுமல்ல பழைய உலகில் தகவல் தொடர்பு என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, ஒருவரிடமிருந்து பலருக்கு பரவியது; புதிய உலகில் தகவல் தொடர்பு என்பது பலரிடமிருந்து பலருக்கு ஒரே நேரத்தில் பரவுகிறது. ஆக இன்றைய ஊடகங்களின் வீச்சும் வேகமும் நம்மை வியக்க வைக்கிறது.
இந்த வலிமைமிக்க ஊடகங்கள் எதைச் செய்கின்றன? எதைச் செய்ய வேண்டும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய கருத்தரங்கின் மைய இழை என நான் கருதுகிறேன்
நாம் தமிழ்நாட்டு ஊடகங்களைச் சுற்றியே பேசப்போவதால் அதன் தொடக்கம் குறித்து சில செய்திகளைக் கூறியாக வேண்டும்.
நமது பாரம்பரிய வேர்
“இந்திய விடுதலைக் கிளர்ச்சியும் தமிழ்ப்பத்திரிகைத் துறையும் இணைந்தே வளர்ந்தன. ஆம், ஏனெனில் அவை இரட்டைக் குழந்தைகள் என்பார் ம.பொ.சி. “அடக்குமுறைகளை தாங்கிக்கொண்டோ - எதிர்த்துக்கொண்டோ - பார்த்துக்கொண்டோ இந்திய இதழ்கள் வளர்ச்சி அடைந்தன. பூனை இருக்கும் வீட்டில் எலியும் போராட்டத்திற்கு இடையே குடும்பம் நடத்தி குட்டிகள் போடுவது போல” என க. திரவியம் `தமிழ் வளர்த்த தேசியம்’ எனும் நூலில் குறிப்பிடுவார்.
ஆக, இந்திய ஊடகங்கள் விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்தைக் கொண்டவை. குறிப்பாக பத்திரிகைகளுக்கு அது நூற்றுக்கு நூறு உண்மை. இதர மின்னணு, ஊடகங்கள் சமீபத்தில் தோன்றினாலும் இன்னும் அந்தப் பாரம்பரிய வாசம் கொஞ்சம் இருக்கிறது. அதென்ன பாரம்பரிய வாசம்? “பாஷாபிமானம், சமயாபிமானம், தேசாபிமானம்” என அந்த நாட்களில் கூறுவர். அதாவது மொழிப்பற்று, மதப்பற்று, தேசப்பற்று இவையே இந்தியப் பத்திரிகைகளின் துவக்க காலப் பார்வையாக இருந்தது என்பார், இதழியல் குறித்து பல நூல்கள் எழுதிய அ.ம. சாமி, “ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்றுசேர்க்கும் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்” என்றே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் புகழ்ந்துரைப்பார். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்று உண்டு. “தமிழகத்தில் இதேகால கட்டத்தில் இதற்கு இணையாக சமூக சீர்திருத்த பார்வையும் வலுவாக தடம் பதிக்கத் துவங்கிவிட்டது” என்பதும், “பொதுவுடமை சிந்தனை ஊடகங்களில் தலைகாட்டத் துவங்கிவிட்டது” என்பதும்தான் அது.
“தேசியம் வளர்த்த இதழியல்”, “திராவிடம் வளர்த்த இதழியல்”, “பொதுவுடமை வளர்த்த இதழியல்” என தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்த மூன்று போக்குகளும் தமிழக ஊடகத் துறையில் அழுத்தமான தடங்களை பதித்துள்ளன என்பதை நாம் ஆழமாக மனதில் பதியவைக்க வேண்டும்.
(உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக்கனார் நினைவு அறக்கட்டளையும் இணைந்து இந்த ஆய்வுகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது)
அந்த பாரம்பரியத்தின் தொடர் கண்ணிகள் தமிழக ஊடகத்துறையில் முற்றாக அறுந்துவிடவில்லை. எனவேதான், “தமிழக ஊடகத் துறை “சில தனித்த போக்குகளும்”, “இன்றைய உலக-தேசிய ஊடகத் துறையின் பொதுப்போக்குகளும்” இணைந்த கலவையாக காட்சி அளிக்கிறது.
கட்டளையிடும் எஜமானனாக
“வெகுஜன ஊடகங்கள் மக்களுக்குத் தொடர்ந்து செய்தி சொல்கின்றன. அவர்களுக்கு கேளிக்கையும் அளிக்கின்றன. அவற்றைப் படிக்கும் அல்லது பார்க்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நடத்தை முறைகளையும் விதைத்து சமூகத்தின் நிறுவனங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு இயங்குவதற்கான தகுதியுடையவர்களாக்குகின்றன. சொத்துக்கள் ஒரு பக்கம் குவிந்துள்ள, பெரும் வர்த்தக மோதல்களைக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்துடன் இயைந்து செல்லக்கூடியவர்களாக மக்களை உருவாக்க முயற்சிக்கின்றன. இவை தம்மிடையே போட்டியிட்டுக்கொண்டு அரசாங்க மற்றும் தனியார் ஊழல்களையும் அக்கிரமங்களையும் அம்பலப்படுத்தி பேச்சுரிமைக்கும் பொது நலனுக்கும் குரல் கொடுப்பதுபோல் தோன்றினாலும் அவை இந்த அமைப்புக்கு எதிராக மக்களைத் திருப்பும் அளவுக்குத் செல்லாமல் அடக்கியே வாசிக்கின்றன. என ஆர். விஜயசங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்4) வலுவாக வாதிடுகிறார். அமெரிக்க சிந்தனையாளர்களான எட்வர்ட் ஹெர்மன் மற்றும் நோம் சோம்°கி இவர்களை மேற்கோள் காட்டி, அவர்கள் எழுதிய “பொதுப்புத்தியில் கருத்து ஒப்புதலை உருவாக்குதல்” (ஆயரேகயஉவரசiபே ஊடிளேநவே) என்ற நூலை அடியொற்றி இவ்வாறு வாதிடுகிறார்.
நாம் எதை நம்ப வேண்டும்? எதை சந்தேகிக்க வேண்டும்? எதை நேசிக்க வேண்டும்? எதை வெறுக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எதை யோசிக்க வேண்டும்? எதை ரசிக்க வேண்டும்? எதை வாங்க வேண்டும்? எங்கு வாங்க வேண்டும்? எப்படி வாங்க வேண்டும்? எதை உண்ண வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? என நம் வாழ்வின் சகல அம்சங்களையும் அ முதல் ஃ வரை கட்டளையிடுகிற எஜமானனாக இன்றைய ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லவா?
ஒவ்வொரு மனிதனின் கருத்தையும் செதுக்குவதில் மீடியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன; உண்மையில் தனி மனிதனின் - சமூகத்தின் கருத்தை வடிவமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிப்பதை அமெரிக்க அறிஞர் நாம் சோம்°கி அவர் பாணியில் சொன்னாரென்றால்; தமிழகத்தில் தந்தை பெரியார் அவருடைய மொழியில் சொன்னார். “உலகம் உயர்ந்தோர் மாட்டே என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்னைப் பொறுத்தவரை உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பார்.
கட்சி சார்பு ஏடுகள்
அந்தத் தெளிவு தமிழக ஊடகங்களுக்கு ஆதிமுதலே இருப்பதை அறியலாம். மற்ற எந்த மாநிலங்களையும் விட பகிரங்கமாகக் கட்சி சார்பாக ஏடுகளும், தொலைக்காட்சிகளும் செயல்படுவது தமிழ்நாட்டில்தான் அதிகம்.
முரசொலி, நமது எம்ஜிஆர், விடுதலை, தீக்கதிர், ஜனசக்தி, தமிழோசை ஆகிய தின ஏடுகளும், ஜெயா டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி, சன் டிவி என கட்சி சார்பு தொலைக்காட்சிகளும், கட்சி சார்பு வார, மாத, பருவ, இலக்கிய ஏடுகளும் பலப்பல. இதனால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
கட்சி சார்பாக இருப்பதால் அதற்கேற்ப சில சமூகப் பொறுப்புகள் அவற்றுக்கு கட்டாயமாகின்றன. அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளடக்கத்தை பளிச்சென புரிந்துகொள்வது மிக எளிது. இது நல்ல அம்சம். ஆனால் கட்சி சார்பாக செயல்படுவதால் அதன் அனைத்து அம்சங்களையும் கட்சிக் கண்ணோட்டத்தில் வாசகர்கள் விருப்பு வெறுப்போடு எடைபோடுவதும் இயல்பாகிவிடும். ஆபத்தும் உண்டு.
கட்சி சாராத பிற ஏடுகள் நடுநிலை ஏடுகளாக கூறிக் கொள்கின்றன. சாராம்சத்தில் அப்படியாக உள்ளனவா? - இது அடிப்படையான கேள்வி.
மாமேதை காரல் மார்க்° கூறுவார்; “உற்பத்தி சாதனங்களையும் உற்பத்தி நடவடிக்கைகளையும கட்டுப்படுத்துகிற அதிகார வர்க்கம் அதே நேரத்தில் அறிவு ரீதியான உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே அறிவு ரீதியான உற்பத்தி சாதனங்கள் பெற்றிராதவர் பெற்றிருப்பவர்களின் கருத்துக்கு இலக்காகிறார்”.
கட்டுப்படுத்தும் காரணிகள்
பச்சையாகச் சொல்லப்போனால் என்னதான் நடுநிலைமை, நேர்மை, பத்திரிகை சுதந்திரம் என்றெல்லாம் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் இறுதியில் சுரண்டும் வர்க்க நலன் காப்பதில்தான் போய் முடியும். வர்க்க சமூகத்தின் இயல்பு அதுதான்.
விடுதலைப்போராட்ட காலம்போன்றோ அல்லது 60களைப் போன்றோ பத்திரிகை துவங்குவது இன்று அவ்வளவு மலிவல்ல. அப்போதெல்லாம் குறைந்த முதலீட்டில் ஏடுகள் தொடங்கி சில ஆயிரம் பிரதிகள் விற்றால் போதும். அப்போதும் நட்டம் இருக்கும். ஆயினும் தனி நபரோ அல்லது சிலர் கூட்டாகவோ லட்சிய நோக்கில் தாங்கிக்கொள்ள முடியும். (உ.ம். திராவிட இயக்க ஏடுகள், பொதுவுடமை ஏடுகள்) அப்படி செய்யவும் செய்தன. ஆனால் இன்று பெரும் பொருட் செலவு மிக்கது ஊடகத்துறை. அச்சு ஊடகமாயினும் மின்னணு ஊடகமாயினும் இதுதான் நிலை. எனவே பெரும் வருவாய் ஈட்டாமல் ஊடகத்தை தொடர முடியாது. வருவாய்க்கு விற்பனை மட்டும் போதாது. விளம்பரமின்றி ஊடகங்கள் இன்று வாழாது.
எனவே இன்று ஊடகங்களை கட்டுப்படுத்துகிற காரணங்களில் 1) `ஊடக முதலாளிகளை’ அடுத்து 2) `விளம்பரங்கள்’ முக்கிய பங்கு வகிக்கின்றன. 3) வர்த்தகம் சுமூகமாக நடந்திட `எதிர்வினைகள்’ பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. 4) அரசு மற்றும் ஏகபோக, பன்னாட்டு நிறுவனங்களின் நிபுணர்கள் யோசனையை கேட்க வேண்டியுள்ளது. இந்த நான்கு காரணிகளுக்கும் அடிநாதமாக சில சில்லறை கண்துடைப்பு நடவடிக்கைகளுடன் இந்த சமூகத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்து அடிநீரோட்டமாக இயக்கும். இதன் பொருள் `கம்யூனிச எதிர்ப்பு’ என்பது இதன் மையமாக இருக்கும் என நோம் சோம்°கி சுட்டிக்காட்டுகிறார்.
எல்லாத் தத்துவங்களும் உலகை அதன் துன்ப துயரங்களை வியாக்கியானம் செய்வதோடு நின்றுவிடும். அதுவரை சுரண்டும் வர்க்கத்துக்கு ஆபத்து இல்லை. ஆனால் அதை மாற்ற முற்படும் போதுதான் பிரச்சனை. அதற்குரிய தத்துவம்தான் மார்க்சியம். ஆகவேதான் மார்க்சிய தத்துவம் - கம்யூனிச தத்துவம் சுரண்டல் வர்க்கத்துக்கு எதிராக இருப்பதால் இதனை முடிந்தவரை அடக்கிவைப்பதே ஊடகங்களின் தலையாயப் பணி. தமிழக ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமிழக ஊடகங்களின் “சமூகப் பொறுப்பும்”, “அறிவியல் நோக்கும்” பெரும் கேள்விக்குறியாகி வருகின்றது.
நான்கு நோக்கங்கள்
ஆங்கிலத்தில் ஊடகங்களின் நோக்கமாக நான்கைக் கூறுவார்கள். (1) தகவல் தெரிவித்தல்
(2) பயிற்றுவித்தல் (3) விழிப்புணர்வூட்டல் (4) பொழுதுபோக்கு. இதில் `கடைசி’ அம்சம் தமிழ் ஊடகத்துறையில் முதலிடம் வகிக்கிறது. தகவல் தெரிவித்தல் ஓரளவு நடைபெறுகிறது. (அதிலும் வர்க்க சார்பு உண்டு) மற்ற இரண்டிலும் பெரும் பள்ளம் நிலவுகிறது.
இவை தவிர ருவடைவைல ஏயடரந என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிற `பயன் மதிப்பு’ இன்றைய ஊடக நுகர்வு கலாச்சாரத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. அதில் தமிழ் ஊடகங்கள் வர்த்தக நோக்கிலும், விளம்பர நோக்கிலும் செய்தாலும் அதில் ஆர்வம் காட்டுகிறது. உதாரணமாக 10ம் வகுப்பு வினா-விடை, பிள° 2 வினாவிடை, வேலைவாய்ப்புச் செய்திகள் பயிற்சிகள், கணினி தகவல்கள் பயிற்சிகள், மருத்துவ யோசனைகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் என பலவற்றில் ஏறத்தாழ எல்லா ஊடகங்களும் ஈடுபடுகின்றன. அவற்றின் தரம் மற்றும் அறிவியல் அணுகுமுறை இவற்றில் குறைபாடுகள் நிரம்பவே உண்டு. எனினும் இம்முயற்சிகளை பொதுவில் வரவேற்க வேண்டும்.
தகவல் தருவதில் அதாவது செய்திகள் அளிப்பதில் ஊடகங்களுக்கு இடையே கடும் போட்டியே நிலவுகிறது. எனினும் தகவல்களை / செய்திகளை வடிகட்டி தங்கள் வர்க்க சார்பை அவை காட்டிக்கொள்கின்றன.
பெரியார் பிறந்த மண்ணில்
கூடுதல் கவலை என்னவெனில் பெரியார் பிறந்த மண்ணில் சிங்காரவேலர் பிறந்த மண்ணில் பகுத்தறிவிற்கு கொள்ளி வைக்கிற காரியங்களை ஊடகங்கள் காலை முதல் இரவுவரை செய்கிறது என்பதுதான். சோதிடம், பேய், மந்திரம், வாஸ்து என சகல மூட நம்பிக்கைகளும் நவீன அறிவியலைப் பயன்படுத்திக் கொண்டு வேகமாகச் செய்யப்படுகிறது ஜோதிட ஏடுகள் பல்கிப் பெருவது கவலை அளிக்கிறது. பிள்ளையார் பால் குடிக்கிறார், மேரி மாதா ரத்தக்கண்ணீர் வடிக்கிறார், பேய் நடமாடுகிறது என பலவற்றை தொலை காட்சியும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு தரும். ஆனால் அவை அறிவியல் ரீதியாக அம்பலப்படும்போது மவுனம் சாதிக்கும். ஏன் இந்த அநீதி? அன்றாடம் பார்க்கிற அனுபவிக்கிற இதற்கு விளக்கம் தேவையா? சேது சமுத்திர திட்டம் முடங்கிப் போனது. தமிழகத்தில் நியாயமாக எழ வேண்டிய கோபம் - அறிவுபூர்வமான விழிப்புணர்வு ஏற்பட்டதா? ஊடகங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவா நடந்தன? உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
ஜோதிட ஏடுகள் மலிந்துள்ளன அது மட்டுமல்ல மக்களின் ஜோதிட நம்பிக்கைகுள் புகுந்து மதவெறி பிரசாரமும் நடக்கிறது. உதாரணமாக குமுதம் ஜோதிடம் இதழில் ஒரு இஸ்லாமியராக மாறிய சகோதரியின் கேள்விக்கு பதில் அளித்த ராஜகோபால் அவர்கள், இந்துக்கள் கண்ணாக மதிக்கும் பசுவின் மாமிசத்தை உங்கள் கணவர் உண்பதால் தான் உங்கள் குழந்தைக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்கள் கணவரை அந்த பழக்கத்தில இருந்து மீட்டுடெத்தால் உங்கள் குழந்தையின் பார்வை சரியாகும் என்று பதில் அளித்ததன் மூலம் ஒரு வகையில் இந்துத்துவ மதவெறியர்களின் பசுவதை எதிர்ப்பு என்கிற கருத்தை திணிக்கிறார். மருத்துவ விஞ்ஞானத்தை மறைமுகமாக நிராகரிக்கிறார்கள்.
அது மட்டுமா கிரகப் பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் என்பதன் வாயிலாக அர்த்தம் புரியாமல் சமஸ்கிருத ஸ்லோகங்களை மன்னம் செய்ய வழிகாட்டுகின்றன. அதன் மூலம் தெய்வீக சக்தி தமிழுக்கு கிடையாது என்றும் சமஸ்கிரதத்துக்குத் தான் தெய்வீக சக்தி உண்டென்றும் மக்களை நம்பச் செய்கின்றனர்.
மேல் வர்க்க....மேல் வர்ண
ஊடகங்கள் தொலைத்துவிட்ட ஒன்று தலித் பார்வை . உத்தபுரம் `தீண்டாமை சுவர்’ இடிக்கப்பட்டது என்பதைக்கூட எழுத /கூற தமிழ் ஊடகங்கள் தயங்கின. ஆனால் மேல்சாதியினர் மலையேறியதுதான் செய்தி. “தலித் மக்களின் சிறப்புகூறு திட்டம்” தமிழகத்தில் செயலிழந்து நிற்பதை பற்றி எந்த ஊடகம் கவலைப்படுகிறது? தீண்டாமை இன்று நிலவுவதை புலனாய்வு செய்து எந்த ஏடு வெளியிட்டது? சிலைகள் அவமதிக்கப்படுகிறபோது பரபரப்பு செய்தி தருகிற ஏடுகள்; நூற்றாண்டாய் அங்கு புரையோடிப் போயிருக்கிற சாதி ஆதிக்கம் குறித்து கனத்த மவுனம் சாதிப்பது ஏன்? இட ஒதுக்கீடு சட்டம் வந்தபோது எதிர்த்தும் ஆதரித்தும் சூடாக செய்தி விற்பனை செய்யும் ஊடகங்கள் அந்த இட ஒதுக்கீடு அமலாகாத இருட்டுப்பகுதிகளை பற்றிய அறிக்கைகளை ஆய்வுகளை இருட்டடிப்பு செய்வது ஏன்? ஊடகங்கள் இன்னும் “மேல் வர்க்க மேல்வர்ண” ஆதிக்கத்தில்தான் உள்ளது என சாய்நாத் ஆய்ந்து எழுதியது உண்மையே! தமிழ்நாட்டில் தங்களை மேல்நிலையாக்கிக் கொண்டு தன் சொந்த வர்க்கத்திற்கும் சொந்த வர்ணத்திற்கும் துரோகம் செய்கிற ஊடக நிறுவன முதலாளிகளுடன் அப்படி தான் என்பது கூடுதல் வேதனை. புலனாய்வு ஊடகங்கள் இந்த சமூக பிரச்சனை குறித்து காட்டிய அக்கறை என்ன?
பெண் நிலை/ பெண் மொழி
பெண்கள் பற்றிய பார்வையில் தமிழக ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊனம் மன்னிக்க முடியாதது. அதுவும் வேறு யாரையும் விட உரக்கவும் வெளிப்படையாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை பேசிய பெரியார் பிறந்த மண்ணில் பெண்களுக்கு ஊடகங்கள் செய்யும் தீங்கு அதிகம். மிக அதிகம். மகளிர் தினத்தன்று எங்கோ குடிக்கிற ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு இதுதான் மகளிர் உரிமை என்று ஏகடியம் பேசுகிற அளவுக்கு ஒரு ஏட்டுக்கு தலைக்கொழுப்பு உச்சத்தில் இருந்தது. பிற ஏடுகளும் சடங்காக சில செய்திகளை வெளியிடுவதைத் தவிர வேறு என்ன செய்தன? பொதுவாக மொழி என்பது வரலாற்று ரீதியாக ஆதிக்க சக்திகளாலும், ஆண்களால் கட்டமைக்கப்பட்டது. ஆகவே `பெண்கள் மொழி, ஒடுக்கப்பட்டவர் மொழி’ என மொழியின் கட்டமைப்பிலேயே ஜனநாயகப்படுத்தல் தேவைப்படுகிறது என உணரும் காலம் இது.
ஆனால் தமிழக செய்தி ஏடுகளில் அந்த `பெண் மொழி’ இல்லை. ஆண் மொழி மட்டுமல்ல ஆதிக்க மொழியுமே கோலோச்சுகிறது. கிரைம் செய்திகளில் இதைத்தூக்கலாகக் காணலாம். பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் கொடுமை சர்வ சாதாரணம். போலீ° மொழிதான் செய்தி ஏடுகளுடையதாகவும் இருப்பதைப் பார்க்கலாம். `குஷ்பு பேச்சு தொடர்பான விவாதத்தில் உணர்ச்சி கொம்பு சீவப்பட்டதே தவிர அறிவுபூர்வமான விவாதம் நடத்தப்படவே இல்லை. ஆணுறை வியாபாரிகள் தங்கள் விற்பனைக்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வே (அதுவே இட்டுக்கட்டப்பட்டது என்பதே உண்மை) அதையொட்டி நடிகைகள் பேட்டி என்பது வியாபார யுக்தி. ஆனால் பெரியார் பூமியில் பெண் விடுதலை சார்ந்து விவாதம் நடந்ததா? அல்லது `கட்டுப்பாடற்ற பாலுறவு’ மற்றும் `கட்டுப்பெட்டியான பஞ்சாங்கப் பெண்’ என இரு கோடிகளுக்கு இடையே விவாதம் அனல் பறந்ததா? உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
கே° விலை கூடினாலும் குறைந்தாலும் குடும்பப் பெண்கள் கவலை அல்லது மகிழ்ச்சி என்றுதானே தலைப்பு போடப்படுகிறது. தொலைக்காட்சிகள் எம் கிராமத்து பெண்களின் கழிவறை வசதியின்மையைவிட சிகப்பழகில்தான் அக்கறை காட்டுகிறது. எம் பெண்களின் ரத்தசோகை குறித்தோ போஷாக்கின்மை குறித்தோ கவலைப்படுவதைவிட ஷேர் மார்கெட் சூதாட்டத்து பெண்கள் பற்றியே கவலைப்படுகிறது. சொல்லச் சொல்ல நீளும்.
ஐ°வர்ராயும் விவசாயிகள் தற்கொலையும்
ஐ°வர்யராய் திருமணத்தை நாட்கணக்கில் முதல் பக்கத்தில் தரமுடிந்த இந்திய ஊடகங்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை குட்டிச் செய்தியாக ஒதுக்கித்தள்ள முடிந்தது எதனால்? பிரசாந்த்-கிரஹலட்சுமி விவகாரத்து விவகாரம் (இதிலும் ஆணாதிக்க நிலையில்தான் தந்தார்கள் என்பது வேறு சங்கதி) குறித்து பல நாட்கள் செய்தி தந்த தமிழக ஊடகங்கள் கடன் தொல்லையால் சிறுநீரகத்தை விற்கும் நெசவாளர்கள் குறித்து தந்தார்களா? கஞ்சித் தொட்டி திறந்தபோது பரபரப்பு செய்தியாக்கியவர்கள் தாராளமய உலகமயக் கொள்கையின் விளைவு என்பதை சொன்னார்கள்?
அதுமட்டுமல்ல அரசியல் லாவணிக் கச்சேரிகள் நடத்த களம் அமைத்து சூடாக பத்திரிகை வியாபாரம் செய்யும் தமிழக ஊடக முதலாளிகள் தமிழக சமூக பொருளாதார நிலைமைகள் பள்ளத்தில் கிடப்பது குறித்து பகிரங்க உரையாடலுக்கு இடம் தந்தார்களா?
பிரதமர் வேட்பாளர் யார்?
தனிநபர் தாக்குதல் களமாக மாறிப்போயுள்ள ஊடகத்தில் கருத்து மோதல் - திறந்த உரையாடல்கள் விவாதம் என்பதற்கான இடம் எங்கே?
இந்தியா என்பது பல மொழி பேசுபவர்களை கொண்ட நாடு பல்வேறு மத நம்பிக்கைகள் உடைய நாடு. ஆயிரக்கணக்காண சாதிகளும் வர்ண அடுக்கு முறையும், தீண்டாமையும் உள்ள நாடு. இங்கே முதல்வரையோ, பிரதமரையோ, குடியரசுத்தலைவரையோ மக்களே நேரடியாகத் தேர்வு செய்வது சம நீதிக்கு உதவாது. நேரடியாக தேர்வு என்றால் ஆதிக்கமதம், ஆதிக்க இனம் ஆதிக்க வர்க்கம் இவைகளின் கையே ஓங்கும் . எனவே தான் டாக்டர் அம்பேத்கார் போன்றோர் பிரதிநிதித்துவ முறையை பரிந்துரைத்தனர். இந்துத்துவ சக்திகள் இதை மாற்ற முனைகின்றன. குடியரசு தலைவரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்ய வேண்டும் என குடியரசு தலைவர் தேர்தலின் போதுஊடகங்கள் பிரச்சாரம் செய்ததும், இப்போது பிரதமர் வேட்பாளர் யார் என எழுப்புவதும் ஆபத்தானது. அம்பேத்கார் வகுத்த நேர்பாதையை சீர் குலைப்பதாகும். இதைத்தானே ஊடகங்கள் செய்கின்றன.
சென்னை மயிலாப்பூர் அல்லது பெசன்ட் நகரில் சாலையில் சின்னச் சம்பவம் என்றாலும் பெரிதாகப் பேசும் ஊடகங்கள் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தாராளமயக் கொள்கையால் சீரழிக்கப்பட்டு கிடப்பதை என்றேனும் முன் நிறுத்தினார்களா?
நிலம்: வர்க்கபாசம்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தலைக்கு 2 ஏக்கர் நிலம் வீதம் 50 லட்சம் தரிசு நிலம் 25 லட்சம் பேருக்கு வழங்க திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி தந்தது. அது சாத்தியமில்லை. அவ்வளவு நிலம் இல்லை என அதிமுக மறுத்தது. ஆனால் முந்தைய ஆட்சியில் ஆளுநர் உரையில் உள்ளதை கலைஞர் எடுத்துக்காட்டினார். அது அதிகாரிகள் சொன்னதை நம்பி தவறாக தரப்பட்டதாக அதிமுக தரப்பு விளக்கம் தந்தது. இந்தத் தகவல் எல்லாம் ஏடுகளில் வந்தன. ஆனால் “ஆளுநர் உரையில் சொன்னது பொய்” எனில் அதை அடுத்த உரையில் மறுத்தார்களா? மாற்றி தந்தார்களா? இல்லை. அப்படியானால் “ஆளுநர் உரையும் நம்பத்தகுந்தது இல்லையா?’ 50 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே போனது? யாரும் கேட்கத்தயார் இல்லை - இடதுசாரிகளைத் தவிர. ஆனால் ஊடகங்கள் இதைக்கண்டு கொள்ளவே இல்லை. இதில் கிளைமாக்° என்னவெனில் இந்த நிலங்கள் யார் யாரால் அபகரிக்கப்பட்டு நூறு ஏக்கர், ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் என வேலிபோடப்பட்டுள்ளது என்கிற விபரத்தை சென்னையில் காமராஜ் அரங்கில் பெரிய மாநாடு நடத்தி பட்டியலை அச்சிட்டு கொடுத்தபோதும், எல்லா ஊடகங்களும் அந்த மாநாட்டிற்கு வந்திருந்தும் அதனை வெளியிடவில்லை. ஏனெனில் தங்களுக்கு விளம்பரம் தரும் பெரிய நிறுவனங்கள்தாம் அந்த காரியத்தை செய்துள்ளன என்பதால், வெளியிட மறுத்து விட்டன. இதுதான் தமிழக ஊடகங்களின் வர்க்க பாசத்திற்கு சரியான உதாரணம்.
இதேபோல பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இன்னொன்றை பார்ப்போம். குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் கிண்டி கிங் இன்°டிடியூட் மற்றும் குன்னூர் பா°டர் நிறுவனம் இவற்றை மத்திய அரசு மூடிவிட்டு தனியாரிடம் கொடுக்க முனையும்போது அதன் ஆபத்துகளைக் கூற இடதுசாரி ஏடுகளைத் தவிர வேறு இல்லை.
தேவையான கண்ணாடிகள்
தலித் பார்வை, பெண் பார்வை, உழைக்கும் மக்கள் பார்வை என அடிப்படையாக இம்மூன்றிலும் உலக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் அடியொற்றியே தமிழக ஊடகங்களும் செல்கின்றன.
தேர்தல் நேரம். ஆகவே பலவற்றை நான் இங்கு பகிரங்கமாக பேச முடியாது. ஆனால் மலையும் மடுவுமாய் சமூகம் மேலும் மேலும் பிளவுபட்டு வருவதை, சிறு பகுதியினருக்கான ஒளிரும் இந்தியாவும், பெரும்பான்மை மக்களுக்கு வறண்ட இந்தியாவும் என இரண்டு இந்தியாவாக பிளவுண்டதை ஊடகங்கள் சொல்லுமா? மதவெறியின் கோர விளைவுகளை - ராணுவத்தில் நீதித்துறையில் எங்கும் ஊடுருவிவிட்ட மத, சாதி ஆதிக்கத்தை ஊடகங்கள் தோலுரிக்குமா? புதிய பாதையில் தேசம் நடை போட வழி காட்டுமா? தனிப்பட்ட அமைச்சர்களின் செயல்திறன் குறைவால்தான் பிரச்சனைகள் புரையோடுவதாக மாற்றி மாற்றி குற்றஞ் சாட்டுபவர்கள்; கொள்கைக் கோளாறை முன்னிலைப்படுத்துவதில்லையே ஏன்? எதிரும் புதிருமாக கச்சை கட்டி நிற்பவர்கள் சாராம்சத்தில் ஒரே வர்க்க நலனைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுமா? கொள்கை மாற்றத்துக்கு குரல் கொடுக்குமா? நிச்சயம் ஊடகங்கள் அதைச் செய்யப்போவதில்லை. தனி நபர் மோதல்களாக - லாவணிக் கச்சேரியாக - உணர்ச்சி போராட்டமாக - தேர்தல்களம் மாற்றப்படும். ஊடகங்கள் அக்காரியத்தைத் தான் செய்யும் இன்னும் பேச தேர்தல் நடத்தை விதி குறுக்கீடு செய்வதால் இத்தோடு அமைகிறேன்.
ஒரே ஒரு வேண்டுகோள் இங்கே எம் உரை கேட்ட மாணவர்களில் ஒருவராவது ஊடகத்துறையில்/ பெண் பார்வையில்/ தலித் பார்வையில்/உழைக்கும் மக்கள் பார்வையில்/ கிராமத்துப் பார்வையில்/தொலை நோக்குப் பார்வையில்/ அறிவியல் பார்வையில் மொத்தத்தில் மார்க்சியப் பார்வையில் செயல்பட முனைந்தால் அதுவே எமக்கு வெற்றி
பெரியார் அணிந்த சமூகக் கண்ணாடியை - அம்பேத்கார் அணிந்த சமூகக் கண்ணாடியை - சிங்காரவேலர் - அணிந்த சமூகக் கண்ணாடியை - மாணவர்கள் அறிய வேண்டும். இன்றைய சமூகத் தேவையை - சமூக அறிவியில் கண்ணோட்டத்தில் - மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கப் பழக வேண்டும் என்பதே என் விழைவு. வேண்டுகோள்.
‘மார்க்சிய கண்ணோட்டம்’ என்பது சிலருக்கு ஏற்கத்தக்கதாக இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது நீங்கள் நாளை பணியாற்றப்போகிற நிறுவனத்தில் அதற்கு இடம் இல்லாமல் போகலாம். ஆயினும், காந்தியின் ஒரு அளவுகோலைப் பயன்படுத்த நீங்கள் முயன்றாலேகூட நன்மைகள் நிறைய விளையும்.
ஆம். மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார் “உன்னுடைய பேச்சு, எழுத்து, செயல் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கிற கடையனுக்கும் கடையனுக்கு சிறிதாவது பயன்படுமா, நன்மை தருமா என்று யோசித்துப்பார்” காந்தியின் இந்த அளவு கோலையாவது மனதில் எப்போதும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.
வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
சு.பொ. அகத்தியலிங்கம்
agathee2007@gmail.com
[ இந்த மின்னஞ்சல் www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]
www.beyouths.blogspot.com
Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
Til: beyouths groups (beyouths@yahoogroups.com); agathee2007@gmail.com; thamizhoviya (oviyathamizh@gmail.com)
ஊடகங்கள் அணிய வேண்டிய கண்ணாடிகள்
(சென்னை பல்கலைக்கழகம் - மக்கள் ஊடகம் மற்றும் தொடர்பியல் துறை 16-3-2009 அன்று நடத்திய மா. சிங்காரவேலர் 150ஆம் ஆண்டு பிறந்தநாள் நினைவுக் கருத்தரங்கில் தமிழக ஊடகங்கள் மார்க்சியப் பார்வை என்ற தலைப்பில் சு.பொ. அகத்தியலிங்கம் ஆற்றிய உரை)
கருத்தரங்கின் தலைவர் அவர்களே! மேடையிலே வீற்றிருக்கும் மேனாள் துணைவேந்தர் ஜெகதீசன் அவர்களே! புலவர் ப.வீரமணி அவர்களே! ஊடகத்துறை பேராசிரியர்களே! மாணவ கண்மணிகளே! அனைவருக்கும் வணக்கம்.
தலைமையேற்று உரையாற்றிய துறைத்தலைவர் கோ.ரவீந்திரன் அவர்கள் வடசென்னையை பற்றிக் குறிப்பிட்டார். பிஅண்ட்சி மில் பற்றி குறிப்பிட்டார். வடசென்னை பின் தங்கியிருப்பது பற்றி குறிப்பிட்டார். ஊடக மாணவர்கள் வடசென்னையை பயில வேண்டும் என்றார். இது என்னுள் நச்சென பதிந்துவிட்டது அதையொட்டி சில கேள்விகளோடு என் உரையைத் துவங்க விழைகிறேன்.
பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட உழைப்பாளிகள் பணியாற்றிய பி அன்ட் சி மில் மூடிக்கிடக்கிறது. அதைப்பார்க்கிற போதெல்லாம் பத்தாயிரம் தொழிலாளர் வாழ்வை புதைத்த சமாதியாகவே எனக்கும் தோன்றுகிறது. அதுபோல் மெட்டல் பாக்ஸ், டன்லப், ஸ்டான்டர்ட் மோட்டார் (இத்தொழிற்சாலை வடசென்னை அல்ல எனினும் ) உட்பட பல தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், சுமார் ஒரு லட்சம் பேர் மறைமுகமாகவும் வேலை இழந்துள்ளனர். மக்கள் துணி கட்டுவதை நிறுத்தி விட்டார்களா? பின் ஏன் பி அன்ட் சி மில் மூடப்பட்டது. மக்கள் டப்பாக்கள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டார்களா? பின் ஏன் மெட்டல் பாக்ஸ் தொழிற்சாலை மூடப்பட்டது. டயர்கள், கார்களின் தேவை முடிந்து விட்டதா? பின் ஏன் டன்லப்பும், ஸ்டாண்டர்டு மோட்டார் நிறுவனமும் மூடப்பட்டது?
இந்த முதலாளிகள் திவாலாகி விட்டார்களா? இல்லை வேறு தொழிலில் கொழுக்கிறார்கள். ஆனால் அதில் பணியாற்றிய தொழிலாளிகள் சட்டப்படி பெற வேண்டியதைப் கூட பெறமுடியால் தெருவில்நிற்கிறார்கள். இது குறித்து எந்த ஊடகம் கவலைப்பட்டது? எதை எதையே புலனாய்வு செய்யும் புலிகள் உழைப்பாளிகள் வாழ்வு எப்படி சூறையாடப்பட்டது என்று எப்போதாவது புலனாய்வு செய்தார்களா?
அந்த முதலாளிகள் தரும் விளம்பரத்தில் பிழைக்கும் ஏடுகள்! ஆலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட பொருளாதார, சமூக பண்பாட்டு விழைவுகளை ஆய்வு செய்யுமா? புலனாய்வு செய்யுமா? செய்யாது? ஏன் பல்கலைக் கழகங்கள் கூட இது குறித்து ஆய்வு நடத்த மாணவர்களை நெறிப்படுத்த தயார் இல்லையே?
இந்த கேள்விகளின் கனத்தோடு நான் உரைக்குச் செல்கிறேன்.
தேநீர் கடைகளில்
ஊடகங்கள் இல்லாத உலகை இன்றைக்கு கற்பனை செய்துகூட பார்க்க இயலாது. நவீன வாழ்வில் ஊடகங்கள் இரண்டறக் கலந்து விட்டன என்பது மிகையல்ல. உண்மை.
தினத்தந்தியோ தினகரனோ அல்லது வேறு ஏதேனும் ஒரு செய்திப் பத்திரிகையோ இல்லாத ஒரு முடிதிருத்தும் நிலையத்தையோ தேநீர் கடையையோ தமிழ்நாட்டில் நீங்கள் காட்ட இயலுமா? தினந்தந்தி பற்றி எத்தகைய கருத்து இருப்பினும் அது தனி. ஆனால் சாதாரண மக்களுக்கு பத்திரிக்கை படிக்கும் பழக்கத்தை உருவாக்கிய பெருமை தினந்தந்தியையே சாரும்.
மக்களின் எழுத்தறிவு வளர்ச்சியோடு பத்திரிகையின் விற்பனை பெருகுவதும்; நாள்தோறும் பல்வேறு ஊடகங்கள் பல்கிப் பெருகுவதும் நாமறியாததல்ல. இவ்வளவுக்குப் பிறகும் 1000 பேருக்கு 70 பேர் தான் செய்திப்பத்திரிகைகள் படிப்பவர்கள் என்பதும், இதிலும் பெண்கள் விழுக்காடு மிகப்பரிதாபகரமானது என்பதும் வருத்தமான தகவல்தான். எனினும் சரிபாதி வாசகர்கள் கிராமப்புற மக்கள் என்கிற செய்தி சற்றே ஆறுதலானது.
இன்று ஊடகங்கள் என்பது வெறுமே தின, வார, மாத, பருவ ஏடுகளோடு அடங்கி விடுவதல்ல. தொலைக்காட்சியும் கைபேசியும் வந்தபின்னர் உலகம் ரொம்பவே மாறிப்போய்விட்டது.
வெகுஜன ஊடகங்களின் பிறப்பு
வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தால் மன்னராட்சி காலத்தில் அவர்களின் தேவைக்கு ஏற்ப “கீழ்படிதலும் விசுவாசமும் உள்ள குடிமக்களை” உருவாக்க “நீதிநெறி போதனைகள்” தாம் முன் நின்றன; அதற்கும் மேல் ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப அவ்வப்போது முரசறைந்து மக்களுக்கு சேதி சொல்லுதலே ஊடகமாக இருந்தது. எப்போதும் ஆளும் வர்க்கச் சிந்தனையை சமூகத்தின் பொது புத்தியாக்கிடவே பிரச்சார உத்திகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கேற்பவே ஊடகங்கள் வடிவம் பெற்றன.
மக்களாட்சியின் தோற்றத்தோடுதான் இன்றைய வெகுஜன ஊடகங்களும் பிறந்தன. “ஊடகம் வெகுஜன ஊடகமாக மாறியதன் வரலாறு முதலாளித்துவம், ஜனநாயகம், அறிவியல் ஆகியவற்றின் வளர்ச்சிப் போக்குடன் பின்னிப் பிணைந்ததாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிலப்பிரபுத்துவத்திற்கும் மன்னராட்சிக்கும் எதிராக வெடித்த புரட்சிக் கனவிலிருந்துதான் முதலாளித்துவம் உயிர்த்தெழுந்தது. அதற்குமுன் அரசுவைகளிலும், மந்திராலோசனைக் கூட்டங்களிலும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு மக்களின் அங்கீகாரம் தேவை இல்லை என்ற ஆளும் வர்க்க அகங்காரம் நொறுங்கிய நேரம் அது. ஆளுபவர்கள் மக்களை அணைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்தை மக்களே உருவாக்கி விட்டிருந்தபடியால் அவர்களைச் சென்றடைய ஊடகம் தேவைப்பட்டது. இந்தத் தேவையை அறிவியல் வளர்ச்சி பூர்த்தி செய்தது” என்கிறார் ஆர். விஜய் சங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்.7)
பலரிடமிருந்து பலருக்கு...
அச்சு ஊடகம் என்ற கட்டத்தை தாண்டி டிஜிட்டல் உலகில் வேகமாக பயணிக்கிறோம். இணையதளமும், கைபேசிகளும், நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் கருவிகளும் தொலைக்காட்சியும் இதர மின்னணு ஊடகங்களும் விதைத்துள்ள பெரிய வாய்ப்பும் வலிமையும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. அதுமட்டுமல்ல பழைய உலகில் தகவல் தொடர்பு என்பது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, ஒருவரிடமிருந்து பலருக்கு பரவியது; புதிய உலகில் தகவல் தொடர்பு என்பது பலரிடமிருந்து பலருக்கு ஒரே நேரத்தில் பரவுகிறது. ஆக இன்றைய ஊடகங்களின் வீச்சும் வேகமும் நம்மை வியக்க வைக்கிறது.
இந்த வலிமைமிக்க ஊடகங்கள் எதைச் செய்கின்றன? எதைச் செய்ய வேண்டும், அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் இன்றைய கருத்தரங்கின் மைய இழை என நான் கருதுகிறேன்
நாம் தமிழ்நாட்டு ஊடகங்களைச் சுற்றியே பேசப்போவதால் அதன் தொடக்கம் குறித்து சில செய்திகளைக் கூறியாக வேண்டும்.
நமது பாரம்பரிய வேர்
“இந்திய விடுதலைக் கிளர்ச்சியும் தமிழ்ப்பத்திரிகைத் துறையும் இணைந்தே வளர்ந்தன. ஆம், ஏனெனில் அவை இரட்டைக் குழந்தைகள் என்பார் ம.பொ.சி. “அடக்குமுறைகளை தாங்கிக்கொண்டோ - எதிர்த்துக்கொண்டோ - பார்த்துக்கொண்டோ இந்திய இதழ்கள் வளர்ச்சி அடைந்தன. பூனை இருக்கும் வீட்டில் எலியும் போராட்டத்திற்கு இடையே குடும்பம் நடத்தி குட்டிகள் போடுவது போல” என க. திரவியம் `தமிழ் வளர்த்த தேசியம்’ எனும் நூலில் குறிப்பிடுவார்.
ஆக, இந்திய ஊடகங்கள் விடுதலைப் போராட்டப் பாரம்பரியத்தைக் கொண்டவை. குறிப்பாக பத்திரிகைகளுக்கு அது நூற்றுக்கு நூறு உண்மை. இதர மின்னணு, ஊடகங்கள் சமீபத்தில் தோன்றினாலும் இன்னும் அந்தப் பாரம்பரிய வாசம் கொஞ்சம் இருக்கிறது. அதென்ன பாரம்பரிய வாசம்? “பாஷாபிமானம், சமயாபிமானம், தேசாபிமானம்” என அந்த நாட்களில் கூறுவர். அதாவது மொழிப்பற்று, மதப்பற்று, தேசப்பற்று இவையே இந்தியப் பத்திரிகைகளின் துவக்க காலப் பார்வையாக இருந்தது என்பார், இதழியல் குறித்து பல நூல்கள் எழுதிய அ.ம. சாமி, “ஊரினை நாட்டை இந்த உலகினை ஒன்றுசேர்க்கும் பேரறிவாளர் நெஞ்சில் பிறந்த பத்திரிகைப் பெண்” என்றே புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் புகழ்ந்துரைப்பார். இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கிய செய்தி என்று உண்டு. “தமிழகத்தில் இதேகால கட்டத்தில் இதற்கு இணையாக சமூக சீர்திருத்த பார்வையும் வலுவாக தடம் பதிக்கத் துவங்கிவிட்டது” என்பதும், “பொதுவுடமை சிந்தனை ஊடகங்களில் தலைகாட்டத் துவங்கிவிட்டது” என்பதும்தான் அது.
“தேசியம் வளர்த்த இதழியல்”, “திராவிடம் வளர்த்த இதழியல்”, “பொதுவுடமை வளர்த்த இதழியல்” என தனித்தனியாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு இந்த மூன்று போக்குகளும் தமிழக ஊடகத் துறையில் அழுத்தமான தடங்களை பதித்துள்ளன என்பதை நாம் ஆழமாக மனதில் பதியவைக்க வேண்டும்.
(உலகத் தமிழராய்ச்சி நிறுவனமும் ராஜமாணிக்கனார் நினைவு அறக்கட்டளையும் இணைந்து இந்த ஆய்வுகளை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது)
அந்த பாரம்பரியத்தின் தொடர் கண்ணிகள் தமிழக ஊடகத்துறையில் முற்றாக அறுந்துவிடவில்லை. எனவேதான், “தமிழக ஊடகத் துறை “சில தனித்த போக்குகளும்”, “இன்றைய உலக-தேசிய ஊடகத் துறையின் பொதுப்போக்குகளும்” இணைந்த கலவையாக காட்சி அளிக்கிறது.
கட்டளையிடும் எஜமானனாக
“வெகுஜன ஊடகங்கள் மக்களுக்குத் தொடர்ந்து செய்தி சொல்கின்றன. அவர்களுக்கு கேளிக்கையும் அளிக்கின்றன. அவற்றைப் படிக்கும் அல்லது பார்க்கும் ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நடத்தை முறைகளையும் விதைத்து சமூகத்தின் நிறுவனங்களில் தன்னையும் இணைத்துக் கொண்டு இயங்குவதற்கான தகுதியுடையவர்களாக்குகின்றன. சொத்துக்கள் ஒரு பக்கம் குவிந்துள்ள, பெரும் வர்த்தக மோதல்களைக் கொண்டிருக்கும் ஒரு சமுதாயத்துடன் இயைந்து செல்லக்கூடியவர்களாக மக்களை உருவாக்க முயற்சிக்கின்றன. இவை தம்மிடையே போட்டியிட்டுக்கொண்டு அரசாங்க மற்றும் தனியார் ஊழல்களையும் அக்கிரமங்களையும் அம்பலப்படுத்தி பேச்சுரிமைக்கும் பொது நலனுக்கும் குரல் கொடுப்பதுபோல் தோன்றினாலும் அவை இந்த அமைப்புக்கு எதிராக மக்களைத் திருப்பும் அளவுக்குத் செல்லாமல் அடக்கியே வாசிக்கின்றன. என ஆர். விஜயசங்கர் (செய்தியின் அரசியல், பக்கம்4) வலுவாக வாதிடுகிறார். அமெரிக்க சிந்தனையாளர்களான எட்வர்ட் ஹெர்மன் மற்றும் நோம் சோம்°கி இவர்களை மேற்கோள் காட்டி, அவர்கள் எழுதிய “பொதுப்புத்தியில் கருத்து ஒப்புதலை உருவாக்குதல்” (ஆயரேகயஉவரசiபே ஊடிளேநவே) என்ற நூலை அடியொற்றி இவ்வாறு வாதிடுகிறார்.
நாம் எதை நம்ப வேண்டும்? எதை சந்தேகிக்க வேண்டும்? எதை நேசிக்க வேண்டும்? எதை வெறுக்க வேண்டும்? எதைப் படிக்க வேண்டும்? எதை யோசிக்க வேண்டும்? எதை ரசிக்க வேண்டும்? எதை வாங்க வேண்டும்? எங்கு வாங்க வேண்டும்? எப்படி வாங்க வேண்டும்? எதை உண்ண வேண்டும்? எதை உடுத்த வேண்டும்? என நம் வாழ்வின் சகல அம்சங்களையும் அ முதல் ஃ வரை கட்டளையிடுகிற எஜமானனாக இன்றைய ஊடகங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன அல்லவா?
ஒவ்வொரு மனிதனின் கருத்தையும் செதுக்குவதில் மீடியாக்கள் பெரும் பங்கு வகிக்கின்றன; உண்மையில் தனி மனிதனின் - சமூகத்தின் கருத்தை வடிவமைப்பதில் ஊடகங்கள் பெரும்பங்கு வகிப்பதை அமெரிக்க அறிஞர் நாம் சோம்°கி அவர் பாணியில் சொன்னாரென்றால்; தமிழகத்தில் தந்தை பெரியார் அவருடைய மொழியில் சொன்னார். “உலகம் உயர்ந்தோர் மாட்டே என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என்னைப் பொறுத்தவரை உலகம் பிரச்சாரத்தின் மாட்டே” என்பார்.
கட்சி சார்பு ஏடுகள்
அந்தத் தெளிவு தமிழக ஊடகங்களுக்கு ஆதிமுதலே இருப்பதை அறியலாம். மற்ற எந்த மாநிலங்களையும் விட பகிரங்கமாகக் கட்சி சார்பாக ஏடுகளும், தொலைக்காட்சிகளும் செயல்படுவது தமிழ்நாட்டில்தான் அதிகம்.
முரசொலி, நமது எம்ஜிஆர், விடுதலை, தீக்கதிர், ஜனசக்தி, தமிழோசை ஆகிய தின ஏடுகளும், ஜெயா டிவி, கலைஞர் டிவி, மக்கள் டிவி, சன் டிவி என கட்சி சார்பு தொலைக்காட்சிகளும், கட்சி சார்பு வார, மாத, பருவ, இலக்கிய ஏடுகளும் பலப்பல. இதனால் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
கட்சி சார்பாக இருப்பதால் அதற்கேற்ப சில சமூகப் பொறுப்புகள் அவற்றுக்கு கட்டாயமாகின்றன. அவற்றின் நம்பகத்தன்மையை உள்ளடக்கத்தை பளிச்சென புரிந்துகொள்வது மிக எளிது. இது நல்ல அம்சம். ஆனால் கட்சி சார்பாக செயல்படுவதால் அதன் அனைத்து அம்சங்களையும் கட்சிக் கண்ணோட்டத்தில் வாசகர்கள் விருப்பு வெறுப்போடு எடைபோடுவதும் இயல்பாகிவிடும். ஆபத்தும் உண்டு.
கட்சி சாராத பிற ஏடுகள் நடுநிலை ஏடுகளாக கூறிக் கொள்கின்றன. சாராம்சத்தில் அப்படியாக உள்ளனவா? - இது அடிப்படையான கேள்வி.
மாமேதை காரல் மார்க்° கூறுவார்; “உற்பத்தி சாதனங்களையும் உற்பத்தி நடவடிக்கைகளையும கட்டுப்படுத்துகிற அதிகார வர்க்கம் அதே நேரத்தில் அறிவு ரீதியான உற்பத்தியைக் கட்டுப்படுத்துகிறது. எனவே அறிவு ரீதியான உற்பத்தி சாதனங்கள் பெற்றிராதவர் பெற்றிருப்பவர்களின் கருத்துக்கு இலக்காகிறார்”.
கட்டுப்படுத்தும் காரணிகள்
பச்சையாகச் சொல்லப்போனால் என்னதான் நடுநிலைமை, நேர்மை, பத்திரிகை சுதந்திரம் என்றெல்லாம் வார்த்தை விளையாட்டுகளில் ஈடுபட்டாலும் இறுதியில் சுரண்டும் வர்க்க நலன் காப்பதில்தான் போய் முடியும். வர்க்க சமூகத்தின் இயல்பு அதுதான்.
விடுதலைப்போராட்ட காலம்போன்றோ அல்லது 60களைப் போன்றோ பத்திரிகை துவங்குவது இன்று அவ்வளவு மலிவல்ல. அப்போதெல்லாம் குறைந்த முதலீட்டில் ஏடுகள் தொடங்கி சில ஆயிரம் பிரதிகள் விற்றால் போதும். அப்போதும் நட்டம் இருக்கும். ஆயினும் தனி நபரோ அல்லது சிலர் கூட்டாகவோ லட்சிய நோக்கில் தாங்கிக்கொள்ள முடியும். (உ.ம். திராவிட இயக்க ஏடுகள், பொதுவுடமை ஏடுகள்) அப்படி செய்யவும் செய்தன. ஆனால் இன்று பெரும் பொருட் செலவு மிக்கது ஊடகத்துறை. அச்சு ஊடகமாயினும் மின்னணு ஊடகமாயினும் இதுதான் நிலை. எனவே பெரும் வருவாய் ஈட்டாமல் ஊடகத்தை தொடர முடியாது. வருவாய்க்கு விற்பனை மட்டும் போதாது. விளம்பரமின்றி ஊடகங்கள் இன்று வாழாது.
எனவே இன்று ஊடகங்களை கட்டுப்படுத்துகிற காரணங்களில் 1) `ஊடக முதலாளிகளை’ அடுத்து 2) `விளம்பரங்கள்’ முக்கிய பங்கு வகிக்கின்றன. 3) வர்த்தகம் சுமூகமாக நடந்திட `எதிர்வினைகள்’ பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டியுள்ளது. 4) அரசு மற்றும் ஏகபோக, பன்னாட்டு நிறுவனங்களின் நிபுணர்கள் யோசனையை கேட்க வேண்டியுள்ளது. இந்த நான்கு காரணிகளுக்கும் அடிநாதமாக சில சில்லறை கண்துடைப்பு நடவடிக்கைகளுடன் இந்த சமூகத்தை அப்படியே பாதுகாக்க வேண்டும் என்கிற கருத்து அடிநீரோட்டமாக இயக்கும். இதன் பொருள் `கம்யூனிச எதிர்ப்பு’ என்பது இதன் மையமாக இருக்கும் என நோம் சோம்°கி சுட்டிக்காட்டுகிறார்.
எல்லாத் தத்துவங்களும் உலகை அதன் துன்ப துயரங்களை வியாக்கியானம் செய்வதோடு நின்றுவிடும். அதுவரை சுரண்டும் வர்க்கத்துக்கு ஆபத்து இல்லை. ஆனால் அதை மாற்ற முற்படும் போதுதான் பிரச்சனை. அதற்குரிய தத்துவம்தான் மார்க்சியம். ஆகவேதான் மார்க்சிய தத்துவம் - கம்யூனிச தத்துவம் சுரண்டல் வர்க்கத்துக்கு எதிராக இருப்பதால் இதனை முடிந்தவரை அடக்கிவைப்பதே ஊடகங்களின் தலையாயப் பணி. தமிழக ஊடகங்களும் அதற்கு விதிவிலக்கு இல்லை. தமிழக ஊடகங்களின் “சமூகப் பொறுப்பும்”, “அறிவியல் நோக்கும்” பெரும் கேள்விக்குறியாகி வருகின்றது.
நான்கு நோக்கங்கள்
ஆங்கிலத்தில் ஊடகங்களின் நோக்கமாக நான்கைக் கூறுவார்கள். (1) தகவல் தெரிவித்தல்
(2) பயிற்றுவித்தல் (3) விழிப்புணர்வூட்டல் (4) பொழுதுபோக்கு. இதில் `கடைசி’ அம்சம் தமிழ் ஊடகத்துறையில் முதலிடம் வகிக்கிறது. தகவல் தெரிவித்தல் ஓரளவு நடைபெறுகிறது. (அதிலும் வர்க்க சார்பு உண்டு) மற்ற இரண்டிலும் பெரும் பள்ளம் நிலவுகிறது.
இவை தவிர ருவடைவைல ஏயடரந என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிற `பயன் மதிப்பு’ இன்றைய ஊடக நுகர்வு கலாச்சாரத்தில் முக்கியப் பங்கினை வகிக்கிறது. அதில் தமிழ் ஊடகங்கள் வர்த்தக நோக்கிலும், விளம்பர நோக்கிலும் செய்தாலும் அதில் ஆர்வம் காட்டுகிறது. உதாரணமாக 10ம் வகுப்பு வினா-விடை, பிள° 2 வினாவிடை, வேலைவாய்ப்புச் செய்திகள் பயிற்சிகள், கணினி தகவல்கள் பயிற்சிகள், மருத்துவ யோசனைகள், தன்னம்பிக்கைப் பயிற்சிகள் என பலவற்றில் ஏறத்தாழ எல்லா ஊடகங்களும் ஈடுபடுகின்றன. அவற்றின் தரம் மற்றும் அறிவியல் அணுகுமுறை இவற்றில் குறைபாடுகள் நிரம்பவே உண்டு. எனினும் இம்முயற்சிகளை பொதுவில் வரவேற்க வேண்டும்.
தகவல் தருவதில் அதாவது செய்திகள் அளிப்பதில் ஊடகங்களுக்கு இடையே கடும் போட்டியே நிலவுகிறது. எனினும் தகவல்களை / செய்திகளை வடிகட்டி தங்கள் வர்க்க சார்பை அவை காட்டிக்கொள்கின்றன.
பெரியார் பிறந்த மண்ணில்
கூடுதல் கவலை என்னவெனில் பெரியார் பிறந்த மண்ணில் சிங்காரவேலர் பிறந்த மண்ணில் பகுத்தறிவிற்கு கொள்ளி வைக்கிற காரியங்களை ஊடகங்கள் காலை முதல் இரவுவரை செய்கிறது என்பதுதான். சோதிடம், பேய், மந்திரம், வாஸ்து என சகல மூட நம்பிக்கைகளும் நவீன அறிவியலைப் பயன்படுத்திக் கொண்டு வேகமாகச் செய்யப்படுகிறது ஜோதிட ஏடுகள் பல்கிப் பெருவது கவலை அளிக்கிறது. பிள்ளையார் பால் குடிக்கிறார், மேரி மாதா ரத்தக்கண்ணீர் வடிக்கிறார், பேய் நடமாடுகிறது என பலவற்றை தொலை காட்சியும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக்கொண்டு தரும். ஆனால் அவை அறிவியல் ரீதியாக அம்பலப்படும்போது மவுனம் சாதிக்கும். ஏன் இந்த அநீதி? அன்றாடம் பார்க்கிற அனுபவிக்கிற இதற்கு விளக்கம் தேவையா? சேது சமுத்திர திட்டம் முடங்கிப் போனது. தமிழகத்தில் நியாயமாக எழ வேண்டிய கோபம் - அறிவுபூர்வமான விழிப்புணர்வு ஏற்பட்டதா? ஊடகங்கள் எல்லாம் ஒரே மாதிரியாகவா நடந்தன? உங்கள் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.
ஜோதிட ஏடுகள் மலிந்துள்ளன அது மட்டுமல்ல மக்களின் ஜோதிட நம்பிக்கைகுள் புகுந்து மதவெறி பிரசாரமும் நடக்கிறது. உதாரணமாக குமுதம் ஜோதிடம் இதழில் ஒரு இஸ்லாமியராக மாறிய சகோதரியின் கேள்விக்கு பதில் அளித்த ராஜகோபால் அவர்கள், இந்துக்கள் கண்ணாக மதிக்கும் பசுவின் மாமிசத்தை உங்கள் கணவர் உண்பதால் தான் உங்கள் குழந்தைக்கு கண் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உங்கள் கணவரை அந்த பழக்கத்தில இருந்து மீட்டுடெத்தால் உங்கள் குழந்தையின் பார்வை சரியாகும் என்று பதில் அளித்ததன் மூலம் ஒரு வகையில் இந்துத்துவ மதவெறியர்களின் பசுவதை எதிர்ப்பு என்கிற கருத்தை திணிக்கிறார். மருத்துவ விஞ்ஞானத்தை மறைமுகமாக நிராகரிக்கிறார்கள்.
அது மட்டுமா கிரகப் பெயர்ச்சி பலன்கள் பரிகாரங்கள் என்பதன் வாயிலாக அர்த்தம் புரியாமல் சமஸ்கிருத ஸ்லோகங்களை மன்னம் செய்ய வழிகாட்டுகின்றன. அதன் மூலம் தெய்வீக சக்தி தமிழுக்கு கிடையாது என்றும் சமஸ்கிரதத்துக்குத் தான் தெய்வீக சக்தி உண்டென்றும் மக்களை நம்பச் செய்கின்றனர்.
மேல் வர்க்க....மேல் வர்ண
ஊடகங்கள் தொலைத்துவிட்ட ஒன்று தலித் பார்வை . உத்தபுரம் `தீண்டாமை சுவர்’ இடிக்கப்பட்டது என்பதைக்கூட எழுத /கூற தமிழ் ஊடகங்கள் தயங்கின. ஆனால் மேல்சாதியினர் மலையேறியதுதான் செய்தி. “தலித் மக்களின் சிறப்புகூறு திட்டம்” தமிழகத்தில் செயலிழந்து நிற்பதை பற்றி எந்த ஊடகம் கவலைப்படுகிறது? தீண்டாமை இன்று நிலவுவதை புலனாய்வு செய்து எந்த ஏடு வெளியிட்டது? சிலைகள் அவமதிக்கப்படுகிறபோது பரபரப்பு செய்தி தருகிற ஏடுகள்; நூற்றாண்டாய் அங்கு புரையோடிப் போயிருக்கிற சாதி ஆதிக்கம் குறித்து கனத்த மவுனம் சாதிப்பது ஏன்? இட ஒதுக்கீடு சட்டம் வந்தபோது எதிர்த்தும் ஆதரித்தும் சூடாக செய்தி விற்பனை செய்யும் ஊடகங்கள் அந்த இட ஒதுக்கீடு அமலாகாத இருட்டுப்பகுதிகளை பற்றிய அறிக்கைகளை ஆய்வுகளை இருட்டடிப்பு செய்வது ஏன்? ஊடகங்கள் இன்னும் “மேல் வர்க்க மேல்வர்ண” ஆதிக்கத்தில்தான் உள்ளது என சாய்நாத் ஆய்ந்து எழுதியது உண்மையே! தமிழ்நாட்டில் தங்களை மேல்நிலையாக்கிக் கொண்டு தன் சொந்த வர்க்கத்திற்கும் சொந்த வர்ணத்திற்கும் துரோகம் செய்கிற ஊடக நிறுவன முதலாளிகளுடன் அப்படி தான் என்பது கூடுதல் வேதனை. புலனாய்வு ஊடகங்கள் இந்த சமூக பிரச்சனை குறித்து காட்டிய அக்கறை என்ன?
பெண் நிலை/ பெண் மொழி
பெண்கள் பற்றிய பார்வையில் தமிழக ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள ஊனம் மன்னிக்க முடியாதது. அதுவும் வேறு யாரையும் விட உரக்கவும் வெளிப்படையாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை பேசிய பெரியார் பிறந்த மண்ணில் பெண்களுக்கு ஊடகங்கள் செய்யும் தீங்கு அதிகம். மிக அதிகம். மகளிர் தினத்தன்று எங்கோ குடிக்கிற ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு இதுதான் மகளிர் உரிமை என்று ஏகடியம் பேசுகிற அளவுக்கு ஒரு ஏட்டுக்கு தலைக்கொழுப்பு உச்சத்தில் இருந்தது. பிற ஏடுகளும் சடங்காக சில செய்திகளை வெளியிடுவதைத் தவிர வேறு என்ன செய்தன? பொதுவாக மொழி என்பது வரலாற்று ரீதியாக ஆதிக்க சக்திகளாலும், ஆண்களால் கட்டமைக்கப்பட்டது. ஆகவே `பெண்கள் மொழி, ஒடுக்கப்பட்டவர் மொழி’ என மொழியின் கட்டமைப்பிலேயே ஜனநாயகப்படுத்தல் தேவைப்படுகிறது என உணரும் காலம் இது.
ஆனால் தமிழக செய்தி ஏடுகளில் அந்த `பெண் மொழி’ இல்லை. ஆண் மொழி மட்டுமல்ல ஆதிக்க மொழியுமே கோலோச்சுகிறது. கிரைம் செய்திகளில் இதைத்தூக்கலாகக் காணலாம். பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளியாகச் சித்தரிக்கும் கொடுமை சர்வ சாதாரணம். போலீ° மொழிதான் செய்தி ஏடுகளுடையதாகவும் இருப்பதைப் பார்க்கலாம். `குஷ்பு பேச்சு தொடர்பான விவாதத்தில் உணர்ச்சி கொம்பு சீவப்பட்டதே தவிர அறிவுபூர்வமான விவாதம் நடத்தப்படவே இல்லை. ஆணுறை வியாபாரிகள் தங்கள் விற்பனைக்காக ஆண்டுதோறும் நடத்தும் சர்வே (அதுவே இட்டுக்கட்டப்பட்டது என்பதே உண்மை) அதையொட்டி நடிகைகள் பேட்டி என்பது வியாபார யுக்தி. ஆனால் பெரியார் பூமியில் பெண் விடுதலை சார்ந்து விவாதம் நடந்ததா? அல்லது `கட்டுப்பாடற்ற பாலுறவு’ மற்றும் `கட்டுப்பெட்டியான பஞ்சாங்கப் பெண்’ என இரு கோடிகளுக்கு இடையே விவாதம் அனல் பறந்ததா? உங்கள் ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
கே° விலை கூடினாலும் குறைந்தாலும் குடும்பப் பெண்கள் கவலை அல்லது மகிழ்ச்சி என்றுதானே தலைப்பு போடப்படுகிறது. தொலைக்காட்சிகள் எம் கிராமத்து பெண்களின் கழிவறை வசதியின்மையைவிட சிகப்பழகில்தான் அக்கறை காட்டுகிறது. எம் பெண்களின் ரத்தசோகை குறித்தோ போஷாக்கின்மை குறித்தோ கவலைப்படுவதைவிட ஷேர் மார்கெட் சூதாட்டத்து பெண்கள் பற்றியே கவலைப்படுகிறது. சொல்லச் சொல்ல நீளும்.
ஐ°வர்ராயும் விவசாயிகள் தற்கொலையும்
ஐ°வர்யராய் திருமணத்தை நாட்கணக்கில் முதல் பக்கத்தில் தரமுடிந்த இந்திய ஊடகங்கள் ஏறத்தாழ ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதை குட்டிச் செய்தியாக ஒதுக்கித்தள்ள முடிந்தது எதனால்? பிரசாந்த்-கிரஹலட்சுமி விவகாரத்து விவகாரம் (இதிலும் ஆணாதிக்க நிலையில்தான் தந்தார்கள் என்பது வேறு சங்கதி) குறித்து பல நாட்கள் செய்தி தந்த தமிழக ஊடகங்கள் கடன் தொல்லையால் சிறுநீரகத்தை விற்கும் நெசவாளர்கள் குறித்து தந்தார்களா? கஞ்சித் தொட்டி திறந்தபோது பரபரப்பு செய்தியாக்கியவர்கள் தாராளமய உலகமயக் கொள்கையின் விளைவு என்பதை சொன்னார்கள்?
அதுமட்டுமல்ல அரசியல் லாவணிக் கச்சேரிகள் நடத்த களம் அமைத்து சூடாக பத்திரிகை வியாபாரம் செய்யும் தமிழக ஊடக முதலாளிகள் தமிழக சமூக பொருளாதார நிலைமைகள் பள்ளத்தில் கிடப்பது குறித்து பகிரங்க உரையாடலுக்கு இடம் தந்தார்களா?
பிரதமர் வேட்பாளர் யார்?
தனிநபர் தாக்குதல் களமாக மாறிப்போயுள்ள ஊடகத்தில் கருத்து மோதல் - திறந்த உரையாடல்கள் விவாதம் என்பதற்கான இடம் எங்கே?
இந்தியா என்பது பல மொழி பேசுபவர்களை கொண்ட நாடு பல்வேறு மத நம்பிக்கைகள் உடைய நாடு. ஆயிரக்கணக்காண சாதிகளும் வர்ண அடுக்கு முறையும், தீண்டாமையும் உள்ள நாடு. இங்கே முதல்வரையோ, பிரதமரையோ, குடியரசுத்தலைவரையோ மக்களே நேரடியாகத் தேர்வு செய்வது சம நீதிக்கு உதவாது. நேரடியாக தேர்வு என்றால் ஆதிக்கமதம், ஆதிக்க இனம் ஆதிக்க வர்க்கம் இவைகளின் கையே ஓங்கும் . எனவே தான் டாக்டர் அம்பேத்கார் போன்றோர் பிரதிநிதித்துவ முறையை பரிந்துரைத்தனர். இந்துத்துவ சக்திகள் இதை மாற்ற முனைகின்றன. குடியரசு தலைவரை மக்களே நேரடியாகத் தேர்வு செய்ய வேண்டும் என குடியரசு தலைவர் தேர்தலின் போதுஊடகங்கள் பிரச்சாரம் செய்ததும், இப்போது பிரதமர் வேட்பாளர் யார் என எழுப்புவதும் ஆபத்தானது. அம்பேத்கார் வகுத்த நேர்பாதையை சீர் குலைப்பதாகும். இதைத்தானே ஊடகங்கள் செய்கின்றன.
சென்னை மயிலாப்பூர் அல்லது பெசன்ட் நகரில் சாலையில் சின்னச் சம்பவம் என்றாலும் பெரிதாகப் பேசும் ஊடகங்கள் கிராமப்புற மக்களின் வாழ்க்கை தாராளமயக் கொள்கையால் சீரழிக்கப்பட்டு கிடப்பதை என்றேனும் முன் நிறுத்தினார்களா?
நிலம்: வர்க்கபாசம்
கடந்த சட்டமன்றத் தேர்தலில் தலைக்கு 2 ஏக்கர் நிலம் வீதம் 50 லட்சம் தரிசு நிலம் 25 லட்சம் பேருக்கு வழங்க திமுக தேர்தல் அறிக்கை வாக்குறுதி தந்தது. அது சாத்தியமில்லை. அவ்வளவு நிலம் இல்லை என அதிமுக மறுத்தது. ஆனால் முந்தைய ஆட்சியில் ஆளுநர் உரையில் உள்ளதை கலைஞர் எடுத்துக்காட்டினார். அது அதிகாரிகள் சொன்னதை நம்பி தவறாக தரப்பட்டதாக அதிமுக தரப்பு விளக்கம் தந்தது. இந்தத் தகவல் எல்லாம் ஏடுகளில் வந்தன. ஆனால் “ஆளுநர் உரையில் சொன்னது பொய்” எனில் அதை அடுத்த உரையில் மறுத்தார்களா? மாற்றி தந்தார்களா? இல்லை. அப்படியானால் “ஆளுநர் உரையும் நம்பத்தகுந்தது இல்லையா?’ 50 லட்சம் ஏக்கர் நிலம் எங்கே போனது? யாரும் கேட்கத்தயார் இல்லை - இடதுசாரிகளைத் தவிர. ஆனால் ஊடகங்கள் இதைக்கண்டு கொள்ளவே இல்லை. இதில் கிளைமாக்° என்னவெனில் இந்த நிலங்கள் யார் யாரால் அபகரிக்கப்பட்டு நூறு ஏக்கர், ஐநூறு ஏக்கர், ஆயிரம் ஏக்கர் என வேலிபோடப்பட்டுள்ளது என்கிற விபரத்தை சென்னையில் காமராஜ் அரங்கில் பெரிய மாநாடு நடத்தி பட்டியலை அச்சிட்டு கொடுத்தபோதும், எல்லா ஊடகங்களும் அந்த மாநாட்டிற்கு வந்திருந்தும் அதனை வெளியிடவில்லை. ஏனெனில் தங்களுக்கு விளம்பரம் தரும் பெரிய நிறுவனங்கள்தாம் அந்த காரியத்தை செய்துள்ளன என்பதால், வெளியிட மறுத்து விட்டன. இதுதான் தமிழக ஊடகங்களின் வர்க்க பாசத்திற்கு சரியான உதாரணம்.
இதேபோல பல எடுத்துக்காட்டுகளைக் கூறலாம். இன்னொன்றை பார்ப்போம். குழந்தைகளுக்கு தடுப்பூசி தயாரிக்கும் கிண்டி கிங் இன்°டிடியூட் மற்றும் குன்னூர் பா°டர் நிறுவனம் இவற்றை மத்திய அரசு மூடிவிட்டு தனியாரிடம் கொடுக்க முனையும்போது அதன் ஆபத்துகளைக் கூற இடதுசாரி ஏடுகளைத் தவிர வேறு இல்லை.
தேவையான கண்ணாடிகள்
தலித் பார்வை, பெண் பார்வை, உழைக்கும் மக்கள் பார்வை என அடிப்படையாக இம்மூன்றிலும் உலக ஊடகங்கள், தேசிய ஊடகங்கள் அடியொற்றியே தமிழக ஊடகங்களும் செல்கின்றன.
தேர்தல் நேரம். ஆகவே பலவற்றை நான் இங்கு பகிரங்கமாக பேச முடியாது. ஆனால் மலையும் மடுவுமாய் சமூகம் மேலும் மேலும் பிளவுபட்டு வருவதை, சிறு பகுதியினருக்கான ஒளிரும் இந்தியாவும், பெரும்பான்மை மக்களுக்கு வறண்ட இந்தியாவும் என இரண்டு இந்தியாவாக பிளவுண்டதை ஊடகங்கள் சொல்லுமா? மதவெறியின் கோர விளைவுகளை - ராணுவத்தில் நீதித்துறையில் எங்கும் ஊடுருவிவிட்ட மத, சாதி ஆதிக்கத்தை ஊடகங்கள் தோலுரிக்குமா? புதிய பாதையில் தேசம் நடை போட வழி காட்டுமா? தனிப்பட்ட அமைச்சர்களின் செயல்திறன் குறைவால்தான் பிரச்சனைகள் புரையோடுவதாக மாற்றி மாற்றி குற்றஞ் சாட்டுபவர்கள்; கொள்கைக் கோளாறை முன்னிலைப்படுத்துவதில்லையே ஏன்? எதிரும் புதிருமாக கச்சை கட்டி நிற்பவர்கள் சாராம்சத்தில் ஒரே வர்க்க நலனைத் தானே பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்ற உண்மையை ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுமா? கொள்கை மாற்றத்துக்கு குரல் கொடுக்குமா? நிச்சயம் ஊடகங்கள் அதைச் செய்யப்போவதில்லை. தனி நபர் மோதல்களாக - லாவணிக் கச்சேரியாக - உணர்ச்சி போராட்டமாக - தேர்தல்களம் மாற்றப்படும். ஊடகங்கள் அக்காரியத்தைத் தான் செய்யும் இன்னும் பேச தேர்தல் நடத்தை விதி குறுக்கீடு செய்வதால் இத்தோடு அமைகிறேன்.
ஒரே ஒரு வேண்டுகோள் இங்கே எம் உரை கேட்ட மாணவர்களில் ஒருவராவது ஊடகத்துறையில்/ பெண் பார்வையில்/ தலித் பார்வையில்/உழைக்கும் மக்கள் பார்வையில்/ கிராமத்துப் பார்வையில்/தொலை நோக்குப் பார்வையில்/ அறிவியல் பார்வையில் மொத்தத்தில் மார்க்சியப் பார்வையில் செயல்பட முனைந்தால் அதுவே எமக்கு வெற்றி
பெரியார் அணிந்த சமூகக் கண்ணாடியை - அம்பேத்கார் அணிந்த சமூகக் கண்ணாடியை - சிங்காரவேலர் - அணிந்த சமூகக் கண்ணாடியை - மாணவர்கள் அறிய வேண்டும். இன்றைய சமூகத் தேவையை - சமூக அறிவியில் கண்ணோட்டத்தில் - மார்க்சிய கண்ணோட்டத்தில் பார்க்கப் பழக வேண்டும் என்பதே என் விழைவு. வேண்டுகோள்.
‘மார்க்சிய கண்ணோட்டம்’ என்பது சிலருக்கு ஏற்கத்தக்கதாக இல்லாமல் கூட இருக்கலாம். அல்லது நீங்கள் நாளை பணியாற்றப்போகிற நிறுவனத்தில் அதற்கு இடம் இல்லாமல் போகலாம். ஆயினும், காந்தியின் ஒரு அளவுகோலைப் பயன்படுத்த நீங்கள் முயன்றாலேகூட நன்மைகள் நிறைய விளையும்.
ஆம். மகாத்மா காந்தி ஒரு முறை சொன்னார் “உன்னுடைய பேச்சு, எழுத்து, செயல் சமூகத்தின் கடைக்கோடியில் இருக்கிற கடையனுக்கும் கடையனுக்கு சிறிதாவது பயன்படுமா, நன்மை தருமா என்று யோசித்துப்பார்” காந்தியின் இந்த அளவு கோலையாவது மனதில் எப்போதும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என அன்போடு வேண்டுகிறேன்.
வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி! நன்றி!! நன்றி!!!
சு.பொ. அகத்தியலிங்கம்
agathee2007@gmail.com
[ இந்த மின்னஞ்சல் www.odumnathi.blogspot.com என்கிற மின்னஞ்சல் திரட்டியில், திரட்டப்படுகிறது. ]
www.beyouths.blogspot.com
Thanks!
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
Wednesday, March 18, 2009
உளப்பாதிப்புக்குள்ளாகும் பல பாடசாலை சிறுவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்!!!
உளப்பாதிப்புக்குள்ளாகும் பல பாடசாலை சிறுவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்
[18 - March - 2009]
பலவித உளப்பாதிப்புகளுக்கு உள்ளாகும் பல பாடசாலை சிறுவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து, உளப்பாதிப்பை எதிர்கொண்டுள்ள பிள்ளைகளுக்கு உதவும் வகையில் விசேட ஆற்றுப்படுத்தல் செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஜெகத்வெல்லவத்தே தெரிவித்தார்.
போதைப்பொருள்பாவனை,சிறுவர் துஷ்பிரயோகம், காதல் விவகாரங்கள்,கல்வியில் சித்தியின்மை,வீட்டில் சுமுகமான சூழல் இன்மை போன்ற காரணிகள் சிறுவர்களின் உளப்பாதிப்புக்கு பிரதான காரணமெனவும் வெல்லவத்தே குறிப்பிட்டார்.
இதனிடையே கல்விபயிலும் சிறுவர்களுக்காக எதிர்காலத்தில் தேசிய ஆற்றுப்படுத்தல் நிலையமொன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நிறுவவுள்ளதாகவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்சமயம் ,வன்னியில் தொடரும் யுத்த சூழல் காரணமாக வன்னியைச்சேர்ந்த பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தமது உறவுகளை இழந்தநிலையில் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வன்னியில் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்வை அப்பகுதிமக்கள் எதிர்கொள்ள நேரிட்டமை காரணமாக தமது பாடசாலைக்கல்வியை சிறுவர்கள் இழந்துள்ளதோடு, கல்வியைத் தொடர்வதற்கான எந்தவொரு அடிப்படை வசதியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பிடம் ,சுத்தமான குடிநீர் ,உணவு போன்ற அடிப்படை வசதிகளை குறைந்த பட்சமேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வன்னிப்பிரதேச சிறுவர்கள், அரசுக்கும் புலிகளுக்குமிடையே நடைபெறும் போரில் சிக்குண்டு உயிர்துறக்கும் ஆபத்தைக்கூட இன்று எதிர்கொண்டுள்ளனர்.
அண்மையில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுமார் 60 ஆயிரம் சிறுவர்கள் அடிப்படை வசதிகளை இழந்த நிலையில் தமது கல்வியை தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
பல மனிதாபிமான பணிநிறுவனகளும் யுத்தத்தில் சிக்குண்டுள்ள சிறுவர்கள், முதியோர், பெண்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இருதரப்பும் ஏற்பாடுகளை செய்யவேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன.
Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com
[18 - March - 2009]
பலவித உளப்பாதிப்புகளுக்கு உள்ளாகும் பல பாடசாலை சிறுவர்கள் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்படுவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கிணங்க சுகாதார அமைச்சுடன் இணைந்து, உளப்பாதிப்பை எதிர்கொண்டுள்ள பிள்ளைகளுக்கு உதவும் வகையில் விசேட ஆற்றுப்படுத்தல் செயற்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் ஜெகத்வெல்லவத்தே தெரிவித்தார்.
போதைப்பொருள்பாவனை,சிறுவர் துஷ்பிரயோகம், காதல் விவகாரங்கள்,கல்வியில் சித்தியின்மை,வீட்டில் சுமுகமான சூழல் இன்மை போன்ற காரணிகள் சிறுவர்களின் உளப்பாதிப்புக்கு பிரதான காரணமெனவும் வெல்லவத்தே குறிப்பிட்டார்.
இதனிடையே கல்விபயிலும் சிறுவர்களுக்காக எதிர்காலத்தில் தேசிய ஆற்றுப்படுத்தல் நிலையமொன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நிறுவவுள்ளதாகவும் அதன் தலைவர் மேலும் தெரிவித்தார்.
தற்சமயம் ,வன்னியில் தொடரும் யுத்த சூழல் காரணமாக வன்னியைச்சேர்ந்த பல ஆயிரக்கணக்கான சிறுவர்கள் தமது உறவுகளை இழந்தநிலையில் அநாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.
வன்னியில் படை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதையடுத்து பத்துக்கும் மேற்பட்ட தடவைகள் இடம்பெயர்வை அப்பகுதிமக்கள் எதிர்கொள்ள நேரிட்டமை காரணமாக தமது பாடசாலைக்கல்வியை சிறுவர்கள் இழந்துள்ளதோடு, கல்வியைத் தொடர்வதற்கான எந்தவொரு அடிப்படை வசதியையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளனர்.
இருப்பிடம் ,சுத்தமான குடிநீர் ,உணவு போன்ற அடிப்படை வசதிகளை குறைந்த பட்சமேனும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ள வன்னிப்பிரதேச சிறுவர்கள், அரசுக்கும் புலிகளுக்குமிடையே நடைபெறும் போரில் சிக்குண்டு உயிர்துறக்கும் ஆபத்தைக்கூட இன்று எதிர்கொண்டுள்ளனர்.
அண்மையில் யுனிசெப் நிறுவனம் வெளியிட்டிருந்த அறிக்கையில் சுமார் 60 ஆயிரம் சிறுவர்கள் அடிப்படை வசதிகளை இழந்த நிலையில் தமது கல்வியை தொடரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது.
பல மனிதாபிமான பணிநிறுவனகளும் யுத்தத்தில் சிக்குண்டுள்ள சிறுவர்கள், முதியோர், பெண்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு இருதரப்பும் ஏற்பாடுகளை செய்யவேண்டுமென்பதையும் சுட்டிக்காட்டியுள்ளன.
Thinakkural.com / Thinakural.com - Site By Evosof.com
Tuesday, March 17, 2009
சிதம்பரத்துக்கு பத்து கேள்விகள்!!!
சிதம்பரத்துக்கு பத்து கேள்விகள்
1. மொதக் கேள்வி, வளசரவாக்கத்திலருந்து எங்க கேப்புடன்னு விஜியகாந்து..அவரு கேள்வி என்னான்னா...."எலங்கை பிரச்சினைல இந்தியா ஓரளவு தான் தலையிட முடியும்னு ஒங்க சேக்காளி கலிஞ்சரு சொல்றாரு...பிராணனை வாங்குற மொகர்ஜி சொல்றாரு...அப்பிடின்னா...ஒங்க தலீவரு ராசீவ் காந்தி எப்பிடி ஒப்பந்தம் போட்டாரு??"
2. ரெண்டாவது கேள்வி, பாதி வளசரவாக்கம் விஜிய காந்து மீதி நானு ..."புலிங்க ஆயுதத்தை கீழ போட்டா எலங்கை அரசு பேசும்னு நீங்க சொல்றீங்க...அப்ப...தமிழ் பெண்களை கற்பழிக்கிறது, ஆஸ்பத்திரியில ஷெல்லடிக்கிறது, செத்த ஒரு பொண்ணோட பாடியை கற்பழிக்கிறது....இந்த மாதிரி நடக்கிற இந்த போரை நடத்துறது இந்தியா தானா??"
3. மூணாவது கேள்வி, தட்ஸ் தமிழ்ல யாரோ ஒருத்தர் கேட்டுருந்தது..."இலங்கை பிரச்சினை அறுவது வருஷமா நடக்குதுன்னு சொல்றீங்க...அதே சமயம் பிரபாகரனால தான் பிரச்சினைன்னு சொல்றீங்க...பிரபாகரனுக்கு வயசே அறுவது இருக்காது...கணக்கு ஒதைக்குதே அப்பச்சி...ஒரு வேளை, பொறக்குறதுக்கு முன்னாடியே காந்தி குடும்பத்து வாரிசு தான் தலீவருன்னு என்ன எளவு கமிட்டி அது...ஆங்..காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டி தீர்மானிக்கிற மாதிரி, பொறக்குறதுக்கு முன்னாடியே அவரு புலியா பொறந்துட்டாரோ??"
4. நாலாவது கேள்வி, புலிக ஆயுதத்த கீழ போடணும்...அப்படின்னா தான் சிறீலங்கா பேசும்னு சொல்லியிருக்கிய...என்ன எளவு இது...ஏம்ல, ஒருத்தன் ஒரு பொம்பிளைய கெடுத்துக்கிட்டு இருக்கும் போது, அந்த பொம்பிள சத்தம் போடாம சும்மா இருந்தா அவனும் சும்மா இருப்பான்ன்னு சொல்ற மாதிரு இருக்கேவே?
5. அஞ்சாவது கேள்வி..அமிர்த லிங்கம் எங்கன்னு கேக்குறீயளே....அவரைக் கொன்னது யாரு?? அப்பிடியே அமைதி முறையில போராடுறேன்னு உண்ணாவிரதம் இருந்தானே திலீபன் அவன் எங்கவே? அரசியல் வழியில போராடுன தந்தை செல்வா எங்கவே??
6. ஆறாவது கேள்வி...ஒடன்பாடு போட்டோம் ஒடன்பாடு போட்டோம்னு கூப்பாடு போடுறிய...பன்னிக்குட்டி பெரிசானா தண்ணியடிக்காமயே ஆடுமாம்கிற மாதிரி, நீரே உண்மைய ஒளறி கொட்டிருக்கீரு....ராசீவ் காந்தி ஒடன்பாடு போட்டாரு...உம்ம தான்...ஆனா யாரு கூட போட்டாரு....ஜெயவர்தனே கூட...ஜெயவர்தனேவுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை...ஆனா, உடன்பாடு போட்றது ஜெயவர்தனேவும், ராசீவ் காந்தியும்...என்னவே ரொம்ப மொக்கையா இல்ல??
7.ஏழாவது... பிரபாகரனின் சம்மதத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம்னு சொல்லியிருக்கீரு...அதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி தான் அரை மனதுன்னு சொல்லியிருக்கீரு...சம்மதிக்காட்டி ஒழிச்சிருவோம்னு இந்தியா சொன்னது உண்மையா?
8. எட்டாவது...இந்திய அமைதிப்படை வீரர்கள் பலர் மரணமடைந்தனர்னு சொல்றீங்க...தமிழர்களை கற்பழித்தப் படைன்னு அதை வரவேற்கக் கூட கலைஞர் போகலை...அப்ப அது அமைதிப்படையா, இல்லை அதிரடி கற்பழிப்புப் படையா?? கொன்னுட்டாங்கன்னு சொல்றீங்க...ரொம்ப வருத்தமான விஷயம் தான்...அதுனாலும் சண்டைல நடந்தது...ஆனா, அங்க நடந்த கற்பழிப்புக்கு நீங்களோ இந்திய ஜனாதிபதியோ, மண் மோகன் சிங்கோ(எழுத்துப் பிழை அல்ல), இந்தியாவோட சூப்பர் பெரதமர் அன்னை சோனியாவோ மன்னிப்பு கேப்பீங்களா??
9. ஒம்போது...பிரபாகரன் சர்வாதிகாரின்னு சொல்றீங்க...இருக்கட்டும்...ஆனா, இப்ப நடக்கிற பிரச்சினை பிரபாகரன்னு ஒரு தனி மனிதனை பாதிக்கலையே...அகதிகள் இருக்கிற ஆஸ்பத்திரில ஷெல்லடிச்சானுங்கன்னு செஞ்சிலுவை சங்கமே சொல்லுது...அங்க இருந்தது பிரபாகரனா?? இதெல்லாம் உங்க காதில விழுதா இல்லா செவிடாயிட்டீங்களா??
10. பத்து...இன்னொரு நாட்டோட உள்நாட்டு விவகாரத்துல தலையிட முடியாதுன்னு உங்க கூட்டாளிங்கல்லாம் அறிக்கை விடுறாங்க...அப்படின்னா, ஹிட்லர் யூதர்களை படுகொலை செஞ்சது கூட உள்நாட்டு விவகாரம்னு சொல்வீங்களா?? சொன்னாலும் சொல்லுவீரு அப்பச்சி...நீரு தான் உள்நாட்டு மந்திரியாச்சே!
நன்றி:
http://muranthodai.blogspot.com/2009/02/blog-post_21.html
--
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை
http://periyaryouth.blogspot.com
http://makizhnan.wordpress.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com
http://vizhithezhuiyakkam.blogspot.com
1. மொதக் கேள்வி, வளசரவாக்கத்திலருந்து எங்க கேப்புடன்னு விஜியகாந்து..அவரு கேள்வி என்னான்னா...."எலங்கை பிரச்சினைல இந்தியா ஓரளவு தான் தலையிட முடியும்னு ஒங்க சேக்காளி கலிஞ்சரு சொல்றாரு...பிராணனை வாங்குற மொகர்ஜி சொல்றாரு...அப்பிடின்னா...ஒங்க தலீவரு ராசீவ் காந்தி எப்பிடி ஒப்பந்தம் போட்டாரு??"
2. ரெண்டாவது கேள்வி, பாதி வளசரவாக்கம் விஜிய காந்து மீதி நானு ..."புலிங்க ஆயுதத்தை கீழ போட்டா எலங்கை அரசு பேசும்னு நீங்க சொல்றீங்க...அப்ப...தமிழ் பெண்களை கற்பழிக்கிறது, ஆஸ்பத்திரியில ஷெல்லடிக்கிறது, செத்த ஒரு பொண்ணோட பாடியை கற்பழிக்கிறது....இந்த மாதிரி நடக்கிற இந்த போரை நடத்துறது இந்தியா தானா??"
3. மூணாவது கேள்வி, தட்ஸ் தமிழ்ல யாரோ ஒருத்தர் கேட்டுருந்தது..."இலங்கை பிரச்சினை அறுவது வருஷமா நடக்குதுன்னு சொல்றீங்க...அதே சமயம் பிரபாகரனால தான் பிரச்சினைன்னு சொல்றீங்க...பிரபாகரனுக்கு வயசே அறுவது இருக்காது...கணக்கு ஒதைக்குதே அப்பச்சி...ஒரு வேளை, பொறக்குறதுக்கு முன்னாடியே காந்தி குடும்பத்து வாரிசு தான் தலீவருன்னு என்ன எளவு கமிட்டி அது...ஆங்..காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டி தீர்மானிக்கிற மாதிரி, பொறக்குறதுக்கு முன்னாடியே அவரு புலியா பொறந்துட்டாரோ??"
4. நாலாவது கேள்வி, புலிக ஆயுதத்த கீழ போடணும்...அப்படின்னா தான் சிறீலங்கா பேசும்னு சொல்லியிருக்கிய...என்ன எளவு இது...ஏம்ல, ஒருத்தன் ஒரு பொம்பிளைய கெடுத்துக்கிட்டு இருக்கும் போது, அந்த பொம்பிள சத்தம் போடாம சும்மா இருந்தா அவனும் சும்மா இருப்பான்ன்னு சொல்ற மாதிரு இருக்கேவே?
5. அஞ்சாவது கேள்வி..அமிர்த லிங்கம் எங்கன்னு கேக்குறீயளே....அவரைக் கொன்னது யாரு?? அப்பிடியே அமைதி முறையில போராடுறேன்னு உண்ணாவிரதம் இருந்தானே திலீபன் அவன் எங்கவே? அரசியல் வழியில போராடுன தந்தை செல்வா எங்கவே??
6. ஆறாவது கேள்வி...ஒடன்பாடு போட்டோம் ஒடன்பாடு போட்டோம்னு கூப்பாடு போடுறிய...பன்னிக்குட்டி பெரிசானா தண்ணியடிக்காமயே ஆடுமாம்கிற மாதிரி, நீரே உண்மைய ஒளறி கொட்டிருக்கீரு....ராசீவ் காந்தி ஒடன்பாடு போட்டாரு...உம்ம தான்...ஆனா யாரு கூட போட்டாரு....ஜெயவர்தனே கூட...ஜெயவர்தனேவுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சினை...ஆனா, உடன்பாடு போட்றது ஜெயவர்தனேவும், ராசீவ் காந்தியும்...என்னவே ரொம்ப மொக்கையா இல்ல??
7.ஏழாவது... பிரபாகரனின் சம்மதத்தோடு போடப்பட்ட ஒப்பந்தம்னு சொல்லியிருக்கீரு...அதுக்கு ரெண்டு நிமிஷம் முன்னாடி தான் அரை மனதுன்னு சொல்லியிருக்கீரு...சம்மதிக்காட்டி ஒழிச்சிருவோம்னு இந்தியா சொன்னது உண்மையா?
8. எட்டாவது...இந்திய அமைதிப்படை வீரர்கள் பலர் மரணமடைந்தனர்னு சொல்றீங்க...தமிழர்களை கற்பழித்தப் படைன்னு அதை வரவேற்கக் கூட கலைஞர் போகலை...அப்ப அது அமைதிப்படையா, இல்லை அதிரடி கற்பழிப்புப் படையா?? கொன்னுட்டாங்கன்னு சொல்றீங்க...ரொம்ப வருத்தமான விஷயம் தான்...அதுனாலும் சண்டைல நடந்தது...ஆனா, அங்க நடந்த கற்பழிப்புக்கு நீங்களோ இந்திய ஜனாதிபதியோ, மண் மோகன் சிங்கோ(எழுத்துப் பிழை அல்ல), இந்தியாவோட சூப்பர் பெரதமர் அன்னை சோனியாவோ மன்னிப்பு கேப்பீங்களா??
9. ஒம்போது...பிரபாகரன் சர்வாதிகாரின்னு சொல்றீங்க...இருக்கட்டும்...ஆனா, இப்ப நடக்கிற பிரச்சினை பிரபாகரன்னு ஒரு தனி மனிதனை பாதிக்கலையே...அகதிகள் இருக்கிற ஆஸ்பத்திரில ஷெல்லடிச்சானுங்கன்னு செஞ்சிலுவை சங்கமே சொல்லுது...அங்க இருந்தது பிரபாகரனா?? இதெல்லாம் உங்க காதில விழுதா இல்லா செவிடாயிட்டீங்களா??
10. பத்து...இன்னொரு நாட்டோட உள்நாட்டு விவகாரத்துல தலையிட முடியாதுன்னு உங்க கூட்டாளிங்கல்லாம் அறிக்கை விடுறாங்க...அப்படின்னா, ஹிட்லர் யூதர்களை படுகொலை செஞ்சது கூட உள்நாட்டு விவகாரம்னு சொல்வீங்களா?? சொன்னாலும் சொல்லுவீரு அப்பச்சி...நீரு தான் உள்நாட்டு மந்திரியாச்சே!
நன்றி:
http://muranthodai.blogspot.com/2009/02/blog-post_21.html
--
அன்பும் ,பகுத்தறிவுடனும்.
மகிழ்நன்.
+919769137032
தாராவி, மும்பை
http://periyaryouth.blogspot.com
http://makizhnan.wordpress.com
http://kayalmakizhnan.blogspot.com
http://scientifictamil.blogspot.com
http://vizhithezhuiyakkam.blogspot.com
Friday, March 13, 2009
சாருவின் கேரளாவும், நமது தமிழகமும் !!!
தமிழ் பிரவாகம்
சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்
எழுத்தாளர் சாரு நிவேதித்தா, கேராளாவை அடிக்கடி
சிலாகித்து எழுதுவார். அங்கு எழுத்தாளர்கள் மிகவும்
கொண்டாடப் படுகிறார்கள். அவர்களின் நூல்கள்
மிக அதிகம் படிக்கபடுகின்றது /மதிக்கபபடுகிறார்கள்.
ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் அந்த அளவு தமிழ்னாட்டில்
மதிக்கப்படுவதில்லை. புத்தக விற்பனையும் குறைவு.
இப்படி...
இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் கேரளா /
தமிழ்நாடு பற்றிய சரியான ஒப்பீட்டை தராது. தொழில்
வளார்ச்சி, வேலை வாய்ப்புகள், வன்முறை, ஜனனாயக
அடிப்படைகள் போன்றவை தாம் முக்கியம். அடிப்படை
தேவைகள்.
கேரளாவில் 40களில் இருந்து கம்யூனிச கொள்கைகள்
பரவலாக பரவி, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை, 1957இல்
அமைத்தது. தொழில் முனைவோர் எதிரிகளாக பார்க்கப்
பட்டனர். தொழிலாளர்கள் உரிமைகளுக்காக மட்டும்
போராடினர். கடமை பற்றி கவலைப்படவில்லை. மொத்த
விளைவு : கேரளாவில் கடுமையான வேலை இல்லாத்
திண்டாட்டம். மலையாளிகள் வேலை தேடி உலகெங்கும்
புலம் பெயர்ந்தன். பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
தமிழ் நாட்டிற்க்கு பல லச்சம் மலையாளிகள் வேலை
தேடி வந்தனர் / வருகின்றனர். மாற்றாக தமிழர்
கேரளாவிற்க்கு வேலை தேடி செல்வது மிக மிக
குறைவே.
கேராளா எல்லையை தாண்டினால், ஒரு மலையாளி
மிக 'நல்ல' தொழிலாளியாகிவிடுவார். சுறுறுப்பு, திறமை,
வேலையில் அர்பணிப்பு, ஊக்கம் போன்ற குணங்கள்
வெளிப்படும். வாழ்க்கையில் முன்னேற மிக முயல்வர்.
ஆனால் இந்த குணங்கள் கேராளவிற்க்குள் இருக்கும்
போது சிறிதேனும் வெளிப்படாத விந்தை மனிதர்கள்.
திருச்சூர் போன்ற பகுதிகளில் நம லக்கேஜை நாமே
வாகனத்திலிருந்து இறக்கினாலும், அந்த பகுதி
கலாஸிகளுக்கு 'கூலி' தரவேண்டும். வேலை ஏதும்
செய்யாமலே கூலி கேட்க்கும் வினோதம் தமிழகத்தில்
இல்லை.
கேரள விவசாயத்தின் அவலங்களை பற்றி ஒரு
தனிப்பதிவே எழுத வேண்டும். நிலச்சீர்திருத்தம்
'வெற்றிகரமாக' நடந்ததால் சிறு துண்டுகளாக சிதறிய
'பண்ணைகள்' இன்று பரிதாபனான நிலையில் உள்ளன்.
நெல் உற்பத்தி 30 வருடங்களுக்கு முன் இருந்ததை
விட குறைந்துவிட்டது. ஆம், குறைந்துவிட்டது.
கேரளாவில் நீர் வளம், மின்சாரம், துறைமுகங்கள்,
போக்குவரத்து கட்டமைப்புகள், நிதி மூலதனம் (கேரள
வங்கிகளில் என்.ஆர்.அய் சேமிப்புகள் குவிந்துள்ளன),
திறமையான தொழிலாளர்கள் என்று அனைத்து வசதிகள்
இருந்தாலும், பைத்தியக்காரன் தான் அங்கு புதிய தொழில்
தொடங்க முனைவான்.
பந்த, வேலை நிறுத்தம் போன்றவை மிக சாதாரணம்.
மலையாளிகளே நடத்தும் வலைமனை இது. பார்க்க :
http://savekerala.blogspot.com/
இவற்றோடு ஒப்பிடும் போது நமது தமிழக நிலை
எவ்வளவோ மேல். வேலை வாய்ப்பு மற்றும் தொழில்
வளர்ச்சி மிக மிக அதிகம். வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் என்ற பெயரில் பல கோடி வெளிமானிலத்தவர்
இங்கு வேலை தேடி வந்து வாழ்கின்றனர்.
கேரளாவில் வன்முறை அளவு, தமிழகத்தை விட மிக
அதிகம். தேர்தலில் புதிய வேட்பாளர்கள் / கட்சிகள்
போட்டியிடுவது இங்கு எளிது. ஆனால் அங்கு காங்கிரஸ்
/ கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர புதியவர் நுழைந்தால்
ஃபாசிச எதிர்விளைவுகள் தாம்.
எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் கேரளா சொர்க
பூமியாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு.
சாருவின் அபிமான மலையாள எழுத்தாளாரான பால்
ஸக்கரியாவின் கட்டுரை தான் இது :
"முட்டாள்களின் சொர்க்கம்" ; மாயாவித் திருடர்கள்
http://kalachuvadu.com/issue-89/pathi03.asp
இந்த பாரா ஸ்கரியாவின் கட்டுரையிலிருந்துதான் :
"..பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை'
உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள்
தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத்
தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்
தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில்
தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு
முன்னால் செல்வதாக நான் முன்பே
குறிப்பிட்டேன்."
சாருவின் கேரளாவும், நமது தமிழகமும்
எழுத்தாளர் சாரு நிவேதித்தா, கேராளாவை அடிக்கடி
சிலாகித்து எழுதுவார். அங்கு எழுத்தாளர்கள் மிகவும்
கொண்டாடப் படுகிறார்கள். அவர்களின் நூல்கள்
மிக அதிகம் படிக்கபடுகின்றது /மதிக்கபபடுகிறார்கள்.
ஆனால் தமிழ் எழுத்தாளர்கள் அந்த அளவு தமிழ்னாட்டில்
மதிக்கப்படுவதில்லை. புத்தக விற்பனையும் குறைவு.
இப்படி...
இருக்கலாம். ஆனால் இவை எல்லாம் கேரளா /
தமிழ்நாடு பற்றிய சரியான ஒப்பீட்டை தராது. தொழில்
வளார்ச்சி, வேலை வாய்ப்புகள், வன்முறை, ஜனனாயக
அடிப்படைகள் போன்றவை தாம் முக்கியம். அடிப்படை
தேவைகள்.
கேரளாவில் 40களில் இருந்து கம்யூனிச கொள்கைகள்
பரவலாக பரவி, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை, 1957இல்
அமைத்தது. தொழில் முனைவோர் எதிரிகளாக பார்க்கப்
பட்டனர். தொழிலாளர்கள் உரிமைகளுக்காக மட்டும்
போராடினர். கடமை பற்றி கவலைப்படவில்லை. மொத்த
விளைவு : கேரளாவில் கடுமையான வேலை இல்லாத்
திண்டாட்டம். மலையாளிகள் வேலை தேடி உலகெங்கும்
புலம் பெயர்ந்தன். பெயர்ந்து கொண்டே இருக்கின்றனர்.
தமிழ் நாட்டிற்க்கு பல லச்சம் மலையாளிகள் வேலை
தேடி வந்தனர் / வருகின்றனர். மாற்றாக தமிழர்
கேரளாவிற்க்கு வேலை தேடி செல்வது மிக மிக
குறைவே.
கேராளா எல்லையை தாண்டினால், ஒரு மலையாளி
மிக 'நல்ல' தொழிலாளியாகிவிடுவார். சுறுறுப்பு, திறமை,
வேலையில் அர்பணிப்பு, ஊக்கம் போன்ற குணங்கள்
வெளிப்படும். வாழ்க்கையில் முன்னேற மிக முயல்வர்.
ஆனால் இந்த குணங்கள் கேராளவிற்க்குள் இருக்கும்
போது சிறிதேனும் வெளிப்படாத விந்தை மனிதர்கள்.
திருச்சூர் போன்ற பகுதிகளில் நம லக்கேஜை நாமே
வாகனத்திலிருந்து இறக்கினாலும், அந்த பகுதி
கலாஸிகளுக்கு 'கூலி' தரவேண்டும். வேலை ஏதும்
செய்யாமலே கூலி கேட்க்கும் வினோதம் தமிழகத்தில்
இல்லை.
கேரள விவசாயத்தின் அவலங்களை பற்றி ஒரு
தனிப்பதிவே எழுத வேண்டும். நிலச்சீர்திருத்தம்
'வெற்றிகரமாக' நடந்ததால் சிறு துண்டுகளாக சிதறிய
'பண்ணைகள்' இன்று பரிதாபனான நிலையில் உள்ளன்.
நெல் உற்பத்தி 30 வருடங்களுக்கு முன் இருந்ததை
விட குறைந்துவிட்டது. ஆம், குறைந்துவிட்டது.
கேரளாவில் நீர் வளம், மின்சாரம், துறைமுகங்கள்,
போக்குவரத்து கட்டமைப்புகள், நிதி மூலதனம் (கேரள
வங்கிகளில் என்.ஆர்.அய் சேமிப்புகள் குவிந்துள்ளன),
திறமையான தொழிலாளர்கள் என்று அனைத்து வசதிகள்
இருந்தாலும், பைத்தியக்காரன் தான் அங்கு புதிய தொழில்
தொடங்க முனைவான்.
பந்த, வேலை நிறுத்தம் போன்றவை மிக சாதாரணம்.
மலையாளிகளே நடத்தும் வலைமனை இது. பார்க்க :
http://savekerala.blogspot.com/
இவற்றோடு ஒப்பிடும் போது நமது தமிழக நிலை
எவ்வளவோ மேல். வேலை வாய்ப்பு மற்றும் தொழில்
வளர்ச்சி மிக மிக அதிகம். வந்தாரை வாழ வைக்கும்
தமிழகம் என்ற பெயரில் பல கோடி வெளிமானிலத்தவர்
இங்கு வேலை தேடி வந்து வாழ்கின்றனர்.
கேரளாவில் வன்முறை அளவு, தமிழகத்தை விட மிக
அதிகம். தேர்தலில் புதிய வேட்பாளர்கள் / கட்சிகள்
போட்டியிடுவது இங்கு எளிது. ஆனால் அங்கு காங்கிரஸ்
/ கம்யூனிஸ்ட் கட்சிகள் தவிர புதியவர் நுழைந்தால்
ஃபாசிச எதிர்விளைவுகள் தாம்.
எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் கேரளா சொர்க
பூமியாக இருக்கலாம். ஆனால் மக்களுக்கு.
சாருவின் அபிமான மலையாள எழுத்தாளாரான பால்
ஸக்கரியாவின் கட்டுரை தான் இது :
"முட்டாள்களின் சொர்க்கம்" ; மாயாவித் திருடர்கள்
http://kalachuvadu.com/issue-89/pathi03.asp
இந்த பாரா ஸ்கரியாவின் கட்டுரையிலிருந்துதான் :
"..பொய்களை வைத்து 'மக்கள் போராட்டங்களை'
உருவாக்கும் இது போன்ற மாயாவித் திருடர்கள்
தமிழ்நாட்டில் இருக்கிறார்களா என்று எனக்குத்
தெரியவில்லை. குறைவாக இருக்கலாம். அதனால்
தான் அடிப்படைப் பொருளாதார வளர்ச்சியில்
தமிழகம் கேரளத்தைவிட ஒளியாண்டுகளுக்கு
முன்னால் செல்வதாக நான் முன்பே
குறிப்பிட்டேன்."
Thursday, March 12, 2009
வன்னியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்: முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர்!
வன்னியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்: முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர்
*உணவுக் கப்பலை புலிகள் தாக்கவும் இல்லை; உணவுப் பொருட்களை பறிக்கவும் இல்லை;
வன்னியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்: முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர்*
[ புதன்கிழமை, 11 மார்ச் 2009, 12:37.22 PM GMT +05:30 ] [ புதினம் ]
"நான் இந்த கடல் பகுதியில்தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான்
காணவில்லை. கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்"
என்று புதுமாத்தளன் பகுதியில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர் கே.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் கடற்பரப்புக்கு வந்த உணவுக் கப்பல்
மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா இராணுவம்
தெரிவித்துள்ளமை குறித்து லண்டன் பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே
அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிபிசி தமிழோசையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஒலிபரப்பாகிய நேர்காணலில்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
*இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதிக்கு கப்பல் மூலமாக ஒரு தொகுதி உணவுப்
பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது குறித்த செய்திகளை நேயர்கள் நேற்றைய
தமிழோசையில் கேட்டிருப்பீர்கள். அந்த கப்பலில் இருந்த உணவுப் பொருட்கள்
முழுமையாக இறக்கப்படாமலேயே அந்தக் கப்பல் இன்று திங்கட்கிழமை திருகோணமலைக்குத்
திரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து புதுமாத்தளன் பகுதியில்
இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் கே. பார்த்தீபனிடம் தொடர்பு
கொண்டு கேட்ட போது...
*
500 மெற்றிக் தொன் உணவுடன் நேற்று (ஞாயிறு) 7:30 மணியளவில் கப்பல் வந்தது.
நேற்று (ஞாயிறு) மாலை 5:30 மணி வரையில் 140 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள்
இறக்கப்பட்டன. மீதி உணவுப் பொருட்களை இறக்குவதற்கு இன்னும் எங்களுக்கு இரண்டு
நாட்கள் தேவைப்பட்டன. இன்று (திங்கள்) காலையில் 7:00 மணியளவில் கப்பல் மீண்டும்
ஆழ்கடலில் இருந்து மாத்தளன் பகுதிக்கு வந்திருந்தது. இருந்தும் கடும் காற்று,
மழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக நாங்கள் உணவுப்பொருட்களை இறக்க
முடியவில்லை.
*தற்போது கப்பல் எங்கே இருக்கிறது? *
கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இங்கிருந்த
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அப்படித்தான் கூறிச் சென்றனர்.
*அதேசமயம் அந்த கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதன்
காரணமாகவே அந்தக் கப்பல் ஆழ்கடலை நோக்கி சென்றிருப்பதாகவும் சிறிலங்கா
இராணுவத்தின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருக்கின்றது. அப்படி ஏதும்
தாக்குதலை நீங்கள் பார்த்தீர்களா? கேட்டீர்களா?
*
நான் இந்த கடல் பகுதியில்தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான்
காணவில்லை.
*அங்கு மக்களின் உணவுத் தேவைகள் எப்படி இருக்கின்றன?
*
மக்களின் உணவுத் தேவைகளுக்குத் தேவையான உணவுகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
பெப்ரவரி மாதம் தான் கப்பல் மூலம் உணவு எடுத்துவர ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும் ஆரம்பத்தில் குறைந்தளவு உணவுப் பொருட்களே எடுத்து வர
முடிந்ததினால் மக்களுக்குத் தேவையான சகல உணவுப் பொருட்களையும் எங்களால் வழங்க
முடியவில்லை. இருப்பினும் தற்போது நேற்று ஆரம்பித்தபடி இவ்வாறு பெருந்தொகையான
உணவுப் பொருட்கள் கொண்டு வர முடியும் என்றால் நாங்கள் தொடர்ந்து
மக்களுக்குத் தேவையான உணவை வழங்க முடியும். இப்பொழுது மக்கள் உணவைப் பெற
முடியாத நிலையில் மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கொண்டு வந்த
உணவு வழங்குவதற்குப் போதுமானதாக இல்லை.
*விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்னமும் எத்தனைப பேர்
இருக்கிறார்கள் என்கிற புள்ளி விபரம் உங்களிடம் இருக்கிறதா?
*
நாங்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஏற்கனவே
அறிவித்திருக்கின்றோம். 81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 30
ஆயிரம் பேர் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.
*அதே சமயத்தில் இது தொடர்பாக அரசாங்க தரப்பிலும் இராணுவத் தரப்பிலும்
சொல்லப்படும் புள்ளி விபரக் கணக்குப்படி 70 ஆயிரம் பொதுமக்கள் தான் புலிகளின்
கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. அதற்கு
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
*
உண்மையில் அது தொடர்பில் எனக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் இங்கே
இருக்கின்ற கிராம உத்தியோகத்தர்கள், உதவி அரசாங்க அதிபர்களின் அறிக்கைகளின்
வாயிலாக, அண்ணளவாக 81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்திற்கு 30 ஆயிரம்
பேர் இருப்பதாக நாங்கள் எங்களுடைய அமைச்சுகளுக்கு அறிவித்திருக்கின்றோம்.
*அவர்களுடைய மதிப்பீட்டின் படி தற்போது இருக்கும் உணவு அங்கிருக்கும்
பொதுமக்களுக்கு எத்தனை நாட்கள் வரும்?
*
நாங்கள் நேற்று இறக்கிய 145 மெற்றிக் தொன் உணவோடு சேர்த்து, மொத்தமாக இங்கு
வந்த 500 மெற்றிக் தொன் உணவையும் கிட்டதட்ட 34 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு
வாரத்திற்கு வழங்க போதுமானவை என கணக்கிட்டு அதற்கேற்ப வழங்க நடவடிக்கை
எடுத்திருந்தோம். ஆனால் வந்த உணவுப் பொருட்களை இறக்காமல் கப்பல் திரும்பி
போனபடியால் குறிப்பிட்ட சிறுதொகையான மக்களுக்கே அதனை வழங்க முடியும்.
மீண்டும் கப்பல் உணவுப் பொருட்களுடன் வரும்போது மீதி மக்களுக்கு உணவுப்
பொருட்கள் வழங்கக்கூடியதாக இருக்கும்.
*உணவுத் தேவைகள் குறித்து உங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு உரிய முறையில் நீங்கள்
தெரியப்படுத்துகிறீர்களா?
*
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஊடாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு நாங்கள்
தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
*உங்களுடைய கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலித்து நீங்கள் விரும்பும் கால
எல்லைக்குள் உணவுப் பொருட்கள் அங்கு வந்து கொண்டிருக்கின்றனவா? *
தற்போது இந்த 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் வந்திருப்பது ஒரு
முன்னேற்றம் என கருதுகின்றேன்.
*அங்கிருக்கும் மக்களின் முக்கிய பிரச்சினையாக நீங்கள் எதைப்
பார்க்கின்றீர்கள்? அதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நீங்கள்
எதிர்பார்க்கின்றீர்கள்?
*
தற்போது இருக்கின்ற முக்கியமான பிரச்சினை உணவு சரியாக வழங்கப்பட வேண்டும்,
மருந்துப் பொருட்கள் இங்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஏனைய குடிநீர்
வழங்கல், கழிவு அகற்றல், மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் அவர்களுக்கு
ஒழுங்கான முறையில் வழங்கப்பட வேண்டும். அதைத்தான் நாங்கள் எங்களுடைய
மேலதிகாரிகளிடம் கூறுகின்றோம். இப்பொழுது இங்கே கடும் மழை பெய்து வருகின்றது.
அதிகளவிலான மக்கள் கிட்டதட்ட 25 இல் இருந்து 30 ஆயிரம் மக்கள் கடல் நீரேரி
பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்கள் வசித்து வரும் பகுதி தாழ்நிலமாக
இருப்பதனால், தற்போது பெய்து வரும் மழை காரணமாக அந்த நீரேரி பகுதி எங்கும்
வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குதான் அவர்கள் 'தறப்பாள்' மூலம் தற்காலிக
கொட்டில்கள் அமைத்து இருந்து வருகின்றனர். அந்த தற்காலிக கொட்டில்களில்
வெள்ளம் ஏற்பட்ட காரணத்தினால் வீதி வழியே குழந்தைகளுடன் நிற்பதைப்
பார்க்கின்றோம். அவர்களை தங்க விடுவதற்குப் பொதுவான இடம் ஒன்று இப்போது
இல்லாமல் இருக்கின்றது. அவர்கள் இரவுப் பொழுதில் அல்லது மழை தொடர்ந்து
பெய்தால் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சிறு சிறு
பதுங்கு குழிகளும் அவர்கள் வெட்டியிருக்கின்றனர். அந்த பதுங்கு குழிகளும்
வெள்ளத்தால் நிறைந்திருக்கின்றன. ஆகவே, எறிகணை வீச்சு நடைபெற்றால் அந்த மக்கள்
அனைவரும் உயிர் இழப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கின்றன.
*அதே சமயத்தில் அங்கு வரும் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும்
விடுதலைப் புலிகள் பறித்துச் செல்வதாக சிறிலங்கா அரச தரப்பில் குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சம்பவங்கள் உங்கள் கவனத்திற்கு வந்ததா?
*
வருகின்ற உணவுப் பொருட்களை நாங்கள் பொதுமக்களுக்குப் பிரித்து
வழங்குகின்றோம். வழங்குகின்ற பொறுப்பையும் நாங்களே செய்கின்றோம்.
*உங்களைப் போன்ற அரசாங்க செயலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாடுகள், அழுத்தங்களை மீறி செயற்படும் சூழல் இருக்கிறதா!
*
இதுவரை நாங்கள் சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றோம் என்றார் கே.பார்த்தீபன்
அன்பின்,
தமிழினி
மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
http://groups.google.com/group/Piravakam
*உணவுக் கப்பலை புலிகள் தாக்கவும் இல்லை; உணவுப் பொருட்களை பறிக்கவும் இல்லை;
வன்னியில் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள்: முல்லைத்தீவு மேலதிக அரச அதிபர்*
[ புதன்கிழமை, 11 மார்ச் 2009, 12:37.22 PM GMT +05:30 ] [ புதினம் ]
"நான் இந்த கடல் பகுதியில்தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான்
காணவில்லை. கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம்"
என்று புதுமாத்தளன் பகுதியில் இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க
அதிபர் கே.பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் கடற்பரப்புக்கு வந்த உணவுக் கப்பல்
மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாக சிறிலங்கா இராணுவம்
தெரிவித்துள்ளமை குறித்து லண்டன் பிபிசி தமிழோசைக்கு கருத்து தெரிவிக்கையிலேயே
அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
பிபிசி தமிழோசையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஒலிபரப்பாகிய நேர்காணலில்
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
*இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதிக்கு கப்பல் மூலமாக ஒரு தொகுதி உணவுப்
பொருட்கள் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது குறித்த செய்திகளை நேயர்கள் நேற்றைய
தமிழோசையில் கேட்டிருப்பீர்கள். அந்த கப்பலில் இருந்த உணவுப் பொருட்கள்
முழுமையாக இறக்கப்படாமலேயே அந்தக் கப்பல் இன்று திங்கட்கிழமை திருகோணமலைக்குத்
திரும்புவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து புதுமாத்தளன் பகுதியில்
இருக்கும் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் கே. பார்த்தீபனிடம் தொடர்பு
கொண்டு கேட்ட போது...
*
500 மெற்றிக் தொன் உணவுடன் நேற்று (ஞாயிறு) 7:30 மணியளவில் கப்பல் வந்தது.
நேற்று (ஞாயிறு) மாலை 5:30 மணி வரையில் 140 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள்
இறக்கப்பட்டன. மீதி உணவுப் பொருட்களை இறக்குவதற்கு இன்னும் எங்களுக்கு இரண்டு
நாட்கள் தேவைப்பட்டன. இன்று (திங்கள்) காலையில் 7:00 மணியளவில் கப்பல் மீண்டும்
ஆழ்கடலில் இருந்து மாத்தளன் பகுதிக்கு வந்திருந்தது. இருந்தும் கடும் காற்று,
மழை மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக நாங்கள் உணவுப்பொருட்களை இறக்க
முடியவில்லை.
*தற்போது கப்பல் எங்கே இருக்கிறது? *
கப்பல் திருகோணமலை நோக்கிச் சென்றுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இங்கிருந்த
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க அதிகாரிகள் அப்படித்தான் கூறிச் சென்றனர்.
*அதேசமயம் அந்த கப்பல் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதாகவும் அதன்
காரணமாகவே அந்தக் கப்பல் ஆழ்கடலை நோக்கி சென்றிருப்பதாகவும் சிறிலங்கா
இராணுவத்தின் இணையத்தளத்தில் செய்தி வெளியாகியிருக்கின்றது. அப்படி ஏதும்
தாக்குதலை நீங்கள் பார்த்தீர்களா? கேட்டீர்களா?
*
நான் இந்த கடல் பகுதியில்தான் இருக்கின்றேன். அப்படி ஒரு தாக்குதலை நான்
காணவில்லை.
*அங்கு மக்களின் உணவுத் தேவைகள் எப்படி இருக்கின்றன?
*
மக்களின் உணவுத் தேவைகளுக்குத் தேவையான உணவுகள் எங்களுக்குக் கிடைக்கவில்லை.
பெப்ரவரி மாதம் தான் கப்பல் மூலம் உணவு எடுத்துவர ஆரம்பிக்கப்பட்டது.
இருப்பினும் ஆரம்பத்தில் குறைந்தளவு உணவுப் பொருட்களே எடுத்து வர
முடிந்ததினால் மக்களுக்குத் தேவையான சகல உணவுப் பொருட்களையும் எங்களால் வழங்க
முடியவில்லை. இருப்பினும் தற்போது நேற்று ஆரம்பித்தபடி இவ்வாறு பெருந்தொகையான
உணவுப் பொருட்கள் கொண்டு வர முடியும் என்றால் நாங்கள் தொடர்ந்து
மக்களுக்குத் தேவையான உணவை வழங்க முடியும். இப்பொழுது மக்கள் உணவைப் பெற
முடியாத நிலையில் மிகவும் கஸ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். கொண்டு வந்த
உணவு வழங்குவதற்குப் போதுமானதாக இல்லை.
*விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இன்னமும் எத்தனைப பேர்
இருக்கிறார்கள் என்கிற புள்ளி விபரம் உங்களிடம் இருக்கிறதா?
*
நாங்கள் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஏற்கனவே
அறிவித்திருக்கின்றோம். 81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 30
ஆயிரம் பேர் இங்கே வாழ்ந்து வருகின்றனர்.
*அதே சமயத்தில் இது தொடர்பாக அரசாங்க தரப்பிலும் இராணுவத் தரப்பிலும்
சொல்லப்படும் புள்ளி விபரக் கணக்குப்படி 70 ஆயிரம் பொதுமக்கள் தான் புலிகளின்
கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் இருக்கின்றனர் என்று சொல்லப்படுகிறது. அதற்கு
நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
*
உண்மையில் அது தொடர்பில் எனக்குச் சரிவரத் தெரியவில்லை. ஆனால் இங்கே
இருக்கின்ற கிராம உத்தியோகத்தர்கள், உதவி அரசாங்க அதிபர்களின் அறிக்கைகளின்
வாயிலாக, அண்ணளவாக 81 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்திற்கு 30 ஆயிரம்
பேர் இருப்பதாக நாங்கள் எங்களுடைய அமைச்சுகளுக்கு அறிவித்திருக்கின்றோம்.
*அவர்களுடைய மதிப்பீட்டின் படி தற்போது இருக்கும் உணவு அங்கிருக்கும்
பொதுமக்களுக்கு எத்தனை நாட்கள் வரும்?
*
நாங்கள் நேற்று இறக்கிய 145 மெற்றிக் தொன் உணவோடு சேர்த்து, மொத்தமாக இங்கு
வந்த 500 மெற்றிக் தொன் உணவையும் கிட்டதட்ட 34 ஆயிரம் குடும்பங்களுக்கு ஒரு
வாரத்திற்கு வழங்க போதுமானவை என கணக்கிட்டு அதற்கேற்ப வழங்க நடவடிக்கை
எடுத்திருந்தோம். ஆனால் வந்த உணவுப் பொருட்களை இறக்காமல் கப்பல் திரும்பி
போனபடியால் குறிப்பிட்ட சிறுதொகையான மக்களுக்கே அதனை வழங்க முடியும்.
மீண்டும் கப்பல் உணவுப் பொருட்களுடன் வரும்போது மீதி மக்களுக்கு உணவுப்
பொருட்கள் வழங்கக்கூடியதாக இருக்கும்.
*உணவுத் தேவைகள் குறித்து உங்களுடைய உயர் அதிகாரிகளுக்கு உரிய முறையில் நீங்கள்
தெரியப்படுத்துகிறீர்களா?
*
முல்லைத்தீவு அரசாங்க அதிபர் ஊடாக சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு நாங்கள்
தெரியப்படுத்தியிருக்கின்றோம்.
*உங்களுடைய கோரிக்கைகள் உரிய முறையில் பரிசீலித்து நீங்கள் விரும்பும் கால
எல்லைக்குள் உணவுப் பொருட்கள் அங்கு வந்து கொண்டிருக்கின்றனவா? *
தற்போது இந்த 500 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் வந்திருப்பது ஒரு
முன்னேற்றம் என கருதுகின்றேன்.
*அங்கிருக்கும் மக்களின் முக்கிய பிரச்சினையாக நீங்கள் எதைப்
பார்க்கின்றீர்கள்? அதற்கு அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நீங்கள்
எதிர்பார்க்கின்றீர்கள்?
*
தற்போது இருக்கின்ற முக்கியமான பிரச்சினை உணவு சரியாக வழங்கப்பட வேண்டும்,
மருந்துப் பொருட்கள் இங்கே அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஏனைய குடிநீர்
வழங்கல், கழிவு அகற்றல், மலசலகூட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் அவர்களுக்கு
ஒழுங்கான முறையில் வழங்கப்பட வேண்டும். அதைத்தான் நாங்கள் எங்களுடைய
மேலதிகாரிகளிடம் கூறுகின்றோம். இப்பொழுது இங்கே கடும் மழை பெய்து வருகின்றது.
அதிகளவிலான மக்கள் கிட்டதட்ட 25 இல் இருந்து 30 ஆயிரம் மக்கள் கடல் நீரேரி
பகுதியில் வசித்து வருகின்றனர். அவர்கள் வசித்து வரும் பகுதி தாழ்நிலமாக
இருப்பதனால், தற்போது பெய்து வரும் மழை காரணமாக அந்த நீரேரி பகுதி எங்கும்
வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குதான் அவர்கள் 'தறப்பாள்' மூலம் தற்காலிக
கொட்டில்கள் அமைத்து இருந்து வருகின்றனர். அந்த தற்காலிக கொட்டில்களில்
வெள்ளம் ஏற்பட்ட காரணத்தினால் வீதி வழியே குழந்தைகளுடன் நிற்பதைப்
பார்க்கின்றோம். அவர்களை தங்க விடுவதற்குப் பொதுவான இடம் ஒன்று இப்போது
இல்லாமல் இருக்கின்றது. அவர்கள் இரவுப் பொழுதில் அல்லது மழை தொடர்ந்து
பெய்தால் எவ்வாறு சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. சிறு சிறு
பதுங்கு குழிகளும் அவர்கள் வெட்டியிருக்கின்றனர். அந்த பதுங்கு குழிகளும்
வெள்ளத்தால் நிறைந்திருக்கின்றன. ஆகவே, எறிகணை வீச்சு நடைபெற்றால் அந்த மக்கள்
அனைவரும் உயிர் இழப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கின்றன.
*அதே சமயத்தில் அங்கு வரும் உணவுப் பொருட்களையும் மருந்துப் பொருட்களையும்
விடுதலைப் புலிகள் பறித்துச் செல்வதாக சிறிலங்கா அரச தரப்பில் குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட சம்பவங்கள் உங்கள் கவனத்திற்கு வந்ததா?
*
வருகின்ற உணவுப் பொருட்களை நாங்கள் பொதுமக்களுக்குப் பிரித்து
வழங்குகின்றோம். வழங்குகின்ற பொறுப்பையும் நாங்களே செய்கின்றோம்.
*உங்களைப் போன்ற அரசாங்க செயலாளர்கள், அரசாங்க உத்தியோகத்தர்கள் விடுதலைப்
புலிகளின் கட்டுப்பாடுகள், அழுத்தங்களை மீறி செயற்படும் சூழல் இருக்கிறதா!
*
இதுவரை நாங்கள் சுயாதீனமாகவே செயற்பட்டு வருகின்றோம் என்றார் கே.பார்த்தீபன்
அன்பின்,
தமிழினி
மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.
http://groups.google.com/group/Piravakam
Wednesday, March 11, 2009
அவர்கள் வேட்டையாடப்பட்டு...!!!
கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது.
ஈழத்தின் இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களில்,
தமிழக உறவுகள் பலர் முனைப்புடன் உள்ள போதும்,
அது குறித்த எண்ணமும, செயலும் இல்லாத பலரது நிலை கண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது.
இரத்தம் வெவ்வேறு நிறம்
அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
“கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?”
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!
இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்
இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!
இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!
இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!
அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!
இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
ஈழத்தின் இனப்படுகொலைகளுக்கு எதிரான போராட்டங்களில்,
தமிழக உறவுகள் பலர் முனைப்புடன் உள்ள போதும்,
அது குறித்த எண்ணமும, செயலும் இல்லாத பலரது நிலை கண்டு கவிக்கோ அப்துல் ரகுமான் வடித்துள்ள கவிதையிது.
இரத்தம் வெவ்வேறு நிறம்
அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று
விசாரித்துக் கொண்டிருக்கிறோம்!
அங்கே
குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன
நாம் பட்டாசு வெடித்துப்
பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வேட்டையாடப்பட்டுக்
கதறிக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
வெள்ளித் திரைகளுக்கு முன்
விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
கற்பழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
“கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?”
என்று
பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
வெளிச்சத்தின் விளைச்சலுக்கு
இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
இருட்டுக்காடுகளுக்கு
வேர்வை வார்த்துக் கொண்டிருக்கிறோம்!
அவர்கள்
சயனைட் அருந்திக் கொண்டிருக்கிறார்கள்
நாம்
அதர பானம் பருகிக் கொண்டிருக்கிறோம்!
இதில் வியப்பேதும் இல்லை
அவர்கள் கவரிமான்கள்
நாம் கவரிகள்
இதோ
தேவவேடம் போட்ட சாத்தான்கள்
வேதம் ஓதுகின்றன!
இதோ
இரத்தப் பற்களை மறைத்த ஓநாய்கள்
நீரைக் கலக்கிய பழியை
ஆடுகளின் மீது சுமத்திக் கொண்டிருக்கின்றன!
இதோ
சித்தாந்த வித்துவான்கள்
ஒப்பாரியில்
ராகப் பிழை கண்டுபிடித்துக்
கொண்டிருக்கிறார்கள்!
இதோ
வெள்ளைக்கொடி வியாபாரிகள்
விதவைகளின் புடவைகளை
உருவிக் கொண்டிருக்கிறார்கள்!
அன்று
அசோகன் அனுப்பிய
போதிமரக் கன்று
ஆயுதங்கள் பூக்கின்றது!
இன்று
அசோகச் சக்கரத்தின்
குருட்டு ஓட்டத்தில்
கன்றுகளின் இரத்தம்
பெருகிக் கொண்டிருக்கிறது!
தாய்ப் பசுவோ
கவர்ச்சியான சுவரொட்டிகளைத் தின்று
அசைபோட்டுக் கொண்டிருக்கிறது!!!
- கவிக்கோ அப்துல் ரகுமான்
தமிழக அரசியல் தலைவர்களுக்கு....!!!
தமிழக அரசியல் தலைவர்களுக்கு....
விடுதலைவீரபத்திரன்
ஈழத்தமிழர்களின் அவலங்கள் நீக்கப்படவேண்டும்; அவர்களின் அழிவு தடுக்கப்படவேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகவும், மன ஈடு பாட்டுடனும், உறவு ரீதியான துடிப்புடனும் உள்ளார்கள். அந்த அடித்தளத்தில் வைத்து, இந்திய மத்திய அரசைக் கொண்டு அவற்றைச் செய்விக்கக் கூடிய பலமும் தமிழக மக்களிடம் இருக்கவே செய்கிறது. ஆனால் அங்குள்ள அரசியல் தலைவர்கள், ஈழத் தமிழர் ஆதரவு அலையைத் தமது சொந்த நலனுக்குப் பயன்படுத்துவதுதான் கேட்கவும், பார்க்கவும் "கண்றாவி"யாக இருக்கிறது!
கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் ஏட்டிக்குப் போட்டி யாக உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் அறிக்கைப் போர் நடத்துவது மக்களிடையே ஊற்றெடுத்துள்ள ஆதரவைத் தமது சொந்த அரசியல் நலனுக்காகத் திசை திருப்பும் வகையில் அமைகிறது.
ஈழத் தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற நேர்மை யான, எண்ணம் இருப்பின், தமிழகத் தலைவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளத் தேவையிருக் காது. இந்தப்போக்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல; நியாயமானதாகவும் இல்லை.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நியாயமாக நடந்து கொண்டு அவர்களுக்கு உதவவேண்டும், அவர்களுக் குரிய உரிமைகளை வழங்கச் செய்வதில் இலங்கை அரசி டம் உரத்துக் கூறவேண்டும் என்பதில் உண்மையான அக்கறை இந்திய மத்திய அரசிடம் இல்லை. தமிழகத்தின் ஆதரவை இழந்து விடாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அரசியல் நூலின் ஒரு புரியை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறது அது.
அந்த நிலையை மாற்றி, தமிழர் அழிவதைத் தடுப் பதிலும், அவர்களின் நீண்டநாள் விவகாரமான இன விவ காரத்தில் அவர்களுக்குரிய உரிமைகள் கிடைக்கவும், உந்தித்தள்ள வேண்டியவர்கள் தமிழகத் தலைவர்களே. இப்போது தமிழக மக்களிடம் எழுந்துள்ள ஈழத்தமிழர் ஆதரவை ஒருங்கிணைத்து, உறுதியான,வினைத்திறன் மிக்க நடவடிக்கையாக மாற்றினால் மட்டுமே மத்திய அரசை உரிய பக்கத்துக்குக் கண்ணைத் திரும்பிப் பார்க்கச் செய்யமுடியும்.
இலங்கையில் நடத்தப்படும் இனவெறித் தாக்குதல் இந்திய அரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு ஆதரவோடு மட்டுமன்றி, முழுஈடுபாடு கொண்ட ஆதரவுடன் நடத்தப்படுகிறது என்று தமிழகத்தின் முன் னாள் முதலமைச்சர் கூறியிருப்பது அவருக்கு மட்டு மன்றி முதல்வர் கருணாநிதி உட்படத் தமிழக அரசியல் தலைவர்களின் எல்லோரினதும் மனங்களிலும் "உறைக்க" வேண்டும் வெட்கத்தை உண்டாக்க வேண்டும்.
ஈழத்தமிழருக்கான ஆதரவைத் தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தி வாக்கு வாங்கி, தேர்தலில் வெற்றிபெற தமிழகத் தலைவர்கள் அணி பிரிந்து செயற் பட்டால், அது மத்திய அரசுக்குப் "புகுந்து விளையாடவே" இடம்தரும். இலங்கை அரசுக்கு மேலும் சார்பாகச் செயற் படவே வழிசெய்யும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்து உண் ணாவிரம் இருந்து தமது ஆதரவாளர்களையும் உண் ணாவிரதம் இருக்கச் செய்து ஈழத்தமிழர் நலன் நாடி உழைக்க முன்வந்திருக்கிறார். இது சற்று மாற்றமான ஒரு புறச்‹ழலை உருவாக்கி இருப்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே.
ஆனால், தமிழக மக்களின் ஈழத்தமிழருக்கான ஆதரவு உணர்வினைக் குலைத்துவிடும் சிதறுண்டு போகச் செய்யும் விதத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் துளி யேனும் செயற்பட்டு விடக்கூடாது என்பதே இன்றைய முக்கிய தேவை.
அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகி நடைபெற வுள்ள இந்தியப் பொதுத் தேர்தலில், அதிக பெறவேண்டும் என்று கண்வைத்து, ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒன்று திரண்டு நிற்கும் தமிழக மக்களைச் சிதறு தேங்காயாக அடித்து, உடைத்து நாசமாக்கி விடக் கூடாது. அரசியல் போட்டிக்கு இலக்கு வைத்து வெண்ணெய் திரண்டுவிட்ட இந்தவேளை யில் பானையை உடைத்துச் சேதமுற வைக்கக்கூடாது.
அது ஒன்று மட்டுமே, என்றும் ஏதோ ஒருவிதத்திலே னும் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும்.
எதிர்வரும் தேர்தலில் ஈழத்தமிழர் அவலம் போக்கு வதற்கு, இலங்கையில் தாழ்நிலை கண்டுள்ள தமிழர் அரசி யல் நிலையைப் போக்குவதற்கு தமிழகத் தலைவர்க ளின் ஒற்றுமை கொண்ட ஆதரவு என்றும் ஒளடதமாக விளங் கும் என்பதனைச் சற்று அயர்ந்தும் மறந்துவிடக் கூடாது.
தமக்கிடையே காணப்படும் பொதுவான அல்லது கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளை முன்னிறுத்தி, இப் போது வளர்ந்துள்ள ஈழத்தமிழருக்கான ஆதரவை அவற் றின் பக்கம் சாய்த்துவிட முயற்சிக்கக்கூடாது. இது, பிரதான கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் மட்டுமன்றி ஏனைய சகலருக்கும், தமிழகத்தில் உள்ள மன்றங்கள், சங்கங்களுக்கும் பொருந்தும்.
இது விடயத்தில், தமிழக அரசியல் தலைவர்களிடம் சுயகட்டுப்பாடு நிறையவும் தேவை; அரசியல் சுயநலம் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இதில் அவர்கள் தவறினார்களானால் அல்லது குறுக்கு வழி செல்வார் களானால் தம்மை ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் என்று உச்சரிப்பதற்கும் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவர். மத்திய அரசின் வட இந்தியத் தலைவர்கள், அவர்கள் செய்யும் சுத்துமாத்துகளால் கீழிறக்கிக் கருதப் படுவதை விடவும், ஈழத்தமிழர்களுக்கு அரசியல் துரோ கம் இழைத்த கடை நிலையில் வைத்து எண்ணப்பட வேண்டியவராகிவிடுவர் தமிழக அரசியல் தலைவர்கள்.
தமிழக மக்களின் ஒற்றுமையும், ஆதரவுமே ஈழத் தமிழருக்கு உள்ள வைரமான கொழுகொம்பு என்ற நிலை மாறாதிருக்க வேண்டும். மனிதநேயம் எங்கிருந்தும் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தவருக்கு அதுவே அருமருந்துமாகும்.
விடுதலைவீரபத்திரன்
www.viduthalaiveeraa.blogspot.com
Post Box No: 6564 Al-Jazeera Al-Hamra Ras Al Khaimah United Arab Emirates
விடுதலைவீரபத்திரன்
ஈழத்தமிழர்களின் அவலங்கள் நீக்கப்படவேண்டும்; அவர்களின் அழிவு தடுக்கப்படவேண்டும் என்பதில் தமிழக மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாகவும், மன ஈடு பாட்டுடனும், உறவு ரீதியான துடிப்புடனும் உள்ளார்கள். அந்த அடித்தளத்தில் வைத்து, இந்திய மத்திய அரசைக் கொண்டு அவற்றைச் செய்விக்கக் கூடிய பலமும் தமிழக மக்களிடம் இருக்கவே செய்கிறது. ஆனால் அங்குள்ள அரசியல் தலைவர்கள், ஈழத் தமிழர் ஆதரவு அலையைத் தமது சொந்த நலனுக்குப் பயன்படுத்துவதுதான் கேட்கவும், பார்க்கவும் "கண்றாவி"யாக இருக்கிறது!
கட்சித் தலைவர்கள், பிரமுகர்கள் ஏட்டிக்குப் போட்டி யாக உண்ணாவிரதப் போராட்டங்கள் மற்றும் அறிக்கைப் போர் நடத்துவது மக்களிடையே ஊற்றெடுத்துள்ள ஆதரவைத் தமது சொந்த அரசியல் நலனுக்காகத் திசை திருப்பும் வகையில் அமைகிறது.
ஈழத் தமிழர்களுக்கு உதவவேண்டும் என்ற நேர்மை யான, எண்ணம் இருப்பின், தமிழகத் தலைவர்கள் இவ்வாறு நடந்துகொள்ளத் தேவையிருக் காது. இந்தப்போக்கு எந்த வகையிலும் ஏற்புடையதல்ல; நியாயமானதாகவும் இல்லை.
இலங்கைத் தமிழர் விவகாரத்தில் நியாயமாக நடந்து கொண்டு அவர்களுக்கு உதவவேண்டும், அவர்களுக் குரிய உரிமைகளை வழங்கச் செய்வதில் இலங்கை அரசி டம் உரத்துக் கூறவேண்டும் என்பதில் உண்மையான அக்கறை இந்திய மத்திய அரசிடம் இல்லை. தமிழகத்தின் ஆதரவை இழந்து விடாமல் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக அரசியல் நூலின் ஒரு புரியை மட்டுமே பிடித்துக் கொண்டிருக்கிறது அது.
அந்த நிலையை மாற்றி, தமிழர் அழிவதைத் தடுப் பதிலும், அவர்களின் நீண்டநாள் விவகாரமான இன விவ காரத்தில் அவர்களுக்குரிய உரிமைகள் கிடைக்கவும், உந்தித்தள்ள வேண்டியவர்கள் தமிழகத் தலைவர்களே. இப்போது தமிழக மக்களிடம் எழுந்துள்ள ஈழத்தமிழர் ஆதரவை ஒருங்கிணைத்து, உறுதியான,வினைத்திறன் மிக்க நடவடிக்கையாக மாற்றினால் மட்டுமே மத்திய அரசை உரிய பக்கத்துக்குக் கண்ணைத் திரும்பிப் பார்க்கச் செய்யமுடியும்.
இலங்கையில் நடத்தப்படும் இனவெறித் தாக்குதல் இந்திய அரசின் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முழு ஆதரவோடு மட்டுமன்றி, முழுஈடுபாடு கொண்ட ஆதரவுடன் நடத்தப்படுகிறது என்று தமிழகத்தின் முன் னாள் முதலமைச்சர் கூறியிருப்பது அவருக்கு மட்டு மன்றி முதல்வர் கருணாநிதி உட்படத் தமிழக அரசியல் தலைவர்களின் எல்லோரினதும் மனங்களிலும் "உறைக்க" வேண்டும் வெட்கத்தை உண்டாக்க வேண்டும்.
ஈழத்தமிழருக்கான ஆதரவைத் தமது அரசியல் நலன்களுக்காகப் பயன்படுத்தி வாக்கு வாங்கி, தேர்தலில் வெற்றிபெற தமிழகத் தலைவர்கள் அணி பிரிந்து செயற் பட்டால், அது மத்திய அரசுக்குப் "புகுந்து விளையாடவே" இடம்தரும். இலங்கை அரசுக்கு மேலும் சார்பாகச் செயற் படவே வழிசெய்யும்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஈழத் தமிழர் போராட்டத்தை ஆதரித்து உண் ணாவிரம் இருந்து தமது ஆதரவாளர்களையும் உண் ணாவிரதம் இருக்கச் செய்து ஈழத்தமிழர் நலன் நாடி உழைக்க முன்வந்திருக்கிறார். இது சற்று மாற்றமான ஒரு புறச்‹ழலை உருவாக்கி இருப்பது புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றே.
ஆனால், தமிழக மக்களின் ஈழத்தமிழருக்கான ஆதரவு உணர்வினைக் குலைத்துவிடும் சிதறுண்டு போகச் செய்யும் விதத்தில் தமிழக அரசியல் தலைவர்கள் துளி யேனும் செயற்பட்டு விடக்கூடாது என்பதே இன்றைய முக்கிய தேவை.
அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகி நடைபெற வுள்ள இந்தியப் பொதுத் தேர்தலில், அதிக பெறவேண்டும் என்று கண்வைத்து, ஈழத் தமிழர் விவகாரத்தில் ஒன்று திரண்டு நிற்கும் தமிழக மக்களைச் சிதறு தேங்காயாக அடித்து, உடைத்து நாசமாக்கி விடக் கூடாது. அரசியல் போட்டிக்கு இலக்கு வைத்து வெண்ணெய் திரண்டுவிட்ட இந்தவேளை யில் பானையை உடைத்துச் சேதமுற வைக்கக்கூடாது.
அது ஒன்று மட்டுமே, என்றும் ஏதோ ஒருவிதத்திலே னும் ஈழத் தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவும்.
எதிர்வரும் தேர்தலில் ஈழத்தமிழர் அவலம் போக்கு வதற்கு, இலங்கையில் தாழ்நிலை கண்டுள்ள தமிழர் அரசி யல் நிலையைப் போக்குவதற்கு தமிழகத் தலைவர்க ளின் ஒற்றுமை கொண்ட ஆதரவு என்றும் ஒளடதமாக விளங் கும் என்பதனைச் சற்று அயர்ந்தும் மறந்துவிடக் கூடாது.
தமக்கிடையே காணப்படும் பொதுவான அல்லது கோட்பாட்டு ரீதியான வேறுபாடுகளை முன்னிறுத்தி, இப் போது வளர்ந்துள்ள ஈழத்தமிழருக்கான ஆதரவை அவற் றின் பக்கம் சாய்த்துவிட முயற்சிக்கக்கூடாது. இது, பிரதான கட்சிகளுக்கும் அவற்றின் தலைவர்களுக்கும் மட்டுமன்றி ஏனைய சகலருக்கும், தமிழகத்தில் உள்ள மன்றங்கள், சங்கங்களுக்கும் பொருந்தும்.
இது விடயத்தில், தமிழக அரசியல் தலைவர்களிடம் சுயகட்டுப்பாடு நிறையவும் தேவை; அரசியல் சுயநலம் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும். இதில் அவர்கள் தவறினார்களானால் அல்லது குறுக்கு வழி செல்வார் களானால் தம்மை ஈழத்தமிழர்களின் தொப்புள்கொடி உறவுகள் என்று உச்சரிப்பதற்கும் தகுதியற்றவர்கள் ஆகிவிடுவர். மத்திய அரசின் வட இந்தியத் தலைவர்கள், அவர்கள் செய்யும் சுத்துமாத்துகளால் கீழிறக்கிக் கருதப் படுவதை விடவும், ஈழத்தமிழர்களுக்கு அரசியல் துரோ கம் இழைத்த கடை நிலையில் வைத்து எண்ணப்பட வேண்டியவராகிவிடுவர் தமிழக அரசியல் தலைவர்கள்.
தமிழக மக்களின் ஒற்றுமையும், ஆதரவுமே ஈழத் தமிழருக்கு உள்ள வைரமான கொழுகொம்பு என்ற நிலை மாறாதிருக்க வேண்டும். மனிதநேயம் எங்கிருந்தும் கிடைக்காமல் தவித்துக்கொண்டிருக்கும் ஈழத்தவருக்கு அதுவே அருமருந்துமாகும்.
விடுதலைவீரபத்திரன்
www.viduthalaiveeraa.blogspot.com
Post Box No: 6564 Al-Jazeera Al-Hamra Ras Al Khaimah United Arab Emirates
Tuesday, March 10, 2009
"போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை!!!
"போதும் நிறுத்துங்கள் உங்கள் அரசியலை' இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை என்ன
என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்களுடைய வேதனை யை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயினும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் திரைப்படத்துறையினரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இதுவரை தாங்கள் நடத்திய கிளர்ச்சிகள், உண்ணாவிரதங்கள், முழு அடைப்புகள், இயற்றிய தீர்மானங்கள் போன்றவற்றுக்கு உருப்படியான பலன் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா?
மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் இதை காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் எதிராகப் பயன்படுத்த ஒரு சில அமைப்புகள் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கைப் பிரச்சினையைத் தமிழ்நாட்டு தமிழர்கள் கையாளும்விதம் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே போய்க்கொண்டிருக்கிறது என்பதை யாருமே இப்போதாவது உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இனி எந்த அரசியல் கட்சியும் சமுதாய இயக்கமும் இதைத் தங்களுடைய தனியுரிமைப் பிரச்சினையாகக் கையில் எடுக்கக் கூடாது. தமிழர்களுடைய முழு அக்கறையும் ஆதரவும் தேவைப்படும் இப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகள், இராஜதந்திரிகள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
சர்வதேச அரங்கில் இப்பிரச்சினையைக் கொண்டு செல்ல அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஆற்ற வேண்டிய செயல்களை உடனே தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தேவைப்படும் உணவு, உடை, மருந்து போன்ற அவசியப் பொருட்களைத் திரட்டி அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமும் உற்ற தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றின் தனித்தன்மையைக் காப்பதிலும் அங்கு மற்ற இனத்தவரைக் குடியமர்த்தாமல் தடுப்பதிலும் அக்கறை எடுக்க வேண்டும். தமிழர்களுக்குச் சம உரிமை, அந்தஸ்து வழங்கி தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்பட இந்திய அரசின் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் அவர்களுக்கு உற்ற நண்பர்கள் மூலம் மீண்டும் அணுகி உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைவிடுத்து தமிழ்நாட்டில் அறிக் கைப் போர் நடத்துவதும், சுவரொட்டி விளம்பரங்கள் செய்வதும் வழிநடைப் பயண இயக்கம் மேற்கொள்வதும் போட்டி உண்ணாவிரதங்கள் நடத்துவதும் நமக் குள் மேலும் பிளவைத்தான் ஏற்படுத்துமே தவிர, பிரச்சினை தீர இம்மியளவும் உதவாது. சில நாட்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் முழு அமைதி காப்பதுகூட நல்லது என்று தோன்றுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் டுபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டு, சர்வதேச அரங்கில் தமிழர்கள் ஒற்றுமையுள்ள ஓர் அணியாகச் சென்று முறையிட்டு ஈழத் தமிழ் இனத்தைக் காப்பதுதான் விவேகமாக இருக்கும். வெற்று கூச்சல்களால் இந்தப் பிரச்சினை தீராது.
வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று சகல தரப்பினரும் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திப்பதைக் கைவிட்டு அறிவுபூர்வமாக சர்வதேச அரங்கில் காய்களை நகர்த்துவதே இலங்கைத் தமிழ் இனத்தைக் காப்பதற்குப் பெரிதும் உதவும். உடனடியாகப் போர்நிறுத்தம்; சர்வதேச அளவிலான சமரசத் தீர்வு இதற்கு வழிகோலுவதுதான் புத்திசாலித்தனம்.
ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு ஏதும் இல்லாத நோர்வே நாட்டவர்கள் காட்டிய அளவுக்காவது உண்மையான அக்கறையுடன் நாம் செயல்பட்டிருக்கிறோமா என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டால் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், "போதும் நிறுத்துங்கள்' உங்கள் அரசியலை!
தினமணி ஆசிரியர் தலையங்கம்
9 மார்ச் 2009
என்று புரியாத அரசியல் கட்சியோ, தலைவர்களோ தமிழ்நாட்டில் இல்லை. அரசியல்வாதிகள் மட்டும் அல்லாமல் படித்தவர்கள், அரசு ஊழியர்கள், பத்திரிகையாளர்கள், வழக்கறிஞர்கள் என்று சகல தரப்பினரும் அவர்களுடைய வேதனை யை அறிந்தவர்களாகத்தான் இருக்கின்றனர். ஆயினும் ஒருங்கிணைந்த, உறுதியான, முதிர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாததால் இலங்கைத் தமிழர்களும் பராதீனப்பட்டு அவர்களுடைய பிரச்சினையும் தீர்க்கப்படாமலேயே இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த தேசிய, திராவிட அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் தமிழ்நாட்டு வழக்கறிஞர்களும் திரைப்படத்துறையினரும் இந்த நேரத்திலாவது சிறிது ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும். இதுவரை தாங்கள் நடத்திய கிளர்ச்சிகள், உண்ணாவிரதங்கள், முழு அடைப்புகள், இயற்றிய தீர்மானங்கள் போன்றவற்றுக்கு உருப்படியான பலன் ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா?
மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்டதால் இதை காங்கிரஸ் கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் எதிராகப் பயன்படுத்த ஒரு சில அமைப்புகள் தீவிரம் காட்டுவதாகத் தெரிகிறது. இலங்கைப் பிரச்சினையைத் தமிழ்நாட்டு தமிழர்கள் கையாளும்விதம் இலங்கைத் தமிழர்களின் நலன்களுக்கு எதிராகவே போய்க்கொண்டிருக்கிறது என்பதை யாருமே இப்போதாவது உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.
இனி எந்த அரசியல் கட்சியும் சமுதாய இயக்கமும் இதைத் தங்களுடைய தனியுரிமைப் பிரச்சினையாகக் கையில் எடுக்கக் கூடாது. தமிழர்களுடைய முழு அக்கறையும் ஆதரவும் தேவைப்படும் இப் பிரச்சினையைத் தீர்க்க தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூத்த அரசு அதிகாரிகள், இராஜதந்திரிகள், பேராசிரியர்கள், தமிழ் அறிஞர்கள், தன்னார்வத் தொண்டு அமைப்பைச் சேர்ந்தவர்கள் என எல்லோரையும் உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
சர்வதேச அரங்கில் இப்பிரச்சினையைக் கொண்டு செல்ல அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஆற்ற வேண்டிய செயல்களை உடனே தொடங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குத் தேவைப்படும் உணவு, உடை, மருந்து போன்ற அவசியப் பொருட்களைத் திரட்டி அதை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலமும் உற்ற தன்னார்வத் தொண்டு அமைப்புகள் மூலமும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் உள்ள இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் நல்ல கல்வியைப் பெற எல்லா வசதிகளையும் செய்து தர வேண்டும்.
இலங்கையில் தமிழர்கள் பாரம்பரியமாக வசித்துவரும் பகுதிகளான வடக்கு, கிழக்கு ஆகியவற்றின் தனித்தன்மையைக் காப்பதிலும் அங்கு மற்ற இனத்தவரைக் குடியமர்த்தாமல் தடுப்பதிலும் அக்கறை எடுக்க வேண்டும். தமிழர்களுக்குச் சம உரிமை, அந்தஸ்து வழங்கி தமிழர் பகுதிகளில் அமைதி ஏற்பட இந்திய அரசின் மூலம் இலங்கை அரசுக்கு நெருக்குதல் அளிக்க வேண்டும்.
விடுதலைப் புலிகளையும் இலங்கை அரசையும் அவர்களுக்கு உற்ற நண்பர்கள் மூலம் மீண்டும் அணுகி உடனடியாகப் போர் நிறுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதைவிடுத்து தமிழ்நாட்டில் அறிக் கைப் போர் நடத்துவதும், சுவரொட்டி விளம்பரங்கள் செய்வதும் வழிநடைப் பயண இயக்கம் மேற்கொள்வதும் போட்டி உண்ணாவிரதங்கள் நடத்துவதும் நமக் குள் மேலும் பிளவைத்தான் ஏற்படுத்துமே தவிர, பிரச்சினை தீர இம்மியளவும் உதவாது. சில நாட்களுக்கு தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் இந்தப் பிரச்சினையில் முழு அமைதி காப்பதுகூட நல்லது என்று தோன்றுகிறது.
இலங்கைத் தமிழர்களுக்கு உதவ அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் டுபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய ஆலோசனைகளையும் கேட்டு, சர்வதேச அரங்கில் தமிழர்கள் ஒற்றுமையுள்ள ஓர் அணியாகச் சென்று முறையிட்டு ஈழத் தமிழ் இனத்தைக் காப்பதுதான் விவேகமாக இருக்கும். வெற்று கூச்சல்களால் இந்தப் பிரச்சினை தீராது.
வழக்கறிஞர்கள், மாணவர்கள் என்று சகல தரப்பினரும் உணர்ச்சிபூர்வமாகச் சிந்திப்பதைக் கைவிட்டு அறிவுபூர்வமாக சர்வதேச அரங்கில் காய்களை நகர்த்துவதே இலங்கைத் தமிழ் இனத்தைக் காப்பதற்குப் பெரிதும் உதவும். உடனடியாகப் போர்நிறுத்தம்; சர்வதேச அளவிலான சமரசத் தீர்வு இதற்கு வழிகோலுவதுதான் புத்திசாலித்தனம்.
ஈழத் தமிழர்களுடன் தொப்புள்கொடி உறவு ஏதும் இல்லாத நோர்வே நாட்டவர்கள் காட்டிய அளவுக்காவது உண்மையான அக்கறையுடன் நாம் செயல்பட்டிருக்கிறோமா என்று தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக்கொண்டால் வெட்கித் தலைகுனிய வேண்டியிருக்கும் என்பதை வேதனையுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். எனவே உங்களுக்கு ஒரு வேண்டுகோள், "போதும் நிறுத்துங்கள்' உங்கள் அரசியலை!
தினமணி ஆசிரியர் தலையங்கம்
9 மார்ச் 2009
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்!

December 2008
தன்னம்பிக்கை
விருப்பம் வேலையானால் சாதிப்பு சரித்திரமாகும்
திரு மயில்சாமி அண்ணாதுரை
“சந்திராயன்” திட்ட இயக்குநர், இஸ்ரோ
“சந்திரயான் - 1″ வெற்றியின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியிலும், செயற்கைக் கோள் தொழில் நுட்பத்திலும் நமது இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, சீனா, ஜப்பான் போன்றநாடுகளே தகவல் தொடர்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதில் ஆதிக்கம் காட்டி வந்தன. இன்று நம்மாலும் முடியும் என பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கி.மீ. தூரத்தில் உள்ள சந்திரனை ஆய்வு செய்ய “சந்திரயான்-1″ என்ற ஆளில்லா செயற்கைக்கோளை அனுப்பி “இஸ்ரோ” விஞ்ஞானிகள் சாதித்திருக்கிறார்கள்.
“சந்திரயான் -1″ சாதிப்பிற்குப் பின்னால் நம்ம ஊர்த் தமிழர்
திரு. மயில்சாமி அண்ணாதுரை திட்ட இயக்குநராக இருந்து சாதித்துக் காட்டியிருக்கிறார் என்பதில் நாம் எல்லோரும் பெருமைப்பட்டுக் கொள்ளும் ஆனந்தமான காலமிது.
கோவை கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி என்னும் கிராமத்தில் பிறந்து தமிழ் வழியில் பயின்று உலகளவில் எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிற திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் இந்தச் சாதிப்பு அவருக்கு சாதாரணமாக கிட்டியதா என்றால் இல்லை.
“இலட்சியத்தை, முக்கியமான இலட்சியத்தை அடைய இரண்டு மாபெரும் சக்திகள் உள்ளன. ஒன்று வலிமை, இன்னொன்று விடாமுயற்சி. மிகச்சிறப்பு வாய்ந்த வலிமையும், ஆற்றலும் நம்மில் பலரிடம் உள்ளன. ஆனால், மிக்க வலிமை வாய்ந்த விடாமுயற்சி என்னும் அரிய குணம் நம் அனைவரிடமும் மிகச் சிறிதளவே உள்ளது. இந்த எளிய, எந்த சக்தியாலும் எதிர்த்து வெல்ல முடியாத விடாமுயற்சி என்னும் குணத்தை நாம் வளர்த்துக் கொண்டு, தொடர்ந்து அதைப் பயன்படுத்தினால் கரடு முரடான வாழ்க்கைப் பாதையையும் சமாளித்து கடந்து இலட்சியத்தை அடைய முடியும்.
நமது செயல் நோக்கத்தில் விடாமுயற்சி அதிகரிக்க அதிகரிக்க அது, அமைதியாக செயல்பட்டு, ஆற்றலுடன் முன்னோக்கி நம்மை அழைத்துச் செல்லும்” என்பார் கவிஞர் கதே. அந்த வலிமையாலும் அந்த விடா முயற்சி யினாலும் விடாது போராடி இந்த அரிய சாதிப்பை அவர் நிகழ்த்தியிருக்கிறார்.
வாழ்க்கையில் வெற்றியை நினைப்பதும், கற்பனை செய்வதும், நிச்சயம் நிறைவேறும் என்றமுழு நம்பிக்கையும் நிரம்பவே பெற்றுள்ள அவர் தன் ஆய்வுப்பணிக்கு பக்கபலமாக இருந்து நல்வழி காட்டியவர் மேதகு டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் என்று பெருமைபட்டுக் கொள்கிறார்.
ஆறாவது நீள்வட்டப்பாதையான பூமியின் சுற்றுப்பாதையிலிருந்து சந்திரயான்-1 செயற்கைக் கோளை நிலவின் பாதையில் சுற்றவிட்ட அந்நேரத்தில் கடினமான அந்த செயல்பாடு வெற்றியைப் பெறவேண்டுமென்று எனது பிறந்த ஊர் கோதவாடி மக்கள் ஆலயம் சென்று வழிபாடு நடத்தியிருக்கிறார்கள். அவர்களின் அன்பு என்னை மேலும் சாதிக்கத் தூண்டுகிறது என தன் கிராமத்து மக்களின் மீது சந்தோசத்தை வெளிப்படுத்தவும் செய்கிறார்.
பெற்றோர்களின் பெயரை “இன்சியல்” போடுவது நாகரீகம் அல்ல என்றும் இயற்பெயரைக் கூட மூன்றெழுத்துக்குள் சுருக்கிக்கொண்டு “ஸ்டைலாக” வாழ்வோர் எண்ணிக்கை கூடி வரும் காலத்தில் அப்பாவின் பெயரையே தன் பெயருக்கு முன்னால் சேர்த்து தந்தையை கௌரவப்படுத்தி மகிழ்பவராய் அதேசமயம் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி முதல்வராக இருக்கும் தம்பி திரு. மோகனசுந்தரம் அவர்களின் பேராற் றலையும் வெளிப்படுத்த தவறவில்லை. ஆம்! தமிழகப் பள்ளிகளுக்கான கணினி அறிவியல் பாடப்புத்தகத்தை எழுதி தமிழக முதல்வர் டாக்டர்
மு. கருணாநிதி அவர்களால் பாராட்டுப் பெற்றிருக்கிறார் அவர் என எல்லோரையும் நன்கு அரவணைத்து வாழ்வியல் கருத்துக்களை அற்புதமாக வெளிப்படுத்தவும் செய்கிறார்.
தனிமனித சாதிப்பு அல்ல இது. ஒட்டு மொத்த “இஸ்ரோ” விஞ்ஞானிகளின் கூட்டு சாதிப்பு என்று எல்லோரையும் முன்னிலைப்படுத்தி மகிழும் “நல்ல மனிதராகவும்” திகழும் அவரை கௌரவ ஆசிரியர் டாக்டர் ந. செந்தில் அவர்களுடன் நாம் தொடர்பு கொண்ட போது,
“காலத்தை மதித்து, அன்பு செலுத்தி, கடமை உணர்வுடன்
வாழ்ந்தால் அருமையும் பெருமையும் நிச்சயம் கிடைக்கும்”
என்றார்.
சாதித்திருக்கிற இந்த சாதிப்பான நேரத்தில் பிறந்து வளர்ந்த அந்த நாட்களை நினைவு கூறுங்களேன்?
கோவை கிணத்துக்கடவு அருகிலுள்ள கோதவாடி நான் பிறந்து வளர்ந்த ஊர். அப்பா மயில்சாமி. அம்மா பாலசரஸ்வதி. எனக்கு இரு சகோதரர்கள், இரு சகோதரிகள். அப்பாவின் அப்பாவுக்கு தொழில் நெசவு. அப்பா கோதவாடி ஆரம்பப் பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றியவர். எங்கள் ஐந்து பேரையும் நல்ல முறையில் அவர் வளர்த்திட அதிகம் சிரமம் எடுத்துக் கொண்டவர்.
ஆசிரியப் பணிபோக மாலை மற்றும் இரவு நேரங்களில் தையல் தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்தவர்.
தமிழ்வழிக் கல்வியில் அப்பாவின் அறிவுரை யில் ஐந்தாம் வகுப்பு வரை கோதவாடி அரசுப் பள்ளியில் படித்தேன். அதற்குப் பின்பு அப்பா மாற்றலாகி கிணத்துக்கடவு பள்ளிக்குச் சென்றபோது நல்லட்டிபாளையத்தில் குடி பெயர்ந்தோம். அப்போதெல்லாம் தினமும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிக்குச் செல்வேன். அரசு உதவித் தொகையில் தான் என் கல்விப் பயணமே தொடர்ந்தது.
கல்வி ஒன்று மட்டுமே பெரிய மூலதனம் என்று நன்கு படித்து நநகஇயில் முதல் மதிப்பெண் எடுத்து தங்கப்பதக்கம் பெற்றேன். மேற்கொண்டு மென்மேலும் கல்வியில் ஆர்வம் செலுத்தி கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் பி.இ. படிப்பில் சேர்ந்தேன்.
நாள்தோறும் வந்து போவதற்கு பணம் கேட்டு அப்பாவை துன்புறுத்தக்கூடாது என்று, மற்றதனியார் கல்லூரிகளில் மதிப்பெண் அடிப்படையில் இடம் கிடைத்தும் தங்கிப் படிப் பதற்கான வசதி ஒன்றைக் கருத்தில் கொண்டு கோவை அரசு தொழில் நுட்பக் கல்லூரியில் சேர்ந்து பி.இ. முடித்தேன். அதற்குப் பின்பு பி.எஸ்.ஜி. தொழில் நுட்பக் கல்லூரியில் எம்.இ., (அப்ளைடு எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன்) நிறைவு செய்தேன்.
நீங்கள் படித்து முடித்ததும் பிரெஞ்சு கம்பெனி ஒன்று வேலை தரத் தயாராக இருந்தும் அதனை ஏன் தவிர்த்தீர்கள்?
நான் எம்.இ. படித்து முடித்ததும் புதுச் சேரியிலுள்ள “ஆரோலெக்” என்றபிரெஞ்சு கம்பெனி வேலை தரத் தயாராக இருந்தது. ஆனால் அரசுப் பணத்தில் படித்து விட்டு அடுத்த நாட்டுக்காரர்களுக்கு வேலை செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் அந்த வேலையை வேண்டாமென்று சொல்லி விட்டேன்.
அதனை அடுத்து மூன்று மாதத்தில் இஸ்ரோவில் வேலைக்கு தேர்வானேன். சேர்ந்த நாள் முதல் வானிலை ஆராய்ச்சிக்காக என்னை அர்ப்பணித்து கொண்டேன்.
தமிழில் படித்தால் விஞ்ஞானம் என்பதெல்லாம் வெகுதூரம் என்கிறார்களே?
கல்லூரியில் சேரும்வரை நான் படித்த தெல்லாம் தமிழில் தான். பத்தாம் வகுப்பி லிருந்தே அரசின் உதவித் தொகையை பெற்றுப் படித்து முன்னுக்கு வந்திருக்கிறேன். எல்லாம் ஆர்வம் தான் காரணம். தாய்மொழியின் மீது பற்றுதல் இல்லாமல் பிறமொழிகளின் மீது ஆர்வம் காட்டுதல் என்பது ஆரோக்கியமான விசயமாகப்படவில்லை.
எந்த ஒன்றையுமே தன் தாய் மொழியில் படிக்கும் போது உணர்தல் என்பது அதிகமாக இருக்கும். தமிழ் படித்தால் விஞ்ஞான அறிவு இருக்காது, வளராது என்பதெல்லாம் கிடையாது. டாக்டர் அப்துல் கலாம் தமிழ் வழியில் பயின்றவர் தான். அவர் சாதிக்க வில்லையா. தமிழில் படித்துக் கொண்டு மற்றமொழிப் பாடங்களையும் சேர்த்து அறிவை வளர்த்துக் கொள்வது என்பது கூடுதல் பலம். அதற்காக கான்வென்ட் சென்று படித்தால் தான் சாதிக்க முடியும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.
நம்மவர்கள் பலபேர் அமெரிக்காவின் “நாஸா” விண்வெளி ஆய்வுக்கழகத்தில் இணைந்து நல்ல ஊதியம் வாங்கிக் கொண்டிருக்கும் போது உங்களை அவர்கள் அழைத்தும் ஏன் நீங்கள் செல்ல மறுத்தீர்கள்?
“நாஸா” விண்வெளி ஆய்வுக்கழகத்தில் மாதம் ஐந்து லட்ச ரூபாய் வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பதாக அறிகிறேன். எனக்கு பல முறை அங்கிருந்து அழைப்பு வந்தது. என் நாடு, என் மக்கள் என்கிற உணர்வு எனக்குள் சிறு வயதில் இருந்தே அதிகம் இருந்தது. சமுதாயத்தின் மீது அக்கரை காட்டிய ஒரு தலைவரின் பெயரை அப்பா எனக்கு சூட்டி “அண்ணாதுரை” என அழைத்து மகிழ்ந்த போதே நான் முடிவெடுத்து விட்டேன்.
நாம் வாழும் சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன்பாடு மிக்கவனாக நான் இருக்க வேண்டும் என்று. அதனால் “இஸ்ரோ”வை விட்டு எங்கும் வெளியில் செல்ல நான் விரும்பவில்லை. உடன் அற்புதமான விஞ்ஞானிகள், அற்புதமான தலைமை - என எல்லாமுமே நமது நாட்டிலேயே இருக்கும் போது வேற்று நாட்டில் வேலையை நான் ஏன் தேட வேண்டும்.
Monday, March 9, 2009
Saturday, March 7, 2009
பாரதி கனவை நனவாக்குவோம்! ..... கவிஞர் இரா.இரவி

பாரதி கனவை நனவாக்குவோம் ( கவிஞர் இரா.இரவி
(eraeravi@gmail.com)
எட்டயபுரத்தில் பிறந்து பாட்டுப் திறந்தால் எட்டாத உயரம் சென்றவன் மகாகவி பாரதி. அவன் இன்று இருந்திருந்தால் நெஞ்சு பொறுக்குதில்லையே என மீண்டும் பாடி இருப்பான். ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று அடையும் முன்னே தீர்க்க தரிசனமாக பாடினோமே, இதுவா ஆனந்த சுதந்திரம்? என்று நொந்து இருப்பான். வெள்ளையனிடமிருந்து பெறப்பட்ட இந்த நாடு அரசியல் கொள்ளையர்களிடம் அல்லவா மாட்டிக் கொண்டது என வருந்தி இருப்பான்.
இன்றைக்கும் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமையில் வாடும் ஏழைகள் ஏராளம். குடியிருக்க வீடுகள் இன்றி நடைபாதையில் வாழும் மக்கள் ஏராளம். வறுமை இன்னும் ஒழிக்கப்படவில்லை. பாரதி அன்று பாடினான். " தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஐகத்தினை அழித்திடுவோம்" என்று. ஆனால் இன்று எத்தனையோ பேர் உண்ண உணவின்றி வாடி வதங்குகின்றனர். மக்களின் அடிப்படைத் தேவைகள் கூட இன்னும் பூர்த்தி செய்யப்பட வில்லை. வறுமையை ஒழிக்க வேண்டிய அரசியல்வாதிகளோ அவர்களது வறுமையை ஒழித்துக் கொண்டு கோடிகளை கொள்ளையடித்துச் சேர்த்து விடுகின்றனர். உலகமயம், தாராளமயம், புதிய பொருளாதாரம் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களை பல வழிகளில் இந்தியாவை சுரண்ட அனுமதித்து விட்டனர். உள்ளூர் தொழிற்சாலைகளை மூடி விட்டனர். பலர் வேலையையும், வாழ்க்கையையும் இழந்து விட்டனர். விளைநிலங்களை எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரை வார்த்து கொடுத்து விட்டு விவசாயி வயிற்றில் அடித்து விட்டனர்.
அன்று காணி நிலம் வேண்டும் என்று பாடினான் பாரதி. இன்று காணி நிலங்களே காணாமல் போனது. "சாதிகள் இல்லையடி பாப்பா" எனப் பாடினான். இன்று சங்கம் இல்லாத சாதிகள் இல்லை என்ற அளவிற்கு சாதிச் சங்கங்கள் பெருகி சாதி மோதல்களும், வன்முறை வெறியாட்டங்களும் மண்ணில் நடந்து வருகின்றது. சாதிச்சங்கத் தலைவர்கள் எல்லாம் சகல வசதியுடன் டாடா சுமோவில் வலம் வந்து கொண்டு அப்பாவி மக்களை மோதவிட்டு வேடிக்கை பார்த்து அரசியல் நடத்துகின்றனர்.
ஊழலை ஒழிக்க என்ன வழி என்று உரக்கச் சிந்திப்போம். ஊழழை ஒழிப்போம். வறுமையை ஒழிப்போம். நாட்டின் வளம் காப்போம். கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிறுவனங்களை விரட்டி அடிப்போம். கொள்ளை போகும் நமது வளங்களையும், செல்வங்களையும் காப்போம். நதிகளை தேசியமயமாக்குவோம். சண்டைகளின்றி தண்ணீரைப் பகிர்ந்து கொள்வோம். விவசாயத்தையும் விவசாயியையும் பேணிக் காப்போம்.
சுனாமி பேரலையின் காரணமாக பல உயிர்களையும் உடமைகளையும் இழந்தோம். இதற்கு என்ன காரணம்? நிலத்தடி நீரை அளவிற்கு அதிகமாக உறிஞ்சவது. பாறைகளுக்கு வெடி வைத்து தகர்ப்பது. பாலீத்தீன் பைகளை அதிகம் பயன்படுத்துவது. தொழிற்சாலை கழிவுகளை ஆற்றில் கலப்பது. மரங்களை வெட்டி வீழ்த்துவது, இப்படி அடுக்கடுக்காக இயற்கையை அழிக்கும் பணியிணை மனிதன் செய்ததன் காரணமாக இயற்கைச் சீற்றம் வந்தது. சுனாமி வந்தது. நிலநடுக்கம் வந்தது.
மகாகவி பாரதி ஓர் இயற்கை நேசன். இயற்கையை ரசித்துப் பாடியவன். அவருக்காக விழா எடுக்கும் இந்த வேளையில் இயற்கையை நாமும் ரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையை அழிப்பது, சிதைப்பது முதலான இது போன்ற செயல்களை அறவே நிறுத்தி விட வேண்டும். வருங்கால சந்ததிகள் வளமாக வாழ தொடர்ந்து மழை கிடைக்க முடிந்த வரை இயற்கையை பேணிக் காப்போம். புதிய மரங்கள் நடுவோம், மழை பெறுவோம்!
மனிதரில் ஏற்றத் தாழ்வு இல்லை, உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்வது பாவம் என்று பாடியவன் பாரதி, எனவே பாரதியின் வரிகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். சாதி, மத மோதல்களுக்கு முடிவு கட்டுவோம். சக மனிதனை மனிதனாக மதிப்போம். சமதர்ம, சமத்துவ சமுதாயம் சமைப்போம். உதிரத்தின் நிறம் சிறப்பு என்பதை மோதித் தான் உணர வேண்டுமோ? பகுத்தறிவை பயன்படுத்தாமல் சாதி, மத மோதல்களின் காரணமாக விலை மதிப்பற்ற மனித உயிர்கள் பலியாவதை தடுப்போம். கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும் இழந்த உயிரை திரும்பத்தர இயலுமா? முடியாது. மனித உயிரின் மகத்துவத்தை உணர்ந்து எந்த நிலையிலும் வன்முறையின்றி பேச்சுவார்த்தையின் மூலமே சமரசம் காண்போம். காட்டுமிராண்டித்தனமான மோதல்களையும், தாக்குதல்களையும் வன்முறைகளையும் முடிவுக்கு கொண்டு வருவோம்.
கவிஞன் வாக்கு பொய்க்காது என்று பொன்மொழி உண்டு. அந்த பொன்மொழி பொய்க்காமல் காக்க வேண்டியது நமது கடமை. மகாகவி பாரதியின் கவிதை வரிகள் பொய்க்கவில்லை மெய் தான் என உலகிற்கு உணர்த்திட நாம் அனைவரும் ஓரணியில் சேருவோம். தேமதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவச் செய்வோம். தமிழின் பெருமையை உலகிற்கு பறை சாற்றிடுவோம். தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு மனித நேயம் காப்போம். சாதி,மத வெறி மாய்ப்போம்.
சோறு பொங்க செல்லம்மா வைத்திருந்த அரிசியை, சிட்டுக்குருவிகளுக்குப் போட்டு பசியாற வைத்து மனம் மகிழ்ந்தவன் பாரதி. இன்று தொழிற்சாலை பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மாசுபட்டதன் காரணமாக சிட்டுக்குருவி இனமே அழிந்து வருகின்றது. நவீன யுகம் விஞ்ஞான யுகம், இயந்திர மயம் என்ற பெயரில் பெருகி வரும் தொழிற்சாலைகள் கக்கம் நச்சுப் புகை மற்றும் வெளியேறும் கழிவுகளால் வரும் தீங்க இவற்றால் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைந்து ஓசோனில் ஓட்டை விழுந்தது. அந்த ஓட்டை பெரிதாக காரணமாக அமைகின்றது. அதிக வெப்பத்தின் காரணமாக மழை பொய்த்தது. மழை பொய்த்ததின் காரணமாக விவசாயம் பொய்த்தது. அண்டை மாநிலங்களுடன் தண்ணீர் பகிர்வில் சண்டை, தண்ணீரின் காரணமாக ஒரு உலகப் போர் வருமென்று ஆய்வுகள் சொல்கின்றன.
இன்றைக்கு பாலின் விலையை விட தண்ணீரின் விலை அதிகம் என்ற அவல நிலை பன்னாட்டு நிறுவனங்கள் ஆற்று நீரை கொள்ளையடித்து பாட்டிலில் நிரப்பி விற்று கோடிகளை கொள்ளையடித்து செல்கின்றனர். குடிமக்களுக்கு சுத்தமான நீரை வழங்க வேண்டிய கடமை அரசிற்கு உண்டு. ஆனால் அவர்கள் செய்வதில்லை. அரசியல்வாதிகளுக்கு ஊழல் செய்வதற்கும் பிற கட்சியினரை வசை பாடுவதற்குமே சேரம் போதவில்லை பிறகு எப்படி மக்கள் குறைகளை தீர்ப்பார்கள். குளிர்பானம் என்ற பெயரில் பூச்சி மருந்துகளைக் கலந்து மக்களுக்கு புற்று நோயை பரப்பி வரும் பணியினையும் பன்னாட்டு நிறுவனங்கள் எந்த வித தடையுமின்றி அமோகமாக செய்து வருகிறார்கள். இவர்கள் தரும் பணத்திற்கு மயங்கி நடிகர், நடிகைகள், ஊடகங்கள் மக்கள் மத்தியில் தவறான பிரச்சாரம் செய்து மக்களை முட்டளாக்கி வருகின்றனர்.
தேச ஒற்றுமையை வலியுறுத்தினான் பாரதி. ஆனால் இன்று அண்டை மாநிலங்கள் தமிழகத்திற்கு தண்ணீர் தரவே மறுத்து வருகின்றனர். உச்சநீதிமன்றமே தீர்ப்பு வழங்கினாலும் துச்சமாக மதித்து தான் தோன்றித்தனமாக நடந்து வருகின்றனர். இமயம் முதல் குமரி வரை இந்தியா என்பது குழந்தைகளின் பள்ளிப் பாடப்புத்தகத்தில் தான் உள்ளது. குழந்தைகளின் உள்ளத்தில் பதியுமளவிற்கு அண்டை மாநிலங்கள் நடந்து கொள்வதில்லை. இரண்டு நாடுகள் கூட சமரசமாக தண்ணீர் பகிர்ந்து கொள்ளும் போது இரண்டு மாநிலங்களிடையே தண்ணீர் பகிர்வில் தீராத சண்டை, ஏன் இந்த இழிநிலை? எண்ணிப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் பொதுநலம் மறந்து சுயநலம் பிடித்து ஆடுவதேன். மனிதநேயம் என்பது மனித மனங்கள் மறந்து போனது ஏன்? பாரதியின் கவிதை வரிகளுக்கு செயல்வடிவம் தர வேண்டாமா? சிந்திக்க வேண்டும்.
என்ன வளம் இல்லை? நம் நாட்டில் வளங்களும் இருந்தும் இன்னும் நம்மால் ஏன்? வறுமையை ஒழிக்க முடியவில்லை. சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது. மகாகவி பாரதியின் 125 வது ஆண்டு விழா நடக்க இருக்கும் இந்த காலத்திலாவது பாரதி கண்ட கனவை நனவாக்க நாம் முயற்சி செய்ய வேண்டாமா? சிந்திப்போம் செயல்படுவோம்.
Friday, March 6, 2009
BECOMING A PART OF BBC GLOBAL MINDS!!!
BBC Global Minds
Fra: BBC Global Minds
Sendt: 6. mars 2009 10:02:36
Til: shanmugappirabunalliah@hotmail.com
Dear Shan Nalliah,
Thank you for your interest in becoming a part of the Global Minds community.
Afterwards, you may use the following details to log in to http://www.bbcglobalminds.com/ where you will be able to and view any surveys we have sent you. Please keep this email for your records.
Thank you. You'll be hearing from us soon.
Sincerely,
The Global Minds Team
Fra: BBC Global Minds
Sendt: 6. mars 2009 10:02:36
Til: shanmugappirabunalliah@hotmail.com
Dear Shan Nalliah,
Thank you for your interest in becoming a part of the Global Minds community.
Afterwards, you may use the following details to log in to http://www.bbcglobalminds.com/ where you will be able to and view any surveys we have sent you. Please keep this email for your records.
Thank you. You'll be hearing from us soon.
Sincerely,
The Global Minds Team
மனதைத் தொட்ட உண்மைக் கதை !!!
மனதைத் தொட்ட உண்மைக் கதை
அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
ரெடி, ஸ்டிடி, கோ
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.
அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
"இப்போ வலி போயிடிச்சா"
அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.
பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கிணார்கள்.
பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டிணார்கள்.கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.
ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.
அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.
அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.
ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.
ஆணல் குணத்தால்?
இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?
மனித ஒற்றுமை
மனித நேயம்
மனித சமத்துவம்.
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.
நம்மில் பலர் இதை செய்வதில்லை.
ஏன். நமக்கு மூளை இருப்பதணால்.
அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.
நன்றி!...
"நகர்ந்து கொண்டிருப்பதே...... நதி!
இயங்கிக் கொண்டிருப்பவனே..... இளைஞன்!"
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
அது ஒரு விளையாட்டு மைதானம். 8 சிறுவர், சிறுமிகள், வரிசையாக நின்று கொண்டு இருந்தார்கள். அவர்கள் ஒரு ஓட்டப்பந்தயத்திற்காக தயாராகி கொண்டிருந்தனர்.
ரெடி, ஸ்டிடி, கோ
விளையாட்டு துப்பாக்கியின் சத்தம் கேட்டு குழந்தைகள் ஓட தொடங்கினர்.
ஒரு 15 அடி சென்று இருப்பார்கள். அவர்களில் ஒரு குழந்தை திடிரென்று கீழே விழுந்தது.
அடிபட்ட காரணத்தால் அந்த குழந்தை அழ ஆரம்பித்தது.
ஏதோ சத்தம் வரவே ஓடி கொண்டிருந்த அணைத்து குழந்தைகளும் திரும்பி பார்த்தனர். பின்னர் அந்த குழந்தையை நோக்கி ஓடி வந்தனர்.
அதில் ஒரு குழந்தை கீழே குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டு கேட்டது.
"இப்போ வலி போயிடிச்சா"
அதை பார்த்த மற்ற குழந்தைகளும் அவளை முத்தமிட்டனர்.
பின்னர் எல்லோரும் அந்த குழந்தையை தூக்கிணார்கள்.
பின்னர் அந்த குழந்தையை தூக்கியவாறே வெற்றி இலக்கை நோக்கி ஓடிணார்கள்.
அதை பார்த்த விழா குழுவினரும்,பார்வையளர்களும் அதிர்ச்சி அடைந்தனர். எல்லோர் கண்களிலும் கண்ணீர். அந்த பரவசத்தால் எழுந்து நின்று கை தட்டி பாரட்டிணார்கள்.கண்டிப்பாக அந்த ஒலி கடவுளுக்கும் கேட்டு இருக்கும்.
ஆமாம். இது உண்மை. இது நடந்தது வேறு எங்குமில்லை. நம் இந்தியாவில், அதுவும் ஹைதராபாத்தில் நடந்த உண்மை.
அந்த விழாவை நடத்தியது மனநலம் குன்றியவர்களுகான தேசிய நிறுவனம்.
அதில் கலந்து கொண்ட குழந்தைகள் மனநலம் குன்றியவர்கள்.
ஆம். அவர்கள் மனத்தால் குன்றியவர்கள்.
ஆணல் குணத்தால்?
இதிலிருந்து அவர்கள் உலகத்திற்க்கு சொல்வது என்ன?
மனித ஒற்றுமை
மனித நேயம்
மனித சமத்துவம்.
வெற்றி பெற்ற மக்கள், தன்னை விட தாழ்ந்தவர்களுக்கு உதவிட வேண்டும். அப்போதுதான் அவர்கள் தாழ்வு மனபான்மைக்கு ஆளாக மட்டார்கள்.
நம்மில் பலர் இதை செய்வதில்லை.
ஏன். நமக்கு மூளை இருப்பதணால்.
அன்பு மட்டுமே இந்த உலகை நிற்காமல் ஓட வைக்கும்.
நன்றி!...
"நகர்ந்து கொண்டிருப்பதே...... நதி!
இயங்கிக் கொண்டிருப்பவனே..... இளைஞன்!"
ஆதிசிவம், சென்னை. நன்றி!...
Thursday, March 5, 2009
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே !!!
Date: Mar 5, 2009 10:29 AM
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே வன்னியில்மக்கள் காத்திருக்கின்றனர் ‐ வணபிதா அன்றனி றொக்
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே வன்னியில்மக்கள் காத்திருக்கின்றனர் ‐ வணபிதா அன்றனி றொக்
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே வன்னியில் மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருக்கும் மக்கள் காத்திருப்பதாக வலைஞர்மடத்தில் தங்கியுள்ள வணபிதா அன்றனி றொக் தனது செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
யாழ்மாவட்ட கத்தோலிக்க அமைப்பினால் மாதாந்தம் வெளியிடப்படும் பாதுகாவலன் என்ற இதழின் இறுதிப் பதிப்பிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வட்டக்கச்சித் தேவாலயத்தின் பங்குத் தந்தையான இவர் தனது மக்களுடன் இடம்பெயர்ந்து தற்போது வலைஞர் மடப்பகுதியிலேயே தங்கியுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக காடுகள் கரைம்பைகள் பதுங்கு குழிகள் என அலைந்து நாய்படாப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தாம் தற்போது வலைஞர் மடப்பகுதியில்தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நம்பிக்கையுடன் மக்கள் இருப்பதாகவும்; அவர்கூறியுள்ளார்.
இறந்த சடலங்களை அடக்கம் செய்வதும் காயத்துக்குக்கட்டுக்களைப் போடுவதும் கண்ணீரைத் துடைப்பதுமே அனைவரதும் அன்றாடக்கடமைகளாகிவிட்டன. அடுத்த கட்டமாக கடலுக்குள் பாய்வதைத் தவிர வேறுமார்க்கமே இல்லை.
சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லை என்பதே உண்மையாக உள்ளது. ஆளுக்காள் ஆறுதல்கூறுவதனைத் தவிர தம்மிடம் வேறு எதுவும் இல்லை. ஏனைய பங்குத் தந்தைகளும் இடம்பெயர்ந்து ஒரே இடத்திலேயே தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்பதும் ஆராதனை பிரார்த்தனைகளை நடத்துவதிலும் இயன்றவரை பாடுபடுவதாகவும் கூறுகிறார்.குடாநாட்டில் உள்ள மக்களின் உதவிகளைப் பெரிதும் வன்னி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புலம்பெயர்ந்த மக்கள் உறவுகள் தமக்கு ஒரு நல்லதீர்வினைப் பெற்றுத் தருவார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளார்கள் இந்தமக்கள்.
குழந்தைகள் உட்பட அனைவருமே அடுத்த வேளைக்கு உணவின்றி எதுவும்அற்ற நிலையில் ஆனால் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அன்றன் றொக்அடிகளார் தெரிவித்துள்ளார்.
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே வன்னியில்மக்கள் காத்திருக்கின்றனர் ‐ வணபிதா அன்றனி றொக்
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே வன்னியில்மக்கள் காத்திருக்கின்றனர் ‐ வணபிதா அன்றனி றொக்
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடனேயே வன்னியில் மனிதப் பேரவலத்தைச் சந்தித்திருக்கும் மக்கள் காத்திருப்பதாக வலைஞர்மடத்தில் தங்கியுள்ள வணபிதா அன்றனி றொக் தனது செவ்வி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
யாழ்மாவட்ட கத்தோலிக்க அமைப்பினால் மாதாந்தம் வெளியிடப்படும் பாதுகாவலன் என்ற இதழின் இறுதிப் பதிப்பிற்கு வழங்கிய செவ்வியில் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
வட்டக்கச்சித் தேவாலயத்தின் பங்குத் தந்தையான இவர் தனது மக்களுடன் இடம்பெயர்ந்து தற்போது வலைஞர் மடப்பகுதியிலேயே தங்கியுள்ளார்.
கடந்த 3 மாதங்களுக்கு மேலாக காடுகள் கரைம்பைகள் பதுங்கு குழிகள் என அலைந்து நாய்படாப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தாம் தற்போது வலைஞர் மடப்பகுதியில்தஞ்சம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
எம்மைக் காப்பாற்ற யாராவது வருவார்களா என்ற நம்பிக்கையுடன் இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு நம்பிக்கையுடன் மக்கள் இருப்பதாகவும்; அவர்கூறியுள்ளார்.
இறந்த சடலங்களை அடக்கம் செய்வதும் காயத்துக்குக்கட்டுக்களைப் போடுவதும் கண்ணீரைத் துடைப்பதுமே அனைவரதும் அன்றாடக்கடமைகளாகிவிட்டன. அடுத்த கட்டமாக கடலுக்குள் பாய்வதைத் தவிர வேறுமார்க்கமே இல்லை.
சாப்பிடுவதற்கு எதுவுமே இல்லை என்பதே உண்மையாக உள்ளது. ஆளுக்காள் ஆறுதல்கூறுவதனைத் தவிர தம்மிடம் வேறு எதுவும் இல்லை. ஏனைய பங்குத் தந்தைகளும் இடம்பெயர்ந்து ஒரே இடத்திலேயே தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்களுக்கு ஆறுதல் அளிப்பதும் ஆராதனை பிரார்த்தனைகளை நடத்துவதிலும் இயன்றவரை பாடுபடுவதாகவும் கூறுகிறார்.குடாநாட்டில் உள்ள மக்களின் உதவிகளைப் பெரிதும் வன்னி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
புலம்பெயர்ந்த மக்கள் உறவுகள் தமக்கு ஒரு நல்லதீர்வினைப் பெற்றுத் தருவார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளார்கள் இந்தமக்கள்.
குழந்தைகள் உட்பட அனைவருமே அடுத்த வேளைக்கு உணவின்றி எதுவும்அற்ற நிலையில் ஆனால் நம்பிக்கையுடன் வாழ்ந்து கொண்டிருப்பதாக அன்றன் றொக்அடிகளார் தெரிவித்துள்ளார்.
Tuesday, March 3, 2009
உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை!
தமிழ் பிரவாகம்
உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை
தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
என சொல்லலாம்.
நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
மாதிரி அப்படியொரு டிசைன்.
நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து
வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்.
இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு
செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும்
வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக
இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.
உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து
வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன
முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை
கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும்
நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி,
பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த
சாலை.
உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற
பாகங்களுக்கு
கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக
வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை
நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத
முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான
முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான்
நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர
துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம்
சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள்
வளர்ந்தால் என்ன ஆகும்..?
காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல்
தேய்க்க வேண்டியிருக்கும்.
உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல்
வைத்திருக்கும் கருணை.
சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க
மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும்.
அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை
பயணபாதை விவரம்.
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.
யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள்
என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை
ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.
இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும்
சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள்
சொல்லின.
முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த
ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து
நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் ...
----------------------------------------
> தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> என சொல்லலாம்.
> நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> மாதிரி அப்படியொரு டிசைன்.
> நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
> செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
> ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து
> வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்.
> இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு
> செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும்
> வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக
> இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.
> உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து
> வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன
> முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை
> கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும்
> நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி,
> பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
> முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
> உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
> கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த
> சாலை.
> உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற
> பாகங்களுக்கு
> கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக
> வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை
> நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத
> முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான
> முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான்
> நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர
> துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம்
> சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள்
> வளர்ந்தால் என்ன ஆகும்..?
> காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல்
> தேய்க்க வேண்டியிருக்கும்.
> உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல்
> வைத்திருக்கும் கருணை.
> சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க
> மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
> காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும்.
> அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை
> பயணபாதை விவரம்.
> 1.சகஸ்ராரம்
> 2.ஆக்ஞா
> 3.விசுக்தி
> 4.அனாகதம்
> 5.மணிபூரகம்
> 6.சுவாதிஷ்டானம்
> 7.மூலாதாரம்.
> யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள்
> என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை
> ஆதாரமாகக்கொண்டு
-----------------------------------------------------
உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை
பாராட்டுதலுக்கு நன்றி. இன்னும் பல கட்டுரைகள் மலரும்-
பிரவாகம் குழுமத்தில் ஏறக்குறைய 4000 சொச்சம் பதிவுகளை இட்டிருக்கும் ஒரு
தமிழ் ஏந்தல் - என் படைப்புக்கும் சான்று பகர்ந்திருப்பது இனி வரும் என்
எழுத்துக்களுக்கான உரம்.
நன்றி.
வெங்கட்.தாயுமானவன்.
------------------------------------------------
> சமீபகாலமாக உங்களின் பதிவுகளை படித்துவருகிறேன்.
> இந்தக் குழுமத்தில் உங்களின் பதிவுகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. மிக்க
> மகிழ்ச்சி! உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை என்ற இந்தப் பதிவில் உடலின் அமைப்பை
> இந்தக் கோணத்தில் பார்ப்பதும் படிப்பதும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது.
> நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
> வாழ்த்துகள்!
> அன்புடன்
> சுவாதி,
--------------------------------
> > தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> > சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> > போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> > என சொல்லலாம்.
> > நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> > பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> > மாதிரி அப்படியொரு டிசைன்.
> > நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> > இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
> > செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
> > ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து
> > வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்.
> > இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு
> > செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும்
> > வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக
> > இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.
> > உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து
> > வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன
> > முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை
> > கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும்
> > நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி,
> > பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
> > முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
> > உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
> > கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த
> > சாலை.
> > உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற
> > பாகங்களுக்கு
> > கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக
> > வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை
> > நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத
> > முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான
> > முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான்
> > நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர
> > துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம்
> > சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள்
> > வளர்ந்தால் என்ன ஆகும்..?
> > காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல்
> > தேய்க்க வேண்டியிருக்கும்.
> > உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல்
> > வைத்திருக்கும் கருணை.
> > சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> > ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> > உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க
> > மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> > பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
> > காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை
-----------------------------------------------------------
அருமையான கட்டுரை தாயுனாவன் ஐயா.. தொடருங்கள்... படிக்க
காத்திருக்கிறோம்.
> தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> என சொல்லலாம்.
> நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> மாதிரி அப்படியொரு டிசைன்.
> நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> இருக்கிறது.
எப்படி ? எங்கிருந்து வருகிறது ? யார் ? ஏன் அனுப்புறாங்க ?
> சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி.
மனமா ? மூளையை தானே சொல்றீங்க ?
>மனம் இயங்க
> மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
> காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும்.
> அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை
> எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும்
> இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும்.
> மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த
> மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இன்றைய கட்டுரையின் தேவை
> நிறைவேறிவிடும்.
> 1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.
> 2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி
> சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.
> 3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.
> 4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது
> "அனாகதத்திற்கான அணீ.
> 5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும்
> "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.
> 6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான
> அணி.
> 7.முலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.
> மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த
> புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன்
> முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?
ஏன் தங்கத்தை பூட்ட வேண்டும்? வெள்ளியோ, வெண்கலமோ பூட்டலாமே ?
ஆண்களுக்கு இது போல நகைகள் இல்லையே ஏன் ?
இதெல்லாம் ஆண்களுக்கு தேவையில்லையா?
-----------------------------------------------
> அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?
> யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களை த்ருகிறார்கள். ஆனால் பரிட்ச்சார்த்தமாக
> எனக்கு தோன்றுவதை பகிர்கிறேன் (எதனோடும் முரண்படாமல்)
> சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.
> ஆக்ஞா -நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்
> விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய்
> வெளிப்படுத்தும் மையம்.
> அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு
> உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.
> மணிபூரகம்-வெளி உலகி பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய
> ஏற்பு மையம்.
> சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும்
> மையம்
> மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம்
> பெறும் மையம்.
> இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான்
> உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி
> பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்
> இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்-
> "நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல"
> "என்னால விழுங்க முடியல..""(i can't gulf it) ,"என்னால ஏத்துக்க முடியல"
> "என்னால செரிக்க முடியல"
> நான் நானா இல்லன்னா -பைத்தியம்
> நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்
> விழுங்க முடியலன்னா- வாந்தி.
> ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.
-----------------------------------------------
இன்னும் நிறைய கேளுங்க காமேஷ் - கோபிக்கவெல்லாம் மாட்டேன்.தங்களின்
விவரம் கண்டேன் "இல்லாத கடவுளே காப்பாற்று"-என்று சொல்லி இருக்கிறீர்கள்.
நான் கடவுளின் இருப்பு இல்லாமை பற்றி உங்கள் அளவுக்குகூட
யோசிப்பவனில்லை.கடவுளின் பெயரால் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு ஞாயம்
தேடிக்கொண்டிருக்கிறேன் அவ்வளவே.
புனலிலும், அனலிலும், காற்றிலும்,குப்பையிலும் எடுக்கப்படும் மின்னாற்றல்
செம்பு கம்பி வழியாய் நம் வீட்டுக்குள் வந்து ஒளியையும் ஒலியைம் தருவதை
ஏற்கிறோம். ஆனால் நம் உயிர்காந்த ஆற்றல் வானிலிருந்து வருவதை சந்தேகக்
கண்கொண்டு பார்க்கிறோம். தவறில்லை. அதே சமயத்தில் இது விவாதம் செய்து
அதன் பின்னால் ஏற்கும் விஷயமல்ல. உணர்தலுக்குரிய விஷயம்.
கருந்துளையிலிருந்து பெருவெடிப்புக்கு பிறகான விளைவே இவ்வுலகின் தோற்றம்
எனக்கொண்டால்- வெடித்தது ஏதோ ஒரு நாளில் ஒடுங்கவும் செய்யும். இதை
செய்வது யாரோ அல்லது எதுவோ
அவரே அல்லது அதுவேதான் நமக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறது.
தாமரையை மலரச்செய்கிற சூரியனும், அல்லியை மலர செய்கிற சந்திரனும்
இல்லாமல் போனால் அந்த மலர்களை இன்குபேட்டரில் வைத்தெல்லாம் மலரசெய்ய
முடியாது. அப்படியே செய்தாலும் ஒரு பூவை மலரவைக்க செய்ய வேண்டிய செலவு
அதிகமாய் இருக்கும்.
தாகூரின் வார்த்தைகளில்..
உன்னால் பூவுக்கு
வாசத்தையோ
மணத்தையோ
அதில் தேனையோ
மகரந்தத்தையோ
மென்மையையோ
ஒருகாலும் உருவாக்க முடியாது.
அதை செய்துகொண்டிருப்பவன்
மிக எளிமையாக செய்துகொண்டிருக்கிறான்.- என்பார்.
தாகூர் எந்த கடவுள் உருவத்தையும் நமக்கு முன் நிறுத்தவில்லை.
இது ஏன் நடக்கிறது என்பதைதான் எல்லோரும்
யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்..நான் உட்பட- நீங்களும் யோசியுங்கள்.
உலக உருவாக்கத்திற்கு காரணம் எதுவோ அதுவேதான் இதற்கும் காரணமாக இருக்க
முடியும்.நாம் கூட்டாக சேர்ந்தால்தான் விடை காணமுடியும் அல்லது
முயற்சியாவது செய்யமுடியும்.
இனி அடுத்த கேள்வி..
மூளை என்பது மனதின் ஊடகம் - மனம் தான் செயல்பட மூளையை
பயன்படுத்திக்கொள்கிறது.
தங்கத்தில் பூட்டியது ஒரு உயர்வு நவிற்சிக்காக- எதை வேண்டுமானாலும்
பூட்டலாம். நம் இந்திய சிந்தனை கூறுகளில் மனதையே ஒரு பெண்ணாக பார்க்கும்
பாவனை இருக்கிறது. ஒருவேளை அதனால் இருக்கலாம்.
ஆண்களும் இதே மையங்களில் திருநீற்றை அணியும் வழக்கம் இன்னும் இருகிறது.
வயது முதிர்ந்தவர்களை பாருங்கள். அவர்கள் எங்கெல்லாம் திருநீரு
அணிகிறார்களென்று.
பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் தோப்புகரணம் போடுவதை பார்த்திருப்பீர்கள்.
நம் பள்ளிகளில் அதை தண்டணையாக்கிவிட்டார்கள்.
தலையில் வல பக்கம் இடபக்கம் குட்டிக்கொண்டு - பிறகு வலக்கையை இடதிற்கும்,
இடக்கையை வலதிற்கும் பெருக்கல் குறிபோல் மாற்றி குட்டிக்கொண்டு
தன்பின்னரே குனிந்து தோப்புக்கரணம் போடுவார்கள்.
நாம் சொன்ன நெடுஞ்சாலையில் trafficjam ஏற்படாதிருக்கவே அங்கு கைகளால்
குட்டி அதிர்வை ஏற்படுத்தி சுணக்கத்தை நீக்கும் பயிற்சி அது.
இந்த பதிலும் நீங்கள் திருப்தி அடைவதற்காக அல்ல - சொல்ல விட்டுப்போன
செய்திகளை சொல்லமுடிந்ததில் எனக்கே திருப்தி.
-------------------------------------------
> அருமையான கட்டுரை தாயுனாவன் ஐயா.. தொடருங்கள்... படிக்க
> காத்திருக்கிறோம்.
> நடுவில கேள்விகள் கேட்டா கோவிச்சிக்க மாட்டீங்களே ?
----------------------------------------------------------
> > தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> > சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> > போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> > என சொல்லலாம்.
> > நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> > பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> > மாதிரி அப்படியொரு டிசைன்.
> > நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> > இருக்கிறது.
> எப்படி ? எங்கிருந்து வருகிறது ? யார் ? ஏன் அனுப்புறாங்க ?
> > சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> > ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> > உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி.
> மனமா ? மூளையை தானே சொல்றீங்க ?
> >மனம் இயங்க
> > மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> > பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும்
..........................................
கடவுள் என்ற இருப்பை மனிதன் தனக்கு இடர் வரும் நேரங்களில் மட்டும் தான்
தேடுகிறான். தன் கஷ்டம் அல்லது துயரின் செறிவிற்க்கேற்ப இயலாமை என்ற புள்ளியில்
கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும் தனக்கு உதவ வேண்டும் என்ற ஆவலுக்கு
உந்தப்படுகிறான் அல்லது கடவுளே இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுகிறான்.
இரு நிலைகளிலும் அவனுடைய மனதின் பேதலிப்பு தான் கடவுள் பற்றிய முடிவாகிறது.
மற்றப்படி மனிதனுக்கு கடவுள் என்ற விதயம் தேவையற்றது என்பது சரியான கருத்து
என்று சொல்லலாமா???
அமெரிக்காவில் நிகழ்ந்த என்னுடைய அப்பாவின் மரணம் அறியப்படாமல் , அவர் இன்னமும்
கோமாவில் தான் இருக்கிறார் என்ற நினைவில் அப்பாவைக் காப்பாற்றும்படி வேண்டி
இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் ஏறி பிராத்தித்த எனக்கு...அப்பாவின் பூத உடலை
பார்த்த பின் இந்த நிமிடம் வரை வந்த எந்த கஷ்டத்திலும் கடவுள் என்பது இல்லை
..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது நான்
கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க தோசத்தில்
கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும் வாயில்
வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை..
ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.
அன்புடன்
சுவாதி.
-----------------------------------------
> இன்னும் நிறைய கேளுங்க காமேஷ் - கோபிக்கவெல்லாம் மாட்டேன்.தங்களின்
> விவரம் கண்டேன் "இல்லாத கடவுளே காப்பாற்று"-என்று சொல்லி இருக்கிறீர்கள்.
> நான் கடவுளின் இருப்பு இல்லாமை பற்றி உங்கள் அளவுக்குகூட
> யோசிப்பவனில்லை.கடவுளின் பெயரால் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு ஞாயம்
> தேடிக்கொண்டிருக்கிறேன் அவ்வளவே.
> புனலிலும், அனலிலும், காற்றிலும்,குப்பையிலும் எடுக்கப்படும் மின்னாற்றல்
> செம்பு கம்பி வழியாய் நம் வீட்டுக்குள் வந்து ஒளியையும் ஒலியைம் தருவதை
> ஏற்கிறோம். ஆனால் நம் உயிர்காந்த ஆற்றல் வானிலிருந்து வருவதை சந்தேகக்
> கண்கொண்டு பார்க்கிறோம். தவறில்லை. அதே சமயத்தில் இது விவாதம் செய்து
> அதன் பின்னால் ஏற்கும் விஷயமல்ல. உணர்தலுக்குரிய விஷயம்.
> கருந்துளையிலிருந்து பெருவெடிப்புக்கு பிறகான விளைவே இவ்வுலகின் தோற்றம்
> எனக்கொண்டால்- வெடித்தது ஏதோ ஒரு நாளில் ஒடுங்கவும் செய்யும். இதை
> செய்வது யாரோ அல்லது எதுவோ
> அவரே அல்லது அதுவேதான் நமக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறது.
> தாமரையை மலரச்செய்கிற சூரியனும், அல்லியை மலர செய்கிற சந்திரனும்
> இல்லாமல் போனால் அந்த மலர்களை இன்குபேட்டரில் வைத்தெல்லாம் மலரசெய்ய
> முடியாது. அப்படியே செய்தாலும் ஒரு பூவை மலரவைக்க செய்ய வேண்டிய செலவு
> அதிகமாய் இருக்கும்.
> தாகூரின் வார்த்தைகளில்..
> உன்னால் பூவுக்கு
> வாசத்தையோ
> மணத்தையோ
> அதில் தேனையோ
> மகரந்தத்தையோ
> மென்மையையோ
> ஒருகாலும் உருவாக்க முடியாது.
> அதை செய்துகொண்டிருப்பவன்
> மிக எளிமையாக செய்துகொண்டிருக்கிறான்.- என்பார்.
> தாகூர் எந்த கடவுள் உருவத்தையும் நமக்கு முன் நிறுத்தவில்லை.
> இது ஏன் நடக்கிறது என்பதைதான் எல்லோரும்
> யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்..நான் உட்பட- நீங்களும் யோசியுங்கள்.
> உலக உருவாக்கத்திற்கு காரணம் எதுவோ அதுவேதான் இதற்கும் காரணமாக இருக்க
> முடியும்.நாம் கூட்டாக சேர்ந்தால்தான் விடை காணமுடியும் அல்லது
> முயற்சியாவது செய்யமுடியும்.
> இனி அடுத்த கேள்வி..
> மூளை என்பது மனதின் ஊடகம் - மனம் தான் செயல்பட மூளையை
> பயன்படுத்திக்கொள்கிறது.
> தங்கத்தில் பூட்டியது ஒரு உயர்வு நவிற்சிக்காக- எதை வேண்டுமானாலும்
> பூட்டலாம். நம் இந்திய சிந்தனை கூறுகளில் மனதையே ஒரு பெண்ணாக பார்க்கும்
> பாவனை இருக்கிறது. ஒருவேளை அதனால் இருக்கலாம்.
> ஆண்களும் இதே மையங்களில் திருநீற்றை அணியும் வழக்கம் இன்னும் இருகிறது.
> வயது முதிர்ந்தவர்களை பாருங்கள். அவர்கள் எங்கெல்லாம் திருநீரு
> அணிகிறார்களென்று.
> பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் தோப்புகரணம் போடுவதை பார்த்திருப்பீர்கள்.
> நம் பள்ளிகளில் அதை தண்டணையாக்கிவிட்டார்கள்.
> தலையில் வல பக்கம் இடபக்கம் குட்டிக்கொண்டு - பிறகு வலக்கையை இடதிற்கும்,
> இடக்கையை வலதிற்கும் பெருக்கல் குறிபோல் மாற்றி குட்டிக்கொண்டு
> தன்பின்னரே குனிந்து தோப்புக்கரணம் போடுவார்கள்.
> நாம் சொன்ன நெடுஞ்சாலையில் trafficjam ஏற்படாதிருக்கவே அங்கு கைகளால்
> குட்டி அதிர்வை ஏற்படுத்தி சுணக்கத்தை நீக்கும் பயிற்சி அது.
--------------------------------------------------
//நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
இருக்கிறது//
//அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது//
அன்புத் தாயுமானவன்,
எனக்கும் சில கேள்விகள்.
ஒவ்வொருவருக்கும் ஆற்றல் கிடைக்கும் அளவு வேறுபடுமா?
1. இது எண்ணங்களோடு தொடர்பு உடையதா?
2. நம்க்கு வேண்டுமளவுக்கு பெற முடியுமா?
3. அதிகம் பெற்றால் தீமையா?
4. நியூட்டனின் மூன்றாம் விதி உடன்படுமா?
5. இந்த ஆற்றலின் திறனை நமக்குள் அதிகப்படுத்த முடியுமா?
அற்புதமான பதிவு.
அதிசயமாய் எனக்கும் கேள்வி கேட்க நேரம்..
நன்றி.
--
தமிழ் வாலிபன்
ஒன்று விழ ஒன்பதாய் எழும். வாழும் உலகெங்கும். வீழாது தமிழ்.
பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.
"தமிழரிடம் தமிழில் பேசுவோம்" தாய்க்குச் செய்யாததைத்
தமிழுக்குச் செய்வோம்.. http://groups.google.com/group/Piravakam
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
-----------------------------------------
உலகியல் ரீதியில் எல்லோரும் ஏற்கும் ஒரு கருத்தை நிறுவ சாத்தியமே இல்லை.
காரணம் நாம் வாழும் வாழ்கை என்பது சார்பியலை சார்ந்தது என்ற உண்மையை
நம்மில் பெரும்பாலோர் மறந்துவிட்டோம். அமெரிக்காவில் நீங்கள் இந்த மடலை
அடித்தபோது அங்கு சூரியன் இருந்திருக்ககூடும். அதே நேரம் இங்கு
காலனேரத்தின் நிலை வேறு.
ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை மாற்றிபோட்டாலே பொருள்
மட்டுமல்ல..யாவுமே மாறிபோகும். உதாரணத்திற்கு- what is the time..? என்ற
கேள்விக்கும் what the time is..? என்ற கேள்விக்கும் உள்ள முரணை
பார்த்தால் விளங்கும்.
கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் சர்ர்பு நிலையாகும்.
நம்பாமல்போனதற்கு நீங்கள் 100 காரணம் சொன்னால். நம்புவதற்கு ஒருவர் 1000
காரணங்களை சொல்லக்கூடும்.
இறையை -உருவமாக, கொள்கையாக பாராமல், ஒரு தன்மையாகவும்,இயற்கை
ஒழுக்கமாகவும் பார்க்க புரிந்துகொண்டால்
பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். துன்பம் நேரும்போது
காப்பாற்றவேண்டிய பொறுப்பெல்லாம் கடவுள் தன்மைக்கு கிடையாது.
ஒரு குண்டூசி தேவை என்றால் வானத்தை பார்த்து கர்த்தரிடமோ, ஈசனிடமோ,
அல்லாவிடமோ "குண்டூசியை தாருங்கள் என கேட்பதில் " ஞாயமே இல்லை. உருவான
காலத்திலிருந்து நிலத்தடியில் தங்கிய இரும்புதாது பற்றிய அறிவு நம்மிடம்
உண்டு. பிரித்தெடுத்து உருக்கி, ஊச்சியை உருவாக்கிக்கொள்ளவேண்டியதுதான்.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்- இயற்கை ஒழுக்கம் நமக்கு அறிவை மட்டும்தான்
தரும். அதைவைத்து நாம் பெறநினைப்பதை அடைந்துகொள்ள வேண்டியதுதான்.நம்
நாட்டில் இரும்பு தாது தீர்ந்துபோனால் அயல்னாட்டிலிருந்து தருவிக்க
வேண்டியதுதான். அங்கும் தீர்ந்துவிட்டதா..இரும்புக்கான மாற்றுபொருளை
யோசிக்க வேண்டியதுதான். மாற்றுப்பொருளும் உருவாக்க முடியவில்லையா..?இந்த
உலக இயக்கம் நின்றுவிடாது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. பிள்ளையார்
சிலை பால் குடித்ததென்று , அந்த சிலையை உடைத்த ஒரு தீவிரவாதிதான் இன்று
இப்படி எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கு ஆன்மீகம் என்பது பாட்டு பாடுதல்
மத சின்னங்களை அணிதல், என்ற விதிக்கப்பட்ட கட்டுக்குள் நின்று போனது
பரிதாபம்.
நேற்று உங்களின் profile பார்த்தேன். புற்றுநோய் உள்ளவர்க்கு உதவுதலை
நோக்க்மாக சொல்லி இருந்தீர்கள். உங்களால் உதவி பெற்ற ஒருவர், பூரண குணம்
பெற்று "நீங்கள்தான் என் கடவுள் "என்று சொன்னால் என்ன செய்வீர்கள்..?
என்ன சொல்வீர்கள்..?
நாம் இப்படித்தான் பழக்கப்பட்டுவிட்டோம். செய்தால் சாமி உண்டு- செய்யலையா
சாமி இல்ல - இரண்டு கருத்தியலுமே தவறு.
அப்புறம் ஏதோ ஒரு பக்கத்தை புரட்டிக்கொண்டு வந்தபோது -உங்கள் வார்த்தை
ஒன்று கண்ணில் பட்டது- "நாம் பதியனிட்ட ரோஜா..நம் கண் முன்னாலேயே மலருதலை
பார்த்தல்..அதை ரசித்தல் "என ஒரு அழகியலோடு சொல்லப்பட்ட அதை உள்ளே சென்று
படிக்ககூட தோணவில்லை.நாம் பார்க்க அந்த செடி எத்தனை மலர்களை மலர்த்தி
மகிழ்ச்சிப்படுத்துகூடும்..? சீசன் மாறினால் மலர்தல் நின்றுவிடாதா..?
இதுதான் இயற்கையின் ஒழுக்கம். இங்கொரு பூ மலர்வதை
நிறுத்தினால்தான்,வேறொரு இடத்தில் வேறொரு பூவை மலர்த்த முடியும்.
இந்தியாவில் வெயில்- US ல் நிலா. USல் வெயில் இந்தியாவில் நிலா
வகுப்புக்கு வந்த வாத்தியார் கேட்டார்.."டேய் பசங்களா..பூமி நம்ம சூரியனை
எப்படிடா..சுத்துது..?" பையன் ஒருத்தன் சொன்னான் , "ஒழுங்கற்ற பாதையில்
சுத்தி வருது சார்.." அப்படின்னு.
"வெரி குட். ஒக்காருடா" அப்படின்னாரு வாத்தியார்.
நம்ம பள்ளிகூட பாடதிட்டம் இதைத்தான் சொல்லுது. பையன் இதை எழுதினா
மதிப்பெண் நிச்சயம் உண்டு. ஆனால் உண்மை என்ன தெரியுமா..? "பூமி சூரியனை
ஒழுங்கற்ற பாதையில்..ஒழுங்காக சுற்றி வருகிறது.." ஆம் சுத்தி வர்றதென்னவோ
ஒழுங்கில்லா பாதைதான்..,ஆனா சுத்துகிற முறையில் ஒழுக்கம் இருக்கு.
அதனாலதான் உலக இயக்கம் நடந்துகிட்டு இருக்கு.
ஒழுங்குமுறைகளை ஞாயப்படுத்தி நம்மை அத்துமீற பணிக்கும் வாழ்வியல்
சூழலில், அதை மீறாமல் , ஒழுங்கற்ற உலகத்தில் நாம் ஒழுங்காய் வாழ கடவுள்
கொள்கையோ, இயற்கைனிலை ஒழுக்கமோ ஏதோ ஒரு பெயரில் நமக்கு ஒன்று
தேவைப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்.
"நன்றாங்கால் நல்லவா காண்பவர்
அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி.
நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..?
அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம்
எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக
தேட்டங்கள்தான். .
---------------------------------------------
> "நன்றாங்கால் நல்லவா காண்பவர்
> அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி.
> நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..?
> அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம்
> எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக
> தேட்டங்கள்தான். .<<<<
த.வா உங்கள் கேள்வியால்,,,தாயுமானவர் ஐயாவிடம் இருந்து அரும்பெரும்
பொக்கிஷங்கள் நமக்கு கிடைக்கப்பெற்றன.
உண்மைதான் ஐயா,,
கேட்டதும் 'தா" என்று சாமியைக்கூட 'வியாபாரி" ஆக்கிவிட்டோம்..
என்றென்றும் நட்புடன்,
விஜியின்சுதன்
--------------------------------------------------
> ..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது
> நான் கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க
> தோசத்தில் கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும்
> வாயில் வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப்
> பார்ப்பதில்லை..
> ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.
மிக உண்மை... எனக்கும் அப்படியே... உருகி உருகி கடவுளை நம்பியவள் சில
காரணங்களினால் கொஞ்சம் விலக ஆரம்பித்தேன்...
ஆனாலும், நம் குழந்தைகளிடம் கடவுள் பயம், பக்தி சொல்லிதானே வளர்க்க
வேண்டியுள்ளது... அந்த துணை எப்போதுமே தேவையாயுள்ளது...
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================
-------------------------------------------
> கடவுள் என்ற இருப்பை மனிதன் தனக்கு இடர் வரும் நேரங்களில் மட்டும் தான்
> தேடுகிறான். தன் கஷ்டம் அல்லது துயரின் செறிவிற்க்கேற்ப இயலாமை என்ற புள்ளியில்
> கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும் தனக்கு உதவ வேண்டும் என்ற ஆவலுக்கு
> உந்தப்படுகிறான் அல்லது கடவுளே இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுகிறான்.
> இரு நிலைகளிலும் அவனுடைய மனதின் பேதலிப்பு தான் கடவுள் பற்றிய முடிவாகிறது.
> மற்றப்படி மனிதனுக்கு கடவுள் என்ற விதயம் தேவையற்றது என்பது சரியான கருத்து
> என்று சொல்லலாமா???
> அமெரிக்காவில் நிகழ்ந்த என்னுடைய அப்பாவின் மரணம் அறியப்படாமல் , அவர் இன்னமும்
> கோமாவில் தான் இருக்கிறார் என்ற நினைவில் அப்பாவைக் காப்பாற்றும்படி வேண்டி
> இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் ஏறி பிராத்தித்த எனக்கு...அப்பாவின் பூத உடலை
> பார்த்த பின் இந்த நிமிடம் வரை வந்த எந்த கஷ்டத்திலும் கடவுள் என்பது இல்லை
> ..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது நான்
> கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க தோசத்தில்
> கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும் வாயில்
> வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை..
> ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.
> அன்புடன்
> சுவாதி.
------------------------------------------------
சுவாதியக்கா,
கடவுள் நம்பிக்கையில்லாமைக்கு உங்கள் காரணம் சரியில்லை என்றே
நினைக்கிறேன். எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவங்க தானே..
நான் உன்னை வேண்டினேன் நீ என்னை ஏமாத்திட்டாய்னு சொல்றா மாதிரி இருக்கு.
அது அறியாமை.
மறுபடியும் கடவுள் நம்பிக்கைக்கு போங்க..
பல வழிகளில் உங்களுக்கு உதவி புரியும்...
கடவுள் நம்பிக்கை உங்க மனசுக்கு ஒரு அமைதியை கொடுக்கும்...
இந்த அமைதி ஆரோக்கியத்தை கொடுக்கும்...
ஆரோக்கியமாக இருந்தால் குளிர்காலத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனையும்
வராது.
அட்லீஸ்ட் தப்பு செய்தால் கடவுள் கண்ணை குத்துவார்னாவது பசங்களுக்கு ஒரு
பயத்தை ஏற்படுத்துங்கள்...பிற்காலத்தில் அவங்க சிந்தித்து அதெல்லாம்
சும்மானு
தெரிந்துகொள்ளும் வரை அவர்களை நற்வழி படுத்தலாம்.
---------------------------------------------------------
ஆற்றல் கிடைக்கும் அளவில் எந்த வேறுபாடும் கிடையாது. எல்லோருக்கும் ஒரே
மாதிரியான அள்வில்தான் வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்துவதிலதான்
கோளாறு.இயற்கை நமக்கு தந்திருக்கும் நதிகள் அதிகம். அதை பராமரித்து
பகிர்ந்துகொள்வதில்தான் பிரச்சினை அல்லவா..?
இன்னொருவகையில் சொல்வதானால்-அன்றாடம் நாம் பயன்படுத்தும்
மின்சாதன்ப்பொருட்கள் வடிவத்திலும்,தன்மையிலும்,செயல்பாட்டிலும் வேறு
வேறானவை.(சுழலும் மின்விசிறி,கொதிக்கும் heater, குளிரும் a/c )ஆனால்
குளிர்வதற்கானாலும் சரி. கொதிப்பதற்கானாலும் சரி.நாம் உள்ளீடாக தரும்
பொருள் ஒன்றேதான். மின்சாரம். அளவும் ஓரே அளவுதான்.(230 வோல்ட்ஸ்). மின்
சலவைபெட்டியோ. தொலைகாட்சி பெட்டியோ அதற்கு தேவையான மின்சாரத்தை
எடுத்துக்கொள்ளுமாறு டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல் நாம் என்ன
டிசைன் என தீர்மானிக்காதவரை ஆற்றலின் அளவு பற்றி யோசிக்கமுடியாது.
திடமாய் இருக்கும் ஒரு வசதியான வீட்டு பையனால்-ஒரு சைக்கிளைக்கூட தள்ள
முடியாது.ஆனால்..பிளாட்பாரத்தில் வசிக்கும் ஒரு கூலிக்கார சிறுவன்
அனாயசமாய் ஒரு அரிசி மூட்டையை தூக்கிவிடுவதை பார்க்கிறோம். இந்த ஆற்றல்
வளர்ச்சி புறம் சார்ந்தது.புற ஆற்றலை தேவைகள் வளர்க்கவோ,குறைக்கவோ
செய்யும். ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பது அக ஆற்றல் பற்றி.
மனதுக்கும் மூச்சுக்கும் தொடர்பு
இருக்கிறது.கோபம்,tension,விரக்தி,ஏமாற்றம்,பதற்றம்..போன்ற சமயங்களில்
சுவாசத்தின் வேகமும்,இதய துடிப்பும் அதிகரிப்பதை கண்டிருக்கிறோம்
அல்லவா..?அதே ஒரு பெருமூச்சு விடும் சமயத்தில் கிடைக்கும் relax ஐயும்
நினைத்து பாருங்கள்.
மூச்சை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நம் அக ஆற்றலை வளர்த்துக்கொள்ளமுடியும்.
அதற்கான பயிற்சிமுறைகளான யோகா,தியானம், ஆகியவற்றை மதங்களோடும்,கடவுளோடும்
தொடர்பு படுத்தியதே அதன் மீதான நம்பிக்கை இன்மைக்கான காரணம் ஒரு சாதாரண
செடி தனக்கு தேவையான் உணவை தானே தயாரித்துக்கொள்கிறது. எங்கே வைத்தாலும்
சூரியனை நோக்கி செல்லும் தேவையும்,புரிதலும் அவைக்கு உண்டு. இதுதான்
ஒவ்வொரு உயிர் குழுமத்திற்கும் இயற்கை செய்து வைத்திருக்கும் network
system.
வண்ணத்துபூச்சி கோடி ரூபாய் தந்தாலும் மலம் உண்ணாது. பன்றிக்கு 100 கோடி
ருபாய் தந்தாலும் தேன் பருகாது. இது அவற்றின் network. இவ்வளவு ஏன் 1000
ரூ.கொடுத்து ஒரு செல்போன் வாங்கி, 100 ரூக்கு கிடைக்கும் ஒரு சாதாரண சிம்
கார்ட் நம்மை ஒரு network உடன் இணைக்கும்போது..காந்த மயமான மனிதனுக்கு
இயற்கை வழங்கியிருக்கும் network பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள். மற்ற
உயிரினம் போல நமக்கு network வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை.நாம்
நம்மை tune செய்ய..செய்ய..நம் ஆற்றலின் அலைநீளம் அதிகரித்துக்கொண்டே
போகும் என்பதில் ஐயமே வேண்டாம் எல்லொரையும் போன்றவர்தான் ப்ரூஸ்லீ, ஆனால்
அவருடைய கைகள் மட்டும் எப்படி ஓரெ அடியில் கல்லையும், மரத்தையும்
பிளந்தன..? காரணம் பயிற்சி. அவரைப்போல பயிற்சி செய்த எல்லோருமே இன்று
கல்லை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நீங்களும் பயிற்சி செய்தால் உடைக்க
முடியும்.பயிற்சி செய்தால் யாராக இருந்தாலும் ஆற்றல் வரும்..சந்தேகமே
வேண்டாம்.
அடுத்து -ஆற்றலை அதிகமாக்கிகொள்வது தீமையா ..?
அது உங்கள் ஆற்றலை எந்த நோக்கத்திற்காக செலவு செய்யப்போகிறீர்கள் என்பதை
பொறுத்து இருக்கிறது. ஓடுகளத்தில் 120 மைல் வேகத்தில் காரை செலுத்தினால்
வெற்றி. பொது சாலையில் ஓட்டினால் தண்டனை. இது நிஜம்தானே..?.
நியூட்டனின் விதி நிச்சயமாய் பொருந்தும். பெரிய உதாரணமெல்லாம் தேவை
இல்லை. கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொள்ளும் நம்
சாமிகளை உற்று பாருங்கள். அந்த 48 நாட்களுக்கு அனுஷ்டிக்கும் விரதமென்ன,
கோபவார்த்தைகள் கிடையாது, மது,மாமிசம்,மாது கிடையாது. வயது வித்தியாசம்
பாராமல் அனைவரையும் தெய்வாம்சமாய் பாவைத்து காலில் விழும் தன்மை என்ன,,,?
48 நாட்களுக்கு பிறகு இந்த உணர்வுகள் என்னாகிறது.
மாலயை கழற்றியதும்- பட்டை லவங்க மசாலா- டாஸ்மாக்..இதுதானே. நினைத்தால்
அந்த தவ தன்மையை ஆயுளுக்கும் தொடர முடியாதா..? முடியும்..?மனம் தேவை
இல்லை என நினைக்கிறது. அதனால் தலை உச்சியில் கவனமாய்
உட்கார்ந்துகொண்டு..விழிப்பய் இருந்த் மனம்.., தன் நிலையில் இருந்து
இறங்கிவிடுகிறது.
"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.."என பாடுவதற்கும், "நிலாகாயுது
நேரம் நல்ல நேரம்.."என பாடுவதற்கும் ஆற்றல் நிலையில் வித்தியாசம்
இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறதா..?
நிச்சயமாக நம் ஆற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முடியும் தவா.நம் ...
கடவுள் என்னும் சொல்லே
மனிதருக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சொல்
கடவுளை நம்பினால் நாம் காப்பாற்றப்படுவோம்
கடவுளை நம்பாதவர்கள் கைவிடப்படுவார்கள் எப்படி என்று பார்ப்போமா
முதலில் கடவுள் என்னும் சொல்லின் பொருளை சரியாக புறிந்து கொள்ளவேண்டும்
கடவுள் என்பது கற்சிலையோ, விக்ரகமோ, அல்லது புறத்தோற்றங்களோ அல்ல
அது ஒரு உள் உணர்வு
காற்றை உணருதல் போல, வெப்பத்தை உணருதல் போல, குளிர்ச்சியை உணருதல் போல்,
கடவுளை உணரமுடியாது
ஏனென்றால் அதற்கு உருவம் கிடையாது
நாமாக வேண்டிக் கொள்கிறோம்
நடக்கவிலையென்றால் நாமாக திட்டுகிறோம்
ஆனால் கடவுள் என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ அந்தக் கடவுளிடம் எந்த ஒரு
சலனமும் இல்லை
நாமளிக்கும் பொருட்களினாலோ, நாம் செலுத்தும் அன்பினாலோ, அல்லது நாம்
வெறுப்பதாலோ,எந்தவித சலனமும் ஏற்படாது கடவுளிடம்
ஆகவே நாம் உண்டு என்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
நாம்தான் கடவுள்
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் துன்பம் வரும்போது யாருமே இல்லை என்று சோர்ந்து
போய் தவறான முடிவைத் தேடுகிறான்
கடவுள் நம்பிக்கை இருப்பவன் துன்பம் வரும் வேளையில் கடவுள் நம்பிக்கை
இருப்பதால் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பி சற்றே நிதானப்பட்டு யோசித்து
நல்ல முடிவெடுக்கிறான்
ஆனால் தவறான முடிவெடுப்பதும் நாம், நல்ல முடிவெடுப்பதும் நாம்
ஆனால் பழி கடவுள் மேல்
போடுகிறோம்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்னும் வாதமே தேவையில்லை
நாம் இருக்கிறோம் நம்முள் அவன் இருக்கிறான்
நாம் கடமை ஆற்றுவோம், காலம் பதில் சொல்லும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
----------------------------------------------------
>> > > "நன்றாங்கால் நல்லவா காண்பவர்
>> > > அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி.
>> > > நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..?
>> > > அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம்
>> > > எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக
>> > > தேட்டங்கள்தான். .<<<<
>> > த.வா உங்கள் கேள்வியால்,,,தாயுமானவர் ஐயாவிடம் இருந்து அரும்பெரும்
>> > பொக்கிஷங்கள் நமக்கு கிடைக்கப்பெற்றன.
உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை
தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
என சொல்லலாம்.
நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
மாதிரி அப்படியொரு டிசைன்.
நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து
வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்.
இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு
செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும்
வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக
இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.
உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து
வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன
முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை
கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும்
நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி,
பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த
சாலை.
உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற
பாகங்களுக்கு
கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக
வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை
நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத
முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான
முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான்
நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர
துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம்
சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள்
வளர்ந்தால் என்ன ஆகும்..?
காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல்
தேய்க்க வேண்டியிருக்கும்.
உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல்
வைத்திருக்கும் கருணை.
சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க
மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும்.
அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை
பயணபாதை விவரம்.
1.சகஸ்ராரம்
2.ஆக்ஞா
3.விசுக்தி
4.அனாகதம்
5.மணிபூரகம்
6.சுவாதிஷ்டானம்
7.மூலாதாரம்.
யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள்
என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை
ஆதாரமாகக்கொண்டு இயங்கிவருகின்றன.
இம்மாதிரியான விஷயங்களை நான் கேள்விப்பட்டபோது உங்களைவிட மிகவும்
சந்தேகப்பட்டேன்.தேடலும் அனுபவமும் குருவருளும், திருவருளும்தான் விடைகள்
சொல்லின.
முதலில் இந்த மையங்களை உணர்ந்த நம் முன்னோர்கள் இதனை முக்கியத்துவம் வாய்ந்த
ஒன்றாக கருதியது உண்மையா..? ஆம்..உணர்ந்ததோடு மட்டுமல்லாமல் அதை நாம் தொடர்ந்து
நடைமுறைப்படுத்த எல்லா ஏற்பாடையும் செய்திருக்கிறார்கள் என்றால் மிகை இல்லை.
எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் ...
----------------------------------------
> தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> என சொல்லலாம்.
> நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> மாதிரி அப்படியொரு டிசைன்.
> நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
> செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
> ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து
> வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்.
> இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு
> செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும்
> வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக
> இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.
> உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து
> வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன
> முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை
> கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும்
> நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி,
> பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
> முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
> உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
> கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த
> சாலை.
> உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற
> பாகங்களுக்கு
> கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக
> வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை
> நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத
> முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான
> முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான்
> நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர
> துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம்
> சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள்
> வளர்ந்தால் என்ன ஆகும்..?
> காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல்
> தேய்க்க வேண்டியிருக்கும்.
> உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல்
> வைத்திருக்கும் கருணை.
> சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க
> மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
> காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும்.
> அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை
> பயணபாதை விவரம்.
> 1.சகஸ்ராரம்
> 2.ஆக்ஞா
> 3.விசுக்தி
> 4.அனாகதம்
> 5.மணிபூரகம்
> 6.சுவாதிஷ்டானம்
> 7.மூலாதாரம்.
> யோகவியல் வல்லுனர்கள் இதை ஆதார சக்கரம் என்கிறார்கள். சக்தி மையங்கள்
> என்கிறார்கள். இந்த ஒவ்வொரு புள்ளியும் ஒவொரு வகையான நாளமில்லா சுரப்பிகளை
> ஆதாரமாகக்கொண்டு
-----------------------------------------------------
உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை
பாராட்டுதலுக்கு நன்றி. இன்னும் பல கட்டுரைகள் மலரும்-
பிரவாகம் குழுமத்தில் ஏறக்குறைய 4000 சொச்சம் பதிவுகளை இட்டிருக்கும் ஒரு
தமிழ் ஏந்தல் - என் படைப்புக்கும் சான்று பகர்ந்திருப்பது இனி வரும் என்
எழுத்துக்களுக்கான உரம்.
நன்றி.
வெங்கட்.தாயுமானவன்.
------------------------------------------------
> சமீபகாலமாக உங்களின் பதிவுகளை படித்துவருகிறேன்.
> இந்தக் குழுமத்தில் உங்களின் பதிவுகள் வித்தியாசமானவையாக இருக்கின்றன. மிக்க
> மகிழ்ச்சி! உடலுக்குள் ஒரு நெடுஞ்சாலை என்ற இந்தப் பதிவில் உடலின் அமைப்பை
> இந்தக் கோணத்தில் பார்ப்பதும் படிப்பதும் எனக்கு ஒரு புது அனுபவமாக இருக்கிறது.
> நன்றாக எழுதியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.
> வாழ்த்துகள்!
> அன்புடன்
> சுவாதி,
--------------------------------
> > தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> > சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> > போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> > என சொல்லலாம்.
> > நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> > பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> > மாதிரி அப்படியொரு டிசைன்.
> > நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> > இருக்கிறது. அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
> > செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
> > ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது. எது ஒன்று வெளியிலிருந்து
> > வந்தாலும் அதற்கு முறையான பாதை தேவை.பாதையில்லா பயணம் துன்பத்தில் முடியும்.
> > இன்றைய நாட்களில் கூட நம் அன்றாட வாழ்வில்- உயிருக்கு துடிப்போரை கொண்டு
> > செல்லும் வாகனங்களுக்கும்,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும்
> > வாகனங்களுக்கும் அவை தொய்வின்றி பயணிக்க எவ்வளவு நெரிசலான பாதையாக
> > இருந்தாலும்..வழி ஏற்படுத்தி தரும் மனப்பாங்கை பெற்றிருக்கிறோம்.
> > உடலுக்குள்ளும் எந்த விதத்திலும் நெரிசல் ஏற்பட்டுவிடாத வண்ணம்..இயற்கை செய்து
> > வைத்திருக்கும் அமைப்புகள் அனேகம். அது ஒரு அதிசயம் என்றால், அதை கண்டு சொன்ன
> > முன்னோர்கள் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை.ஆம் நம் உடலுக்குள்ளான நெடுஞ்சாலையை
> > கண்டு சொன்னதோடு மட்டுமல்லாமல், அதை விரிவுபடுத்தி,நெறிபடுத்தி,பன்னெடும்
> > நாட்கள் அக்கறையாய் தவமிருந்து, அவற்றின் செயல்பாடுகளை உற்று நோக்கி,
> > பிரமானங்களாய் நமக்கு உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
> > முதலில் சாலை எங்கிருந்து எதுவரை..?
> > உச்சந்தலையில் இருந்து - தொடையிரண்டும் சந்திக்கும் புள்ளிவரை.
> > கபாலத்தில் துவங்கி- முதுகு தண்டுவடத்தின் வழியாய் போட்ப்பட்டிருக்கிறது இந்த
> > சாலை.
> > உயிரும் உடலும் இயங்க தேவையான அத்தனை சக்தியும் இதன் வழியேதான் உடலின் மற்ற
> > பாகங்களுக்கு
> > கிளை சாலைகளான நரம்பு,நாளம் வழியே பிரித்தனுப்படுகிறது.நாம் மிக அருமையாக
> > வடிவமைக்கப்பட்டிருக்கிறோம். நமக்கு வசதியான எல்லாமே நமக்கு இருக்குமாறு இயற்கை
> > நம்மை வைத்திருக்கிறது. வெட்டாத நகம் நீண்டு வளர்ந்துகொண்டே இருக்கும். வெட்டாத
> > முடியும் வளர்ந்துகொண்டே இருக்கும். ஆனால் நம் புருவங்களுக்கு மீதான
> > முடிக்கற்றை, ஒரு நிலைக்கு மேல் ஐ.ஆர்.8 உரம் பட்டாலும் வளராது. காரணம் அதுதான்
> > நமக்கான இசைவாய் இயற்கை தந்தது. ஒருவேளை தலைமுடி போல் புருவ முடியும் வளர
> > துவங்கினால், நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வது கடினம்தான். ஒரு வணக்கம்
> > சொல்லக்கூட ரொம்ப சிரமப்பட வேண்டும். நகம் வளர்கிற மாதிரி நம் பற்கள்
> > வளர்ந்தால் என்ன ஆகும்..?
> > காலையில் பல் தேய்ப்பதன் கூடவே- ஒரு ராவு பட்டையை வைத்து தினமும் அது வளராமல்
> > தேய்க்க வேண்டியிருக்கும்.
> > உண்மையில் இந்த மாதிரியான சோதனைகளை நாம் பெறவில்லை. அதுதான் இறைவன் நம்மேல்
> > வைத்திருக்கும் கருணை.
> > சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> > ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> > உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி. மனம் இயங்க
> > மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> > பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
> > காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை
-----------------------------------------------------------
அருமையான கட்டுரை தாயுனாவன் ஐயா.. தொடருங்கள்... படிக்க
காத்திருக்கிறோம்.
> தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> என சொல்லலாம்.
> நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> மாதிரி அப்படியொரு டிசைன்.
> நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> இருக்கிறது.
எப்படி ? எங்கிருந்து வருகிறது ? யார் ? ஏன் அனுப்புறாங்க ?
> சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி.
மனமா ? மூளையை தானே சொல்றீங்க ?
>மனம் இயங்க
> மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும் உயிர்வளி
> காற்றானது உச்சந்தலையிலிருந்து ,அடிவயிற்றின் மூலாதாரம் வரை தொடவேண்டும்.
> அப்படி தொட்டு பயணிக்கவே இப்படி ஒரு நெடுஞ்சாலை
> எத்தனையோ திருமணங்களுக்கு நாம் சென்றுள்ளோம், நம் இல்லங்களிலியே நடத்தியும்
> இருகிறோம், இப்போது நாம் காட்டும் பார்வை உங்களுக்கு வியப்பாககூட இருக்கும்.
> மணப்பெண் அலங்காரத்தில் நகை அணிவித்தல் என்பது இன்றியமையாத ஒன்று. அந்த
> மணப்பெண்ணின் நகை அணிகளை கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் இன்றைய கட்டுரையின் தேவை
> நிறைவேறிவிடும்.
> 1.உச்சந்தலையில் அணிவது "பில்லை"- சகஸ்ராரத்திற்கான அணிகலன்.
> 2.அங்கிருந்து அதை இணைத்து- நெற்றியில் தொங்கவிடும் "நெற்றி
> சுட்டி"ஆக்ஞாவிற்கான அணிகலன்.
> 3.கழுத்தில் நெக்லெஸ் என ஒன்று அணியப்படுகிறதே, அது விசுக்திக்கான அணி.
> 4.சங்கிலியோடு- ஒரு பதக்கத்தை இணைத்து (chain+dollar) மார்புவரை அணிகிறோமே அது
> "அனாகதத்திற்கான அணீ.
> 5.மார்புக்கும் இடுப்புக்கும் இடையில் - அழுத்தி பிடித்தமாதிரி அணியப்படும்
> "ஒட்டியாணம்"-மணிபூரகத்துக்கான அணி.
> 6.இடையில் தளர்வாய் தொங்கவிட்டமாதிரி அணியும் "மேகலை"- சுவாதிஸ்டானத்திற்கான
> அணி.
> 7.முலாதாரத்திற்கான அணியை பிள்ளை பருவத்திலேயே போட்டு பார்த்துவிடுகிறோம்.
> மனமும் எண்ணமும்- புத்தியும்,சித்தியும்-விழிப்போடு தொட்டு செல்லவேண்டிய இந்த
> புள்ளிகளில்தான் இப்படி தங்கத்தை பூட்டி பார்க்கும் பழக்க்ம்.இப்போது அதன்
> முக்கியம் புரிந்திருக்கும் அல்லவா..?
ஏன் தங்கத்தை பூட்ட வேண்டும்? வெள்ளியோ, வெண்கலமோ பூட்டலாமே ?
ஆண்களுக்கு இது போல நகைகள் இல்லையே ஏன் ?
இதெல்லாம் ஆண்களுக்கு தேவையில்லையா?
-----------------------------------------------
> அந்த ஏழு புள்ளிகளில் அப்படி என்ன நடக்கிறது..?
> யோகவியலாளர்கள் எண்ணற்ற விளக்கங்களை த்ருகிறார்கள். ஆனால் பரிட்ச்சார்த்தமாக
> எனக்கு தோன்றுவதை பகிர்கிறேன் (எதனோடும் முரண்படாமல்)
> சகஸ்ராரம் -எண்ணங்களற்ற இறைப்பெரு நிலை- சுகமாக சும்மா இருக்கும் இடம்.
> ஆக்ஞா -நான் எனும் சுயம் அடையாளப்படும் இடம்
> விசுக்தி- நான் எனது அடையாளத்தை எண்ணிய எண்ணத்தின் மூலம்- பேச்சாய்-மொழியாய்
> வெளிப்படுத்தும் மையம்.
> அனாகதம்-நான் பேசியதை அன்னிய காதுகள் கேட்டன - அவர்கள் என் பேச்சிற்கு
> உடன்பட்டோ,முரண்பர்ட்டோ காட்டும் பிரதிபலிப்பை உணரும் மையம்.
> மணிபூரகம்-வெளி உலகி பிரதிபலிப்பை கிடைத்த பிரசாதமாய் ஏற்று செரிக்கும் சுய
> ஏற்பு மையம்.
> சுவாதிஷ்டானம்-செரிமானத்திற்கு பின் சக்கைகளை, சத்துகளை தனிதனியே பிரிக்கும்
> மையம்
> மூலாதாரம்- ஒரு அனுபவத்திலிருந்து சக்தி பெற்று- அடுத்த செயலுக்கு ஊக்கம்
> பெறும் மையம்.
> இவ்வுல வாழ்க்கையில் -பொருளையும் கருத்தையும் நாம் இப்படித்தான்
> உள்வாங்குகிறோம்.உணர்கிறோம்,செரிக்கிறோம், தன்வயமாக்குகிறோம்.,சக்தி
> பெறுகிறோம்.இறைக்கு அர்ப்பணிக்கிறோம்
> இந்த பின்வரும் சொற்களை கொஞ்சம் கவனித்து பாருங்கள்-
> "நான் நானாவே இல்ல" "நெனச்சிகூட பார்க்க முடியல"
> "என்னால விழுங்க முடியல..""(i can't gulf it) ,"என்னால ஏத்துக்க முடியல"
> "என்னால செரிக்க முடியல"
> நான் நானா இல்லன்னா -பைத்தியம்
> நெனச்சிக்கூட பார்க்க முடியாத நிலை -குழப்பம்
> விழுங்க முடியலன்னா- வாந்தி.
> ஏத்துக்க முடியலன்னா- மாரடைப்பு.
-----------------------------------------------
இன்னும் நிறைய கேளுங்க காமேஷ் - கோபிக்கவெல்லாம் மாட்டேன்.தங்களின்
விவரம் கண்டேன் "இல்லாத கடவுளே காப்பாற்று"-என்று சொல்லி இருக்கிறீர்கள்.
நான் கடவுளின் இருப்பு இல்லாமை பற்றி உங்கள் அளவுக்குகூட
யோசிப்பவனில்லை.கடவுளின் பெயரால் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு ஞாயம்
தேடிக்கொண்டிருக்கிறேன் அவ்வளவே.
புனலிலும், அனலிலும், காற்றிலும்,குப்பையிலும் எடுக்கப்படும் மின்னாற்றல்
செம்பு கம்பி வழியாய் நம் வீட்டுக்குள் வந்து ஒளியையும் ஒலியைம் தருவதை
ஏற்கிறோம். ஆனால் நம் உயிர்காந்த ஆற்றல் வானிலிருந்து வருவதை சந்தேகக்
கண்கொண்டு பார்க்கிறோம். தவறில்லை. அதே சமயத்தில் இது விவாதம் செய்து
அதன் பின்னால் ஏற்கும் விஷயமல்ல. உணர்தலுக்குரிய விஷயம்.
கருந்துளையிலிருந்து பெருவெடிப்புக்கு பிறகான விளைவே இவ்வுலகின் தோற்றம்
எனக்கொண்டால்- வெடித்தது ஏதோ ஒரு நாளில் ஒடுங்கவும் செய்யும். இதை
செய்வது யாரோ அல்லது எதுவோ
அவரே அல்லது அதுவேதான் நமக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறது.
தாமரையை மலரச்செய்கிற சூரியனும், அல்லியை மலர செய்கிற சந்திரனும்
இல்லாமல் போனால் அந்த மலர்களை இன்குபேட்டரில் வைத்தெல்லாம் மலரசெய்ய
முடியாது. அப்படியே செய்தாலும் ஒரு பூவை மலரவைக்க செய்ய வேண்டிய செலவு
அதிகமாய் இருக்கும்.
தாகூரின் வார்த்தைகளில்..
உன்னால் பூவுக்கு
வாசத்தையோ
மணத்தையோ
அதில் தேனையோ
மகரந்தத்தையோ
மென்மையையோ
ஒருகாலும் உருவாக்க முடியாது.
அதை செய்துகொண்டிருப்பவன்
மிக எளிமையாக செய்துகொண்டிருக்கிறான்.- என்பார்.
தாகூர் எந்த கடவுள் உருவத்தையும் நமக்கு முன் நிறுத்தவில்லை.
இது ஏன் நடக்கிறது என்பதைதான் எல்லோரும்
யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்..நான் உட்பட- நீங்களும் யோசியுங்கள்.
உலக உருவாக்கத்திற்கு காரணம் எதுவோ அதுவேதான் இதற்கும் காரணமாக இருக்க
முடியும்.நாம் கூட்டாக சேர்ந்தால்தான் விடை காணமுடியும் அல்லது
முயற்சியாவது செய்யமுடியும்.
இனி அடுத்த கேள்வி..
மூளை என்பது மனதின் ஊடகம் - மனம் தான் செயல்பட மூளையை
பயன்படுத்திக்கொள்கிறது.
தங்கத்தில் பூட்டியது ஒரு உயர்வு நவிற்சிக்காக- எதை வேண்டுமானாலும்
பூட்டலாம். நம் இந்திய சிந்தனை கூறுகளில் மனதையே ஒரு பெண்ணாக பார்க்கும்
பாவனை இருக்கிறது. ஒருவேளை அதனால் இருக்கலாம்.
ஆண்களும் இதே மையங்களில் திருநீற்றை அணியும் வழக்கம் இன்னும் இருகிறது.
வயது முதிர்ந்தவர்களை பாருங்கள். அவர்கள் எங்கெல்லாம் திருநீரு
அணிகிறார்களென்று.
பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் தோப்புகரணம் போடுவதை பார்த்திருப்பீர்கள்.
நம் பள்ளிகளில் அதை தண்டணையாக்கிவிட்டார்கள்.
தலையில் வல பக்கம் இடபக்கம் குட்டிக்கொண்டு - பிறகு வலக்கையை இடதிற்கும்,
இடக்கையை வலதிற்கும் பெருக்கல் குறிபோல் மாற்றி குட்டிக்கொண்டு
தன்பின்னரே குனிந்து தோப்புக்கரணம் போடுவார்கள்.
நாம் சொன்ன நெடுஞ்சாலையில் trafficjam ஏற்படாதிருக்கவே அங்கு கைகளால்
குட்டி அதிர்வை ஏற்படுத்தி சுணக்கத்தை நீக்கும் பயிற்சி அது.
இந்த பதிலும் நீங்கள் திருப்தி அடைவதற்காக அல்ல - சொல்ல விட்டுப்போன
செய்திகளை சொல்லமுடிந்ததில் எனக்கே திருப்தி.
-------------------------------------------
> அருமையான கட்டுரை தாயுனாவன் ஐயா.. தொடருங்கள்... படிக்க
> காத்திருக்கிறோம்.
> நடுவில கேள்விகள் கேட்டா கோவிச்சிக்க மாட்டீங்களே ?
----------------------------------------------------------
> > தங்கநாற்கர திட்டமெல்லாம் நம் நாட்டில் மிக சமீபகாலமாக நடந்துகொண்டிருக்கும்
> > சங்கதிகள். நம் உடலுக்குள்ளான திட்டமெல்லாம் ஏற்கனவே மிக அருமையாய்
> > போடப்பட்டுவிட்டது.ஆனால் நாம்தான் இன்னும் அதில் முறையான பயணம் மேற்கொள்ளவில்லை
> > என சொல்லலாம்.
> > நம் உடல் -சிவில்,மெகானிகல்,எலக்டிரிகல்,எலக்ட்ரானிக்ஸ், பயோ இன்னும் என்னென்ன
> > பொறியியல் தத்துவங்கள் உண்டோ, அத்தனை பொறியாளர்களும் ஒன்றுகூடி உருவாக்கின
> > மாதிரி அப்படியொரு டிசைன்.
> > நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
> > இருக்கிறது.
> எப்படி ? எங்கிருந்து வருகிறது ? யார் ? ஏன் அனுப்புறாங்க ?
> > சாலை சரி அதில் பயணிப்பது யார்..?- சாட்சாத் நம் மூச்சு காற்றுதான். நம்
> > ஒவ்வொருவருக்கான வெளி உலகத்தொடர்பை ஏற்படுத்தி தருவது சுவாசம்தான். உடல் இயங்க
> > உயிர் ஒரு காரணி- உடல் வழியே உயிர் முறையாய் இயங்க மனம் ஒரு காரணி.
> மனமா ? மூளையை தானே சொல்றீங்க ?
> >மனம் இயங்க
> > மூச்சே முக்கிய காரணி. "மூச்சடங்கிய நிலையில் மனதுக்கு ஓட்டமில்லை" என்பது
> > பகவான் ரமணரின் கூற்று. ஆக நாசியின் வழியே நாம் உள்ளிழுக்கும்
..........................................
கடவுள் என்ற இருப்பை மனிதன் தனக்கு இடர் வரும் நேரங்களில் மட்டும் தான்
தேடுகிறான். தன் கஷ்டம் அல்லது துயரின் செறிவிற்க்கேற்ப இயலாமை என்ற புள்ளியில்
கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும் தனக்கு உதவ வேண்டும் என்ற ஆவலுக்கு
உந்தப்படுகிறான் அல்லது கடவுளே இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுகிறான்.
இரு நிலைகளிலும் அவனுடைய மனதின் பேதலிப்பு தான் கடவுள் பற்றிய முடிவாகிறது.
மற்றப்படி மனிதனுக்கு கடவுள் என்ற விதயம் தேவையற்றது என்பது சரியான கருத்து
என்று சொல்லலாமா???
அமெரிக்காவில் நிகழ்ந்த என்னுடைய அப்பாவின் மரணம் அறியப்படாமல் , அவர் இன்னமும்
கோமாவில் தான் இருக்கிறார் என்ற நினைவில் அப்பாவைக் காப்பாற்றும்படி வேண்டி
இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் ஏறி பிராத்தித்த எனக்கு...அப்பாவின் பூத உடலை
பார்த்த பின் இந்த நிமிடம் வரை வந்த எந்த கஷ்டத்திலும் கடவுள் என்பது இல்லை
..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது நான்
கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க தோசத்தில்
கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும் வாயில்
வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை..
ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.
அன்புடன்
சுவாதி.
-----------------------------------------
> இன்னும் நிறைய கேளுங்க காமேஷ் - கோபிக்கவெல்லாம் மாட்டேன்.தங்களின்
> விவரம் கண்டேன் "இல்லாத கடவுளே காப்பாற்று"-என்று சொல்லி இருக்கிறீர்கள்.
> நான் கடவுளின் இருப்பு இல்லாமை பற்றி உங்கள் அளவுக்குகூட
> யோசிப்பவனில்லை.கடவுளின் பெயரால் சொல்லப்பட்ட கருத்துகளுக்கு ஞாயம்
> தேடிக்கொண்டிருக்கிறேன் அவ்வளவே.
> புனலிலும், அனலிலும், காற்றிலும்,குப்பையிலும் எடுக்கப்படும் மின்னாற்றல்
> செம்பு கம்பி வழியாய் நம் வீட்டுக்குள் வந்து ஒளியையும் ஒலியைம் தருவதை
> ஏற்கிறோம். ஆனால் நம் உயிர்காந்த ஆற்றல் வானிலிருந்து வருவதை சந்தேகக்
> கண்கொண்டு பார்க்கிறோம். தவறில்லை. அதே சமயத்தில் இது விவாதம் செய்து
> அதன் பின்னால் ஏற்கும் விஷயமல்ல. உணர்தலுக்குரிய விஷயம்.
> கருந்துளையிலிருந்து பெருவெடிப்புக்கு பிறகான விளைவே இவ்வுலகின் தோற்றம்
> எனக்கொண்டால்- வெடித்தது ஏதோ ஒரு நாளில் ஒடுங்கவும் செய்யும். இதை
> செய்வது யாரோ அல்லது எதுவோ
> அவரே அல்லது அதுவேதான் நமக்கும் அனுப்பிக்கொண்டிருக்கிறது.
> தாமரையை மலரச்செய்கிற சூரியனும், அல்லியை மலர செய்கிற சந்திரனும்
> இல்லாமல் போனால் அந்த மலர்களை இன்குபேட்டரில் வைத்தெல்லாம் மலரசெய்ய
> முடியாது. அப்படியே செய்தாலும் ஒரு பூவை மலரவைக்க செய்ய வேண்டிய செலவு
> அதிகமாய் இருக்கும்.
> தாகூரின் வார்த்தைகளில்..
> உன்னால் பூவுக்கு
> வாசத்தையோ
> மணத்தையோ
> அதில் தேனையோ
> மகரந்தத்தையோ
> மென்மையையோ
> ஒருகாலும் உருவாக்க முடியாது.
> அதை செய்துகொண்டிருப்பவன்
> மிக எளிமையாக செய்துகொண்டிருக்கிறான்.- என்பார்.
> தாகூர் எந்த கடவுள் உருவத்தையும் நமக்கு முன் நிறுத்தவில்லை.
> இது ஏன் நடக்கிறது என்பதைதான் எல்லோரும்
> யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்..நான் உட்பட- நீங்களும் யோசியுங்கள்.
> உலக உருவாக்கத்திற்கு காரணம் எதுவோ அதுவேதான் இதற்கும் காரணமாக இருக்க
> முடியும்.நாம் கூட்டாக சேர்ந்தால்தான் விடை காணமுடியும் அல்லது
> முயற்சியாவது செய்யமுடியும்.
> இனி அடுத்த கேள்வி..
> மூளை என்பது மனதின் ஊடகம் - மனம் தான் செயல்பட மூளையை
> பயன்படுத்திக்கொள்கிறது.
> தங்கத்தில் பூட்டியது ஒரு உயர்வு நவிற்சிக்காக- எதை வேண்டுமானாலும்
> பூட்டலாம். நம் இந்திய சிந்தனை கூறுகளில் மனதையே ஒரு பெண்ணாக பார்க்கும்
> பாவனை இருக்கிறது. ஒருவேளை அதனால் இருக்கலாம்.
> ஆண்களும் இதே மையங்களில் திருநீற்றை அணியும் வழக்கம் இன்னும் இருகிறது.
> வயது முதிர்ந்தவர்களை பாருங்கள். அவர்கள் எங்கெல்லாம் திருநீரு
> அணிகிறார்களென்று.
> பிள்ளையார் கோவிலில் பக்தர்கள் தோப்புகரணம் போடுவதை பார்த்திருப்பீர்கள்.
> நம் பள்ளிகளில் அதை தண்டணையாக்கிவிட்டார்கள்.
> தலையில் வல பக்கம் இடபக்கம் குட்டிக்கொண்டு - பிறகு வலக்கையை இடதிற்கும்,
> இடக்கையை வலதிற்கும் பெருக்கல் குறிபோல் மாற்றி குட்டிக்கொண்டு
> தன்பின்னரே குனிந்து தோப்புக்கரணம் போடுவார்கள்.
> நாம் சொன்ன நெடுஞ்சாலையில் trafficjam ஏற்படாதிருக்கவே அங்கு கைகளால்
> குட்டி அதிர்வை ஏற்படுத்தி சுணக்கத்தை நீக்கும் பயிற்சி அது.
--------------------------------------------------
//நமக்கு தேவையான உயிராற்றல் அமிர்த தாரையாய் வானிலிருந்து வந்துகொண்டே
இருக்கிறது//
//அது நம்முள் இறங்கி-நாம் எண்ணவும்-எண்ணியதை பேசவும்-பேசியதை
செய்யவும்-பேசியதால்,செய்ததால் உண்டான விளைவுகளை எதிர்கொள்ளவும், ஆற்றலை
ஒவ்வொரு கணமும் அனுப்பிக்கொண்டே இருக்கிறது//
அன்புத் தாயுமானவன்,
எனக்கும் சில கேள்விகள்.
ஒவ்வொருவருக்கும் ஆற்றல் கிடைக்கும் அளவு வேறுபடுமா?
1. இது எண்ணங்களோடு தொடர்பு உடையதா?
2. நம்க்கு வேண்டுமளவுக்கு பெற முடியுமா?
3. அதிகம் பெற்றால் தீமையா?
4. நியூட்டனின் மூன்றாம் விதி உடன்படுமா?
5. இந்த ஆற்றலின் திறனை நமக்குள் அதிகப்படுத்த முடியுமா?
அற்புதமான பதிவு.
அதிசயமாய் எனக்கும் கேள்வி கேட்க நேரம்..
நன்றி.
--
தமிழ் வாலிபன்
ஒன்று விழ ஒன்பதாய் எழும். வாழும் உலகெங்கும். வீழாது தமிழ்.
பழகு தமிழை அழகு தமிழாய் எழுதுவோம்.
"தமிழரிடம் தமிழில் பேசுவோம்" தாய்க்குச் செய்யாததைத்
தமிழுக்குச் செய்வோம்.. http://groups.google.com/group/Piravakam
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
-----------------------------------------
உலகியல் ரீதியில் எல்லோரும் ஏற்கும் ஒரு கருத்தை நிறுவ சாத்தியமே இல்லை.
காரணம் நாம் வாழும் வாழ்கை என்பது சார்பியலை சார்ந்தது என்ற உண்மையை
நம்மில் பெரும்பாலோர் மறந்துவிட்டோம். அமெரிக்காவில் நீங்கள் இந்த மடலை
அடித்தபோது அங்கு சூரியன் இருந்திருக்ககூடும். அதே நேரம் இங்கு
காலனேரத்தின் நிலை வேறு.
ஒரு வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளை மாற்றிபோட்டாலே பொருள்
மட்டுமல்ல..யாவுமே மாறிபோகும். உதாரணத்திற்கு- what is the time..? என்ற
கேள்விக்கும் what the time is..? என்ற கேள்விக்கும் உள்ள முரணை
பார்த்தால் விளங்கும்.
கடவுளை நம்புவதும் நம்பாததும் அவரவர் சர்ர்பு நிலையாகும்.
நம்பாமல்போனதற்கு நீங்கள் 100 காரணம் சொன்னால். நம்புவதற்கு ஒருவர் 1000
காரணங்களை சொல்லக்கூடும்.
இறையை -உருவமாக, கொள்கையாக பாராமல், ஒரு தன்மையாகவும்,இயற்கை
ஒழுக்கமாகவும் பார்க்க புரிந்துகொண்டால்
பெரும்பாலான பிரச்சினைகளை தவிர்க்கமுடியும். துன்பம் நேரும்போது
காப்பாற்றவேண்டிய பொறுப்பெல்லாம் கடவுள் தன்மைக்கு கிடையாது.
ஒரு குண்டூசி தேவை என்றால் வானத்தை பார்த்து கர்த்தரிடமோ, ஈசனிடமோ,
அல்லாவிடமோ "குண்டூசியை தாருங்கள் என கேட்பதில் " ஞாயமே இல்லை. உருவான
காலத்திலிருந்து நிலத்தடியில் தங்கிய இரும்புதாது பற்றிய அறிவு நம்மிடம்
உண்டு. பிரித்தெடுத்து உருக்கி, ஊச்சியை உருவாக்கிக்கொள்ளவேண்டியதுதான்.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம்- இயற்கை ஒழுக்கம் நமக்கு அறிவை மட்டும்தான்
தரும். அதைவைத்து நாம் பெறநினைப்பதை அடைந்துகொள்ள வேண்டியதுதான்.நம்
நாட்டில் இரும்பு தாது தீர்ந்துபோனால் அயல்னாட்டிலிருந்து தருவிக்க
வேண்டியதுதான். அங்கும் தீர்ந்துவிட்டதா..இரும்புக்கான மாற்றுபொருளை
யோசிக்க வேண்டியதுதான். மாற்றுப்பொருளும் உருவாக்க முடியவில்லையா..?இந்த
உலக இயக்கம் நின்றுவிடாது. இங்கு எதுவுமே நிரந்தரம் இல்லை. பிள்ளையார்
சிலை பால் குடித்ததென்று , அந்த சிலையை உடைத்த ஒரு தீவிரவாதிதான் இன்று
இப்படி எழுதிக்கொண்டிருக்கிறேன். இங்கு ஆன்மீகம் என்பது பாட்டு பாடுதல்
மத சின்னங்களை அணிதல், என்ற விதிக்கப்பட்ட கட்டுக்குள் நின்று போனது
பரிதாபம்.
நேற்று உங்களின் profile பார்த்தேன். புற்றுநோய் உள்ளவர்க்கு உதவுதலை
நோக்க்மாக சொல்லி இருந்தீர்கள். உங்களால் உதவி பெற்ற ஒருவர், பூரண குணம்
பெற்று "நீங்கள்தான் என் கடவுள் "என்று சொன்னால் என்ன செய்வீர்கள்..?
என்ன சொல்வீர்கள்..?
நாம் இப்படித்தான் பழக்கப்பட்டுவிட்டோம். செய்தால் சாமி உண்டு- செய்யலையா
சாமி இல்ல - இரண்டு கருத்தியலுமே தவறு.
அப்புறம் ஏதோ ஒரு பக்கத்தை புரட்டிக்கொண்டு வந்தபோது -உங்கள் வார்த்தை
ஒன்று கண்ணில் பட்டது- "நாம் பதியனிட்ட ரோஜா..நம் கண் முன்னாலேயே மலருதலை
பார்த்தல்..அதை ரசித்தல் "என ஒரு அழகியலோடு சொல்லப்பட்ட அதை உள்ளே சென்று
படிக்ககூட தோணவில்லை.நாம் பார்க்க அந்த செடி எத்தனை மலர்களை மலர்த்தி
மகிழ்ச்சிப்படுத்துகூடும்..? சீசன் மாறினால் மலர்தல் நின்றுவிடாதா..?
இதுதான் இயற்கையின் ஒழுக்கம். இங்கொரு பூ மலர்வதை
நிறுத்தினால்தான்,வேறொரு இடத்தில் வேறொரு பூவை மலர்த்த முடியும்.
இந்தியாவில் வெயில்- US ல் நிலா. USல் வெயில் இந்தியாவில் நிலா
வகுப்புக்கு வந்த வாத்தியார் கேட்டார்.."டேய் பசங்களா..பூமி நம்ம சூரியனை
எப்படிடா..சுத்துது..?" பையன் ஒருத்தன் சொன்னான் , "ஒழுங்கற்ற பாதையில்
சுத்தி வருது சார்.." அப்படின்னு.
"வெரி குட். ஒக்காருடா" அப்படின்னாரு வாத்தியார்.
நம்ம பள்ளிகூட பாடதிட்டம் இதைத்தான் சொல்லுது. பையன் இதை எழுதினா
மதிப்பெண் நிச்சயம் உண்டு. ஆனால் உண்மை என்ன தெரியுமா..? "பூமி சூரியனை
ஒழுங்கற்ற பாதையில்..ஒழுங்காக சுற்றி வருகிறது.." ஆம் சுத்தி வர்றதென்னவோ
ஒழுங்கில்லா பாதைதான்..,ஆனா சுத்துகிற முறையில் ஒழுக்கம் இருக்கு.
அதனாலதான் உலக இயக்கம் நடந்துகிட்டு இருக்கு.
ஒழுங்குமுறைகளை ஞாயப்படுத்தி நம்மை அத்துமீற பணிக்கும் வாழ்வியல்
சூழலில், அதை மீறாமல் , ஒழுங்கற்ற உலகத்தில் நாம் ஒழுங்காய் வாழ கடவுள்
கொள்கையோ, இயற்கைனிலை ஒழுக்கமோ ஏதோ ஒரு பெயரில் நமக்கு ஒன்று
தேவைப்படுகிறது என்றே நான் கருதுகிறேன்.
"நன்றாங்கால் நல்லவா காண்பவர்
அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி.
நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..?
அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம்
எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக
தேட்டங்கள்தான். .
---------------------------------------------
> "நன்றாங்கால் நல்லவா காண்பவர்
> அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி.
> நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..?
> அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம்
> எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக
> தேட்டங்கள்தான். .<<<<
த.வா உங்கள் கேள்வியால்,,,தாயுமானவர் ஐயாவிடம் இருந்து அரும்பெரும்
பொக்கிஷங்கள் நமக்கு கிடைக்கப்பெற்றன.
உண்மைதான் ஐயா,,
கேட்டதும் 'தா" என்று சாமியைக்கூட 'வியாபாரி" ஆக்கிவிட்டோம்..
என்றென்றும் நட்புடன்,
விஜியின்சுதன்
--------------------------------------------------
> ..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது
> நான் கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க
> தோசத்தில் கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும்
> வாயில் வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப்
> பார்ப்பதில்லை..
> ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.
மிக உண்மை... எனக்கும் அப்படியே... உருகி உருகி கடவுளை நம்பியவள் சில
காரணங்களினால் கொஞ்சம் விலக ஆரம்பித்தேன்...
ஆனாலும், நம் குழந்தைகளிடம் கடவுள் பயம், பக்தி சொல்லிதானே வளர்க்க
வேண்டியுள்ளது... அந்த துணை எப்போதுமே தேவையாயுள்ளது...
தன்னைப்போல் பிறரையும் நேசி..
http://punnagaithesam.blogspot.com/ =============================
-------------------------------------------
> கடவுள் என்ற இருப்பை மனிதன் தனக்கு இடர் வரும் நேரங்களில் மட்டும் தான்
> தேடுகிறான். தன் கஷ்டம் அல்லது துயரின் செறிவிற்க்கேற்ப இயலாமை என்ற புள்ளியில்
> கடவுள் என்ற ஒன்று இருக்க வேண்டும் தனக்கு உதவ வேண்டும் என்ற ஆவலுக்கு
> உந்தப்படுகிறான் அல்லது கடவுளே இல்லை என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிடுகிறான்.
> இரு நிலைகளிலும் அவனுடைய மனதின் பேதலிப்பு தான் கடவுள் பற்றிய முடிவாகிறது.
> மற்றப்படி மனிதனுக்கு கடவுள் என்ற விதயம் தேவையற்றது என்பது சரியான கருத்து
> என்று சொல்லலாமா???
> அமெரிக்காவில் நிகழ்ந்த என்னுடைய அப்பாவின் மரணம் அறியப்படாமல் , அவர் இன்னமும்
> கோமாவில் தான் இருக்கிறார் என்ற நினைவில் அப்பாவைக் காப்பாற்றும்படி வேண்டி
> இந்தியாவில் எத்தனையோ கோவில்கள் ஏறி பிராத்தித்த எனக்கு...அப்பாவின் பூத உடலை
> பார்த்த பின் இந்த நிமிடம் வரை வந்த எந்த கஷ்டத்திலும் கடவுள் என்பது இல்லை
> ..அவரை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்ற எண்ணம் வேரூன்றிவிட்டது. இப்போது நான்
> கடவுளை எதற்காகவும் வேண்டுவதில்லை.எதிர்பார்ப்பதும் இல்லை.. பழக்க தோசத்தில்
> கடவுளே என்ற வார்த்தையும் இறைவனிடம் பிராத்திக்கிறேன் என்ற பொய்யும் வாயில்
> வந்தாலும் அதில் உண்மை இருக்கிறதா என்று திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை..
> ஒரு காலத்தில் கடவுள் நம்பிக்கையில் இருந்த முனைப்பு இப்போது இல்லை.
> அன்புடன்
> சுவாதி.
------------------------------------------------
சுவாதியக்கா,
கடவுள் நம்பிக்கையில்லாமைக்கு உங்கள் காரணம் சரியில்லை என்றே
நினைக்கிறேன். எல்லோரும் ஒரு நாள் போக வேண்டியவங்க தானே..
நான் உன்னை வேண்டினேன் நீ என்னை ஏமாத்திட்டாய்னு சொல்றா மாதிரி இருக்கு.
அது அறியாமை.
மறுபடியும் கடவுள் நம்பிக்கைக்கு போங்க..
பல வழிகளில் உங்களுக்கு உதவி புரியும்...
கடவுள் நம்பிக்கை உங்க மனசுக்கு ஒரு அமைதியை கொடுக்கும்...
இந்த அமைதி ஆரோக்கியத்தை கொடுக்கும்...
ஆரோக்கியமாக இருந்தால் குளிர்காலத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனையும்
வராது.
அட்லீஸ்ட் தப்பு செய்தால் கடவுள் கண்ணை குத்துவார்னாவது பசங்களுக்கு ஒரு
பயத்தை ஏற்படுத்துங்கள்...பிற்காலத்தில் அவங்க சிந்தித்து அதெல்லாம்
சும்மானு
தெரிந்துகொள்ளும் வரை அவர்களை நற்வழி படுத்தலாம்.
---------------------------------------------------------
ஆற்றல் கிடைக்கும் அளவில் எந்த வேறுபாடும் கிடையாது. எல்லோருக்கும் ஒரே
மாதிரியான அள்வில்தான் வழங்கப்படுகிறது. அதை பயன்படுத்துவதிலதான்
கோளாறு.இயற்கை நமக்கு தந்திருக்கும் நதிகள் அதிகம். அதை பராமரித்து
பகிர்ந்துகொள்வதில்தான் பிரச்சினை அல்லவா..?
இன்னொருவகையில் சொல்வதானால்-அன்றாடம் நாம் பயன்படுத்தும்
மின்சாதன்ப்பொருட்கள் வடிவத்திலும்,தன்மையிலும்,செயல்பாட்டிலும் வேறு
வேறானவை.(சுழலும் மின்விசிறி,கொதிக்கும் heater, குளிரும் a/c )ஆனால்
குளிர்வதற்கானாலும் சரி. கொதிப்பதற்கானாலும் சரி.நாம் உள்ளீடாக தரும்
பொருள் ஒன்றேதான். மின்சாரம். அளவும் ஓரே அளவுதான்.(230 வோல்ட்ஸ்). மின்
சலவைபெட்டியோ. தொலைகாட்சி பெட்டியோ அதற்கு தேவையான மின்சாரத்தை
எடுத்துக்கொள்ளுமாறு டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அதுபோல் நாம் என்ன
டிசைன் என தீர்மானிக்காதவரை ஆற்றலின் அளவு பற்றி யோசிக்கமுடியாது.
திடமாய் இருக்கும் ஒரு வசதியான வீட்டு பையனால்-ஒரு சைக்கிளைக்கூட தள்ள
முடியாது.ஆனால்..பிளாட்பாரத்தில் வசிக்கும் ஒரு கூலிக்கார சிறுவன்
அனாயசமாய் ஒரு அரிசி மூட்டையை தூக்கிவிடுவதை பார்க்கிறோம். இந்த ஆற்றல்
வளர்ச்சி புறம் சார்ந்தது.புற ஆற்றலை தேவைகள் வளர்க்கவோ,குறைக்கவோ
செய்யும். ஆனால் நாம் பேசிக்கொண்டிருப்பது அக ஆற்றல் பற்றி.
மனதுக்கும் மூச்சுக்கும் தொடர்பு
இருக்கிறது.கோபம்,tension,விரக்தி,ஏமாற்றம்,பதற்றம்..போன்ற சமயங்களில்
சுவாசத்தின் வேகமும்,இதய துடிப்பும் அதிகரிப்பதை கண்டிருக்கிறோம்
அல்லவா..?அதே ஒரு பெருமூச்சு விடும் சமயத்தில் கிடைக்கும் relax ஐயும்
நினைத்து பாருங்கள்.
மூச்சை ஒழுங்குபடுத்துவதன் மூலம் நம் அக ஆற்றலை வளர்த்துக்கொள்ளமுடியும்.
அதற்கான பயிற்சிமுறைகளான யோகா,தியானம், ஆகியவற்றை மதங்களோடும்,கடவுளோடும்
தொடர்பு படுத்தியதே அதன் மீதான நம்பிக்கை இன்மைக்கான காரணம் ஒரு சாதாரண
செடி தனக்கு தேவையான் உணவை தானே தயாரித்துக்கொள்கிறது. எங்கே வைத்தாலும்
சூரியனை நோக்கி செல்லும் தேவையும்,புரிதலும் அவைக்கு உண்டு. இதுதான்
ஒவ்வொரு உயிர் குழுமத்திற்கும் இயற்கை செய்து வைத்திருக்கும் network
system.
வண்ணத்துபூச்சி கோடி ரூபாய் தந்தாலும் மலம் உண்ணாது. பன்றிக்கு 100 கோடி
ருபாய் தந்தாலும் தேன் பருகாது. இது அவற்றின் network. இவ்வளவு ஏன் 1000
ரூ.கொடுத்து ஒரு செல்போன் வாங்கி, 100 ரூக்கு கிடைக்கும் ஒரு சாதாரண சிம்
கார்ட் நம்மை ஒரு network உடன் இணைக்கும்போது..காந்த மயமான மனிதனுக்கு
இயற்கை வழங்கியிருக்கும் network பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள். மற்ற
உயிரினம் போல நமக்கு network வரையறைக்குள் கட்டுப்படுத்தப்படவில்லை.நாம்
நம்மை tune செய்ய..செய்ய..நம் ஆற்றலின் அலைநீளம் அதிகரித்துக்கொண்டே
போகும் என்பதில் ஐயமே வேண்டாம் எல்லொரையும் போன்றவர்தான் ப்ரூஸ்லீ, ஆனால்
அவருடைய கைகள் மட்டும் எப்படி ஓரெ அடியில் கல்லையும், மரத்தையும்
பிளந்தன..? காரணம் பயிற்சி. அவரைப்போல பயிற்சி செய்த எல்லோருமே இன்று
கல்லை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.நீங்களும் பயிற்சி செய்தால் உடைக்க
முடியும்.பயிற்சி செய்தால் யாராக இருந்தாலும் ஆற்றல் வரும்..சந்தேகமே
வேண்டாம்.
அடுத்து -ஆற்றலை அதிகமாக்கிகொள்வது தீமையா ..?
அது உங்கள் ஆற்றலை எந்த நோக்கத்திற்காக செலவு செய்யப்போகிறீர்கள் என்பதை
பொறுத்து இருக்கிறது. ஓடுகளத்தில் 120 மைல் வேகத்தில் காரை செலுத்தினால்
வெற்றி. பொது சாலையில் ஓட்டினால் தண்டனை. இது நிஜம்தானே..?.
நியூட்டனின் விதி நிச்சயமாய் பொருந்தும். பெரிய உதாரணமெல்லாம் தேவை
இல்லை. கார்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு மாலைபோட்டுக்கொள்ளும் நம்
சாமிகளை உற்று பாருங்கள். அந்த 48 நாட்களுக்கு அனுஷ்டிக்கும் விரதமென்ன,
கோபவார்த்தைகள் கிடையாது, மது,மாமிசம்,மாது கிடையாது. வயது வித்தியாசம்
பாராமல் அனைவரையும் தெய்வாம்சமாய் பாவைத்து காலில் விழும் தன்மை என்ன,,,?
48 நாட்களுக்கு பிறகு இந்த உணர்வுகள் என்னாகிறது.
மாலயை கழற்றியதும்- பட்டை லவங்க மசாலா- டாஸ்மாக்..இதுதானே. நினைத்தால்
அந்த தவ தன்மையை ஆயுளுக்கும் தொடர முடியாதா..? முடியும்..?மனம் தேவை
இல்லை என நினைக்கிறது. அதனால் தலை உச்சியில் கவனமாய்
உட்கார்ந்துகொண்டு..விழிப்பய் இருந்த் மனம்.., தன் நிலையில் இருந்து
இறங்கிவிடுகிறது.
"புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே.."என பாடுவதற்கும், "நிலாகாயுது
நேரம் நல்ல நேரம்.."என பாடுவதற்கும் ஆற்றல் நிலையில் வித்தியாசம்
இருப்பதை புரிந்துகொள்ள முடிகிறதா..?
நிச்சயமாக நம் ஆற்றலை அதிகப்படுத்திக்கொள்ள முடியும் தவா.நம் ...
கடவுள் என்னும் சொல்லே
மனிதருக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சொல்
கடவுளை நம்பினால் நாம் காப்பாற்றப்படுவோம்
கடவுளை நம்பாதவர்கள் கைவிடப்படுவார்கள் எப்படி என்று பார்ப்போமா
முதலில் கடவுள் என்னும் சொல்லின் பொருளை சரியாக புறிந்து கொள்ளவேண்டும்
கடவுள் என்பது கற்சிலையோ, விக்ரகமோ, அல்லது புறத்தோற்றங்களோ அல்ல
அது ஒரு உள் உணர்வு
காற்றை உணருதல் போல, வெப்பத்தை உணருதல் போல, குளிர்ச்சியை உணருதல் போல்,
கடவுளை உணரமுடியாது
ஏனென்றால் அதற்கு உருவம் கிடையாது
நாமாக வேண்டிக் கொள்கிறோம்
நடக்கவிலையென்றால் நாமாக திட்டுகிறோம்
ஆனால் கடவுள் என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ அந்தக் கடவுளிடம் எந்த ஒரு
சலனமும் இல்லை
நாமளிக்கும் பொருட்களினாலோ, நாம் செலுத்தும் அன்பினாலோ, அல்லது நாம்
வெறுப்பதாலோ,எந்தவித சலனமும் ஏற்படாது கடவுளிடம்
ஆகவே நாம் உண்டு என்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
நாம்தான் கடவுள்
கடவுள் நம்பிக்கை இல்லாதவன் துன்பம் வரும்போது யாருமே இல்லை என்று சோர்ந்து
போய் தவறான முடிவைத் தேடுகிறான்
கடவுள் நம்பிக்கை இருப்பவன் துன்பம் வரும் வேளையில் கடவுள் நம்பிக்கை
இருப்பதால் கடவுள் காப்பாற்றுவார் என்று நம்பி சற்றே நிதானப்பட்டு யோசித்து
நல்ல முடிவெடுக்கிறான்
ஆனால் தவறான முடிவெடுப்பதும் நாம், நல்ல முடிவெடுப்பதும் நாம்
ஆனால் பழி கடவுள் மேல்
போடுகிறோம்
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்னும் வாதமே தேவையில்லை
நாம் இருக்கிறோம் நம்முள் அவன் இருக்கிறான்
நாம் கடமை ஆற்றுவோம், காலம் பதில் சொல்லும்
அன்புடன்
தமிழ்த்தேனீ
----------------------------------------------------
>> > > "நன்றாங்கால் நல்லவா காண்பவர்
>> > > அன்றாங்கால் அல்லல் படுவது எவன்..?- வள்ளுவரின் கேள்வி.
>> > > நல்லது நடந்த்ப்ப குதிச்சியே., கெட்டது நட்ந்தா ஏன் கலங்குற..?
>> > > அப்ப்டின்னு கேக்கறாரு. இரண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கற பாடதிட்டம்
>> > > எந்த பல்கலைகழகத்துல இருக்கு. பற்றற்ற நிலையை பயிற்றுவிப்பது...ஆன்மிக
>> > > தேட்டங்கள்தான். .<<<<
>> > த.வா உங்கள் கேள்வியால்,,,தாயுமானவர் ஐயாவிடம் இருந்து அரும்பெரும்
>> > பொக்கிஷங்கள் நமக்கு கிடைக்கப்பெற்றன.
Subscribe to:
Posts (Atom)